Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 16 மே, 2018

*மே மாதம் 14-ம் தேதி* *St. Boniface, M.* *அர்ச். போனிபாஸ்*

*மே மாதம் 14-ம் தேதி*

*St. Boniface, M.*          
*அர்ச். போனிபாஸ்*
*வேதசாட்சி - (கி.பி. 307).* 

உரோமையில் அழகும், மிகுந்த சொத்துக்களுக்கும் சொந்தக்காரியான அக்லாயே என்னும் ஒரு பணக்காரி இருந்தாள். இவள் உரோமையிலுள்ள  பிரபுக்கள், தேசாதிபதிகள், வங்கி உரிமையாளர்கள் போன்ற பிரமுகர்களுக்கு பலமுறை சிறப்பாக விருந்து வைத்து பிரபலமடைந்திருந்தாள். இவளுடைய அரண்மனைக் காரியங்களை கவனிக்கும்படி போனிபாஸ் என்பவரை தன் அரண்மனையிலே நியமித்து, இருவரும் பாவ வழியில் வாழ்ந்து வந்தனர்.   போனிபாஸ், தன் எஜமானியுடன் பாவ வழியில் நடந்தபோதிலும் ஏழை எளியவர்கள் மட்டில் தயவு காட்டி, அவர்களை அன்புடன் விசாரித்து வந்தார்.  ஒருநாள் அக்லாயே தன் பாவ நடத்தையைப்பற்றி சிந்தித்து, மனஸ்தாபப்பட்டு, தன் நடத்தையைத் திருத்திக்கொள்ள தீர்மானித்தாள். இவள் போனிபாஸைப் பார்த்து, நாம் இப்படிப் பாவ வழியில் நடந்து இறந்தால், நரகமே நமக்கு கதியாகும். ஆகையால் இதுமுதல் நமது நடத்தையை திருத்திக்கொண்டு வேதசாட்சிகளுடைய மன்றாட்டால் நமது பாவங்களுக்கு உத்தரிப்பது உத்தம வழியாகும். ஆகையால் நீர் கீழ்த்திசைக்குச் சென்று ஒரு வேதசாட்சியின் சரீரத்தை நமது அரண்மனைக்குக் கொண்டுவாரும் என்றாள். அப்படியே ஜெபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ உதவியை மன்றாடி, வேத கலகம் மும்முரமாய் நடக்கும் சிலிசியாவுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஒரு ஊரில் அநேக கிறீஸ்தவர்கள் கொலைஞரால் வாதைப்பட்டு சாவதைக் கண்டு, அவர்களுக்குத் தைரியம் சொல்வதை அறிந்த அதிபதி, போனிபாஸைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடும்படிக் கட்டளையிட்டான்.  ஆனால் அவர் யாதொரு சேதமுமின்றி சுகமாயிருப்பதை அதிபதி கண்டு அவர் தலையை வெட்டும்படி கற்பித்தான். போனிபாசுடைய ஊழியர் அவருடைய சரீரத்தைக் கொண்டுபோய்த் தங்கள் எஜமானிக்கு கொடுத்தார்கள். அவள் அதை தன் அரண்மனையில் பத்திரப்படுத்தி அதற்கு முன் நாள்தோறும் வேண்டிக்கொண்டு, ஜெபத்திலும் தபத்திலும் தன் வாழ்நாட்களைக் கழித்து, புண்ணிய வழியில் மரித்தாள்.      

*யோசனை*
நாமும் நமது பாவப் பழக்க வழக்கங்களை விட்டொழிக்கும்படி அர்ச்சியசிஷ்டவர்களுடைய உதவியை மன்றாடுவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக