Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 13 மே, 2018

*மே மாதம் 12-ம் தேதி* *St. Domitilla, V. M.* *அர்ச். தொமிதில்லம்மாள்* *கன்னிகை, வேதசாட்சி - (6-ம் யுகம்.*

*மே மாதம் 12-ம் தேதி*

*St. Domitilla, V. M.*         
*அர்ச். தொமிதில்லம்மாள்*
*கன்னிகை, வேதசாட்சி - (6-ம் யுகம்.* 

ப்ளாவியா தொமிதில்லா என்பவள் இராஜ வம்சத்தில் பிறந்து, சக்கரவர்த்தியான தொமிசியானுக்கு நெருங்கிய உறவினளாயிருந்தாள்.  தொமிசியான் சக்கரவர்த்தி தொமிதில்லாவையும் அவளுடைய மாமனாகிய கிளமென்ஸ் என்பவரையும் வேதத்தினிமித்தம் சிறைப்படுத்தி, கிளமென்ஸைக் கொலைசெய்து தொமிதில்லாவை நாடுகடத்தினான். தொமிதில்லா தனது அரசு அதிகாரிகளான நெறயஸ், அக்கிலேயஸ் என்பவர்களுடன் அவ்விடத்தில் புண்ணியங்களையும் தர்மச் செயல்களையும் செய்து, ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தாள். தொமிதில்லாவும் இரு அதிகாரிகளும் தனித்தனி அறைகளில் வசித்து, ஜெப தபங்களைச் செய்து வெகு கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வந்தபடியால், அவ்விடம் அவர்களுக்கு ஒருவித வேதனைக்குரிய ஸ்தலமாயிருந்தது. தொமிசியான் இறந்தபின் திராஜான் உரோமை இராச்சியங்களுக்கு சக்கரவர்த்தியாகத் தெரிந்துகொள்ளப்பட்டான். அச்சமயத்தில், வேதத்தினிமித்தம் நாடுகடத்தப்பட்ட கிறீஸ்தவர்களை அவன் விடுவிக்கக் கட்டளையிட்டு, தொமிசியானுடைய உறவினர்களைக் கொலை செய்தான். தொமிதில்லா பொய்த் தேவர்களை வணங்காததினால் அவளை நெருப்பில் சுட்டெரிக்கும்படி அவன் கட்டளையிட்டான். தொமிதில்லா மரித்து வேதசாட்சி முடி பெற்றாள்.  

*யோசனை*

இந்த இராஜக் கன்னிகையை நாமும் கண்டுபாவித்து, சுகபோகம் முதலியவைகள் மாயையென்றும், புண்ணியமார்க்கமே நித்திய சம்பாவனைக்கு அழைத்துச் செல்லுமென்று அறிந்துகொள்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக