Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சின்னக் குறிப்பிடம் Tamil Catechism Book

சின்னக் குறிப்பிடம் Tamil Catechism Book
முதல் பிரிவு 
ஏக திரித்துவ சர்வேசுரன் பேரில் 

1. சர்வத்துக்கும் கர்த்தாவாயிருக்கிறவர்  யார் ?
   
    சர்வேசுரன் 

2. எத்தனை சர்வேசுரன்?

     ஒரே சர்வேசுரன் 

3. அவர் தேவ சுபாவத்திலே ஒருவராய் இருந்தாலும் ஆள் வகையிலே எப்படி இருக்கிறார்?
  
     திரித்துவமாய் இருக்கிறார்.

4. திரித்துவமாய் இருக்கிறார் என்பதற்கு அர்த்தம் என்ன?

     ஆள் வகையிலே மூவராய் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

5. இந்த மூன்று ஆட்களுக்கு பெயர் என்ன?

     பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்து.

6.  பிதா சர்வேசுரனா?

     சர்வேசுரன்.

7.  சுதன் சர்வேசுரனா?

    சர்வேசுரன் 

8.  இஸ்பிரித்து சாந்து சர்வேசுரனா?

    சர்வேசுரன் 

9/ மூவரும் மூன்று சர்வேசுரனா? ஒரே சர்வேசுரனா?

    ஒரே சர்வேசுரன்.

10.  எப்படி ஒரே சர்வேசுரன்?

      இந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம்,ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருக்கிறபடியினலே மூவரும் ஒரே சர்வேசுரன் தான்.

11.  இவர்களுக்குள்ளே வல்லமை மகிமை முதலான இலட்சனத்தில்  வித்தியாசம் உண்டோ?

      இல்லை.  மூவரும் எல்லாத்திலும் சமமாயிருக்கிரார்கள்.

12.  இப்படி ஏகமும்  திருத்துவமாய் இருக்கிற சர்வேசுரனுக்கு பிரதான இலட்சணங்கள் எத்தனை?

     ஆறு.

13.   ஆறும் சொல்லு?
  
  1. சர்வேசுரன் தாமாய் இருக்கிறார்.
  2. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்.
  3. சரீரம் இல்லாமலிருகிறார்.
  4. அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராய் இருக்கிறார்,
  5. எங்கும் வியாபித்திருக்கிறார்.
  6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.

இரண்டாம் பிரிவு 


உலக சிரிஸ்டிப்பின் பேரிலும் மனிதனுடைய கேட்டின் பேரிலும் 



14.  சர்வேசுரன் எல்லாத்துக்கும் ஆதி காரணமாய் இருப்பது எப்படி?
           
           பரலோகத்தையும் பூலோகத்தையும் அவற்றில் அடங்கிய சகலத்தையும் உண்டாக்கி காப்பாற்றுகிரதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.

15.  சர்வேசுரன் உண்டாக்கினவைகளில் பிரதான வஸ்துக்கள் எவை?

            சரீரமில்லாத சம்மனசுக்களும் சரீரமும் ஆத்துமமும் உள்ள மனிதர்களும் தான்.

16.  சம்மனசுக்கள் எல்லாரும் தங்கள் மேன்மையான அந்தஸ்திலே நிலைக் கொண்டார்களா?

           இல்லை.   சிலர் ஆங்கரதினாளே மோட்சத்தை இழந்து நரக ஆக்கினைக்கு உள்ளானார்கள்.

17.  இப்படி கேட்டுப் போன சம்மனசுக்கள் பெயர் என்ன?

          பசாசுக்கள்.

18.  சர்வேசுரன் மனிதனை எதற்காக உண்டாக்கினார்?

          தம்மை அறிந்து சிநேகித்து சேவிக்கவும் அதனால் மோட்சம் அடையவும் உண்டாக்கினார்.

19.  அவர் எந்த அந்தஸ்திலே ஆதிப் பெற்றோரை உண்டாக்கினார்?

        பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்திலே அவர்களை உண்டாக்கினார்.

20.    அவர்கள் அதை போக்கடித்ததெப்படி?
           
            பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியை தின்றதினாலே அதைப் போக்கடித்தார்கள்.

21.  அதனால் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியர்ருக்கும் வந்த கேடு என்ன?

       பசாசுக்கு அடிமையாகி, சாவு நரகம் முதலிய ஆக்கினைக்கு பாதிரவான்கள் ஆனார்கள்.

மூன்றாம் பிரிவு

மனிதனுடைய இரட்சிப்பு

22.  நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்தவர் யார்?
 
      அர்ச். தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் தான்

23.   அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?
       இஸ்பிரித்து சாந்துவினாலே கர்ப்பமாய் உற்பவி;த்து அற்புதமாய் பிறந்தார்.

24.   யாரிடத்தினின்று பிறந்தார்?
        ஒருக்காலும் கன்னிமை கெடாத அர்ச். கன்னிமரியம்மாளிடத்திலே நின்று பிறந்தார்.

25.   சுவாமி பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?
         சேசு என்னும் பெயரிட்டார்கள்.

26.   சேசு என்னும் பெயருக்கு அர்த்தமென்ன?
         நம்மை இரட்சிக்கிறவர்.

27.  ஆகையால் சேசு கிறிஸ்துநாதர் யார்?
  
           நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனேயாம்.

28.   சேசுநாதர் சுவாமி இவ்வுலகில் எத்தனை ஆண்டுகாலம் இருந்தார்?
         33 ஆண்டுகாலம் இருந்தார்.

29.  இவ்வுலகத்தில் என்ன செய்து கொண்டு வந்தார்?
      
            சகல புண்ணியங்களையும் அற்புதங்களையும் செய்து நம்முடைய திவ்விய வேதத்தை போதித்து அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.

30.  சேசுநாதர் சுவாமிக்கு எத்தனை சுபாவங்கள் உண்டு?

       தேவசுபாவம் மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.


31. எந்த சுபாவத்திலே பாடுபட்டார்?

       மனித சுபாவத்திலே பாடுபட்டார்.

32.  யாருக்காக பாடுபட்டார்?

       நமக்காக பாடுபட்டார்.

33.  என்ன பாடுபட்டார்?

        போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

34.  அப்போது சுவாமியுடைய திரு ஆத்துமம் எங்கே போனது?

       பாதாளங்களிலே இறங்கி அங்கே இருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்சபாக்கியம் கொடுக்கப் போனது

35. சேசுநாதர் சுவாமி கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினாரா?

        மரித்த மூன்றாம் நாள் கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினார்.

36.  உயிர்த்த பிற்பாடு பூலோகத்திலே எத்தனை நாள் தங்கியிருந்தார்?
 
        40 நாட்கள்.

37.  அந்த நாற்பது நாளும் என்ன செய்து கொண்டு வந்தார்?

       அநேகம் விசை தம்முடைய சீடர்களுக்கு தரிசினையாக தம்மை காண்பித்து அவர்களை வேத சத்தியங்களில் ஸ்திரப்படுத்திக் கொண்டு வந்தார்.

38. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?

        பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலதுப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

39.  இப்போது சேசுநாதர் சுவாமி எங்கே இருக்கிறார்?

       சர்வேசுரானாகிய மட்டும் எங்கும் இருக்கிறார்.  சர்வேசுரனும் மனிதனுமாகிய மட்டும் பரலோகத்திலும் திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.

நான்காம் பிரிவு 

இஸ்பிரித்து சாந்துவின் வருகையும் திருச்சபையும் 



40. சேசுநாதர் சுவாமி பரலோகத்திற்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன
செய்தார்?
      
       தம்முடைய அப்போஸ்தலருக்கு திடனாக இஸ்பிரித்து சாந்துவை அனுப்பினார்.

41. இஸ்பிரித்து சாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

     உலகின் எத்திசையிலும் பிரசங்கித்து திருச்சபையை பரவ செய்தார்கள்.

42. திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

     சேசுநாதர் சுவாமி தான்.

43. அவர் தமக்கு பதிலாக காணக்கூடிய தலைவராக யாரை நியமித்தார்?

      அர்ச்.  இராயப்பரை நியமித்தார்.

44. அர்ச். இராயப்பருக்கு பதிலாக திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

      அர்ச்.  பாப்பானவர்.

45. மற்ற அப்போஸ்தலருக்கு பதிலாக இருப்பவர்கள் யார்?

      மேற்றிராணிமார்கள் 

46. சேசுநாதர் எத்தனை திருச்சபையை ஸ்தாபித்தார்?

      கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஸ்தாபித்தார்.

47. திருச்சபை சொல்படி கேளாதவர்களுக்கு மோட்சம் உண்டா?

    இல்லை.

48. இல்லையென்கிறதற்கு அத்தாட்சி என்ன?

     திருச்சபையின் சொற்படி கேளாதவன் அக்கினியைப் போல் உனக்கு ஆக கடவான் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.

ஐந்தாம் பிரிவு 


மனிதனுடைய முடிவுகள் 



49.  பாவத்தின் நிமித்தம் சகல மனிதர்களுக்கும் வருகிற ஆக்கினை என்ன?

          சாவு 

50.  சாவுக்குப் பின் சம்பவிப்பதென்ன?
    
         தனித் தீர்வை 

51.  தனித் தீர்வைக்குப் பிறகு சாவான பாவமுள்ள ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

         நரகம் 

52.  பரிசுத்த ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?

         மோட்சம் 

53.    தங்கள் பாவங்களுக்கு முழுதும் உத்தரியாத ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

           உத்தரிக்கிற ஸ்தலம் 


54.  உத்தரிக்கிற ஸ்தலதில் என்னவாக இருக்கிறார்கள்?
  
          தங்கள் பாவங்களுக்கு தக்க வேதனைப் பட்டு உத்தரிக்கிரார்கள்.  முழுதும் உத்தரித்த பிறகு மோட்சத்தை அடைவார்கள்.

55.   தனித் தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?

         பொதுத் தீர்வை உண்டு.

56.  பொது தீர்வை எப்போது நடக்கும்?
  
         உலகம் முடிவிலே நடக்கும்.

57.   உலகம் எப்படி முடியும்?

          உலகமெல்லாம் நெருப்பிலே வேக மனிதர்கள் எல்லோரும் செத்துப்போவார்கள்.

58.   பின்னும் என்ன சம்பவிக்கும்?
   
          சேசுநாதர் சுவாமி மனிதர் எல்லோரையும் ஆத்தும சரீரத்தோடு எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு  நடுத் தீர்க்க வருவார்.

59.   எப்படி நடுத் தீர்ப்பார்?

         அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கும் முன்பாக அறிய பண்ணி பாவிகளை சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசிர்வதித்து மோட்சத்திற்கு கூட்டி கொண்டு போவார்.

60.   பாவிகள் நரகத்திலே படுகிற ஆக்கினை என்ன?

         சர்வேசுரனை ஒருகாலும் காணாமலும் ஊழியுள்ள காலம் பசாசுகளோடு நெருப்பிலே வெந்து சகல ஆக்கினைகளையும் அனுபவிப்பார்கள்.

61.  நல்லவர்கள் மோட்சத்தில் அனுபவிக்கிற பாக்கியம் என்ன?

        சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து எப்போதும் சகல பேரின்ப பாக்கியங்களையும் அனுபவிப்பார்கள். 


ஆறாம் பிரிவு
கற்பனைகளும், பாவமும், புண்ணியமும்

62.  மோட்சத்தை அடைவதற்கு வேத சத்தியங்களை விசுவசிகிரதல்லாமல் இன்னும் செய்யவேண்டியதென்ன?

                     சர்வேசுரனுடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்து பாவத்தை தள்ளி புண்ணியத்தை செய்ய வேண்டியது.

63.   சர்வேசுரனுடைய கற்பனைகள் எத்தனை?
                    
                        பத்து

64.   பத்தும் சொல்லு?
                    

65.   திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?
                      
                        ஆறு

66.   ஆறும் சொல்லு?


67.   பாவம் ஆகிறதென்ன?

                         தேவ கட்டளைகளை மீறுகிறதே பாவம்

68.   எத்தனை வகை பாவம் உண்டு?

                            ஜென்ம பாவம்
                             கர்ம பாவம்

69 .ஜென்ம பாவம் ஆவதென்ன?
        
            ஆதித்தாய் ஆதித் தகப்பனாலே உண்டாகி நம்மோடு கூடப் பிறக்கிற பாவம்.

70. கர்ம பாவம் ஆவதென்ன?

           அவரவர் புத்தி விவரம் அறிந்த பிற்பாடு மனது பொருந்தி செய்கிற பாவம்.

71. கர்ம பாவம் எத்தனை வகையுண்டு?

          சாவான பாவம், அற்ப பாவம் ஆகிய இரண்டு வகையுண்டு.

72. சாவான பாவம் ஆவதென்ன?

          தேவ இஷ்டப் பிரசாதத்தை போக்கடித்து நம்மை நரகத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.

73. அற்ப பாவம் ஆவதென்ன?

         நம்மிடத்தி;ல் தேவசிநேகத்தை குறைத்து சாவான பாவத்துக்கு வழியுமாக்கி நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.

74. தலையான பாவங்கள் எத்தனை?
        
            ஏழு

75. ஏழும் சொல்லு?


76. மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்கள் எவை?

            விசுவாசம்
            நம்பிக்கை
            தேவசிநேகம் ஆகிய இவைகளாம்.

77. தலையான பாவங்களுக்க எதிரான புண்ணியங்கள் எத்தனை?

      ஏழு

78. ஏழும் சொல்லு?














Download Traditional Tamil Catholic Songs for free.... Click here....

வியாழன், 2 ஜூலை, 2015

Visitation of Our Lady


July 2: Feast of the Visitation of Our Lady, 

instituted in 1385 by Pope Urban IV

Mary’s first thought after the Archangel’s visit was to hasten to the little city of Ain Kharin and congratulate her cousin Elizabeth on the wonderful event about to take place. As Mary hastened along, those who met her little realized that she bore the Son of God – outwardly humble, sweet, and gracious to all.

So the little girl from Nazareth passed unobserved upon her way. But as she raised her voice in loving salutation to Elizabeth, when entering the house, a marvelous thing happened, for the unborn infant in Elizabeth’s womb leaped for joy as he heard the voice of God’s Mother sounding in his ears. Elizabeth, stricken with amazement, cried out:

“Blessed art thou among women, and blessed is the fruit of thy womb. And whence is this to me, that the mother of my Lord should come to me? For behold, as soon as the voice of thy salutation sounded in my ears, the infant in my womb leaped for joy. And blessed art thou that hast believed, because those things shall be accomplished that were spoken to thee by the Lord.”



In that instant Elizabeth knew that she was standing in the presence of God; knew that the little girl standing before her was God’s Mother; knew all that had taken place at Nazareth; knew of Mary’s fiat.

Then Mary lifted up her voice in high thanksgiving and gave forth the marvelous canticle:

“My soul doth magnify the Lord. And my spirit hath rejoiced in God my Savior. Because He hath regarded the humility of His handmaid; for behold from henceforth all generations shall call me blessed. Because He that is mighty, hath done great things to me; and holy is His name. And His mercy is from Generation unto generations, to them that fear Him. He hath shewed might in His arm: He hath scattered the proud in the conceit of their heart. He hath put down the mighty from their seat, and hath exalted the humble. He hath filled the hungry with good things; and the rich He hath sent empty away. He hath received Israel His servant, being mindful of His mercy: As He spoke to our fathers, to Abraham and to his seed forever.”

In this Magnificat of the humble little girl of Nazareth there is an intense personal note; she sees why it is that she is exalted – her humility. She prophesies as well as she sings, and foretells her future glory. Then she tells that God’s mercy follows those that fear Him; she sings of God’s might; she returns to the thought of God’s mercy, and with this mercy in mind, the little virgin ends her triumphant song.

For three months Mary and Elizabeth rejoiced in each other's company and gave thanks to God for all the wonderful mercy He had bestowed on them – one, the mother of the Herald of God, the other, the Mother of God Himself. Yet these months saw nothing outwardly extraordinary; it was just the quiet outwardly ordinary daily round, such as might be seen in any family.

After those three months the Virgin set out on her way home to Nazareth, and her return was as little noted as her going. She came full of joy and she returned full of joy, for no hint of coming sorrow cast a shadow upon her.

This Feast of the Visitation of Our Lady was instituted by Urban IV, in the year 1385, and confirmed by Boniface IX, in the year 1389.

Feast of the Visitation of Our Lady


சனி, 23 மே, 2015

தேவமாதாவின் மகிமை

1. தேவதாயின் மூலமாகத் தான் இயேசு நாதர் இந்த உலகில் வந்தார். அவர் மூலமாகத்தான் இந்த உலகை அவர் ஜெயம் கொள்வார்
2.  மாதா இஸ்பிரித்துசாந்து வினால் அழைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய வாழ்நாள் முழுவதும் ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தாழ்ச்சியின் காரணமாக ஒரு மறைந்த வாழ்வு வாழ்ந்தார்
3.  அவர் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார்.
4.  ஆண்டவர் அவரை அவர் உற் பவித்தது முதல் அவர் தம் ஆத்தும சரிரத்தோடு பரலோகத்துக்கு ஆரோபணம் ஆகும் வரையில் அவரை மறைத்து வைத்திருந்தார்.
5. அவருடைய பெற்றோருடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்
வானதூதர் களுடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்.
6.  பிதாவாகிய சர்வேசுரன் அவருக்கு புதுமைகளை செய்யும் வரம் கொடுத்திருந்தாலும் அவர் அதை இந்த உலகில் வாழும் போது செய்யவில்லை
7.  சுதனாகி சர்வேசுரன் தமது அளவு கடந்த ஞானத்தை மாதாவுக்கு  கொடுத்தார். ஆனாலும் அவர் பேசியது குறைவே
8.  இஸ்பிரித்துசாந்து சுவிஷேகர்களையும் அப்போஸ்தலர்களையும் மாதாவைப் பற்றி கொஞ்சமாக பேசவும் எழுதவும் .தூண்டினார். அப்போது தான் யேசுவைப் பற்றி அதிகமாக உலகுக்கு சொல்ல முடியும் என்பதால் தான்
9.   ஆண்டவர் அவரை எவ்வளவு மகிமைப்படுத்தினார என்றால் வானதூதர்கள் அனைவரும் " அருள் நிறைந்த மரியாயே " என்று புகழ்கின்றனர்.  மரியாயினுடைய ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக  காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
10 . இந்த உலகம்  முழுவதும் மரியாயின் மகிமையால் நிறைந்துள்ளது.
11. ஆண்டவருக்கு மாதாவினுடைய பெயரால் பல கத்தோலிக்க தேவாலயங்கள் கட்டப்பட்டு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளன.
12. முந்தைய காலங்களில் கோவில்களில் தேவதாய்க் கென ஒரு பீடம் உண்டு.
13. தேவதாய் புகழ்ச்சிக்கும் மரியாதைக்கும,அன்பிற்கும், சேவைக்கும் முற்றும் உரியவர்.
14. ஆண்டவர் தமது மிகப் பெரிய காரியங்களை மரியாயின் மூலம் நிறைவேற்ற அவரைப் படைத்தார். ஆண்டவர் அந்த திட்டங்களில் மாறுதலையோ அல்லது மாற்றமோ செய்ய மாட்டார்.
15.  பிதாவாகிய சர்வேசுரன் தமது குமாரனை அர்ச். தேவதாயின் மூலம் இந்த உலகுக்கு தர சித்தமானார்.  பல பிதா பிதாக்களும், தீர்க்கதரிசிகளும், பழைய ஏற்பாட்டில் உள்ள அர்ச்சிஷ்டவர்களும் சுமார் 4000 வருடங்கள் ஆண்டவருடைய வருகைக்காக காத்திருந்தாலும், ஆண்டவர் இந்த உலகிற்கு வந்தது தாய் மரியாள் மூலமாகத் தான்.
அர்ச். அகுஸ்டின் சொல்வது போல் கடவுள் தம்முடைய குமாரனை தேவதாயின் மூலம் உலகுக்கு தர சித்தமானார்.
16. சேசுநாதர்  சுவாமி நம்மை இரட்சிப்பதற்காக மரியாயிடத்தில் மனிதவதாரம் எடுத்தார். எனவே நாம் தேவதாய்  மூலமாகவே இரட்சிக்கப்படுவோம்.
17. சேசு நாதார் சுவாமி மனித அவதாரம் எடுப்பதற்கு முன்  அர்ச். கபிரியேல் சம்மனசு மூலம் அனுமதி கேட்ட பின் தான் மரியாயினிடத்தில் மனித அவதாரம் எடுத்தார்.
18. தேவசு தன் அவருடைய உதரத்திலே ஒரு புது ஆதாமாக உருவெடுத்தார்.
19. தேவதாய் ஆண்டவரை பெறும் போது மட்டுமல்ல, அவருடைய இறப்பிலும்  அவரோடு கல்வாரி மலையிலே இருக்க சித்தமானார்
20. பழைய ஏற்பாட்டிலே ஆபிரகாமை கடவுள் கேட்ட போது தமது ஒரே மகனை பலி கொடுக்க சித்தமானார்.  அதே போல் தேவதாயும் தாம் பாலுட்டி சீராட்டி வளர்த்த மகனையும் கல்வாரி மலையில் நமக்காக ஒப்பு கொடுத்தார்.
21. ஆண்டவருடைய 30 வருட மறைந்த வாழ்வு சுவிஷேஷத்தில் சொல்லப் படவில்லை. அவர் மரியாளுக்கும் சூசைக்கும் கீழ்படிந்திருந்தார்.
22. தேவமாதாவினுடைய வார்த்தையே எலி செபத்தம்மாள் வயிற்றில் இருந்த ஸ்நாபக அருளப்பரை பரிசுத்தமாக்கியது.
23. பிதாவாகிய சர்வேசுரன் உலகில் உள்ள எல்லா ஜலத்தையும் ஒன்றினைத்து அதற்கு கடல் என்று அழைத்தார்.  அதைப் போல் தமது வரப்பிரசாதங்களையும் ஒன்றினைத்து அதற்கு மரியாள் என்று பெயரிட்டார்.
24.  தேவதாய் மூலமாக தான் அனைத்து மோட்ச வரப்பிரசாதங்கள் நமக்கு கிடைக்கின்றன.
25.  தேவமாதா இந்த உலகில் கடவுளின் தாயாகவே இருந்தார்.
26.  சேசு நாதரும் இந்த உலகில் உள்ள குழந்தைகள் தன் தாயை எவ்வாறு நேசிக்கு மோ அதைவிட  மேலாகவே அவர் மாதாவை நேசித்தார்.
27. சேசுநாதருக்கு மாதா தாயாக இருந்தாலும் இந்த உலகத்து தாய்மார்களைப் போல தன் மகனுக்கு கட்டளைகளை கொடுக்கவில்லை.
28. தேவமாதா கர்த்தரிடத்தில் இருந்து  எதையும் கேட்கவோ ஆசிக்கவோ இல்லை .
29. சேசுநாதர் முன்னிலையில் மாதாவினுடைய ஜெபங்களும் மன்றாட்டுகளும்  அதிக பலம் வாய்ந்தது.
30 . அவருடைய தாழ்ச்சியின்  காரணமாக மோட்சத்திலுள்ள தூதர்கள் மற்றும் சகல அர்சிஷ்டவர்கள் மீதும் சகல அதிகாரங்களும்  கொடுக்கப்பட்டுள்ளது.
31. ஆண்டவர் மாதாவை வானுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் அரசியாகவும் , அவருடைய படைகளுக்கு தலைவராகவும், ஞான பலன்களுக்கு பாதுகாவலாகவும், அவருடைய வரப்பிரசாதங்களை பகிர்ந்து அளிப்பவராகவும், மனிதர்களுக்கு மனு பேசுகிறவராகவும், அவருடைய பகைவர்களை அழிப்பவராகவும்  ஏற்படுத்தினார்.
32. பிதாவாகிய சர்வேசுரன் தேவமாதாவை உலக முடியும் மட்டும் தமது மனு குலத்தின் தாயாக இருக்க விரும்புகிறார்.
33. நமக்கு இயற்கையாகவும் உடல் ரீதியாகவும் தாய் தந்தை இருப்பது போல, நமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்திலும், ஞான விதத்திலும் தாய் தந்தையாக மரியாளும் பிதாவாகிய சர்வேசுரனும்  இருக்கிறார்கள்
34. ஆண்டவர் தேவதாயை பிந்தைய காலங்களில் அதிகமாக வெளிபடுத்த சித்தமானார்.
           1.  எனெனில் தேவமாதா தன்னையே இந்த உலகில்  இருந்து ஒளித்துக் கொண்டார்.
             2.  மாதா தன்னையே ஒரு புழுதியை விட தாழ்வாக தாழ்த்திக் கொண்டார்.
               3.  தேவமாதவின் தாழ்மையான வாழ்க்கை
                4. தேவதாய்  தான் சேசுநாதர்  இந்த உலகில் வரக் காரணமாக இருந்தார்
                  5.  சேசு நாதருடைய இரண்டாம்  வருகையும் தேவமாதாவின்  மூலமாக மட்டுமே இருக்கும்.
                    6.  நாம் சேசுநாதரை அடைவதற்கு உத்தமமான  வழி தேவமாதா ஒருவர்  மட்டுமே
35.  தேவமாதாவை கண்டடைகிறவர்கள் எல்லோரும் வாழ்வை கண்டடைகிறார்கள்.  அதாவது சேசுநாதரை கண்டடைகிறார்கள்.
36. தேவமாதாவை தேடாத யாரும்  அவரை கண்டடைவதில்லை.   அவரை அறியாத யாரும்  அவரை தேட மாட்டார்கள். எனவே தேவமாதா முந்தைய காலங்களை விட பிந்தைய காலங்களில் அதிகமாக அறியப்பட வேண்டும்.
37. 

ஞாயிறு, 17 மே, 2015

தேவதாயின் காட்சிகள்

தேவதாய் பல முறை ' உலகில் காட்சி அளித்துள்ளார்கள்' ஒவ்வொரு காட்சியிலும் நம்மிடம் கேட்பது என்னவென்றால் ஜெபம் செய்யுங்கள்
பாவங்களுக்கு பரிகாரம் செய்யுங்கள் என்பது தான் .  நாம் பாவம் செய்யும் போது ஆண்டவரையும் தேவ அன்னையும் மனம் நோகச் செய்கிறோம்.  பாத்திமாவில் மூன்று சிறுவர்களுக்கு காட்சி அளித்து உலகிற்காக செபம் செய்யுங்கள். பாவிகளுக்குக்காக செபம் செய்யுங்கள் என்று தான் அன்னை கேட்கிறார்.   அர்ச். பெர்னதத் அவர்களுக்கு காட்சி அளிக்கும் போது தன்னுடைய கரங்களில் செபமாலை எந்தியவர்களாய் காட்சியளித்தார்.  
மாதாவின் ஒவ்வொரு காட்சியிலும் தன் மக்களை நரக நெருப்பில் இருந்து காத்து மோட்சம் கூட்டி சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

Our Lady of Guadalupe (குவாடுலுபே மாதா)

காட்சி                 : 1531
நாடு                    : மெக்ஸ்சிகோ (Mexico )
காரணம் :  தனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்றும் அதன் மூலம் பலரை மனம் திருப்புவேன் என்று மாதா கூறினார்.  
காட்சி பெற்றவர் : அர்ச் . ஜூவான் தியாகோ (St. Juan Diego )


Our Lady of the Miraculous Medal (புதுமை பதக்கம்)

காட்சி                 : 1830
நாடு                    : பாரிஸ்(Paris)
காரணம் :  
காட்சி பெற்றவர் : அர்ச் . கத்தரின் லபோரே  (St. Catherine Laboure)

Our Lady of La Salette (சலேத் மாதா)

காட்சி                 : 1846
நாடு                    : சலேத் (la Salette, France)
காரணம் :  உலக மக்கள் ஆண்டவருக்கு கீழ்படிய வேண்டும் என்றும், கடவுளின் நாட்களை அனுசரிக்க வேண்டும் என்பதை மாதா இங்கு குறிப்பிடுகிறார். நாம் ஞாயிற்று கிழமை, கடன் திருநாட்களில் சர்வேசுரனுக்கு வேண்டிய காரியங்களில் செலவிட வேண்டும் என்று அன்னை கேட்டுக் கொண்டார்.

காட்சி பெற்றவர் : இரண்டு ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கு மாதா காட்சி அளித்தார்.  ( Mélanie Calvat and Maximin Giraud)

Our Lady of Lourdes (லூர்து மாதா)

                                       காட்சி                 : 1858

நாடு                    : லூர்து நகர் (France )
காரணம் :   நாமே அமல உற்பவம் என்று அன்னை உலக மக்களுக்கு வெளிப்படுத்தினார்.  செபமாலை எவ்வளவு  முக்கியம் என்பதை காண்பிப்பதற்காக கையில் செபமாலையுடன் காட்சி அளித்தார்.

காட்சி பெற்றவர் : அர்ச் . பெர்னதத்   (St. Bernadette) 


Our Lady of Fátima(பாத்திமா மாதா)

காட்சி                 : 1917
நாடு                    : போர்ச்சுக்கல் (Portugal)
காரணம் :  மாதா இங்கு செபமாலை சொல்ல சொல்லுகிறார்.  அதிகமாக செபமாலை சொல்ல சொல்லுகிறார்.  நரகத்தில் விழும் பாவிகளை சிறுவர்களுக்கு காண்பித்து பாவிகளுக்காக செபிக்க சொல்லுகிறார். 


காட்சி பெற்றவர் : ஆடு மேய்க்கும் சிறுவர்களான லூசி (Lucy), ஜெசிந்தா(Jesintha), பிரான்சிஸ் (பிரான்சிஸ்)


Our Lady of Beauraing 

காட்சி                 : 1932
நாடு                    : பெல்ஜியம் (Belgium)
காரணம் :   செபம், செபம், செபம் 
காட்சி பெற்றவர் : பள்ளி சிறுவர்கள் 


Our Lady of Velankanni (வேளாங்கண்ணி மாதா )

காட்சி                 : 1570

நாடு                    :  தமிழ்நாடு, இந்தியா(India)
காரணம் :   
காட்சி பெற்றவர் : ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் 



இன்னும் பல ஊர்களில்,நாடுகளில் மாதா காட்சி அளித்து உள்ளார்கள்.  அவர்கள் எங்கு காட்சி அளித்தாலும் அங்கு அவர் கேட்பது எல்லாம் செபம், பரித்தீயாகம் செய்யுங்கள் என்பது தான்.  நீங்கள் 10 சதவிதம் கொடுத்தால் ஆண்டவர் உங்களுக்கு 20 சதவீதம் தருவார் என்று அவர் கேட்கவில்லை.  மாறாக அவர் கேட்பது எல்லாம் நம்முடைய செபம்.  
மாதா எளிமையை, ஏழ்மையை, குழந்தைகளை  விரும்பினார். அதனால் தான் அவர் ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கும்,  ஏழைகளுக்கும் காட்சி அளித்தார்.  அவர்கள் மூலம் தன்னுடைய கோரிக்கைகளை உலக மக்களுக்கு சொல்லுகிறார்.




சனி, 9 மே, 2015

ST. ANTHONY OF PADUA - OUR PATRON SAINT


ST. ANTHONY OF PADUA - OUR PATRON SAINT

Feast Day is June 13

The very first writings of the life of St. Anthony are found in a book known as the Assidua (because Assidua happens to be the Latin word that begins the little book).  An anonymous Franciscan friar, at the request of his community, wrote this little biography for the occasion of St. Anthony’s canonization, which took place only one year after his death in 1231. Franciscan scholars consider the Assidua a reliable source for the basic facts of Anthony’s life.

If one reads through this book very carefully, you will discover between the lines just what made Anthony a truly great saint. The one thing that jumps out to most people from the pages of this book was Anthony’s lifelong desire to be a contemplative person seeking the face of God before all else. What follows are selected details and quotes from the Assidua.

Anthony’s Early Years

Anthony’s baptismal name was Ferdinand. He was born in Lisbon, Portugal, and his parents lived close to the Cathedral Church. His parents “entrusted him to this church…so that he might learn the sacred scriptures there.” This is already a strong hint of Ferdinand’s early desire to find God in the pages of the Bible.

At age 15, Ferdinand withdrew from the world and the “sensual pleasures” of adolescence and entered the Augustinian monastery nearby, another clear sign of his holy longing to find God.


He lived in this monastery for two years, but felt distracted in his search for God because of the frequent visits of his friends from around Lisbon. As a result, Ferdinand asked his superiors if he could move to the Augustinian monastery in the city of Coimbra, 100 miles away.

Anthony’s Search Intensifies

At the monastery in Coimbra, young Ferdinand often studied the Scripture in search of “the deep sense of the word of God.” His journey toward God, however, would soon leap to a new intensity. It happened that the relics of five holy Franciscan martyrs, beheaded in Morocco for preaching Christianity to the Muslims, were brought to Portugal amidst great publicity and fervor. On learning first hand about the great faith and heroism of these Franciscan martyrs, Ferdinand desired to follow in their footsteps.

It so happened that not far from the monastery where Ferdinand was staying, there lived a group of Franciscan friars at a church named St. Anthony (named after 4th-century St. Anthony of the Desert). These friars often came begging at the monastery door, where Ferdinand was staying. He spoke earnestly to the Franciscans about his desire to become a martyr for Christ. With great joy, the friars said they would come back in two days and invest him in the Franciscan habit. And so it happened Ferdinand, the Augustinian, became Anthony the Franciscan, and was soon on his way to Morocco.

A Change in Plans

The newly renamed Anthony became deathly sick in Morocco and had to sail back to Portugal to regain his health. On the journey home, a strong wind swept them off course and they landed in Sicily. The friars there told Anthony about the general chapter of the Franciscan Order taking place in Assisi and they persuaded him to attend, despite his illness.
Because Anthony was a newcomer to the Order, the chapter ended without his receiving any assignment. So Anthony introduced himself to the provincial of Romagna, a region in northern Italy, and asked if he could go with him to learn the fundamentals of the Franciscan life. Out of humility, Anthony did not speak about his own high level of education and deep mysticism.

The provincial invited Anthony to go with him to Romagna and offered him a room in the hermitage of Monte Paolo, not far from the town of Forli. Here, Anthony’s desire for contemplative prayer again sprang to life within. Learning about a secluded cell that a certain friar had built nearby, Anthony asked the friar if he could use this cell. Anthony went there daily to nurture a closer union with God, taking with him only a little bread and water.

Anthony, The Famous Preacher

One day, Anthony went with the other friars to an ordination ceremony in the town of Forli. A good number of Franciscan and Dominican friars were there for the ceremony. The local superior asked several Dominicans to preach for the occasion but all refused. Finally, “the superior turned to friar Anthony and ordered him to proclaim to those assembled whatever the Holy Spirit might suggest to him.”

This event catapulted Anthony into an incredible career as a preacher and evangelist. The Assidua draws a clear connection between his contemplative gifts and his power as a preacher. Of Anthony it says: “The faithful dweller of the hermitage was sent out into the world and his lips, closed for so long, were opened to proclaim the glory of God.”

For several years, Anthony preached throughout northern Italy and southern France. At one point, the minister general sent him to the papal court in Rome to preach to the Pope and other church leaders. To quote the Assidua again: “Anthony’s sermons were heard with the warmest devotion by the Supreme Pontiff.” Anthony drew out of Scripture such original and profound meaning, that he was called by the Pope himself… “The Ark of the Testament.”

During the last two years of his life, St. Anthony preached mainly in the city of Padua, where he became a favorite. The crowds who came to hear him were so large often reaching 30,000 that Anthony often had to go outside the city to the open fields.

The Saint’s Last Days

Sadly, Anthony died at age 36. Seeing that his days on this earth were coming to a close, he withdrew from Padua to the nearby town of Camposampiero. Once again, his familiar desire for contemplative union with God returned. With the help of a certain nobleman named Tiso, a cell something like a tree hut was built for Anthony in the branches of a walnut tree in a thick forest. Anthony spent the last days of his life in that solitary place so he could “give himself exclusively to God.”

One day, however, when Anthony came down from the tree to join the friars for lunch, he became seriously ill. He asked his confreres to take him by cart to Padua. Just outside Padua, the group stopped at the Franciscan friary at Arcella next to a Poor Clare monastery.

As death drew near, Anthony received the Sacrament of Penance for the last time and then sang a hymn “to the glorious Virgin.” When he finished his song, the dying friar “suddenly raised his eyes toward heaven and with a stunned look, stared in front of himself for a long time. When the friar who was supporting him asked what he saw, Anthony answered, “I see my Lord!” Anthony’s search for the face of God was now successfully completed.

St Anthony, help us all to get in touch with the gift of contemplation within each of us. Help us find what you were always seeking and what you finally found: The greatest of all treasures, union with our living God!    Amen.



Download free Christian Tamil Songs...

Download free Catholic Tamil Books..

ஞாயிறு, 3 மே, 2015

தேவதாய் மீதான பக்தி முயற்சிகள் (Devotion to Mother Mary)

 திருச்சபை சொல்லி தருகிற இரண்டு பாடம் என்னவென்றால்
         1. கடவுள் மட்டும் தான்,தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.
அவர் மட்டுமே ஆராதனைக்கு உரியவர்.  அவரால் படைக்கப் பட்ட ஒன்றை ஆராதிப்பவன் ஒன்றாம் கற்பனைக்கு எதிராக பாவம் செய்கிறான். கத்தோலிக்கர்கள் தேவமாதாவை ஆராதிக்கவில்லை.   அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
              அவர் கடவுளின் தாய்.  பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சேசுவினுடைய தாய்.  எப்படி நாம் இந்த உலகில் நம் பெற்றோரை மதிக்கிறோம். அப்பிடி இருக்க கடவுள் தம் தாயாரை எப்படி உயர்த்துவார்.  தம்மை பெற்று 30 வருடங்கள் வளர்த்த அந்த தாயை எவ்வளவு உயர்த்துவார்.  சேசுநாதர் 30 வருடம் இந்த உலகில் தேவமாதாவிற்கு கிழ்படிந்து இருந்தார்.  காணா ஊர் திருமணத்திலே அவர்களுக்கு ரசம் தீர்ந்து போக தேவதாய் சேசுநாதரை அவர்களுக்கு உதவுமாறு சொல்லுகிறார்.  அவரும் தன் தாயின் கட்டளைக்கு கீழ்படிகிறார்.(அரு. 2. 3-8) சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்திற்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணிரை திராட்சை ரசமாக மாற்றின புதுமையை செய்த படியால், அவர் அந்த தாயின் மீது எவ்வளவு மரியாதை வைத்து இருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது.
Annunciation
         கபிரியேல் தேவதூதன் மூலமாக ஆண்டவர் மாதாவை இவ்வாறாக வாழ்த்துகிறார். (லூக் . 1. 28) "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க.  கர்த்தர் உம்முடனே. ஸ்திரிகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே." இவ்வாறாக தேவதூதன் மாதாவை வாழ்த்துகிறார்.  இந்த உலகில் உள்ள எல்லா பெண்களையும் விட தேவதாயை ஆண்டவர் உயர்த்தினார்.
Visitation
         மற்றொரு இடத்தில் அர்ச். லூக்காஸ்  தனது சுவிசேஷத்தில் (லூக். 1. 41-45) எலிசெபத்தமாளும் இஸ்பிரித்து சாந்துவினால் நிரப்பபட்டு உரத்த சத்தமாய் கூப்பிட்டு சொன்னதாவது, : ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய ஆண்டவருடைய தாயார் என்னிடம் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி? இதோ, நீர் வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றில் உள்ள பிள்ளை அக்களிப்பால் துள்ளிற்று. அன்றியும் விசுவசிதவளாகிய நீரே பாக்கியவதி: ஏனெனில் ஆண்டவரால் உமக்கு வசனிக்கப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்ப்ட்டதாமே. என்
இவ்வாறாக தேவதாயை குறித்து பல உதாரணங்களை சொல்லலாம். நாம் தேவமாதாவை ஆராதிக்கவில்லை .  மாறாக அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.  ஏனெனில் அவர் நமது இரட்சகருடைய தாயார் என்பதனால்.

      2.  சேசுநாதர் ஒருவரே இரட்சகர். அவர் மட்டுமே தமது பாடுகளின் மூலம் மனுக்குலத்தை இரட்சிக்கிறார்.  தேவதாய் மனுக்குலத்தை இரட்சிக்கிறவர் அல்ல.  மாறாக மனுகுல இரட்சணியத்தில் சேசுநாதருக்கு ஒரு துணை இரட்சகராக(Co -Redeemer) இருக்கிறார்.
ஆண்டவர் மாதாவுக்கு மனுகுல இரட்சணியத்தில் பல சலுகைகளை
வழங்கியுள்ளார்.  மாதா பல நாடுகளில் காட்சி அளித்து மக்களை மோட்ச பாதைகளில் சேர்கிறார்.  தம்மிடத்தில் அன்பு கொண்டுள்ள பிள்ளைகளை மோட்சத்தில் அவர்களை வரவேற்கிறார்கள்.  ஏனென்றால் தேவதாய்  ஆண்டவருடைய தாய்.  அவர் சொல்லுவதை சேசுநாதர் ஒருபோதும் மறுக்கமாட்டார்.

பாரீஸ் பட்டணத்திலே அர்ச். ஞானபிரகசியார் என்னும் அரசரால் ஒரு அழகான கோவில் உண்டு.  அந்த கோவில் முன்பு சலவை கல்லால் ஆன  ஒரு அழகிய மாதா சுருபம் உண்டு. ஒரு நாள் ஒரு சிறுவன் தன் வீட்டுத் தோட்டத்தில் பூக்களால் ஒரு மாலை செய்து மாதாவின் கழுத்திலே அணிய வேண்டும் என்று சென்றான்.  அந்த சுருபத்தின் அருகில் சென்ற போதுதான் தன்னால் அந்த மாலையை சுருபத்தின் கழுத்தில் இடமுடியாது என கண்டான்.  ஆனாலும் பல முயற்சி செய்து பார்த்தான்.  அவனால் முடியவில்லை.  எனவே மிகவும் மனம் சோர்ந்தான். உடனே அந்த தாய் அந்த சிறுவன் மனம் சோர்ந்ததை கண்டு, அந்த சிறுவனை சமாதனம் செய்ய ஆவல் கொண்டார்.  அந்த கற்சுருபமானது அற்புதமாக தன் உடலை வளைத்து அந்த சிறுவனின் இரு கரங்களுக்கு எட்டும்படி தன் திரு சிரசை சாய்த்ததாம்.  அந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் அது நிமிராமலே இருப்பதை நாம் காணலாம்.
   தேவமாதா தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரையும் கைவிடுவதில்லை.  மாதா இந்த உலகில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் குணம் இருந்தது.  அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் ( 1. 40-56)  கப்ரியல் தூதன் எலிசபெத் அம்மாள் கர்பந்த்தரித்து இருக்கிறாள் என்று சொன்னதும் அவளுக்கு உதவி செய்ய செல்கிறாள்.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (11. 27) "ஜனக் கூட்டத்தில் இருந்து ஒரு ஸ்திரியானவள் தன் சத்தத்தை உயர்த்தி : உம்மை சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே என்றாள்." இப்படி அந்த பெண் புகழ காரணம் தேவமாதா சேசுநாதரை எவ்வளவு உத்தமமான முறையில் அவரை வளர்த்து வந்தாள் என்பதை நமக்கு காட்டுகிறது.

தேவமாதா சேசுநாதரை கல்வாரி மலையில் சிலுவையில் அறையும் மட்டும் அவரை பின் சென்றார்.  சேசுநாதர்  இந்த உலகில் அவள் பெற்ற நாள் முதல் அவர் சிலுவையில் மரிக்கும் வரை அவரை பின் சென்றார்.  சுவிசேஷத்தில் ஆண்டவர் ஒரு இடத்தில் சொல்லுகிறார் "தன் சிலுவைகளை (துன்பங்களை ) சுமந்து கொண்டு என்னை பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது." தேவதாய் தன்னுடைய துன்பங்களை எல்லாம் சுமது கொண்டு சேசுநாதரை பின் சென்றார்.

நல்ல கள்ளன்

நல்ல கள்ளன் தன்னுடைய கடைசி நேரத்திலே தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பினான்.  அவனுக்கு ஆண்டவர் மோட்ச பாக்கியத்தை கொடுக்கிறார்.  அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (23. 40-43) "மற்றவனோ மறுமொழியாக அவனைக் கண்டித்து, நீயும் இந்த ஆக்கினித் தீர்ப்புக்குள்ளாயிருந்தும் சர்வேசுனுக்கு பயப்படுகிறதில்லையா?   நமக்கு இது நியாயம் தான்.  நம்முடைய செய்கைகளுக்கு தக்க சம்பாவணையை பெறுகிறோம். ஒரு பொல்லாப்பும் செய்தவரல்ல என்று சொல்லி, சேசுநாதரை நோக்கி: சுவாமி தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான்.  சேசுநாதர் அவனை நோக்கி: இன்றே நீ என்னோடு கூட பரகதியில் இருப்பாயென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்."
தன் சாவில் நுணியில் மனம் திரும்பிய நல்ல கள்ளனுக்கே மோட்சம் என்றால், தன்னை பெற்று , வளர்த்து, தன்னுடைய சிலுவை மரணம் மட்டும் தன்னை பின் சென்ற அன்னைக்கு என்ன வரங்கள் எல்லாம் கொடுப்பார் என்று யோசித்து பாருங்கள்.
இந்த உலக மக்கள் மீது உள்ள பாசத்தால் தன் அன்னையை நமக்கும் தாயாக அவர் கொடுத்தார். அர்ச் . அருளப்பர் சுவிசேஷத்தில் சேசுநாதர் தம் தாயாரை இந்த உலகத்தின் தாயாராக தம்மால் நேசிக்கப்பட்ட சிஷனிடம் ஒப்படைத்தார்.

பிரிவினைகாரர்களின் ஏமாற்றுதல் 

பிரிவினைகாரர்கள் தங்கள் எண்ணம் போல் பைபிளில் உள்ள கருத்துக்களை மாற்றுகிறார்கள்.  அவர்கள் நாம் ஏன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். மரியாள் ஒரு சாதாரண பெண் அவளை ஏன் நாம்  ஆராதிக்க வேண்டும் என்று எல்லாம் நம் அன்னையை அவர்கள் மிகவும் கேவலமாக பேசுகிறார்கள்.  

பைபளில் உள்ள வசனங்களுக்கு தங்களுக்கு வேண்டியது போல அவர்களே ஒரு கதை கட்டுகிறார்கள். உதாரணமாக அரு. 2. 4. ஸ்திரியே எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய காலம் இன்னும் வரவில்லையே என்று அவளுக்கு(தேவதாய்) திருவுளம் பற்றினார்.

விளக்கம் 
        எனக்கும் உமக்கும் என்ன?" என்னும் இந்த வாக்கியத்தை "என்னோடு உனக்கு காரியமென்ன" என்பதாக சிலர் அர்த்தம் பண்ணி இவ்விதமாய் சேசுநாதர் தம்முடைய தாயாரை இகழ்ந்த்தாக சொல்லிக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த வாக்கியத்தை மூல பாஷையாகிய எபிரேய பாஷையில் பார்க்குமிடத்தில் கலியானக்காரர் விஷயத்தில் கலந்து கொள்வது "நம்மிருவருக்கும் காரியமில்லையே" என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டதாக நிச்சயமாகிறது.  
        அன்றியும் தாயை நோக்கி: ஸ்திரியே என்பது கிரேக்கர்களுக்கும் கீழ்திசைகளிலும் மரியாதையான வார்த்தையேயொழிய தாழ்மையான வார்த்தை அல்ல. மேலும் சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்துக்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணீரை ரசமாக மாற்றின புதுமையை செய்தபடியால் அவர் அந்த ஆண்டவளை  சங்கித்து கனம்பண்ணினார்ரென்று சொல்ல வேணுமேயொழிய அவளுக்கு கனகுறை செய்தாரென்று எவரும் நினைப்பதற்கு இடமில்லை.
கள்ள தீர்க்கதரிசிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.  தமிழ் நாட்டிலே அனேக கள்ள போதகர்கள் தோன்றியுள்ளனர்..  அவர்களின் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் ஒன்று கூட நடப்பது கிடையாது. அவர்கள் ஒரு குத்து மதிப்பாக சொல்கிறார்கள்.
அவர்கள் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.
https://www.youtube.com/watch?v=eVDAPJuhLtQ

https://www.youtube.com/watch?v=lmZoqSsgI1s

False prophets 
இவர்கள் தங்களை எப்போதும் உயர்த்தி பேசுகிறார்கள்.  இவர்கள் ப
ர்சேயர்கள்.

நாம் சுவிஷேசத்தில் வாசிக்கிற பரிசேயன், ஆயக்காரன் கதை தான் இவர்களது.இவர்கள் தங்களை தான் ஆண்டவர் முன் உயர்த்தி பேசுகிறார்கள். நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம், நாங்கள் நோன்பு இருக்கிறோம், நாங்கள் ஆண்டவரை கண்டோம், அவர் எங்கள் மேல் இருக்கிறார், பரிசுத்த ஆவி எங்கள் மேல் இருக்கிறது. என்றெல்லாம் கதைகளை சொல்லுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆண்டவர் முன் பரிசேயர்கள்.  தன்னைத் தான் உயர்த்துகிறவர்கள் எல்லாம் தாழ்த்தப்படுவார்கள்.

நாம் நம் அன்னையிடம் மன்றாடுவோம்.  தாயே எங்களை நல்ல வழியில் நடத்தியருளும் என்று மன்றாடுவோம்.

ஜென்ம பாவமின்றி உற்பவித்த மரியாயே, உம்மிடம் தஞ்சம் அடையும் எங்களுக்காகவும் மற்ற அனைவருக்காகவும், விசேஷமாய் சாத்தானின் இரகசிய சபையினருக்காகவும், உம் பாதுகாவலில் ஒப்படைக்கப்படுபவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.


Download.....
Download about Catholic Tamil Sermons about Our Lady

வெள்ளி, 1 மே, 2015

May the Month of Mary



மே மாதம் தேவதாயின் மாதம்.  மே மாதம் அன்னை மரியாள் உலகத்தின் அரசி என்று உலகுக்கு எடுத்து சொல்லும் மாதம். இந்த மாதத்தில் உலகம் எங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் தேவ மாதாவிற்கு வணக்கமாக ஒப்பு கொடுத்து, சில பக்தி முயற்சிகளை செய்கிறார்கள்.  இந்த மாதத்தில் சில கோவில்களில் தேவ அன்னையின் பிராத்தனையை பாடுவார்கள்.
இன்றைய காலங்களில் அநேகர் தேவதாயை மறந்து, மே மாதம் எதற்கு தேவதாவிற்கு ஒப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி சிந்தியாமல் தங்களை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். வேறு சிலர் தொலைக்காட்சியில் வரும் CSI, Protestant....etc.. அவர்களின் சேனல்களில் வரும் செப கூட்டம்,
ஆசிர்வாத பெருவிழா என்று இருக்கிறார்கள்.  வேறு சிலர் மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதனால் சுற்றுலா செல்கிறார்கள்.

மே மாதம் எதற்காக என்பதை கூட பலர் மறந்து போனார்கள்.

இது தேவ தாயின் மாதம். நாம் இதை சிறப்பாக கொண்டாட வேண்டும்.  நம் அன்னையை புகழ்ந்து பாடுவோம். அன்னை நம் வாழ்வில் செய்த சகல நன்மைகளுக்கும் நன்றி சொல்லுவோம். நாம் நம் அன்னையிடம் நமது தேவைகள் அனைத்தையும் எடுத்து கூறுவோம்.
தேவதாய் தான் சகல வரங்களின் மத்தியஸ்தி. தேவதாய் மூலம் தான் நமது ஆண்டவர் வரங்கள் அனைத்தும் சகல மனிதருக்கும் கொடுக்கின்றார். நாம் அன்னையிடம் வேண்டுவோம். கத்தோலிக்க திருச்சபையில் இருந்து விலகி போகிரவர்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை படுகிற ஆன்மாக்களுக்காகவும், நமது உற்றார் உறவினர்களுக்காகவும், நமது தேவைகளுக்காகவும் நமது தேவ அன்னையிடம் மன்றாடுவோம்.அவர் நமக்கு உதவி செய்வார்.