Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

அர்ச். சூசையப்பர் திருநாளுக்கான தியானம்

 

பிதாப்பிதாவான அர்ச்.சூசையப்பரின் வல்லமை:

சங்.பினே சுவாமியார்

மாபெரும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர், எவ்வளவு வல்லமை மிகுந்தவராக விளங்குகின்றார் என்றால், பரலோக பூலோக இராஜ்ஜியங்களை ஆண்டு நடத்தி வரும் இரண்டு மாபெரும் வல்லமை மிக்க அதிபதிகளான திவ்யசேசுநாதர், தேவ மாதா ஆகிய இருவருக்கும், கட்டளையிடுபவராக, திகழ்வதைக் காணும் யாவரும், அவர் கொண் டிருக்கும் மகத்துவமிக்க வல்லமையைக் குறித்து, வியந்து போற்றி, ஆர்ப்பரிக்கின்றனர். கல்வியில் தேர்ச்சி பெற்றமாபெரும் வேதசாஸ்திரியான ஜெர்சன் என்பவர், அர்ச்.சூசையப் பரைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவரை, செல்வாக்கு மிகுந்த பாதுகாவலர் என்றும், சர்வ வல்லமை மிக்க பாதுகாவலர், என்றும் அழைக்கிறார். ஏனெனில், அர்ச். சூசையப்பர், உலக இரட்சகரான திவ்ய சேசுநாதரின் வளர்ப்பு தந்தையாகவும், பாதுகாவலராகவும், தேவமாதா வின் பத்தாவாகவும், பாதுகாவலராகவும் திகழ்கின்றார். இத்தகைய உன்னதமான உயர்ந்த பட்டங்களுடையவருக்கு, எது தான் மறுக்கப்படும்? மோட்சத்திலும், உலகத்திலும், அவர் ஆசிக்கும் சகல காரியங்களும் ஆச்சரியமிக்க விதமாக நிறைவேற்றப்படுகின்றனவே!

திவ்ய சேசுநாதர், தமது பரலோக பிதாவிடம் எதையெல்லாம் கேட்பாரோ, அவற் றையெல்லாம், பரலோக பிதா அளிப்பதற்கு திருவுளம் கொள்கிறார். தமது திவ்ய குமாரனி டம், தேவமாதா எதையெல்லாம் கேட்பார்களோ, அதையெல்லாம், அவர், அளிப்பதற்கு திருவுளம் கொள்கிறார்; அர்ச். சூசையப்பர், தம் பரிசுத்த பத்தினியிடம் எதையெல்லாம் கேட் பாரோ, அவற்றையெல்லாம், தருவதற்கு, தேவமாதா மனதாயிருப்பார்கள். ஆகவே, திவ்ய சேசுநாதர் மூலமாக, தேவமாதா, சர்வ வல்லமையுடன் திகழ்கின்றார்கள் என்கிற உண்மை யைப் பின்பற்றி, தேவமாதா மூலமாக, அர்ச்.சூசையப்பர், சர்வ வல்லமையுள்ளவர் என்று பிரகடனம் செய்யலாம் அல்லவா! ! அர்ச்.சூசையப்பரை பரிந்துரையாளராகக் கொண் டிருப்பது, நமக்கு எவ்வளவு நன்மை பயக்கக்கூடியதாயிருக்கும்! ஏனெனில், இந்த உலகத் தில், எதுவும், அவருக்குக் கூடாத காரியம் அல்ல!

மற்ற எல்லா அர்ச்சிஷ்டவர்களும், திவ்ய சேசுநாதரிடமும், தேவமாதாவிடமும், தங் கள் விண்ணப்பங்களுக்காக மன்றாடி ஜெபிக்கின்றனர். ஆனால், அர்ச்.சூசையப்பரோ, தம் திவ்ய குமாரனிடமும், தம் திவ்ய பத்தினியான தேவமாதாவிடமும், தம் விண்ணப்பங்களை, கட்டளைகளாகக் கொடுக்கின்றார். மாபெரும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர் கொண்டி ருக்கும் மகத்துவமிக்க இவ்வல்லமையைப் பற்றி, துணிவுடன் ஓரிஜன் என்பவர் வெளிப் படுத்திய இந்தக் கருத்தையே, திருச்சபையின் அநேக வேதபாரகர்கள், ஏற்றுக்கொண்டிருக் கின்றனர். அர்ச். சூசையப்பர், தந்தையைப்போல் பேசுகின்றார்; ஒரு தந்தை, தன் மகனிடம், தன்விருப்பத்தை, நிறைவேற்றும்படி வேண்டுவதற்குப் பதிலாக, கட்டளையாகக் கொடுக்கி றார். சகல அர்ச்சிஷ்டவர்களும், தங்களுடைய மணி மகுடங்களை, திவ்ய செம்மறியானவ ரின் திருப்பாதத்தண்டையில் சமர்ப்பித்து,தங்கள் மன்றாட்டுகளுக்காக ஜெபித்து வேண்டிக் கொள்கின்றனர். பிதாப்பிதாவாகிய அர்ச்.சூசையப்பர், தம் திவ்ய குமாரனிடம், கட்டளையி டுவதுபோல், மிகுந்த தாழ்ச்சியுடன் மன்றாடுகின்றார்; அல்லது, பரிசுத்தத் திருக்குடும்பத்தின் தலைவரின் தாழ்ச்சி எவ்வளவுக்கு அதிகமாயிருந்ததென்றால், அவரால், தமது திவ்ய குமார னும் ஆண்டவருமான திவ்ய சேசுநாதருக்குக் கட்டளையிடுவதற்குக் கூடாமற்போயிற்று; அதே சமயம், நமதாண்டவரின் அளவில்லா நன்மைத்தனம் எவ்வளவிற்கு, பரிசுத்த நீதிமா னாக திகழ்ந்த தம் தந்தையான அர்ச். சூசையப்பரின் தாழ்ச்சியினால், கவர்ந்திழுக்கப்பட்ட தென்றால், அவருடைய ஜெபங்கள் எல்லாவற்றையும், தந்தைக்குரிய கட்டளைகளாக ஏற்க வும்,அந்தவிண்ணப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி, அருளவும் திருவுளம் கொள் ளும்படி, நமதாண்டவரைத் தூண்டியது.

! மிகுந்த பாக்கியம் பெற்ற பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பரே! தேவரீர் மாத்தி ரமே, சகல மனிதருக்குள், விசேஷ உறவுகளுடன் விளங்குகின்றீர்! எவ்வளவோ அந்நியோந் நிய நெருக்கத்துடன், அகில உலகத்தின் இரட்சகருடனும், அவருடைய மகா பரிசுத்த மாதா வுடனும், தேவரீர் ஐக்கியமாக ஜீவிக்கின்றீர்! அர்ச்.கன்னிமாமரியின் திவ்ய குமாரன், உமக்குக் கீழ்ப்படிகின்றார்; உமது திவ்ய பத்தினியாகிய சர்வேசுரனுடைய பரிசுத்த தேவ மாதா,உமக்குக் கீழ்ப்படியவும், உமக்குப் பணிவிடைபுரிந்து, மகிமை செலுத்தவும் கூடிய உன்னதமான வகையில் தேவரீர் பாக்கியம் பெற்றிருக்கிறீர்! அவர்கள் இருவருக்கும் கட்மையை, தேவரீர் பெற்றிருக்கிறீர். அப்படியென்றால், உம்மிடம் அடைக்கல மாக, உதவிகேட்டு வரும் அடியோர்களின் விண்ணப்பங்களை, திவ்ய சேசுநாதரிடமும், தேவமாதாவிடமும், தேவரீர் தயங்காமல், ஜெபித்துப் பெற்றுத் தருவிரல்லவோ!

புதுமை

பல வருடங்களுக்கு முன் ஒரு மேற்கத்திய நாட்டிலிருந்த ஒரு கன்னியர் மடத்தில் மேரி ஆஞ்சலா என்ற நவ கன்னியாஸ்திரி இருந்தாள்.ஒரு நாள், அவளுடைய தாய் வியாதியில் விழுந்து, மரணப் படுக்கையில் பேரா பத்தில் இருப்பதாக, அவளுக்குச் செய்தி வந்தது.தாய்க்கு உதவி செய்யக் கூடிய மக்கள் யாரும் இல்லை. இந்த இளம் துறவி மட்டும், தன் தாய்க்கு நோயில் உதவி புரியக் கூடியவள். இவள் இன்னும், சபையில் வார்த்தைப்பாடு கொடுக்கவில்லை. வீட்டுக்குப்போய்,தாய்க்குத் துணையாயிருப்பது தன் கடமை என்று, மேரி ஆஞ்சலா நினைத்தாள். மடத்தின் சிரேஷ்ட தாயாரிடம் தன் எண்ணத்தைத் தெரிவித்தாள். வீட்டிற்குப்போக வேண்டும் என்ற அந்த நினைவு, சர்வேசுரனிடமிருந்தே வந்ததா, என்பதை,மடத்தின் தாயாரே தீர்மானிக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டாள். சிரேஷ்ட தாயார், மேரியிடம், நீ நவசந்நியாசத்தில் சும்மா இரு. உன் தாய்க்கு உதவி செய்ய வேண்டும் என்று உனக்கு ஆசையாயிருக்கிறது. அந்த ஆசையை உன் தாயின் உடல் நலனுக்காக, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடு, நம் சபைப் பாதுகாவலரான அர்ச். சூசையப்பரிடம் போ. அவரிடம் உன் இந்த அவசர தேவைக்காக, உருக்கமாக வேண்டிக்கொள். அவர் நிச்சயம் உனக்கு இந்த காரியத்தில் தவறாமல் உதவி செய்து, உன் தாயாரைப் பாதுகாப்பார், என்று அறிவுரை கூறினார்கள்.

அவளும், உடனே, அர்ச்.சூசையப்பரின் அடைக்கலத்தை நாடிச் சென்றாள். தன் இருதயத்தை உலுக்கி வாட்டிக்கொண்டிருந்த, அந்த சஞ்சலத்தைப் பற்றிக் கூறி, தன் மன் றாட்டை, அர்ச்.சூசையப்பரின் திருப்பாதத்தண்டையில் சமர்ப்பித்தாள். பின், அன்று இரவு நிம்மதியாக நித்திரைக்குச் சென்றாள்.நித்திரையின்போது, ஒரு கனவு கண்டாள். அவள், தன் தாயின் வீட்டிற்குப் போயிருந்தாள்.இரவு நேரம், நோயாளிக்குக் காவலாயிருந்த பெண் தூங்கி விட்டாள். நோயாளிக்கோ, வேலைக்காரப் பெண்ணை எழுப்புவதற்குப்பலமில்லை. அசையவும் சக்தியற்றுக் கிடந்தாள். தாய் இறக்கும் தறுவாயிலிருந்தாள், என்று கண்டதும், மேரி ஆஞ்சலா மிகவும் பயந்தாள்; தாய்க்கு ஏதாவது செய் என்று யாரோ தன்னை தூண்டுவ தை, உணர்ந்த மேரி ஆஞ்சலா,உடனே,அருகிலிருந்த மருந்து புட்டியை எடுத்தாள்; அதன் மேல் எழுதியிருந்ததை வாசித்து அறிந்து கொண்டவளாக, அதன்படி, சிறிது மருந்தை, நோயாளியின் வாயில் ஊற்றி, விழுங்கும்படி செய்தாள். உடனே, நோயாளி, நோயின் உக் கிரமம் நீங்கியவளாக, அமைதியான நித்திரையில் ஆழ்ந்தாள்.உயிராபத்தும் நீங்கியதாக, மகள் உணர்ந்தாள்.

மறுநாட்காலையில், ஏதாவது கடிதம் வரும் என்று ஆஞ்சலா ஆவலுடன் காத்திருந் தாள். அதற்கு அடுத்த நாள் கடிதம் வந்தது. அம்மாவின் உயிருக்கு ஆபத்தில்லை, சுகமாகி வருகிறார்கள், என்று எழுதியிருந்தது. உடனே, ஆஞ்சலா, அர்ச். சூசையப்பர் பீடத்திற்குச் சென்று,முழு இருதயத்துடன் நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்தினாள்.சில மாதங்களுக்குப் பின்,தாய் தன் மகளைப்பார்ப்பதற்காக, மடத்திற்கு வந்தாள்.தான் கண்ட கனவை, அம்மா விடமும், வேறு யாரிடமும், ஆஞ்சலா அது வரை தெரிவிக்காமலிருந்தாள். தாயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தாய், அவளைப் பார்த்து, மேரி, நீ தான் என் உயிரைக் காப்பாற்றிய வள், என்று தெரிவித்தாள். மகள் ஆச்சரியத்துடன், தாயை நோக்கினாள். அப்போது, தாய், நடந்ததை பின்வரும் விவரத்துடன் தெரிவித்தாள்:

நான் வியாதியாயிருக்கையில், இத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து குடிக்க வேண்டும்; அதைச் சரியாய்க் குடித்து வந்தால் தான், நான் உயிர் பிழைப்பேன் என்று மருத் துவர் கூறியிருந்தார்.இரவில் குறிக்கப்பட்ட நேரங்களில் மருந்து ஊற்றிக் கொடுப்பதற்காக, நியமிக்கப்பட்டிருந்த வேலைக்காரி, அன்று ஒருநாள் இரவில் தூங்கி விட்டாள்; என்னால், அசையமுடியவில்லை. வேலைக்காரியை கூப்பிட்டு எழுப்பவும் பலமில்லை. அந்த நேரத்தில் மருந்து, குடிக்காவிடில் இறந்துபோய்விடுவேன் என்று எனக்குத் தெரியும். அப்போது, நீ உன் கன்னியாஸ்திரி உடையில், அறைக்குள் நுழைந்து, நேரே மேஜைக்குப் போய், மருந் தை ஊற்றி எனக்குக் கொடுத்தாய். உடனே, எனக்கு சுகமான நித்திரை வந்தது.நீண்ட நேரத் திற்குப் பிறகு, புதிய பலத்துடன் நித்திரையிலிருந்து எழுந்தேன். அதிலிருந்து, எனக்குச் சுகம் உண்டாகி, கடைசியில், பூரண சுகம் பெற்றேன்.

தாயும் மகளும் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்தனர் .ஆஞ்சலா, தன் தாயிடம், அப்போது நடந்த சகல நிகழ்வுகள் பற்றி, ஒன்று விடாமல் விவரித்தாள்.தாயின் வியாதியைக் குணப்படுத்தியது, அர்ச்.சூசையப்பர் தான், என்று, மேரி ஆஞ்சலா, தன் தாயிடம் அறிவித் தாள். இருவருமாக அர்ச்.சூசையப்பரின் பீடத்தின் முன் சென்று நன்றியறிந்த ஜெபத்தை ஜெபித்தனர். புதுமையாக, நவகன்னியாஸ்திரிக்கும், அவள் தாய்க்கும் உதவி செய்த அர்ச். சூசையப்பருக்கு நன்றியறிதலாக, அவருடைய புதிய சுரூபம் ஒன்று, மடத்தின் கன்னியர் கள், அடிக்கடி சந்தித்து ஜெபிப்பதற்கு வசதியான ஒரு இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. + Deo Gratias!

புதுமை

ஒரு காலத்தில், அர்ச். நோர்பேர்த்தூஸ் உண்டுபண்ணின சபையிலே ஹெர்மன் என்ற ஓர் சந்நியாசியார் இருந்தார். அவர் சிறுவயது முதல், பிதாப் பிதாவாகிய அர்ச். சூசையப்பர் பேரிலே மிகவும் பக்தியாயிருந்ததுமல்லாமல், அர்ச். நோர்பேர்த்தூஸுடைய சபையிலே சேர்ந்தவுடன்,அர்ச். சூசையப்பரின் சுகிர்த புண்ணியங்களைக்கண்டுபாவிப்பதில் இடைவிடா மல் ஈடுபட்டிருந்தார். அர்ச்.சூசையப்பர் மீது கொண்டிருந்த இந்த விசேஷ பக்தி முயற்சியி னாலும், அர்ச்.சூசையப்பரின் விசேஷ உதவியினாலும், அவர் விரைவிலேயே உத்தம சந்நியா சியானார். மற்ற சந்நியாசிகளுக்கு, துறவறத்தின் தெளிந்த கண்ணாடி போல் உத்தம நன் மாதிரிகையுடன் ஜீவித்தார்.

பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பர், தமது பரிசுத்த பத்தினியாகிய தேவமாதா வை சிநேகித்து வணங்கி வந்தாரென்கிறதினாலே, இந்த உத்தம சந்நியாசி, அது ரைக் கண்டுபாவிக்க வேண்டுமென்று, தேவமாதாவை அத்தியந்த பக்திபற்றுதலுடன் சேவித் துக் கொண்டிருந்தார். அந்த பக்திக்குப் பலனாக, மோட்ச இராக்கினியோவெனில், அவரைத் தமது பிரியமுள்ள மகனைப்போல், பேணித் தாபரித்து,அவருக்கு எவ்வித உபகாரசகாயங்களை யும் கட்டளையிடுவார்கள். ஒரு சமயம், தேவமாதா, தம்மை ஒரு காட்சியில் காண்பித்து, சந்நியாசியிடம், நீ, நம்முடைய பரிசுத்த பத்தாவாகிய சூசையப்பர் மீது பக்தியாயிருக்கிற தே, நமக்கு சந்தோஷம். இனிமேல், இந்த பக்திக்குக் குறிப்பாக உன் பெயருடன், சூசை என்கிற நாமத்தையும் சேர்த்துக்கொள், என்று கூறினார்கள்.

காட்சியில், தேவமாதா கூறிய அறிவுரையின்படி, முத்திப்பேறு பெற்ற ஹெர்மன் என்ற சந்நியாசியார், அதற்குப் பிற்பாடு தம்மை ஹெர்மன் சூசை என்று அழைக்கும்படிச் செய்தார். அப்படியே, தாம் எழுதுகிற நிருபங்களில் கையொப்பம் இடுவார். வேறு ஒரு சமயத்தில், தேவமாதா, திவ்ய குழந்தை சேசுநாதரைத் தம் கரங்களில் ஏந்தியபடி, அவருக் குக் காட்சி கொடுத்தார்கள். தேவ பாலனை, ஹெர்மனின் கரங்களில் இறக்கி விட்டார்கள். அப்போது, முத்.ஹெர்மன் ஜோசப் (சூசை), திவ்ய குழந்தையைத் தனது இருதயத்துடன் அரவணைத்தபடி,முத்தமிட்டார்; தேவபாலனுடன் இனிமையாய்ப் பேசி, உரையாடி, சொல்லிலடங்காத பேரின்பத்தை அடைந்தார்.காட்சி மறைந்தது.

நாளுக்கு நாள், அர்ச்.ஹெர்மன் ஜோசப் புண்ணிய நெறியில் அதிகரித்து வந்தார். சேசு மரி சூசை என்கிற திவ்விய குடும்பத்திற்குச் செலுத்தும் விசேஷ வணக்க ஆராதனையை முக்கியப்படுத்தவும், எங்கும் பரவச் செய்யவும் உழைத்தார். நாளடைவில், தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் அவருக்கு அருளிச் செய்த சகல நன்மையைப் பற்றி எழுத வேண்டுமெ னில், அது கூடாத காரியமாயிருக்கும். அவ்வளவு அபரிமிதமான நன்மைகளை, அடைந்திருந் தார். கடைசியில், ஹெர்மன் மரிப்பதற்கு முன், திவ்ய சேசுநாதரும், தேவமாதாவும், அவரி டத்திலே எழுந்தருளி வந்து.அவரைத் தேற்றி, அவர் மோட்ச பேரின்பத்தைச் சுகிக்கும்படிச் செய்தனர். அப்போது, ஹெர்மன் சூசை, தமது இருதயத்தில் தேவசிநேகத்தின் மிகுதியைப் பொறுக்க முடியாதவராக, தமது ஆத்துமத்தை, திவ்ய சேசுநாதருடையவும், தேவமாதாவு டையவும் திருக்கரங்களில் ஒப்புக்கொடுத்து இன்பமாய் மரித்து மோட்சத்திற்குப் போனார்.

கிறீஸ்துவர்களே! மாபெரும் பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரின் சுகிர்த புண்ணி யங்களைக் கண்டுபாவிப்பதால், எவ்வித ஞான நன்மைகள், வருகின்றன என்பதை அறிந்து, அவரைப் பின்செல்வீர்களாக

திங்கள், 18 ஜூலை, 2022

உத்தரிக்கும் ஆத்துமங்களுக்கு உதவுவோம்

 


ரித்த விசுவாசிகளுக்காக ஜெபிப்பதும், ஒறுத்தல் பரித் தியாகங்கள் செய்து ஒப்புக்கொடுப்பதும், அனைத்திற்கும் மேலாக திவ்ய பலிபூசை செய்விப்பதும் கிறீஸ்தவ வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது. உத்தரிக்கிற ஆன்மாக்களின் மீதான பக்தி, விசுவாசிகளின் இருதயங்களில் இஸ்பிரீத்து சாந்துவானவரால் தூண்டப்படுகிற பிறர்சிநேக பக்தியாக இருக்கிறது.

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் மீதான நம்முடைய பக்தி உத்தமமானதாக இருக்க வேண்டுமானால், அது ஒரு தெய்வ பய உணர்வாலும், தேவ நம்பிக்கை உணர்வாலும் உயிரூட்டப் பட வேண்டும். ஒரு புறத்தில் சர்வேசுரனுடைய கடுங்கோபமும் அவருடைய நீதியும் நமக்கு மிகுந்த நலம் பயக்கும் தேவ பயத்தை நம்மில் தூண்ட வேண்டும்; மறு புறத்தில், அவருடைய அளவற்ற இரக்கம் மட்டற்றதாகிய ஒரு தேவ நம்பிக்கையை நமக்குத் தர வேண்டும்.

சூரியன் ஒளியாயிருப்பதை விட எவ்வளவோ அதிகமாக சர்வேசுரன் தம்மிலே பரிசுத்த தனமாக இருக்கிறார். பாவத்தின் நிழல் கூட அவர் திருமுன் ஒரு கணமும் நிற்க முடியாது. " அக்கிர மத்தின் மீது தங்க முடியாதபடி உம் கண்கள் மாசற்றவையாக இருக்கின்றன" என்று தாவீது கூறுகிறார். கடவுள் பக்திச்சுவாலகர்களிடம் கூட குற்றம் கண்டுபிடிக்கிறார் என்றால், அற்ப மனிதர்களாகிய நாம் எந்த அளவுக்குக் கடவுளின் திருமுன் அஞ்சி நடுங்க வேண்டும்!


ஆகவே, சிருஷ்டிகளில் அக்கிரமம் தன்னை வெளிப்படுத்தும் போதெல்லாம், கடவுளின் அளவற்ற பரிசுத்ததனம் அதற்குப் பரிகாரத்தை எதிர்பார்க்கிறது. இந்தப் பரிகாரமானது, தேவ நீதியின் முழுக் கடுமையோடு செய்யப்படும் போது, அது பயங்கரமானதாக இருக்கிறது. இந்தக் காரணத்தால் தான் பரிசுத்த வேதாகமம், ''அவருடைய திருநாமம் பரிசுத்தமும் பயங்கரமும் உள்ளது" என்கிறது (அபாக். 1:13). அதாவது, சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்டதனம் அளவற்ற தாக இருப்பதால், அவருடைய நீதி பயங்கரமுள்ளதாக இருக்கிறது.

இந்த பயங்கரமுள்ள தேவ நீதி மிக அற்பமான பாவங்களையும் கூட மிக அகோரமான துன்பங்களைக் கொண்டு தண்டிக்கிறது. காரணம் என்னவெனில், நம் கண்களில் இலகுவான வையாகவும், இலேசானவையாகவும் தோன்றுகிற பாவங்கள், கடவுளின் அளவற்ற பரிசுத்த தனத்தின் முன்பாக மிகவும் அருவருப்புக்குரியவையாகத் தோன்றுகின்றன என்பதுதான். இதனால் தான் இந்த தெய்வீகப் பரிசுத்ததனத்தை நெருங்கிச் செல்லச் செல்ல, அர்ச்சியசிஷ்ட வர்கள் தெய்வீகப் பேரொளியில் தங்கள் அற்பப் பாவங்களையும் மிகக் கனமான பாவங்களாக உணர்ந்தார்கள். பெரும் புனிதர்களும் கூட, அதாவது, அற்பப் பாவங்களையும் கூட மிகுந்த விழிப்புணர்வோடு விலக்கி, மிகப் பரிசுத்தமாக வாழ்ந்த புனிதர்களும் கூட, தங்களுடைய ஒரு சில அற்பமான பாவங்களைக் கண்டு, உலகிலுள்ள சகல பாவிகளிலும் அதிக மோசமான பாவிகளாகத் தங்களைக் கருதினர். அந்த அற்பப் பாவங்களையும் அருவருத்து அவற்றை விலக்குவதற்காக ஒவ்வொரு கணமும் அவர்கள் போராடினார்கள்.

ஆம்! பாவம் அளவற்றதாகிய பரிசுத்ததனத்தை நோகச் செய்வதால், மிக அற்பமான பாவமும் கூட கடவுளுக்கு முன் மிகப் பிரமாண்டமானதாக ஆகிறது. ஆகவே அது மிக கடுமை யான பரிகாரத்தை எதிர்பார்க்கிறது. இதன் மூலம் உத்தரிக்கிற ஆன்மாக்கள் உட்பட்டிருக்கிற மகா கொடிய வேதனையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வேதனை நம்மை ஒரு பரிசுத்த பயத்தில் ஆழ்த்துகிறது.

உங்கள் மனமாகிய "அறைக்குள் " நுழைந்து, மரித்த உங்கள் தாய் தந்தை சகோதர சகோதரிகள் உறவினர் / நண்பர்கள் / பகைவர்களின் அழுகுரலைக் கூர்ந்து கவனியுங்கள். வாழும்போது, உங்களை எவ்வளவோ பிரியத்தோடு நேசித்தவர்கள் இப்போது படும் துன்பத்தை உணருங்கள். அவர்கள் மீது பரிதாபப்படுங்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே எந்த உதவியும் செய்ய முடியாது. நீங்கள்தான் உங்கள் ஜெபத்தாலும், நற்செயல்களாலும் அவர்களுக்கு உதவ முடியும்.

அதே சமயத்தில் இந்த நவம்பர் மாதம் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற உத்தரிப்பின் வேதனையையும் சொல்லி நம்மை எச்சரிக்கிறது. மறுவுலகில் இந்த உத்தரிப்பு அகோரமானது தான் எனினும், இவ்வுலகில் எவ்வளவோ எளிதாக நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் வழிமுறைகளைக் கடவுள் தம் திருச்சபையின் வழியாக நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்:



1. பாவங்களை, குறிப்பாக சாவான பாவங்களையும், முடிந்த வரை அற்பப் பாவங்களையும் விலக்க முயல வேண்டும். அடிக்கடி பாவசங்கீர்த்தனம், திவ்ய நன்மை என்னும் தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுவது பாவங்களை விலக்க நமக்குப் பெரும் உதவியாயிருக்கும்.

2. ஜெபம், குறிப்பாக ஜெபமாலை பக்தி, உத்தரிய பக்தி ஆகியவை உத்தரிக்கிற நெருப் புக்கு எதிராக நமக்குத் தரப்பட்டுள்ள ஆயுதங்களாகும்.

3. பாவப் பரிகாரம் திருச்சபை வழங்கும் ஞானப் பலன்களால் எளிதாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, "திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உமது அர்ச்சியசிஷ்ட சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்" என்ற மனவல்லய ஜெபம் ஒரு முறை பக்தியோடு சொல்லப்படும்போது அது பத்து வருடப் பலனைப் பெற்றுத் தருகிறது; அதாவது, பத்து வருடங்கள் கடும் தபசு செய்வதால் வரும் பலனை இந்தச் சிறு மன வல்லய ஜெபம் நமக்குத் தருகிறது. திவ்ய நன்மை உட்கொண்டபின் " மகா மதுரம் பொருந்திய நல்ல சேசுவே...'' என்ற ஜெபம் சொல்லி, சேசுவின் திருக்காயங்களுக்குத் தோத்திரமாகவும், பாப்பரசரின் கருத்துகளுக்காகவும் வேண்டிக்கொள் ளும்போது, நாம் ஒரு பரிபூரண பலனைப் பெற்றுக்கொள்கிறோம். அதாவது, நாம் தேவ இஷ்டப்பிரசாத நிலையிலிருந்து இதைச் செய்யும் போது, நம் பாவங்களுக்கான அநித்திய தண்டனையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுகிறோம். ஆகவே, ஒன்றில் உத்தரிக்கிற நெருப்பின் மூலம் பாவப் பரிகாரம், அல்லது இவ்வுலகில் பரிகாரம் செய்வதன் மூலம் உத்தரிக்கிற ஸ்தலத்தை முழுமையாகத் தவிர்ப்பது, இரண்டும் நம் கையில் தான் உள்ளது.

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 முதல் 9-ம் தேதி வரை எட்டு நாட்கள் தேவ இஷ்டப்பிர சாத (சாவான பாவமில்லாத) நிலையில் இருந்து, பூசை கண்டு, நன்மை வாங்கி, பாப்பரசரின் சுகிர்த கருத்துகளுக்காகவும், உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும் ஒப்புக்கொடுப்பதன் மூலம் ஒரு பரிபூரண பலனை நாம் பெற்று, அதை ஓர் ஆன்மாவுக்கு ஒப்புக்கொடுத்து, அந்த ஆன்மாவை உத்தரிக்கிற ஸ்தலத் திலிருந்து விடுவிக்கலாம். பாப்பரசர் இந்த நவம்பர் மாதம் முழுவதும் இந்தப் பரிபூரணப் பலனை வழங்கி யிருப்பதால், அதை இம்மாதம் முழுவதும் பயன்படுத்தி, உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவலாம்.


ஞாயிறு, 17 ஜூலை, 2022

அர்ச். மார்டின் தே போரஸின் ஜீவிய சரித்திரம் [life History of St. Martin de Porres] 1

அர்ச். மார்டின் தே போரஸின் ஜீவிய சரித்திரம் 


அர்ச். மார்டின் தே போரஸ் பெருநாட்டின் லீமா நகரத்தில் 1579ம் வருடம், டிசம்பர் 9ம் தேதி பிறந்தார். இஸ்பானிய நாட்டின் உயர் குடிமகனான ஜான் தே போரஸுக்கும் அன்னா வெலாஸ்குவஸ் என்ற நீக்ரோ பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த போது, தாயைப் போல் கறுப்பாகப் பிறந்ததால், தந்தை இவரைத் தன் குழந்தையாக ஏற்க மறுத்தார். அதனால், இவரு டைய ஞானஸ்நான பதிவேட்டில், பெயர்தெரியாத தகப்பன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. சிறிது காலம் கழித்து, ஜான், அதற்காக மிகவும் மனம் வருந்தி, சட்டபூர்வமாக மார்டினையும் அவருக்கு 2 வருடம் கழித்துப் பிறந்த ஜோனையும் தன்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். மார்டின், இளமைப் பருவத்தின் முதல் வரு டங்களில், தாயாருடனும், சின்ன தங்கையுடனும் ஜீவித் தார். சில சமயம், மார்டினிடம், அவருடைய தாய், கூடையையும் பணத்தையும் கொடுத்து, பொருட்கள் வாங்கும்படி கடைக்கு அனுப்பிவைப்பாள். அவ்வாறு, கடைக்குச் சென்ற போதெல்லாம், அடிக்கடி, அவர் வெறும் கூடையுடன், வீடு திரும்புவார். லீமாவின் கடைவீதிகளில், அநேக ஏழைகள், பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மறுக்க முடியாதவராக, தான் கொண்டு சென்ற பணத்தையெல்லாம் அவர்களுக்கு அளித்து விட்டு வெறும்கூடையுடன், மார்டின், வீடு திரும்புவார். 

காலையிலேயே கடைக்குச் சென்ற மார்டின் வீடு திரும்புவதற்கு மத்தியானம் ஆகிவிடும். ஒரு சில காசுகளை மட்டுமே கொண்டு சென்ற மார்டின், அவற்றைச் செலவிடுவதற்கு, ஏன் அவ்வளவு நேரம் ஆனது? காரணம், அவர், கடைக்குச் செல்லும் போது, வழியில், தேவாலயத்தைக் காண்பார். உடனே, இவ்வுலகில் தனது தகப்பன், தன்னை நிராதரவாக கைவிட்டாலும், ஒருபோதும் தன்னைக் கைவிடாமல் பாதுகாத்துப் பராமரிக் கும் பரலோகத் தந்தையாம் சர்வேசுரனுடைய பரிசுத்த இல்லமாகிய தேவாலயத்திற்குள் செல்வார்; ஒளிமிகுந்த தெருவிலிருந்து விலகி, நூதனமான அமைதியுள்ள சூழலும், ஜெபிக் கத் தூண்டும் சுரூபங்களின் நிழல்களுமுடைய தேவாலயத்திற்குள் சின்னஞ்சிறிய நீக்ரோ சிறுவனான மார்டின் தன் சிறு கால்களால், பீடத்திற்கு முன்பாக விஸ்தாரமாய் பரந்திருக்கும் விசுவாசிகளுடைய பகுதிக்கு , சப்தமின்றி, மெதுவாக நடந்துச் சென்று பீடத்தின் முன் முழங் காலில் இருப்பார். மகா பரிசுத்த தேவநற்கருணையில் வீற்றிருக்கும் திவ்ய சேசுநாதர் சுவாமி யை அத்தியந்த விதமாக ஆராதித்து, தேவ சிநேக முயற்சிகளில், வெகுநேரம் ஈடுபட்டிருப் பார்; ஜெபத்தில் ஆழ்ந்திருப்பார்; அப்போது, பாடுபட்ட சுரூபத்தையோ, அல்லது பெரும் ஆடம்பர அலங்கார பீடங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தேவமாதாவின் படத்தையோ உற்றுப் பார்ப்பதற்காக, அவருடைய இருபெரிய கண்களும் முழுவதுமாகத் திறந்திருக்கும்; அவை, அவருடைய கறுப்புமுகத்தில் பளீரென்று, அதிக வெண்மையாகக் காட்சியளிக்கும். 

சப்தமும் ஆரவாரக் கூச்சலுமுள்ள அவருடைய வீட்டின் சூழலுக்கு முற்றும் மாறுபாடான அமைதியும் ஆழ்ந்த சமாதானமும் நிலவும் தேவாலயம், மார்டினுடைய இருதயத்திற்கு மிக வும் இனிமையாக இருந்தது. ஆனால், வீட்டிற்குச் சென்றதும், அம்மாவிடம், மார்டின், கணக் கை ஒப்படைக்க வேண்டியிருந்தது. சிறிதளவு பணமே தன்னிடம் உள்ள நிலைமையில், மார் டினுடைய தாயாரால், ஏழைகளின் மீது தன் மகன் காட்டிய பரிவு தயாளத்தை அனுமதிக்க முடியாமல் போயிற்று. மகனே, இன்று நீ செய்த குற்றத்தால், நமக்கு சாப்பிட ஒன்றும் இல்லை. அதனால், நீ மட்டுமல்ல, உன் தங்கையும், நானும் கூட சாப்பிடாமல் இருக்கிறோம் என்று கூறினாள். மார்டின், அதற்கான தண்டனையை அமைதியாக ஏற்றுக்கொண்டார். ஆனா லும், பிச்சைக்காரர்கள், ஏழைகளைக் கண்டால், மறுபடியும் அவர்களுக்கு, அவர் தன்னிடம் இருக்கும் பணத்தை அளித்துவிடுவார். மார்டின் அறிவிலும் திறமையிலும் குணத்திலும் மிகச் சிறந்த சிறுவனாக வளர்ந்துவந்தார். மார்டினுடைய தந்தை, ஜான் தே போரஸ், அச்சமயம், லீமாவிலிருந்து, ஈக்வடார் நாட்டிலுள்ள குவாயாகுவில் என்ற நகரிலுள்ள வேலைக்கு இஸ் பானிய அரசாங்கத்தால் மாற்றப்பட்டிருந்தார். அதனால், அவ்வப்பொழுது லீமாவுக்கு அவர் வந்து போவது வழக்கம். ஒருதடவை, அவ்வாறு லீமாவுக்குச் சென்ற ஜான், தன் இரு பிள்ளை களையும் ஏற்றுக்கொண்டு, தன்னுடன் குவாயாகுவிலுக்குக் கூட்டிச் சென்றார். அவர்களிடம் நல்ல தந்தையாக, அவர்களுக்குத் தேவையான நல்ல கல்வியைக் கொடுப்பதற்காக திறமை யான ஆசிரியர்களை ஏற்பாடு செய்தார். அத்துடன், அவரும், அவருடைய ஓய்வு நேரத்தில் அவர்களுக்குக் கற்பிப்பதில் ஈடுபட்டார். ஒருசமயம், ஜான் தே போரஸ் தன் இருபிள்ளை களுடனும் தெருவில் நடந்து சென்ற போது, வழியில், அவரது மாமா, ஜேம்ஸ் தே மிரான் டாவை சந்தித்தார். பிள்ளைகள் யார் என்று கேட்டபோது, அவரிடம், ஜான், இவர்கள் என் பிள்ளைகள். அன்னா வெலாஸ்குவஸ் தான் இவர்களுடையதாய் என்று பதிலளித்தார். அவர் களுக்கு நல்ல கல்வி அளிக்கும்படியாக இவர்களை என்னுடன் வைத்திருக்கிறேன் என்று பதி லளித்தார்.

அப்போது, மார்டினுக்கு 8 வயது. ஜோனுக்கு 6 வயது. தந்தையுடன் பிள்ளைகள் தங் கியிருந்த காலம் மிகக் குறுகிய காலம். சுமார் நான்கு வருடங்கள் கூட இருந்தனர். பின்னர், மறுபடியும் ஈக்வடாரிலிருந்து, பனாமாவுக்கு ஜான் மாற்றப்பட்டதால், மார்டினைத் தாயா ருடன் லீமாவிலும், ஜோனைத் தன் மாமா ஜேம்ஸ் தே மிராண்டாவின் பொறுப்பிலும் விட் டுச் சென்றார். அவர்களுடைய கல்விக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தார். மார்டின் நன்கு கல்விகற்பதுடன், வியாபாரத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் ஜான் விரும்பி னார். தான் இல்லாத போது, தன் குடும்பம், வறுமையால் துன்பப் படாமலிருப்பதற்குத் தேவையான அளவிற்கு, ஜான், பணத்தைத் தன் மனைவியிடம் கொடுத்து விட்டுப் பனாமா விற்குச் சென்றார். மார்டினுக்கு 12 வயது ஆனதும், தொழில் கற்றுக்கொள்ளும்படியாயிற்று. எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்பதில், மார்டினுக்கு முழு சுதந்திரத்தை, அவரு டைய தந்தைக் கொடுத்திருந்தார். அதன்பிரகாரம், மார்டின், பார்பர் என்னும் முடிவெட் டும் தொழில் கற்றுக்கொள்வதற்காக, மார்சல் தே ரிவெரோ என்பவரது கடைக்குச் சென்றார். அக்காலத்தில் பார்பர் என்பவர், முடியை வெட்டுவதுடன், நோய்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இரத்தம் எடுப்பது, அறுவைசிகிச்சை செய்வது, காயங்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளிப்பது, சாதாரணநோய்களுக்கு மருந்து கொடுப்பது போன்ற பல்வேறு காரியங்களையும் செய்பவராக இருந்தார். அதாவது, பார்பர் என்பவர், முடிவெட்டுபவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருத்துவராகவும் மருந்து கொடுப்பவராகவும் ஒரே சமயத்தில் செயல்பட்டார். ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் மாபெரும் விதமாக பயன்படும் இத்தொழிலைக் கற்பதில், மார்டின் தீவிரமாக அயராமல் ஈடுபட்டார்.

புதன், 29 ஜூன், 2022

Confession Prayers for Priest in Latin


CONFESSION

Dominus sit in corde tuo et in labiis tuis ut rite confitearis omnia peccata tua

Absolutionis Forma Communis

Misereátur tui omnípotens Deus, et dimíssis peccátis tuis, perdúcat te ad vitam ætérnam. Amen.

Indulgéntiam, absolutiónem, et remissiónem peccatórum tuorum tríbuat tibi omnípotens et miséricors Dóminus. Amen

Dominus noster Jesus Christus te absolvat; et ego auctoritate ipsius te absolvo ab omni vinculo excommunicationis (suspensionis) et interdicti in quantum possum et tu indiges.  Deinde, ego te absolvo a peccatis tuis in nomine Patris, et Filii, X et Spiritus Sancti. Amen.

Passio Domini nostri Jesu Christi, merita beatæ Mariæ Virginis, et omnium Sanctorum, quidquid boni feceris, et mali sustinueris, sint tibi in remissionem peccatorum, augmentum gratiæ, et præmium vitæ æternæ. Amen.

Formula Absolutionis generalis impertiendae Tertiarii in confessionali

Auctoritate a Summis Pontificibus mihi commissa plenariam indulgentiam omnius peccatorum tuorum tibi imnpertior. In nomine Patris, et Filii, X et Spiritus Sancti. Amen.

Exorcismus Contra Diabolum Mutum

Exorciso te omnis spiritus immunde, ut recedas ab hac creatura Dei. In nomine Patris, et Filii, X et Spiritus Sancti. Amen.

 

Excommunications Latae Sententiae

Reserved to the Holy See

1. Profanation of the Consecrated Species

2. Physical violence on the person of the Sovereign Pontiff

3. Attempted absolution of accomplice in re turpi

4. Direct violation of the sacramental seal

5. Episcopal consecration without a pontifical mandate

Reserved to the Local Ordinary

1. Apostasy, Heresy, or Schism

2. Abortion, effectu secuto

3. Violation or divulging of the secret of the confessional by means of technical instrument.

Interdicts Latae Sententiae

1. Physical violence on the person of a bishop

2. Simulation of Mass or the Sacrament of Penance

3. False denunciation of sollicitatio ad turpia

4. Attempt at marriage by a religious in perpetual vows

Suspensions Latae Sententiae

1. Cleric in sacris attempting a marriage

2. Cleric exerting violence on a bishop (added to interdict)

3. Simulation of Mass or the Sacrament of Penance

4. False denunciation of the confessor for solicitation ad turpia by a cleric (added to interdict)

5. Cleric ordained without dismissorial letters

 

Oratio Sacerdotis Antequam Confessiones Excipiat

 

Da mihi, Dómine, sédium tuárum assistrícem sapiéntiam, ut sciam iudicáre pópulum tuum in iustítia, et páuperes tuos in iudício. Fac me ita tractáre claves regni cælórum, ut nulli apériam, cui claudéndum sit, nulli claudam, cui aperiéndum. Sit inténtio mea pura, zelus meus sincérus, cáritas mea pátiens, labor meus fructuósus. Sit in me lénitas non remíssa, aspéritas non sevéra; páuperem ne despíciam, díviti ne adúler. Fac me ad alliciéndos peccatóres suávem, ad interrogándos prudéntem, ad instruéndos perítum. Tríbue, quæso, ad retrahéndos a malo sollértiam, ad confirmándos in bono sedulitátem, ad promovéndos ad melióra indústriam: in respónsis maturitátem, in consíliis rectitúdinem, in obscúris lumen, in impléxis sagacitátem, in árduis victóriam: inutílibus collóquiis ne detínear, pravis ne contáminer; álios salvem, me ipsum non perdam. Amen.


Download in PDF - Click Here

Download in Word - Click Here
 

புதன், 8 ஜூன், 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 37

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 37


சகோ. ரெஜினால்டுவைப் பற்றி அந்த பல்கலைக்கழக மாணவர்கள் வேறு என்னவெல்லாமோ கேள்விப்பட்டிருந்தார்கள். பாரீஸ் பல்கலைக்கழகம் உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனம் என்பதால், அதன் பேராசிரியாக பொறுப்பேற்றிருந்த ரெஜினால்டு, இசை, இலக்கியம், கவிதை, சிற்பம், கலையில் சிறந்த ஞானத்தைப் பெற்றிருந்த மற்ற இளைஞர்களையும் தமது இல்லத்திலேயே கூட்டி, வருங்கால உலகிற்கான சீரிய திட்டங்களை தீட்டுவார். "அவ்வாறு உலகின் உயரிய அந்தஸ்தில் தம்மை நிறுத்தி வைத்திருந்த பேராசியரியர் ரெஜினால்டு, இப்பொழுது, ஜெபத்தையும் தவத்தையும் கடைபிடிக்கும் ஒரு துறவற சந்நியாசியாக எதற்காக மாறவேண்டும்?" என்று தங்களையே வினவிக்கொண்டிருந்த அந்த மாணவக் கூட்டத்தினரை பிரசங்கத் தொட்டியில் இருந்து கொண்டு பார்த்தார், சகோ. ரெஜினால்டு. அவர்களைக் கண்டதும், அவர்களுடைய மனக்குழப்பத்தையும் உணர்ந்தார். உடனே அவர்களை நோக்கி, "சகோதரரே! நான் இம்மடத்தில் சேர்ந்ததற்கான ஒரே காரணம் : நான் இங்கு சிநேகிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்காகத் தான் நான் அர்ச்.சாமிநாத சபைத் துறவியானேன்" என்று கூறினார். 

1219ம் வருடம் ஜனவரி மாதம். சகோ.ரெஜினால்டு வந்து இரண்டே மாதங்களில், பொலோஞா அர்ச். சாமிநாதருடைய துறவறமடத்தில் சேர்வதற்காக, தினமும் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் கூட்டம் வந்து, மடத்தை, முற்றுகையிட்டது. துறவிகளின் ஞானதியான பிரசங்கங்களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கோவில் பற்றாத அளவிற்கு, அதிகரிக்கலாயிற்று. மக்கள் கூட்டத்திற்கேற்றபடி தேவாலயத்தை விஸ்தாரப்படுத்துவதும், மடத்தில் சேரும் நவசந்நியாசிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியால், மடத்தைப் பெரிதாகக் கட்டுவதும், அதற்கு தேவைான அதிகப்படியான நிலத்தை வாங்குவதும், துறவற மடத்தின் நிர்வாகத்தின் அத்தியாவசிய அலுவலாயிற்று. சகோ. ரெஜினால்டு பிரசங்கத்தொட்டியில் ஒருமுறை மோட்சகாரியங்களைப் பற்றிப் போதிக்கக் கேட்கும் ஒரு வெதுவெதுப்பான ஆத்துமம், எவ்வளவுக்கு தேவசிநேகத்தினால் பற்றியெரியும் என்றால், அந்த ஆத்துமம் தனது ஜீவிய முறையில் திருப்தியடையாமல், ஆண்டவருடைய எல்லையில்லா சிநேகத்திற்காக ஏதாவது ஊழியம் செய்ய ஆசிக்கும் ' அதுவும் உடனே செய்ய வேண்டும் என்று தன்னை நிர்ப்பந்திக்கும். அதன்படி பொலோஞா நகரத்திற்கு சகோ. ரெஜினால்டு வந்த சில தினங்களில், அந்நகர பல்கலைக்கழக பேராசிரியர்கள், தாங்களும் கறுப்பு வெற்ளை துறவற அங்கியை அணியும் தவச்சபையாராக தான், தங்களுடைய ஜீவியத்தின் இறுதி நாட்களை செலவழிக்க வேண்டும், என்று தீர்மானித்தனர். இவ்வாறாக, சகோ. ரெஜினால்டு, பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும், பேராசிரியர்களையும், தம்பால் ஈர்க்கும் காந்தம் போல, திகழ்ந்தார். 

டயானா என்ற 17 வயது சிறுமி , சகோ. ரெஜினால்டுவின் ஞான தியான பிரசங்கங்களைக் கேட்க வந்தாள். அவள் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண். ஆயினும், சகோ. ரெஜினால்டுவின் ஞானமிக்க பிரசங்கங்களினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவளாக, சகோதரரைப் பின்தொடரலானாள். அவளும் தேவசிநேகத்தினால் உந்தப்பட்டவளாக, தேவ அழைத்தலைப் பெற்றவளாக, தானும் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசித்தாள். அர்ச். சாமிநாதருடைய துறவற சபையில் உட்படும்படி, பெரிதும் விரும்பினாள். "நான் அந்த உன்னத கன்னியாஸ்திரிகளுடைய சபையில் உட்படுவதற்கு முற்றிலும் தகுதியற்றவள்" என்று முதன் முதலாக சகோ. ரெஜினால்டுவை சந்தித்தபோது கூறினாள். அப்போது அப்பெண்ணின் கண்களை அவர் உற்று நோக்கினார். பிறகு அவர்களிடையே நடைபெற்ற உரையாடல் : "உன் ஆன்ம குருவானவானவர் யார்?'' "யாருமில்லை. சகோ. ரெஜினால்டு. எனக்கு இதுவரை ஞானகாரியங்களில் ஒருபோதும் யாதொரு ஆர்வமும் இருந்ததில்லை. ஆனால், உங்களுடைய தியானபிரசங்கங்களைக் கேட்டதிலிருந்து, என்னிலே மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன '' "இப்பொழுது, மரணத்தைப் பற்றிய சிந்தனை உன் இருதயத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது தானே?" "ஆம். சகோ. ரெஜினால்டு. விரைவாக ஓடி மறைந்து விடும் இவ்வுலக ஜீவியத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். அதற்கு ஏற்ற உத்தம கத்தோலிக்க ஜீவியத்தைக் கைப்பற்றவும் விரும்புகிறேன். ஆனாலும் என்ன செய்வதென அறியாமலிருக்கிறேன்". 

இதைக் கேட்ட ரெஜினால்டு, புன்னகையுடன் அவளிடம், "நீ ஒவ்வொரு வாரமும் இவ்வாறு என்னை இங்கு சந்திக்க வா. இதைப்பற்றி நான் உனக்கு விளக்குவேன். யாருக்குத் தெரியும்? ஒருவேளை ஆண்டவருடைய ஊழியத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர், நல்ல சக ஊழியராக ஜீவிக்கக் கூடும்!'' என்றார். தனது ஜீவியத்தில் மிகுந்த அக்கறையுடனும் நேசத்துடனும் இருக்கும் சகோ. ரெஜினால்டுவினால் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டவளாக டயானா , அர்ச். சாமிநாத சபைத் துறவிகளுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று தமது தாத்தாவான பீட்டர் டி லவல்லோ என்பவரிடம் கூறினாள். அவரும் தமது குடும்பத்துக்குச் சொந்தமான அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தையும், அதை ஒட்டி இருந்த ஒரு சிறு நிலத்தையும், சாமிநாதருடைய மடத்திற்கு சொந்தமாக்கினார். இந்த தேவாலயம், பொலோஞா நகரத்துக்கு வெளியே உள்ள, திராட்சைத் தோட்டத்துக்கு அருகில் இருந்தது. மிகத்தனிமையான இவ்விடம் சபைத் துறவிகளின் தியானத்திற்கு, ஏற்ற இடமாக திகழ்ந்தது. அங்கிருந்து பொலோஞா மடத்தின் அலுவல்களை, சபைத் துறவிகள் எளிதாக நிறைவேற்ற ஏதுவான இடமாக , இருந்தது. சகோ. ரெஜினால்டு வந்தபிறகு அதிகரித்த , நவசந்நியாசிகளுக்குத் தேவையான பெரிய மடத்தைக் கட்டுவதற்கான திட்டமிடும் அலுவல்களுக்கும் ஏற்ற இடமாக இருந்தது.

புதிய மடத்திற்கு, துறவிகள் சென்ற 3ம் மாதத்தில், 1219ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சபையின் அதிபர் அர்ச்.சாமிநாதர், தமது பிரான்சு ஸ்பெயின் நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பொலோஞா நகருக்கு வந்தார். மடத்திற்கு வந்தவுடன், சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் நகருக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். தமது தலைமையில் இதுவரை பொலோஞா நகரில் இந்தக் குறுகிய காலத்தில், வெகு திறமையாகவும், ஞானமுடனும், அநேக ஆத்துமங்களை சிநேகிக்கும்படியாக, ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்திட்ட சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அர்ச். யாகப்பர் மடத்திற்குக் கூட்டிச் செல்லப்போவதாக, சபையின் அதிபர் சுவாமியார் கூறினார். இதை அறிய வந்த சிறுமி டயானா , தமது ஆன்ம வழிகாட்டியான சகோ. ரெஜினால்டுவை இவ்வளவு சீக்கிரமாக இழக்க நேரிடுகிறதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்தாள். உடனே அதிபர் சுவாமியாரிடம் இதைப் பற்றி முறையிட சென்றாள்.