Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 9 மார்ச், 2021

Download Catholic Books in PDF - Saints

 






















St. Anthony of Padua ___________________________________________ view | Download
by Lawrence G Lovasik

The little treasury of Saint Anthony : _________________________ View | Download

a manual of devotions in honor of Saint Anthony


Anthony of Padua________________________________________View | Download
by Jude Winkler OFM

Saint Anthony of Padua : life of the wonder-worker ______________View | Download
by Isidore O'Brien


St. Anthony of Padua ___________________________________________View | Download
Luigi Togliotto


Saint Anthony of Padua, his life and miracles___________________View | Download

The ways of St. Anthony___________________________________ View | Download






 

St. Francis Xavier View - Download

[by] Jean-Marc Montguerre




St. Francis Xavier, apostle of the East View - Download

BY - MARGARET YEO


The apostle of the Indies : (A life of St. Francis Xavier) View - Download

By C. J. Stranks, M.A




St. Francis Xavier - The Novena of Grace View - Download



St. Francis Xavier, the apostle of India and Japan View - Download

 By Rev. George 
Schurhammer,   Frank J., Eble



The Odyssey of Francis Xavier View - Download
By Theodre Mynard



Saint Francis Xavier, 1506-1552 View - Download
By James Brodrick SJ



Francis Xavier; his life, his times View - Download
 By Rev. George 
Schurhammer, 


The life of St. Francis Xavier, of the Society of Jesus, View | Download
apostle of India
By Father Dominic Bouhours



Lettres de S. Francois Xavier: apôtre des Indes et du Japon View | Download
Vol. 1


Lettres de S. Francois Xavier: apôtre des Indes et du Japon, View | Download
Volume 2




The missionary life and labours of Francis Xavier View | Download

taken from his own correspondence :

By Henry Venn






















*St. Joseph : his life, his virtues, his privileges, his power
 














#Conversion of St. Augustine






















 By Father Jean C. J d Elbee


# Poor in Spirit - The Spirituality of Jeanne Jugan, by Gabriel-Marie Cardinal Garrone



# Prayer in the Unseen Warfare- by Jack N. Sparks





புதன், 17 பிப்ரவரி, 2021

LENT IS COMING

 



LENT IS THE SEASON of prayer and penance set apart by the Church to prepare us for
the solemn feast of Easter. To make this preparation bear fruit, She has us
traverse the way of Our Lord, that is, by fasting and doing penance in the desert
for forty days (cf. Matt 4:1-11, Luke 4:1-13). Lent is a time to learn to love our souls more
than our bodies. Thus, every Christian should make a special effort to practice mortification
and strive for holiness during these forty days. These can be fittingly accomplished through
voluntary amendment of life, acts of penance, and works of charity.
Do not let this time to Grow in Holiness
Pass You By!!
Consider the following categories on what we should do for Lent this year.

1. VOLUNTARY AMENDMENT OF LIFE: Give up those things that need to go sooner or later,
namely bad habits. Our goal here is to learn to love our souls more than our bodies… to break
a bad habit forever and Lent is a good time to do it.
Examples: Gossiping, surfing the web
without real need, watching T.V., overeating, eating between meals, eating and drinking junk
foods (e.g., soda), bad drinking habits, complaining, saying vulgar words, not getting up on time,
using a snooze alarm, wasting time playing video games, going to movies, listening to base music,
useless chattering on facebook, blogs, and the like, etc.
In this category I am going to give up ____________________________________________

2. ACTS OF PENANCE: Perform some kind of penance. Our goal here is to train ourselves to say
“no” in little things so that we can say “NO” to big temptations later. We can resume doing the
things given up here once Lent is over.
Examples: Avoid eating or drinking something that we
enjoy, such as desserts. Give up eating out, taking completely warm showers, drinking alcoholic
beverages, etc...
In this category I am going to give up______________________________________________

3. WORKS OF CHARITY: Perform some good and holy action(s). Our goal here is to strengthen
our relationship with Christ and His Church. Ideally, what we start here would continue in
some way even after Lent is over. Love God more than yourself!
Examples: Pray the Rosary
everyday, attend daily Mass as much as possible, read the Sacred Scriptures _______ minutes a
day, spend _______ additional time everyday with my family, read a life of a saint or saints,
increase spiritual reading in place of electronic media, make a daily visit to the Most Blessed
Sacrament or shrine of Our Lady.
In this category I am going to ____________________________________________________





ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

திருச்சபை கட்டளைகள்


திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?

ஆறு.


ஆறும் சொல்லு.

  1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுபூசை காண்கிறது
  2. வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது
  3. பாஸ்கா காலத்தில் பாவசங்கீர்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்கிறது.
  4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.
  5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கனமுள்ள உறவு முறையாரோடும் கலியாணம் செய்யாதிருக்கிறது
  6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.


வியாழன், 14 ஜனவரி, 2021

அருளாளர் தேவசகாயம்



இன்று, (14-1-2021) நம் மண்ணில் இந்துவாக பிறந்து , கிறிஸ்தவத்தை தழுவி, கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததால் இரத்த சாட்சியாக மரித்த தமிழ் நாட்டின் முதல் பொதுநிலையினர் மறைசாட்சி ஆன அருளாளர் தேவசகாயம்  அவர்களின் நினைவு நாள். விருப்ப நினைவாக கொண்டாடி மகிழ்கிறோம். இந்தியாவில் பிறந்த்வருள் முதல் வேதசாட்சியும், பொது நிலையினர் வேதசாட்சியும் இவர்தான். மேலும் இங்கு பிறந்தவருள் முதல் போதுநிலையினர்  புனிதரும், தமிழ் மண்ணின் முதல் புனிதரும் ஆக அறிவிக்கப்பட இருப்பவரும் இவரே.

இவர் ஒரு ஆச்சாரமான இந்து நாயர் குலத்தில் 1712ம்  ஆண்டு  ஏப்ரல் 23ம் தேதி                       தற்போதைய கன்னியாகுமரி  மாவட்டத்தில்  நட்டலம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர்  நீலகண்ட பிள்ளை. இவர் தந்தையின் பெயர் வாசுதேவன் நம்பூதிரி. இவர் தற்போது கேரளாவில் உள்ள காயங்குலம் என்ற ஊரில் பிறந்தவர். இன்றைய கண்ணியாகுமரியில் உள்ள திருவட்டார் என்ற ஊரில் இருந்த  ஶ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோவிலில்                  குருக்களாக இருந்தார்.இதே ஊரை சேர்ந்தவர் தாய் தேவகி அம்மா. நாயர் குல மரபு படி ,அருளாளர் தன் தாய் மாமாவால் வளர்தெடுக்கபட்டார். இநது சாஸ்திரங்களையும்,பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இவருடைய குடும்பம் திருவாங்கூர் ராஜா மகாராஜா மார்த்தாண்ட வர்மா அரண்மனைக்கு நெருக்கமாக இருந்தார்கள். அருலாளரின் குணநலன்களை வைத்து ,அரசவையில் நிர்வாகத்தில் ஒரு உயர்  அந்தஸ்தில் உள்ள அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நேர்மையாளர் ஆன இவர் ராஜாவின் நன்மதிப்பை பெற்றார்.

இதற்கிடையில் டச்சு தளபதி தே லானாயி உடன் நண்பர் ஆனார். உள்ளத்தில் அமைதி இன்றி தவித்த அருளாளர், கத்தோலிக்க தளபதியின் விவிலிய உபதேசங்களை கேட்டு ,உள்ளத்தில் அமைதி பெற்று கத்தோலிக்க திருமறை சத்தியங்களை கற்று தேர்ந்து,       கிறிஸ்துவத்தால் ஈர்க்க பட்டு 1745 ம் வருடம் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர் ஆனார். லாசர் என்ற பெயர் வைக்கப்பட்டது. லாசர் என்றால் God's help என்று பொருள்.எனவே இவர்  தேவசகாயம்  என்று அழைக்கப்பட்டார். இவர் மனைவி  பார்கவி அம்மாளும் திருமுழுக்கு  பெற்று ஞானப்பூ என்ற பெயர் வைக்கப்பட்டது. திருமுழுக்கு பெற்ற  அருளாளர் கத்தோலிக்க   திருமறையை பிறருக்கு உபதேசம் செய்தார் . அதனால் அனேகர் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

விசயம் ராஜாவின் பார்வைக்கு  செல்ல ,அருளாளர் கிறிஸ்துவத்தை விட்டு விலகும் படி  கட்டாயபடுத்தப்பட்டர். ஆனால் இவர் விசுவாசத்தில் நிலைத்திருக்க,  உயர் அந்தஸ்தில் உள்ள பதவி பறிக்கப்பட்டு கரும்புளி,,செம்புளி  குத்த பட்டு எருக்கமாலை போட பட்டு எருமையில் ஏற்ற பட்டு கொலை செய்யபடுவதற்காக ஆரல்வாய்மொழி என்ற இடத்திற்கு மக்கள் அதிகம் வசிக்கும் வீதி         வழியாக கொண்டு செல்லப்பட்டார். காவல்  வீரர்கள் அருளாளர் அவர்களை சொல்ல முடியாத சித்திரவதை செய்து கூட்டி சென்றார்கள்.வழியில்  தாகத்திற்கு ஒரு பாறையை முழங்கையில் தட்டவே தண்ணீர் பெருக்கெடுத்தது. மேலும்  இவர் கட்டி வைக்கப்பட்டிருந்த வேப்பமரத்தின் இலையை தின்று அநேகர் குணம் அடைந்தனர்.இறுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட போது ,சுட முடியாததால், தண்டனை நிறைவேற்றுப்பவர்கள் கெஞ்சி கேட்க ,இவர் துப்பாக்கியை ஆசிர்வதித்து கொடுக்க பின் சுடப்பட்டு இரத்த சாட்சியாக 1752ம் வருடம் ஜனவரி 14ம் தேதி மரித்து சிலுவை பாடுகளை அனுபவித்த ஆண்டவர் இயேசுவிடம் சென்றார்.

அன்பானவர்களே, மேற்கொண்டு அரருளாளர் பற்றிய விபரங்கள்,அவர் பட்ட பாடுகள் முதலியவற்றை அனுப்பப்பட்டுள்ள, வீடியோக்களை முழுமையாக பார்த்து,மற்றும் விக்கிப்பீடியாக்கள் தயவுசெய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து அருளாளர் உடைய விவரங்களை அவர்களிடம் கேட்போம்

இவருக்கு 2012ம் வருடம் டிசம்பர் 2ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட்  அருளாளர் பட்டம் அளித்தார். இவரிடம் வேண்டிக்கொண்டதால் நடந்த புதுமையை,2020மம் வருடம் பெப்ருவரி 21மம் தேதி திருத்தந்தை ஏற்று கொண்டு, இவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கு ,வழி ஏற்படுத்தி உள்ளார். இந்தியாவில் பொதுநிலையினரில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட போகிறவர் இவரே.

அனைவருக்கும் அருளாளர் தேவசகாயம் நினைவு தின வாழ்த்துக்கள்

அருளாளர் தேவசகாயம், எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

HAPPY MEMORIAL OF BLESSED DEVASAHAYAM

Bl.Devadahayam,pray for us

வாழ்த்துக்களுடனும் ஜெபங்களுடனும்

பி.பன்னீர் செல்வன்

வியாழன், 7 ஜனவரி, 2021

பிதா பிதாக்களின் பிதா அர்ச்.சூசையப்பர் பாகம்-1

பிதா பிதாக்களின் பிதா அர்ச்.சூசையப்பர்

பாகம்-1

ஆண்டவர் மனிதரை இரட்சிக்க மனிதாவதாரமாகச் சித்த மானபோது தமக்குத் தாயாராக மாமரியைத் தெரிந்து கொண்டார். அவர்களை சகல வரங்களால் அலங்கரித்து, சகல சிருஷ்டிகளுக்கும் மேலாய் அவர்களை உயர்த்தி, பரலோக பூலோக இராக்கினியாக முடிசூட்டி, இவ்விதமாகத் தமக்குத் தகுந்த தாயாய் இருக்கும்படி செய்தார். ஆண்டவர் தமக்கு ஓர் தாயை நினைத்து இவ்விதம் சிருஷ்டித்தபோதே, தம்மை வளர்த்துக் காப்பாற்றும் கைத்தாதையை நினைத்து, அவரையும் நன்மை வரங்களால் அலங்கரித்து, அவர் தமது தாயாருக்கு ஏற்ற துணையாயிருக்கவும், தம்மையே, சிறு பாலகனாயிருக்கும் காலத்தில் கையிலேந்தி அணைத்துக் காப்பாற்றத் தகுந்தவராகவும் சிருஷ்டித்தார். இதனால் தேவமாதாவை அடுத்து புனித சூசையப்பர், சகல புனிதர்களுக்குள் முதன்மை பெற்றவராகத் திருச்சபையில் வணங்கப்படுகிறார்

அர்ச். சூசையப்பர் அடைந்த பாக்கியமே பாக்கியம் இப்பாக்கியத்தைப் காண பிதாப்பிதாக்களும், தீர்க்கதரிசிகளும் பல்லாண்டு தபசு செய்து சர்வேசுரனைப் பிரார்த்தித்துவந்தனர். அர்ச். சூசையப்பரோ கண்ணால் பார்த்தது மாத்திரமல்ல, உலக இரட்சகரைத் தம் கையிலேந்தி, மார்போடு அணைத்து, கொஞ்சிக் குலாவும் பாக்கியம் பெற்றார். சகல ஜீவராசிகளுக்கும் உயிரும் உணவும் கொடுத்துவரும் ஆண்டவருடைய உயிரைக் காப்பாற்றவும் அவருக்குத் தமது கையால் உணவு தேடிக் கொடுத்துப் போவிக்கவும், புனித சூசையப்பர் தெரிந்தெடுக்கப் பட்டது எவ்வளவு உன்னதமான மேன்மை

அன்றியும் தேவமாதாவோடும் சேசுநாதரோடும், புனித சூசையப்பர் ஒரே வீட்டில் இரவும் பகலுமாய், ஒருநாள் அல்ல ஒரு மாதம் அல்ல, ஒரு வருடம் அல்ல, முப்பது வருடகால இருந்து ஜீவனம் செய்தது, சம்மனககளுக்குக்கூட கிடைக்க அரிதான பாக்கியம். இதுதான் பூலோக மோட்சம். இதுதான் சம்பூரணமான பாக்கியம். இதுதான் ஆனந்த பேரின்பம்

கடைசியில் அர்ச். சூசையப்பர் வியாதியுற்று அவஸ்தை யிலிருக்கும்போது, அவர் பக்கத்தில் சேசுநாதரும் தேவமாதாவுமிருந்து, ஆறுதலான வார்த்தைகள் சொல்லி, அவரைத் தூக்கி எடுத்து, அவருக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்தார்கள் அர்ச். சூசையப்பர் சந்தோஷத்தோடு தமது ஆத்துமத்தை சேசு நாதருடைய கையில் ஒப்புவித்து பாக்கியமான மரணமடைந்தார்.

 மனிதர்களுக்குள்ளே யாருக்கும் இவ்வித பாக்கியம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை சர்வேசுரன் தமது தேவகுடும்பத்தைக் காப்பாற்றி நடத்தும் பாதுகாவலராய் புனித சூசையப்பரைத் தெரிந்து கொண்டதுபோல, திருச்சபையும் சகல கிறீஸ்தவக் குடும்பங்களுக்கும் பாதுகாவலராக புனித சூசையப்பரைத் தெரிந்துகொண்டு, சகல குடும்பங்களையும் அவர் அடைக்கலத்தில் வைத்திருக்கிறது. கிறீஸ்தவ குடும்பங்கள் இதை மனதில் நினைத்து, தங்களையும் அர்ச். சூசையப்பரின் பாதுகாவலில் வைத்து, திருக்குடும்பத்தை தங்களுக்கு ஓர் மேல்வரிச்சட்டமாக நினைத்து, தங்கள் குடும்பமும், கூடுமானமட்டும் திருக்குடும்பத்திற்கு சமானமாய் இருக்கும்படி பிரயாசைப்பட வேண்டும்.

குடும்பத் தலைவர்களே! நீங்கள் உங்கள் குடும்பத்தை அணைத்து ஆதரித்து, பட்சத்தோடும் கவலையோடும் காப்பாற்றி, அர்ச். சூசையப்பரைப்போல் உங்கள் வீட்டில் உள்ளவர்களை நடத்த வேண்டும். சேசுநாதர் சுவாமியை உங்கள் வீட்டின் மத்தியில் ஸ்தாபித்து, எல்லோரும் அவரைப் பார்த்து அவருக்காக வேலை செய்து, அவருக்குப் பிரியப்படும்படியாய் நடக்க வேண்டும். தாயும் பிள்ளைகளும் குடும்பப் பாரத்தைத் தாங்கிப் பொறுத்து, வீட்டுத் தலைவருக்குப் பணிந்து நடக்க வேண்டும். இப்படி நடந்தால்தான், உங்கள் குடும்பத்திற்கும் கிறீஸ்தவர்களின் குடும்பம் என்கிற பெயர் பொருந்தும்.

அன்றியும் அர்ச். சூசையப்பர் நன்மரணத்திற்கு விசேஷ பாதுகாவலரானபடியால் நீங்கள் சாகும்போது தேவ இஷ்டப் பிரசாதத்தோடு மரிக்கவும், சேசுநாதரும் தேவமாதாவும், அர்ச்.சூசையப்பரும் உங்கள் கடைசி காலத்தில் துணையாயிருந்து உங்களைக் கைதூக்கி இரட்சிக்கவும் நீங்கள் ஆசைப்பட்டால், இப்போதே நீங்கள் நல்ல சௌக்கியமாயிருக்கும் காலத்தில் அர்ச். சூசையப்பர் பேரில் விசேஷ பக்தியாயிருங்கள். நாள் தோறும் அர்ச். சூசையப்பருக்கு தோத்திரமான சில ஜெபங்களைச் சொல்லுங்கள்

புதன்கிழமை அர்ச். சூசையப்பரின் நாளானதால், அன்று அவரைக் குறித்து ஏதாவது ஒரு நற்கிரிகை செய்யுங்கள். மார்ச் மாதம் அர்ச். சூசையப்பருடைய மாதம். அந்த மாதத்திலும் அவருடைய திருநாள் வரும்போதும், அவரைச் சிறப்பித்துக் கொண்டாடும்படி உங்களால் இயன்ற முயற்சி செய்யுங்கள் குடும்பத்தில் வியாதி, நோவு, தரித்திரம், துன்பம் வரும்போது நம்பிக்கையோடு அர்ச். சூசையப்பருடைய உதவியைக் கேட்டு மன்றாடுங்கள். பாவமும் அஞ்ஞானமும் அசுத்தமும் உங்கள் வீட்டில் நுழையாதபடி கவனமாயிருங்கள். இப்படி நீங்கள் உயிரோடிருக்கும் காலத்தில் அர்ச். சூசையப்பரை நினைத்து துதித்து அனுசரித்து வந்தால், நீங்கள் சாகும் சமயத்தில் அவர் உங்களைப் பாதுகாத்து நீங்கள் பாக்கியமான மரணமடைந்து நித்திய மோட்ச பாக்கியம் அடையும்படி கிருபை செய்வார்

ஆகவே புனித சூசையப்பர் பேரில் பக்தி, கிறீஸ்தவர்கள் மனதில் ஸ்திரமாய் வேரூன்றி நிலைநிற்கும்படியாய்,  தொடர்ந்து இனைந்திருப்போம்

தொடரும்.........


ஆமென்.

அனைத்து பாரம்பரிய புத்தகங்கள், ஜெபங்கள் படிக்க, தியானிக்க நமது வெப்சைட்டை பயன் படுத்துங்கள்

தொடர்ந்து இனைந்திருங்கள்

பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை

பாரம்பரிய கத்தோலிக்க புத்தகங்கள் தொடர்புக்கு 

பிரதர் பால்ராஜ் : 9487609983
பிரதர் கபிரியேல் :9487257479

வெள்ளி, 20 நவம்பர், 2020

தமிழ் கத்தோலிக்க ஞான உபதேசம் (My Catholic Faith - தமிழாக்கம் )

தொடர் கட்டுரை


"தற்காலத்தின் அசட்டைத்தனத்திற்கும், ஒரு வகையில் ஆத்துமங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதற்கும், அதன் விளைவாக எழும் மோசமான தீமைகளுக்கும் முதன்மையான காரணம் தெய்வீகக் காரியங்களைப் பற்றிய அறியாமைதான்." (அதாவது கத்தோலிக்க ஞான உபதேசத்தை அறியாமல் இருப்பதே )

- அர்ச். பத்தாம் பத்திநாதர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


முன்னுரை


கடவுள் நம்மைப் படைத்தபோது, வாழ்வில் எந்தப் பாதையில் செல்வது என்று தேர்ந்தெடுக்கும் வல்லமையையும், உரிமையையும் அவர் நமக்கு வழங்கினார் (சுயாதீன சித்தம்). ஒன்றில் நாம் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகிய பாதையைத் தேர்ந்து கொள்ளலாம். அல்லது கீழ்ப்படியாமையின் பாதையைத் தேர்ந்து கொள்ளலாம். முதல் பாதை சோர்வூட்டுவதாகவும், முட்கள் நிறைந்ததாகவும் தோன்றுகிறது. ஆனால் அதன் முடிவில், கடவுளோடு நித்தியத்திற்கும் மகிழ்ச்சியாயிருத்தல் என்னும் வெகுமானம் வருகிறது. இரண்டாவது பாதை இன்பங்களும், ரோஜாக்களும் நிறைந்ததாகத் தோன்றுகிறது. ஆனால் அதன் முடிவில் நித்திய நரக துன்பம் என்னும் தண்டனை காத்திருக்கிறது.


ஒவ்வொருவனும் தன் பாதையைத் தானே தேர்ந்து கொள்ள வேண்டும். இந்தத் தெரிவு ஒரு கடினமான போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதையும், அவர் நமக்கு உதவுவார் என்பதையும், கீழ்ப்படிதலின் பாதையின் முடிவில் அவர் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொண்டிருப்போம் என்றால், கடினமான பாதையைத் தேர்ந்து கொள்வதில் நாம் பலப்படுத்தப்படுவோம்.


1. பரிசுத்த வேதத்தை அறிதல்

மனிதனின் இறுதிக் கதி என்ன? -

கடவுளைச் சென்றடைவதே மனிதனின் இறுதிக் கதி. மனிதன் கடவுளிடமிருந்து வருகிறான்; அவன் முற்றிலும் அவருக்கே சொந்தமாயிருக்கிறான். மனிதன் கடவுளிடம் திரும்பிச் செல்ல நியமிக்கப்பட்டிருக்கிறான்.

1. நம்மை யாரோ ஒருவர் உண்டாக்கியிருக்கிறார் என்று நம் அறிவு கூறுகிறது. அந்த யாரோ ஒருவர்தான் கடவுள் ஆவார்.

2. கடவுள் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் நம்மை உண்டாக்கியிருக்க வேண்டும் என்றும் நம் அறிவு கூறுகிறது. இவ்வுலகில் தம்மை அறிந்து, தம்மை நேசித்து, தமக்கு ஊழியம் செய்யவும், மறுவுலகில் என்றென்றும் அவரோடு மகிழ்ச்சியாயிருக்கவும் கடவுள் மனிதனைப் படைத்தார். கடவுள் தமக்காகவே நம்மைப் படைத்தார்.

3. நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். நாம் அவருடைய படைப்புகளாக இருப்பதால், அவர் மட்டில் நமக்குக் கடமைகள் உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். பரிசுத்த வேதம் இந்தக் கடமைகள் என்னென்ன என்று நமக்குக் கற்பிக்கிறது.

பரிசுத்த வேத அனுசரிப்பு என்றால் என்ன? -

பரிசுத்த வேத அனுசரிப்பு என்பது ஒரு புண்ணியம். இந்தப் புண்ணியத்தின் மூலம், நம்மைப் படைத்தவரும், நம் எஜமானரும், நம் உன்னத ஆண்டவருமாகிய கடவுளுக்கு மட்டுமே உரியதாக இருக்கிற மகிமையையும், ஊழியத்தையும் அவருக்குச் செலுத்துகிறோம். இந்தப் புண்ணியத்தைக் கடைப்பிடிப்பதற்கு நாம் :

1. கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட எல்லா சத்தியங்களையும் விசுவசிக்க வேண்டும்.

பரிசுத்த வேதத்தில் நாம் கடவுளைப் பற்றியும் அவருடைய இலட்சணங்களைப் பற்றியும் கற்றுக்கொள்கிறோம். அவர் நம்மீது கொண்டுள்ள பேரன்பைப் பற்றி ஓரளவு கற்றுக்கொள் கிறோம். எது சரி, எது தவறு என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் என்ன செய்ய வேண்டு மென்று கடவுள் கட்டளையிடுகிறார் என்று கற்றுக்கொள்கிறோம். அவர் நமக்காக ஆயத்தம் செய்திருக்கிற எதிர்காலத்தைப் பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம்.

2. நாம் கடவுளுக்குக் கடன்பட்டுள்ள கடமைகளைப் பற்றியும், அவருடைய கட்டளை களைப் பற்றியும், விருப்பங்களைப் பற்றியும் கற்றுக்கொள்வதை நம் வாழ்வில் நாம் நிறைவேற்ற வேண்டும். வெறும் அறிவு என்பது பரிசுத்த வேத வாழ்வு அல்ல. அது நமக்கு எந்த விதத்திலும் பயன்படுவதில்லை. பசாசுக்கு அறிவு உண்டு. ஆனால் அவன் வேதத்தைக் கடைப்பிடிப்பது இல்லை. வேதத்தை அனுசரித்தல் என்பதில், கடவுள் மட்டில் நாம் கொண்டுள்ள கடமை களைப் பற்றி நாம் கற்றுக்கொண்டவற்றை நிறைவேற்றுவதன் மூலம் அவருக்கு ஊழியம் செய்வது அடங்கியுள்ளது. வேத அனுசரிப்பு என்பது உணர்வு சார்ந்த காரியமல்ல; அது நம் சித்தம் மற்றும் செயல் சார்ந்த காரியமாக இருக்கிறது.

"சர்வேசுரனுடைய வாக்கியத்தைக் கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்'' என்று நம் ஆண்ட வர் கூறுகிறார் (லூக். 11:28).

"நீங்கள் வாக்கியப்படி செய்கிறவர்களாயிருங்கள். ஆனால் உங்களையே மோசம் போக்கி (வாக்கியத்தைக்) கேட்கிறவர்களாய் மாத்திரம் இருக்க வேண்டாம்" என்று அர்ச். யாகப்பர் கூறுகிறார் (யாக. 1:22).

பரிசுத்த வேதத்தைக் கடைப்பிடிப்பது நமக்கு அவசியமா?

பரிசுத்த வேதத்தைக் கடைப்பிடிப்பது நமக்கு முற்றிலும் அவசியம். கடவுள் இந்தக் காரியத்தில் வேறு எந்தத் தெரிவையும் நமக்குத் தரவில்லை .

1. வாழ்வில் நம் முதன்மையான அலுவல், நாம் செய்ய வேண்டுமென்று கடவுள் நமக்குக் கட்டளையிடுகிற அலுவல், நம் ஆத்துமத்தின் இரட்சணியமே. இது நம் வேத அனுசரிப்பைச் சார்ந்திருக்கிறது.

2. அநேகர் உலக செல்வங்களையும், பட்டம் பதவிகளையும், இன்பங்களையும் அடைய முயல்வதில் தங்கள் வாழ்வை வீணாக்குகிறார்கள். ஆனால் இவை இவ்வுலகிலும் கூட மனிதனின் இருதயத்தைத் திருப்திப்படுத்துவதில்லை. மேலும், மரண நேரம் வரும்போது இவை அனைத்தையும் விட்டுச் செல்ல வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

"ஏனெனில், அவன் மரித்த பின்பு (இவைகளை) எல்லாம் கொண்டு போவதுமில்லை, அவனுடைய மகிமை அவனோடு இறங்குவதுமில்லை " (சங். 48:16).

3. பரிசுத்த வேதத்தின் மூலமாகத்தான் நாம் எதற்காகப் படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்ற முடியும். ஆனால் கடவுள் வெளிப்படுத்தியுள்ளவற்றை விசுவசிப்

கடவுளை அறிகிறோம். அவரை அறிவதன் காரணமாக, அவரை நேசிக்காமல் இருக்க நம்மால் முடியாது. நாம் அறிந்து கொண்டதை அனுசரித்து, கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் அவருக்கு ஊழியம் செய்கிறோம்.

"என் கற்பனைகளைக் கைக்கொண்டு அவைகளை அநுசரிக்கிறவன் எவனோ, அவனே என்னைச் சிநேகிக்கிறவன்" (அரு. 14:21).

அப்படியானால், எந்த ஒரு மனிதனுக்கும் அனைத்திலும் அதிக முக்கியமான கல்வி எது? -- அது வேதக் கல்வியே.

1. இரட்சிப்படைய நாம் எதை விசுவசிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நமக்குக் கற்பிப்பது பரிசுத்த வேதமே. இயற்பியல், கவிதை அல்லது வரலாறு பற்றிய அறிவை விட நம் இரட்சணியம் எவ்வளவோ அதிக முக்கியத்துவம் மிக்கது. நாம் நம் ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளவில்லை என்றால், நம் ஞானத்தாலும், அறிவாலும், செல்வத்தாலும், உலக மகிமைகளாலும் நமக்கு எந்தப் பயனுமில்லை .

"மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தன் ஆத்துமம் சேதப்பட்டால் அவனுக்குப் பிரயோசனமென்ன?" (மத் 16:26).

2. இந்தக் கல்விக்கு சிந்தனையும், கவனமும் அவசியம். திருச்சபை மற்றும் அதன் குருக் களாகிய நல்ல ஆசிரியர் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். நாம் தனியாக அதை நன்றாகக் கற்றுக்கொள்ள முடியாது.

"(தியாக்கோனான) பிலிப்பு ஓடிச் சேர்ந்து, அவன் (எத்தியோப்பியன்) இசையாஸ் தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு : "நீர் வாசிக்கிறதைக் கண்டுபிடிக்கிறதாக நினைக்கிறீரோ?" என்று கேட்டார். அதற்கு அவன் : "யாராவது எனக்கு விளக்கிச் சொல்லா விட்டால், எப்படி என்னால் புரிந்து கொள்ள முடியும்?" என்றான்" (அப். 8:31).

3. இந்தக் கல்வியை அலட்சியம் செய்வதுதான் இன்று இவ்வுலகிலுள்ள எல்லாக் குற்றங் களுக்கும் அடிப்படைக் காரணம். கடவுளைப் பற்றிய அறிவு இல்லாவிடில், மனிதன் தனது மிகக் கீழான, மிக அருவருப்பான ஆசாபாசங்களுக்குத் தன்னைக் கையளித்து விடுகிறான்.




 

செவ்வாய், 20 அக்டோபர், 2020

வெள்ளி, 16 அக்டோபர், 2020

Tamil Catholic Blog: Download Tamil Vulagata Bible 1929 version.

Tamil Catholic Blog: Download Tamil Vulagata Bible 1929 version.: இது ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் வழங்கிவரும் வுல்கத்தா என்னும் லத்தீன் பிரதியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு சேசு சபை குருக்களால் ஆராய்ந்து...

செவ்வாய், 6 அக்டோபர், 2020

Download Tamil Vulagata Bible 1929 version.

இது ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் வழங்கிவரும் வுல்கத்தா என்னும் லத்தீன் பிரதியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு சேசு சபை குருக்களால் ஆராய்ந்து பார்வையிடப்பட்டது..



01.  அர்ச். மத்தேயு 

02.  அர்ச். மாற்கு 

03. அர்ச். லூக்காஸ் 

04. அர்ச். அருளப்பர் 

05. அப்போஸ்தலருடைய நடபடிகள் 

06. அர்ச். சின்னப்பர் ரோமையருக்கு எழுதிய நிருபம் 

07. அர்ச். சின்னப்பர் கொருந்தியருக்கு எழுதிய முதல் நிருபம் 

08. அர்ச். சின்னப்பர் கொருந்தியருக்கு எழுதிய இரண்டாம்  நிருபம் 

09. அர்ச். சின்னப்பர் கலாத் தியருக்கு எழுதிய நிருபம் 

10. அர்ச். சின்னப்பர் எபேசியருக்கு எழுதிய நிருபம் 

11. அர்ச். சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் 

12. அர்ச். சின்னப்பர் கொலோசியருக்கு எழுதிய  நிருபம்

13. அர்ச். சின்னப்பர் தெசலோனியருக்கு எழுதிய முதல் நிருபம்  

14. அர்ச். சின்னப்பர் தெசலோனியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் 

15. அர்ச். சின்னப்பர் திமோத்திக்கு  எழுதிய முதல் நிருபம் 

16.  அர்ச். சின்னப்பர் திமோத்திக்கு  எழுதிய இரண்டாம் நிருபம்

17. அர்ச். சின்னப்பர் தீத்துக்கு  எழுதிய நிருபம்

18.  அர்ச். சின்னப்பர் பிலமோனுக்கு  எழுதிய நிருபம்

19.  அர்ச். சின்னப்பர் எபிரேயருக்கு   எழுதிய நிருபம்

20. அர்ச். இயாகப்பர்  எழுதிய நிருபம்

21. அர்ச். இராயப்பர் எழுதிய முதல் நிருபம் 

22.  அர்ச். இராயப்பர் எழுதிய இரண்டாம் நிருபம் 

23.  அர்ச். அருளப்பர்  எழுதிய முதல் நிருபம் 

24. அர்ச். அருளப்பர் எழுதிய இரண்டாம் நிருபம்

25. அர்ச். அருளப்பர் எழுதிய மூன்றாம் நிருபம்

26. அர்ச். யூதா எழுதிய நிருபம் 

27. அர்ச். அருளப்பர் எழுதிய காட்சியாகமம் 

புதன், 30 செப்டம்பர், 2020

அதிதூதரான அர்ச். மிக்கேல்

#அதிதூதரான_அர்ச்_மிக்கேல்

மி-கா-எல்: மிக்காயெல். இந்தப் பெயரின் பொருள் “#கடவுளுக்கு_நிகரானவன்_யார்?” என்பதாகும்.

 அர்ச். மிக்கேல் அதிதூதர் கடவுளின் தூதர்களின் சேனையின் தளகர்த்தராக, கலகக்காரனான லூசிபருக்கு எதிராக விடுத்த #அறைகூவல்தான் இந்த வார்த்தைகள்.

*சர்வேசுரனுடைய படைகளின் தளபதியும், *தெய்வீகத் திடமாகிய புண்ணியத்தின் மாதிரிகையும், 
*தீய சக்திகளுக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு விசுவாசமுள்ள ஆத்துமத்தினுடையவும் வல்லமையுள்ள பாதுகாவலருமான,

 இந்த #அதிதூதர் இதே வார்த்தைகளைத் தம் பெயராகப் பெற்றுள்ளது மிகவும் பொருத்தமான காரியமாக இருக்கிறது.

ஏக,பரிசுத்த,சத்திய, கத்தோலிக்கத் திருச்சபை அர்ச்.மிக்கேல் அதிதூதரை எப்போதும் தன் #விசேஷ_பாதுகாவலராக ஏற்று வணங்கி வந்துள்ளது.

அது தன் *பாவசங்கீர்த்தன மந்திரத்தில் அவருடைய #பெயரைச்_சொல்லி மன்றாடுகிறது; 

*மரண அவஸ்தைப்படும் தன் பிள்ளைகளின் #அருகில்_இருக்கும்படி அவரை அழைக்கிறது;

*உத்தரிக்கிற ஸ்தலத்தின் பரிசுத்தப்படுத்தும் தீச்சுவாலைகளில் இருந்து பரிசுத்த பேரொளியின் இராச்சியத்திற்கு அவர்களை #வழிநடத்திச்_செல்பவராக அவரையே அது தேர்ந்து கொள்கிறது.

இறுதியாக, 
#அந்திக்_கிறீஸ்து பூமியின்மீது தன் இராச்சியத்தை ஸ்தாபக்கும்போது, அதற்கு எதிராகத் *#திருச்சிலுவையின் விருதுக் கொடியை விரித்துப் பறக்கச் செய்ய இருப்பவரும்,

திருச்சபையை அழித்து விடுவது பற்றிய சாத்தானின் சவாலைக் கேட்டபின், பாப்பரசர் 13-ம் சிங்கராயரால் மீண்டும் #திருச்சபையின் வெல்லப்பட இயலாத #பாதுகாவலராக ஸ்தாபிக்கப்பட்டவரும், 

#இறுதி_எக்காளத்தைத் தொனிக்கச் செய்பவரும்,

 காட்சியாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, #கள்ளத்_தீர்க்கதரிசியையும்_மிருகத்தையும சேர்த்துக் கட்டி, நித்திய அக்கினி எரியும் நெருப்புக் கடலில் அவர்களை வீசியெறிய இருப்பவரும்,

இதே அர்ச். மிக்கேல் அதிதூதர்தான்.

#அர்ச்_மிக்கேல்_சம்மனசானவரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

தொடரும்...