Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 1 செப்டம்பர், 2021

Ordinary Jurisdiction and (Extraordinary) Supplied Jurisdiction. சாதாரண அதிகாரம், அசாதாரண அதிகாரம்.

 


Ordinary Jurisdiction and (Extraordinary) Supplied Jurisdiction. 


சாதாரண அதிகாரம், அசாதாரண அதிகாரம். 

விசுவாச மறுதலிப்பும் பதித  தப்பறைகளும் அவசங்கைகளும்  பரவி வரும் இந்த காலத்தில் கத்தோலிக்கர்கள்,  குருக்கள் மற்றும் மேற்றிராணிமார்களின் சாதாரண மற்றும் அசாதாரண அதிகாரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். 

திருச்சட்டங்களிலும் இது பற்றிய பகுதிகள் உண்டு. In Canon Law. 


சாதாரண அதிகாரம்:

பாப்பானவர் ஒரு மேற்றிராணியாருக்கு ஒரு மேற்றிராசனத்தைக் கொடுத்து பரிபாலிக்கச் சொல்கிறார். ஒரு மேற்றிராணியார் குருக்களை  பங்குகளை பரிபாலிக்கச் சொல்கிறார். 

இது சாதாரண அதிகாரம். Ordinary Jurisdiction. சாதாரண காலங்களில் இது மட்டுமே போதுமானதாக இருந்தது. உதாரணமாக இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முற்பட்ட காலத்தில். 

விசுவாச மறுதலிப்பும், தப்பறைகளும் அவசங்கைகளும் பரவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் நல்ல குருக்கள் மற்றும் மேற்றிராணிமார்களைத் தேடிச்சென்று திவ்ய பலி பூசை மற்றும் தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று க் கொள்ளும் நிலைக்கு உலகில் ஏராளமான கத்தோலிக்கர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இவ்வாறாக இந்த அசாதாரண அதிகாரம் பெரிய அளவில் உலகில் இன்று  பயன் பாட்டில் உள்ளது. 

இந்த அசாதாரண அதிகாரம் (Supplied  Jurisdiction )எங்கிருந்து வருகிறது?

கிறிஸ்துவின் ஞான சரீரமாகிய கத்தோலிக்க திருச்சபையிலிருந்து நேரடியாக பெறப்படுகிறது. 

சாதாரண அதிகாரம் எங்கிருந்து வருகிறது?

கத்தோலிக்க படி நிலை அதாவது (Catholic Hierarchy) வழியாக வருகிறது. 

கிறிஸ்துவின் ஞான சரீரமும் இந்த Hierarchy யும்  ஒன்றல்ல. முந்தையது என்றும் மாறாதது. ஆண்டவருக்கு பிரமாணிக்கம் தவறாதது. பிந்தையது மாறக்கூடியது. பிரமாணிக்கமும் தவரக் கூடியது. 

மேலும், சாதாரண அதிகாரத்திற்கு எல்கைகள் உண்டு. குறிப்பிட்ட  மேற்றிராசனம் அல்லது பங்கு.

அசாதாரண அதிகாரத்திற்கு எல்கைகள் கிடையாது. உலகில் எங்கும் இந்த அதிகாரம் செல்லுபடியாகும்.


மரியாயே வாழ்க!


====================


The Ordinary and Extraordinary Supplied Jurisdiction. 

Catholics should know about the Ordinary Jurisdiction and the Supplied (Extraordinary)  Jurisdiction of the Clergy in the present times of Apostasy, Heresy and Sacrileges prevalent in the Catholic World. 

There are passages in the Canon Law about these matters. 


Ordinary Jurisdiction:

Pope asks Bishops to look after designated Dioceses. Bishops ask Priests to look after the Parishes.

This Ordinary Jurisdiction was sufficient in the normal times before the second Vatican Council, for example. 

Today a large number of Catholics in the world are pushed to seek the Holy Mass and Sacraments from Priests and Bishops who have only the Supplied Jurisdiction. Due to the Apostasy, Heresy and Sacrileges that are prevalent. 

Thus the Extraordinary Supplied Jurisdiction is in use on a large scale all over the world today. 

Where does this Supplied Jurisdiction come from?

Ths comes from the Mystical Body of Christ which is the Holy Catholic Church. 

Where does the Ordinary Jurisdiction come from?

It comes from the Catholic Hierarchy of Pope, Bishops and Priests. 

The Mystical Body of Christ and this Hierarchy are not one and the same. The former never changes and is ever faithful to Our Lord. The latter is subject to change and may also become unfaithful to its Master and Judge.

One more difference: The Ordinary Jurisdiction has specified territories. For example a Bishop's territory is his Diocese. A Priest's territory is his Parish. 

The Extraordinary and Supplied Jurisdiction has no territories. It can be exercised by a Priest or a Bishop anywhere in the world. 


Ave Maria!

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

நரகத்தின் உண்மை பற்றி - On the Reality of Hell

 நரகத்தின் உண்மை  பற்றி

நரகம் நம் புலன்களுக்கு நேரிடையாக எட்டாத ஒன்று. அப்படி ஒருவேளை எட்டக்கூடியதாக இருந்தால் இந்த உலகமே நமக்கு நரகமாய் இருக்கும். அது ஆண்டவரின் சித்தம் இல்லை. 

ஆனால் நித்திய  நரகம் உண்மை. ஏனெனில் ஆண்டவர்


தாமே அதைப்பற்றி பேசி இருக்கிறார். எத்தனையோ நரகத்தைப் பற்றிய வேதாகமப் பகுதிகள் உண்டு.

மோட்சத்திலுருந்தும் பல எச்சரிப்புக்கள் உண்டு. பாத்திமாவில் தேவமாதாவும் நரகத்தையே மூன்று சிறுவர்களுக்குக் காட்டினார்கள்.

நரகத்தில் இருந்தும் பல எச்சரிக்கைகள் உலகத்தை எட்டியிருக்கின்றன. 

ஆனால் இந்த பேருண்மையை "கதை" என்று சொல்லி அசட்டை செய்யும் பரிதாபமான ஆன்மாக்கள் பலர். 

இன்னும் சிலர்: ஆண்டவர் அளவற்ற இரக்கம் உடையவர். யாரையும் நரகத்தில் தள்ள மாட்டார். நரகம் பசாசுக்களுக்கு மாத்திரம் என்று சொல்லுவார்கள்.

ஆண்டவர் அளவற்ற நீதியும் உடையவர். அளவுள்ள இந்த சின்ன மனிதன் அளவற்றவரை  மனது பொருந்தி பாவத்தால் எதிர்த்து நிற்கும் போது அதன் விளைவும் அளவற்றதாக இருக்கிறது. INFINITY X 1 = INFINITY. 

தமது அளவற்ற இரக்கத்தினால் இன்னும் அந்த ஆன்மாவை மன்னிக்க காத்திருக்கிறார். அவர் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்: "உத்தம மனஸ்தாபம்". ஊதாரிப் பிள்ளையின் உவமை நம் எல்லோருக்கும் தெரிந்ததே.

இன்று பலரிடம் நாம் பார்ப்பது பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பது. நல்ல ஆண்டவரிடம் திரும்ப வேண்டும் என்ற நல்ல மனம் இல்லை. 

இவர்கள் மனந்திரும்ப தேவமாதாவிடம் தினமும் குடும்ப செபமாலையில் வேண்டிக்கொள்வோம். 


மரியாயே வாழ்க!


================



The reality of Hell is beyond the direct perception of our senses. If it's otherwise this world would be Hell for us. And that was also not the Holy Will of God.


Eternal Hell is true. Our Lord Himself has spoken about it and warned us. There are very many references to it in the Sacred Scriptures. 


Heaven itself has disclosed it by several Apparitions. The Blessed Virgin herself showed it to the 3 little children at Fatima.


The truth about Hell has reached the world from Hell itself.

Even after all these evidences, many are indifferent to this truth. Some call it "a fiction" and others  say "Our Lord is infinitely merciful and no one goes to Hell. Hell is for the Devils only".

But Our Lord has Infinite Justice too.

Man, a small finite being, stands up against the Infinite God when he consents to sin knowingly. Its consequence also is infinite. INFINITY X 1 = INFINITY.

Still, God in His Infinite Mercy waits for the return of this Prodigal Son. But God expects only one thing: " True Contrition". 

We see today in many people arrogance and stubbornness instead of a good will to return the Good God.

We should pray for these people in our daily family Holy Rosary. 


Ave Maria!

சனி, 28 ஆகஸ்ட், 2021

மாசில்லா கன்னியே பாடலின் வரலாறு:

 



1884-ல் Vade mecum என்ற French மொழி இசைக்கோர்ப்பில், Regnam Marie என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதுதான் மாசில்லா கன்னியே பாடலின் முதல் tune. பின் அதுவே உடனடியாக Latin மொழியில் Ave Maris Stella என்று ஏறக்குறைய 21 ராகங்களில் வெளிவந்தது. 
 
பின் 1918-ல் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, Immaculate Mary என்ற பாடலாக வெளியிடப்பட்டது. பின் 1923-ல் திரு. மனுவேல் கோஸ்தா என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு யாத்ரிகட்கு பாதை காட்டும் தாரகையே என்ற பாடலாயிற்று. இந்த பாடலின் இறுதி கண்ணிதான் மாசில்லா கன்னியே. 
 
பின் 1927 - ல் இலங்கையில் தமிழ் மாற்றம் செய்யப்பட்டு மாசில்லா கன்னியே என்று ஆரம்பித்து புதிய பாடலாக வெளிவந்தது. (தமிழ், ஆங்கில மற்றும் லத்தீன் ஒலிப்பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேளுங்கள்) நன்றி.
 

 
 
 
 


 

தேவமாதாவை நோக்கி அநுதினம் வேண்டிக்கொள்ளும் ஜெபம்

 

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
தேவமாதாவை நோக்கி
அநுதினம்
வேண்டிக்கொள்ளும்
ஜெபம்
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
சம்மனசுக்களுடைய இராக்கினியே!
 
மனிதர்களுடைய சரணமே!
 
சர்வலோகத்துக்கும் நாயகியே! 
 
நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.
 
எப்படியாகிலும் எங்களை இரட்சிக்க வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். 
 
தாயாரே! மாதாவே! ஆண்டவளே! 
 
உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும். 
 
விசேஷமாய் நாங்கள் சாகும்போது பசாசினுடைய தந்திரங்களையயல்லாம் தள்ளிப் போட்டு, 
 
உம்முடைய திருக்குமாரன் சேசுநாதருடைய அண்டைக்கு நாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும். 
 
இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்கிறோம். 
 
இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே! 
 
ஆமென்.🙏🌹

அன்பின் அரசர் - King_of_Love என்ற ஆங்கில நுலின் தமிழாக்கம் Tamil Catholic Audio Book

 அன்பின் அரசர்  

 
King_of_Love என்ற ஆங்கில நுலின் தமிழாக்கம்.
 
சங்கைக்குரிய மத்தேயோ க்ராலி சுவாமியவர்களின் 
பிரசங்கங்களின் தொகுப்பு.
 
 
  பாகம் 3   
          3.10
          3.9
          3.8
          3.7
          3.6 
          3.5
          3.4
          3.3 
          3.2 
          3.1 

 

தமிழ் வினாடி வினா -Tamil Catholic Quiz 6

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

தமிழ் வினாடி வினா 5- Tamil Catholic Quiz 5

தமிழ் வினாடி வினா 4 - Tamil Catholic Quiz 4

தமிழ் வினாடி வினா 3 - Tamil Catholic Quiz 3

தமிழ் வினாடி வினா 2 - Tamil Catholic Quiz 2

Tamil Bible Quiz 1

Fruits of the Holy Spirit in Tamil - இஸ்பிரித்துசாந்துவின் கனிகள்

 இஸ்பிரித்துசாந்துவின் கனிகள் 

 

 இஸ்பிரித்துசாந்துவின் கனிகள் மொத்தம் 12.

  1.  பரம அன்பு
  2. ஞான சந்தோஷம் 
  3. சமாதானம் 
  4. பொறுமை 
  5. தயாளம் 
  6. நன்மை தனம் 
  7. சகிப்பு தன்மை 
  8. சாந்தம் 
  9. விசுவாசம் 
  10. அடக்கவொடுக்கம் 
  11. இச்சை அடக்கம் 
  12. நிறை கற்பு

 

Gift of the Holy Spirit in Tamil - இஸ்பிரித்துசாந்துவின் கொடைகள்

 இஸ்பிரித்துசாந்துவின்கொடைகள் 

 

இஸ்பிரித்துசாந்துவின் கொடைகள் மொத்தம்   7

 

 

1. ஞானம் 

2. புத்தி 

3. விமரிசை 

4. அறிவு 

5. திடம் 

6. பக்தி 

7. தெய்வ பயம்

வெள்ளி, 2 ஜூலை, 2021

மரியாயியல் - Marialogy - Part 1

மரியாயியல் 

 

 தேவதாய் நம் அன்னை என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோஷம். அவர் நம்மை அன்பு செய்கிறார். அவருக்கு நம்முடைய பலவீனங்கள் எல்லாம் நன்கு தெரியும். பின் நாம் எதற்கு பயப்பட வேண்டும். 

 அர்ச். குழந்தை தெரசம்மாள்