Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 12 மே, 2018

*மே மாதம் 10-ம் தேதி* *St. Isidore, C.*          *அர்ச். இசிதோர்* *துதியர் - (கி.பி. 1130).*

*மே மாதம் 10-ம் தேதி*
*St. Isidore, C.*         
*அர்ச். இசிதோர்*
*துதியர் - (கி.பி. 1130).*

அர்ச். இசிதோர் ஸ்பெயின் தேசத்தில் ஏழையும் தெய்வபயமும் உள்ள உத்தம பெற்றோரிடமிருந்து பிறந்தார். தரித்திரத்தினிமித்தம் அவர்கள் தங்கள் குமாரனை கல்விக் கற்க அனுப்ப சாத்தியப்படாவிடினும், தெய்வ பயத்தில் அவரை வளர்த்துப் பாவத்தை வெறுத்துப் புண்ணியத்தைப் போதித்து, ஜெபம் செய்து ஆண்டவருடைய கற்பனைகளை அனுசரித்து வாழும்படி, நற்புத்தி போதித்துவந்தார்கள். இவரும் தமது பக்தியுள்ளப் பெற்றோரின் புத்திமதிக்கு இணங்கி நடந்தார். இவருக்கு வயது வந்தபின் ஒரு செல்வந்தர் வீட்டில் விவசாய வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையைத் தன் சொந்த வேலையாகப் பாவித்து சுறுசுறுப்புடன் செய்வார். ஏர் உழும் போதும், வண்டியோட்டும் போதும் மற்ற எந்த வேலையைச் செய்யும்போதும் ஆண்டவரை மனதில் தியானிப்பார்.  இவர் ஜெபம் செய்யும் நேரத்தில் சம்மனசுக்கள் இவர் செய்யவேண்டிய வேலையைச் செய்வார்கள். திருட்டு, பொய் முதலியவை இவரிடம் கிடையாது. தன் எஜமானுக்கு எப்போதும் பிரமாணிக்கமாயிருப்பார். தன் வயிற்றுக்காக வேலை செய்த போதிலும் தன் ஆத்துமத்தை மறந்தவரல்ல. அதிகாலையில் எழுந்து ஜெபங்களை முடித்துக்கொண்டு வேலையைத் துவக்குவார். ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் பூசைக் கண்டு, அன்று அற்ப வேலையையும் செய்யமாட்டார். அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்குவார். இவர் அந்த ஊருக்கு சகலத்திலும் நன்மாதிரியாய் வாழ்ந்தார். இவருடைய எஜமான் புண்ணியவானாயிருந்ததால், வேலைக்காரனால் தன் செல்வத்தை ஆண்டவர் ஆசீர்வதித்துப் பலுகச் செய்தாரென்று கூறி, இவரைத் தன் சகோதரனைப் போல நடத்திவந்தான். இசிதோர் 60 வயது வரை வேலை செய்து புண்ணியவானாக மரித்தார். இவரால் அநேகப் புதுமைகள் நடந்தன.    

*யோசனை*

இசிதோருடைய சரித்திரத்தைக் கேட்ட குடியானவர்களே! தொழிலாளிகளே! ஜெபம் செய்யவும் பாவசங்கீர்த்தனம் செய்யவும் நேரமில்லையென்று இனி சாக்குப்போக்குக் கூறாதீர்கள். சுறுசுறுப்பு, எதார்த்தம், நன்னடத்தை முதலியவைகளை இவரிடத்தில் கற்றுக்கொள்வீர்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக