Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 16 மே, 2018

*மே மாதம் 16-ம் தேதி* *St. John Nepomucen, M.* *அர்ச். நெபோமுசென் ஜான்* *வேதசாட்சிகள் (கி.பி. - 1393).

*மே மாதம் 16-ம் தேதி*

*St. John Nepomucen, M.*            
*அர்ச். நெபோமுசென் ஜான்*
*வேதசாட்சிகள் (கி.பி. - 1393).*   

இவர் தாய் தந்தையர்pன் மன்றாட்டுக்கு இரங்கி, ஆண்டவர் இவர்களுக்கு ஜான் (அருளப்பர்) என்ற ஆண் குழந்தையை அருளச் சித்தமானார்.  அவர்களும் தங்கள் பிள்ளையை ஆண்டவருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள். ஜான் சிறு வயதில் கல்வி சாஸ்திரங்களைக் கற்று, குருப்பட்டம் பெற்று, தமது ஞான அலுவலை சுறுசுறுப்புடன் செய்துவந்தார்.  இவருடைய மேலானப் பக்தியையும் அறிவையுங் கண்ட பொயேமியா தேச சக்கரவர்த்தியான வென்செஸ்லாஸ் என்பவன் மகிழ்ச்சியுடன் இவரைத் தனது அரண்மனைக்கு விசாரணைக் குருவாகத் தெரிந்துகொண்டான். ஜான் குருவானவர் அரண்மனையிலுள்ள பிரபுக்களுடையவும் மற்ற அதிகாரிகளுடையவும் நடத்தையை விடாமுயற்சியாலும் பிரசங்கத்தாலும் சீர்படுத்தினார். தம்மை ஆன்ம குருவாக நியமித்துக்கொண்ட இராணியை புண்ணிய வழியில் பயிற்றுவித்து வந்தார். தன் இராணியின் நடத்தையை அறிய நூதனப் பிரியங்கொண்ட சக்கரவர்த்தி அவள் பாவசங்கீர்த்தனத்தில் கூறிய பாவங்களைத் தனக்கு அறிவிக்கும்படி ஜான் சுவாமியாரைக் கேட்டான். ஆனால் அவர் பாவசங்கீர்த்தன இரகசியத்தை அறிவிப்பது பெருந் துரோகமென்று அவனுக்கு உணர்த்தியும் சக்கரவர்த்தி அதற்கு செவிசாய்க்காமல் சுவாமியாரை சிறைப்படுத்தி அவரைச் சித்திரவதைச் செய்தும், அவர் அதற்கு இணங்கவில்லை. பிறகு அவருக்குச் சிறந்த வெகுமானங்களைத் தருவதாக வாக்களித்து, இராணியின் பாவங்களைத் தனக்கு அறிவிக்கும்படி கேட்டான். குருவானவர் அதற்குச் சம்மதியாததினால் அவரை நதியில் தூக்கி எறியும்படி கட்டளையிட்டான். வேதசாட்சியின் சரீரம் அதிசய பிரகாசத்தால் சூழப்பட்டு, ஜலத்தில் மிதப்பதைக் கண்ட கிறீஸ்தவர்கள், அதை எடுத்துப் பக்தியுடன் ஒரு பெட்டியில் வைத்து அடக்கம் செய்தார்கள். அவர் இறந்த 330 வருடங்களுக்குப்பின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது, அவருடைய சரீரம் அழிந்துபோன போதிலும், அவருடைய நாக்கு மாத்திரம் தேவ கிருபையால் அழியாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.      

*யோசனை*

நாவால் ஒரு நாளைக்கு எத்தனையோ விசை ஆண்டவருக்கும் பிறருக்கும் விரோதமாய்ப் பாவம் கட்டிக்கொள்கிறோம். இனி அத்தீங்கைத் திருத்திக்கொள்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக