Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 28 ஆகஸ்ட், 2021

தேவமாதாவை நோக்கி அநுதினம் வேண்டிக்கொள்ளும் ஜெபம்

 

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
தேவமாதாவை நோக்கி
அநுதினம்
வேண்டிக்கொள்ளும்
ஜெபம்
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
சம்மனசுக்களுடைய இராக்கினியே!
 
மனிதர்களுடைய சரணமே!
 
சர்வலோகத்துக்கும் நாயகியே! 
 
நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.
 
எப்படியாகிலும் எங்களை இரட்சிக்க வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். 
 
தாயாரே! மாதாவே! ஆண்டவளே! 
 
உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும். 
 
விசேஷமாய் நாங்கள் சாகும்போது பசாசினுடைய தந்திரங்களையயல்லாம் தள்ளிப் போட்டு, 
 
உம்முடைய திருக்குமாரன் சேசுநாதருடைய அண்டைக்கு நாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும். 
 
இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்கிறோம். 
 
இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே! 
 
ஆமென்.🙏🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக