Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

பகுதி 2.

திவ்ய சேசுநாதரின் திரு இருதயத்தினுடைய நன்கொடை அர்ச்.பீட்டர் ஜூலியன் எய்மார்ட்-தியானப் பிரசங்கம் - பகுதி 2.

நீ சர்வேசுரனுடைய வரத்தை.. அறிந்திருந்தால்.. (அரு.4:10) 

திவ்ய சேசுநாதர், தம்மைத் தாமே, இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் நித்திய காலத்திற்குமாக நீடித்திருக்கச் செய்வதற்கு, எவ்வழி முறைகளைக்கையாளுவார்? நமதாண்டவருடைய திவ்ய மனிதவதாரத்தினுடைய பரம இரகசியத்திற்கு திவ்ய இஸ்பி ரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் தாமே, ஏற்புடையகாரணகர்த்தராக விளங்குகின்றார்;கடைசி இராபோஜனத்தின் போது,திவ்ய சேசுநாதர் எல்லாவற்றையும்,தாமே நிறைவேற்றினார்; ஆனால், அதற்குப் பின் வரும் காலங்களில், அத்தகைய உன்னதமான பரம இரகசியத்தினு டைய பரிசுத்தச் சடங்கை தலைமைப்பொறுப்பேற்று நடத்துவதற்கு,யார் தகுதியுடன் இருக் கின்றார்? குருவானவர் அதை நடத்துவார்! உடனே, தேவ ஞானம் அதை எதிர்த்தது. என்ன! சாவுக்குரிய ஒரு மனிதனாகிய குருவால், தன் இரட்சகரும் சர்வேசுரனுமானவரின் மனிதவதாரத்தை புதுப்பிக்க முடியுமா? தேவ வார்த்தையானவரின் இப்புதிய மனிதவ தாரத்தை ஏற்படுத்துவதற்கு, தேவ இஸ்பிரீத்துவானவருடன் கூட மனித ஒத்துழைப்பும் தேவைப்படுமா? எல்லாகாலங்களுக்கும் அரசரும் சர்வாதிகர்த்தருமான சர்வேசுரனுக்கு, ஒரு மனிதன் கட்டளையிடவும், அதற்கு அவர் கீழ்ப்படியவும்வேண்டுமா? அதற்கு, பின் வரு மாறு,திவ்ய சேசுவின் திரு இருதயத்திடமிருந்து பதில் வந்தது: ஆம்! நான் எவ்வளவிற்கு அதிகமாக மனிதனை சிநேகிக்கிறேனென்றால், எல்லா காரியங்களிலும் ,நான் அவனுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் அளவிற்கு, என்னையே விட்டுவிடுகிறேன். ஒரு குருவின் அழைத்தலுக்கு உடனடியாகக்கீழ்ப்படிந்து, நான் மோட்சத்திலிருந்து கீழே இறங்கி வருவேன். தேவ நற் கருணைப் பேழையில் குடியிருக்கும் நான், விசுவாசிகளின் குறைந்த பட்ச விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு,அப்பேழையிலிருந்து வெளியே வருவேன்: வேதனைமிகுந்த வியாதியின் படுக்கையிலிருக்கும் என் பிள்ளைகளைச் சந்திக்கும்படியாக, நகரத்தின் தெருக்கள் வழியா கச் செல்வேன். சிநேகமானது,சிநேகிப்பதிலும்,தனக்குச் சொந்தமானதைக்கொடுப்பதிலும், தன்னைத்தானேப் பரித்தியாகம் செய்வதிலும், மகிமையடைகின்றது.

அப்பொழுது, தேவ பரிசுத்தத்தனமும் தனது எதிர்ப்பை , பின் வருமாறுவெளிப்படுத் தியது: தேவரீர், உமது மகிமைக்கு ஏற்புடைய விதமாக, குறைந்த பட்சமாக, தேவாலயத்தில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். தேவரீரின் மாட்சி மிக்க இராஜரீகத்திற்கு ஏற்புடைய குருக்களை தேவாலயத்தில் கொண்டிருப்பீர்கள். பழைய ஏற்பாட்டின் சட்டத்தைக் காட் டிலும், புதிய ஏற்பாட்டின்சட்டத்தில், சகலமும் கூடுதல் அதிக அழகு வாய்ந்ததாக இருக்க வேண்டும். அத்தும ஆயத்தம் செய்த, இருதயத்தூய்மையுள்ள நல்லகிறீஸ்துவர்கள் மட்டும், தேவரீரை திவ்ய நன்மையில் உட்கொள்ள வேண்டும். அதற்கு, சேசுவின் திரு இருதயம், பின்வருமாறு பதிலளித்தது: என் சிநேகம் எவ்வித நிபந்தனையையும் கொண்டிருக்கிறதில்லை; அது, தனக்கென்று எதையும் ஒதுக்கி வைப்பதும் கிடையாது. கல்வாரியின் மேல், சிலுவை யில் அறைந்து என்னைக் கொன்ற கொலைஞர்களுக்கு, நான் கீழ்ப்படிந்தேன். இன்னும் கூட மற்ற யூதாசுக்கள் என்னிடம் வந்தாலும், அவர்களுடைய தீமை நிறைந்த தேவதுரோகமான முத்தத்தையும் ஏற்றுக்கொள்வேன். அவர்களுக்கும் கீழ்ப்படிவேன்.

ஆனால், அப்போது, எத்தகைய காட்சி, நம் நேச ஆண்டவர் முன்பாக தோன்றியது! ஆண்டவரின் திவ்ய திரு இருதயமானது, மனிதர் மீதான தனது சிநேகத்தின் இயல்பான நாட்டங்களினுடைய பற்றுதல்களை அடக்கியாள்வதற்காகத் தன் மீதே வலுவந்தம் செய்து போராடும்படியாயிற்று! ஜெத்சமெனி ஒலிவத்தோட்டத்தில் அனுபவிக்கவிருந்த இரத்த வியர்வையின் வேதனை, ஏற்கனவே, நமதாண்டவரை உபாதிக்கத் துவக்கியிருந்தது: பாடு களின் போது,தாம் அனுபவிக்கவிருந்த கொடிய நிந்தை அவசங்கைகள் பற்றிய காட்சியை, ஜெத்சமெனித் தோட்டத்தில் கண்ட போது, நமதாண்டவர், சாவுக்கு ஏதுவான துயரத் திற்குட்பட்டார். மனுமக்களை மீட்டு இரட்சிப்பதற்காக, தாம், இத்தகைய கொடிய சிலு வைப்பாடுகளைப் பட்ட போதிலும், திரளான மனிதர்கள் இரட்சணியத்தை அடைய மாட் டார்கள் என்று நினைத்தபோது, ஆண்டவரின் திவ்ய திரு இருதயம் எவ்வளவிற்கு அக்கொ டிய நினைவினால் தாக்கப்பட்டு வலுவந்தம் செய்யப்பட்டதென்றால், உடனே, வியர்வை நாளங்கள் வழியாக,ஆண்டவரின் திரு இரத்தம் வியர்வையாக வெளியேறியது. மேலும், தமது சொந்த மக்களில் அநேகர், வேத விசுவாசத்தை மறுதலித்தவர்களாக, திருச்சபையி லிருந்து வெளியேறுவதைப் பற்றி எண்ணிய போது, ஆண்டவரின் திவ்ய திரு இருதயம், கொடூரமான வேதனையால் தாக்கப்பட்டது. கடைசி இராப் போஜனத்தின்போது, ஆண்டவரின் திவ்ய திரு இருதயத்தில் எத்த கைய போராட்டம் நிகழ்ந்தது? எத்தகைய கடுந்துயரவேதனை ஏற்பட்டது? தமக்கென்று எதையும் ஒதுக்கி வைக்காமல்,ஆண்டவர் தம்மையே, முழுமையாக, மனிதருக்காகக் கைய ளிக்கச் சித்தமானார்; ஆனால், ஆண்டவரின் இத்தகைய அபரிமிதமானதும் உன்னதமானது மான சிநேகத்தை, ஒவ்வொரு மனிதனாலும், விசுவசித்து ஏற்றுக் கொள்ள முடிந்ததா? அதை விசுவசித்து ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோரும்,தகுந்த நன்றியறிதலுடன், இந்த சிநேக தேவதிரவிய அனுமானத்தில், அவரை உட்கொள்கின்றனரா? அப்படியே,தங்கள் ஆத்துமங்களில் அவரை வரவேற்கும் எல்லோரும், அவருக்கு எப்போதும் பிரமாணிக்கத் துடன் ஜீவிக்கின்றனரா? இத்தகைய கொடூர நிர்ப்பந்தங்களைக் கண்ட போதிலும், திவ்ய சேசுவின் திரு இருதயம், நிச்சயமாக நிலைக்குலையவு மில்லை; தடுமாறவுமில்லை; ஆனால், கொடூ ரமாக உபாதிக்கப்பட்டது.இந்த மகா பரிசுத்த சிநேகத்தின் தேவ திரவிய அனுமானத்தில், ஒவ்வொரு நாளும் தனது கொடிய சிலுவைப் பாடுகள் மறுபடியும் புதுப்பிக்கப்படுகிறதை, திவ்ய சேசு கண்டார்; இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில்,கிறீஸ்துவ இருதயங்க ளால், தமக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருதயங்களால்,தமது பாடுகள் புதுப்பிக்கப்படுவதைக் கண்டார்;திவ்யசேசுநாதர்,அநேகர் தம்மை வேத விசுவாச மறுதலிப்பினால், காட்டிக்கொடுப் பதையும், வேறு சிலர், சுயசிநேகத்தினால், தம்மை எதிரிகளிடம் விற்கிறதையும், மற்ற பலர் தங்களுடைய துர்க்குணத்தினால், தம்மை சிலுவையில் அறைகிறதையும் கண்டார்.ஆண்ட வரை,தினமும் திவ்ய நன்மையில் உட்கொள்பவர்களுடைய இருதயங்கள், வெகு அடிக்கடி அவருக்குக் கல்வாரி மலைகளாக மாறுகின்றனர்.

ஓ! இம்மகா சிநேகமிகுந்த தேவ திரு இருதயத்திற்கு, இது எத்தகைய கொடிய சித்திரவதை! இதற்காக, தேவ இரட்சகர் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது?நேச ஆண்ட வர் தம்மையே மறுபடியும் நமக்குக் கையளிப்பார்! அதே போல் எப்போதும், இந்த மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், நேச இரட்சகர், நமக்காகத் தம்மையேத் தொடர்ந்து கையளித்துக்கொண்டிருப்பார்.

எங்கள் மீதுள்ள சிநேகத்தால் பற்றியெரியும் சேசுவின் சற்பிரசாத திரு இருதயமே! உம்மீதுள்ள சிநேகத்தால் எங்கள் இருதயங்கள் பற்றிஎரியச் செய்தருளும்!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக