Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 12 மே, 2018

*மே மாதம் 9-ம் தேதி* *St. Gregory Nazianzen, Pat.* *அர்ச். நசியான்சென் கிரகோரியார்* *பிதா - (கி.பி. 390)

*மே மாதம் 9-ம் தேதி*
*St. Gregory Nazianzen, Pat.*           *அர்ச். நசியான்சென் கிரகோரியார்*
*பிதா - (கி.பி. 390).*

நசியான்சென் நாட்டில் அர்ச்சியசிஷ்டவர்களான பெற்றோரிடத்தினின்று கிரகோரியார் பிறந்தார். செசாரயே, அலெக்சாந்திரியா முதலிய              பட்டணங்களுக்கு இவர் அனுப்பப்பட்டு, கல்வியில் சிறந்து வேதசாஸ்திரி என்னும் பெயர் பெற்றார். உலகம் கொடுக்கக்கூடிய சிறந்த பெயரையும் மகிமையையும் துறந்துவிட்டு குருப்பட்டம் பெற்று சில காலத்திற்குப்பின் ஆயரானார். இவர் பக்தியிலும் அறிவிலும் சிறந்து விளங்கியமையால், ஆரியப் பதிதப் போதனையால் குழப்பத்திற்குள்ளாகி சீர்குழைந்திருந்த அலெக்சாந்திரியா நகருக்குப் பிதாப் பிதாவாக நியமிக்கப்பட்டார். இவருடைய விடா முயற்சியாலும், கஷ்டமான பயணங்களாலும், ஜெப தபத்தாலும் சிறந்த பிரசங்கத்தாலும், குழப்பங்களையும் பிரிவினைகளையும் சீர்படுத்தி, அநேக பதிதரை மனந்திருப்பி சத்திய வேதம் சிறந்து பிரகாசிக்கும்படிச் செய்தார்.  தங்கள் மதம் அழிவதைக் கண்ட பதிதர் கிரகோரியாரைப் பகைத்து தூஷணித்துக் கடைசியாய் அவரைக் கொல்லும்படி ஒரு பாதகனை அனுப்பினார்கள். அந்தப் பாவி அவரைக் கொல்லும் கருத்துடன் அவரை நெருங்கியபோது, மனம் மாறி, அவர் பாதத்தில் விழுந்து அவரிடம் மன்னிப்பு கேட்கவே, அவரும் அவனுக்கு மன்னிப்பளித்தார். கிரகோரியார் அலெக்சாந்திரியாவுக்கு பிதாப்பிதாவாக நியமிக்கப்பட்டது திருச்சபை சட்டத்திற்கு விரோதமென்று சிலர் காய்மகாரத்தால் முறையிட்டதை இவர் கேட்டு, அவர்களுடைய முறைப்பாடு ஒழுங்கற்றதென்று அறிந்திருந்தும், தம்மால் திருச்சபைக்குள் குழப்பம் உண்டாகாதபடிக்கு அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிலப் புண்ணியவான்களுடன் தனிமையில் வாழ்ந்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.   

*யோசனை*

நாமும் யாதொரு பொது நன்மையினிமித்தம் பாவமற்ற விஷயத்தில் பிடிவாதம் காட்டாமல் நமது அபிப்பிராயத்தை விட்டு விடுவது நலமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக