Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

தேவநற்கருணைத் திருநாள்

 பீடங்களின் மீது எழுந்தருளி வீற்றிருக்கும் திவ்ய சேசுநாதர் சுவாமி

ஞானப் பிரசங்கம்

அர்ச். அல்ஃபோன்ஸ்மரியலிகோரியார்

வருந்திச் சுமைசுமந்திருக்கிறவர்களாகிய நீங்களெல்லோரும் என்அண்டையில் வா ருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன் (மத்.11:28) திவ்யசேசுநாதர், நாம் எல்லோரும் எளிதில் அணுகும்படியாகத் தம்மையேக்கையளிக்கும் விதமாக, பீடத்தின் மீது எழுந்தருளியிருக்கின்றார்: நம் நேச இரட்சகர், இவ்வுலகில், தமது இரட்சணிய அலுவலை நிறைவேற்றிய பின், உலகத்தைவிட்டுப் பிரியும் சமயத்தில், நம்மைத் தனியாக, இக்கண்ணீர் கணவாயில் விட்டுச் செல்வதற்கு விரும்பவில்லை. நம் ஆத்துமங்களின் மட்டில், சேசு கிறீஸ்துநாதர்கொண்டிருக்கும் சிநேகத்தின் அளவில்லாத மகத்துவத்தைப் பற்றி, எந்த நாவும் விவரிக்க முடியாது, என்று அர்ச்.அல்காந்தரா இராயப்பர் வியப்பு டன் கூறுகின்றார். ஆகவே தான், அளவில்லா சிநேகமுள்ள இந்த தேவ பத்தாவானவர், நம் மிடையே இல்லாமல், பரலோகம் செல்ல நேரிட்டால், நாம் அவரை மறந்து போவதற்கான சந்தர்ப்பம் ஏற்படாதபடிக்கு, உலகை விட்டுப் பிரியும் சமயத்தில், அவர் தாமே, நம்மீது கொண்டிருக்கும் அளவில்லாத தமது சிநேகத்தினுடைய ஓர் நினைவுச் சின்னத்தை, அதா வது, இந்த மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தை நம்மிடையே விட்டுச் செல்வதற் கும், அந்த உன்னதமான தேவசிநேகத்தின் அனுமானத்திலேயே தாமும் தங்கியிருப்பதற் கும், திருவுளமானார்.

நேச ஆண்டவர், தம்மைப் பற்றிய நினைவைத் தமது ஊழியர்களிடையே உயிருள்ள தாக நீடித்து நிலைத்திருக்கச் செய்வதற்காக, தமக்கும், தமது ஊழியர்களுக்குமிடையே உள்ள வேறு எந்த பொருளையும் விட்டுச் செல்லாமல், தம்மையே, சிநேகத்தின் பிணையாக, நம்மி டையே விட்டுச் செல்வதற்குத் திருவுளம் கொண்டார்.திவ்ய சேசுநாதர்,நம் மட்டில் வெளிப் படுத்திய இவ்வுன்னதமான தேவ சிநேக முயற்சியின் மூலமாக, நாம் அவர் மீது கொள்ள வேண்டிய மாபெரும் பிரதியன்பிற்குப் பாத்திரவாளராக இருக்கின்றார்.

அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குக் கொடுத்த காட்சியின் போது, ஆண்டவர், தமது திவ்ய இருதயத்தினுடைய ஆவல்களைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார்: நம்மைச் சந்திக் கும்படியாக, பீடங்களின் மீது, இரவு பகலாக மகா சிநேகமுடன் எழுந்தருளி,குடியிருக்கும், அவருடைய திவ்ய பிரசன்னத்திற்கு, பக்திமுயற்சிகள் மூலமாகவும், தேவசிநேக முயற்சி மூலமாகவும், நாம் சிறிதளவாவது,பிரதி நன்றி செலுத்துவதற்காகவும், அதன் வழியாக, சிநே கத்தின் இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்திற்கு எதிராக, நாள் தோறும், பதிதர் களாலும் கெட்ட கிறீஸ்துவர்களாலும் கட்டிக் கொள்ளப்படும் நிந்தை, அவசங்கை,அலட் சியங்களுக்கு, நாம் பரிகாரம் செலுத்தும்படியாகவும், ஆண்டவர், தமது மகா பரிசுத்த திரு இருதயத்திற்குத் தோத்திரமாக ஒரு திருநாளை ஏற்படுத்த வேண்டும், என்று கேட்டார்.

திவ்ய சேசுநாதர், இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் தம்மையே, நமக் காக விட்டுச் சென்றதற்கான முதல் காரணம் என்னவெனில், அவரை நாம் எல்லோரும் எளிதில் எந்நேரத்திலும் கண்டடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். இரண் டாவதாக, நாம் அவரை,எந்நேரத்திலும்சந்தித்து உரையாடுவதற்காகவே, இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், இரவு பகலாக வீற்றிருக்கின்றார். மூன்றாவதாக, இம்மகா பரி சுத்த தேவ திரவிய அனுமானத்தில், தம்மைச் சந்திக்க வரும் சகல மனிதர்களுக்கும் அபரிமி தமான தேவவரப்பிரசாதங்களை, அளிப்பதற்காகவே, தயவாய் எழுந்தருளிக் காத்திருக்கின்

றார்.

நம் நேச ஆண்டவர், எல்லாவற்றிற்கும் முதலாவதாக, சகல மனிதர்களும், தம்மை மிக எளிதாகக்கண்டடைந்து கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ள அநேகப் பீடங்களில்,

தங்கியிருக்கின்றார்.திவ்ய இரட்சகர்,பாவிகளிடையேக் கையளிக்கப்பட்டு, பாடுபட்டுச் சிலு வையில் மரிக்கப் போகும் அந்த இரவில், தங்கள் நேச ஆண்டவரைப் பிரிவதைப் பற்றிய துயரமான நினைவினால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அப் போது, ஆண்டவர்,அவர்களிடம் பின்வருமாறு ஆறுதல் கூறினார்: என்பிள்ளைகளே! உங்கள் மேல் நான் கொண்டிருக்கும் சிநேகத்தை, உங்களிடம் காண்பிக்கும்படியாக, நான் உங்க ளுக்காக, மரிக்கப் போகிறேன். ஆனால், என் மரணத்தின்போது, நான் உங்களைத் தனியாக விட்டு விட மாட்டேன்: நீங்கள் இவ்வுலகத்தில் இருக்கும் வரை, நானும் உங்களுடன் கூட, இந்த மகா பரிசுத்த தேவ திரவிய அனுமானத்தில் தங்கியிருப்பேன். உங்களுக்காக, என் சரீரத்தையும், ஆத்துமத்தையும், தேவத்துவத்தையும், இதில் விட்டுச்செல்வேன்: நான் என்னையே முழுமையாக உங்களுக்காக விட்டுச்செல்கிறேன். நீங்கள் உலகத்திலிருக்கும் வரைக்கும், உங்களிடமிருந்து நான் பிரிந்து செல்ல மாட்டேன். இதோ! நான் உலக முடி யுமட்டும் எந்நாளும் உங்களோடுகூட இருக்கிறேன் (மத்.28:20).

திவ்ய இரட்சகர்,தமது பத்தினியாகிய திருச்சபையைத்தனியாக, இவ்வளவு தூரத்தில், விட்டு விட மனதில்லாதவராக, சிநேகத்தின் இந்த தேவ திரவிய அனுமானத்தை நம்மிடை யே விட்டுச் சென்றார். நண்பர்களிலெல்லாம் அதிமிக சிறந்தவரும் சிநேகமுள்ளவருமான வர் தாமே, சக நண்பராக,தமது பத்தினியான திருச்சபையுடன் கூட,எந்நாளும் இருப்பதற் காகவே,சிநேகத்தின் இம்மகா தேவ திரவிய அனுமானத்தில்,எழுந்தருளி,தங்கியிருக்கின்றார், என்று,அர்ச். அல்காந்தரா இராயப்பர் பிரசங்கிக்கின்றார். சர்வேசுரனை அறியாத அஞ்ஞானி கள், வழிபடுவதற்காக அநேகக் கடவுளர்களைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.

ஆனால், நம்முடன்கூட எப்போதும், இவ்வளவு அருகில் தங்கியிருந்துகொண்டு, தமது அளவில்லாத சிநேகத்தினால், நமக்கு உதவி செய்து நம்மைப் பராமரித்து வரும் நம் சர்வேசு ரனை விட அதிக நேசமுள்ள கடவுளை அவர்களால், கற்பனை கூட செய்ய முடியாது. நமது தேவனாகிய கர்த்தரை நாம்மன்றாடுகிறபோதெல்லாம், அவர் நமதண்டையில்தானே இருக் கிறார். ஆ! நமது தேவனுக்கும் நமக்கும் இருக்கிற அந்நியோந்நிய நெருக்கம் மற்ற எந்த பிரபலியமான சாதியாருக்கும், அவர்களுடைய தேவர்களுக்கும் உண்டோ ,இல்லை (உபா. 4:7).உபாகமத்தில் காணப்படும் இவ்வேதாகம வாக்கியத்தை, பரிசுத்தத் திருச்சபையானது, தேவ நற்கருணைத் திரு நாளின் போது,திவ்வியபலி பூசை ஜெபத்தில் பயன் படுத்துகின்றது

அப்படியென்றால், இதோ!நம் நேச ஆண்டவர்,நமது பீடங்களில் தங்கியிருக்கின்றார்! அதுவும் இவ்வளவான சிறைகளில், ஒரு சிநேகத்தின் கைதியைப்போல், அடைபட்டவராக, தேவநற்கருணைப் பேழைகளில் வாசம் செய்கின்றார். அவருடைய குருக்கள், பீடத்தின் மீது, தேவநற்கருணை ஸ்தாபகம் செய்யும் சமயங்களிலும், திவ்ய நன்மையை விசுவாசிகளுக்குக் கொடுக்கும் சமயங்களிலும், தேவநற்கருணைப்பேழையிலிருந்து, அவரை, வெளியே எடுப் பார்கள்; பின்னர், தங்கள் நேச ஆண்டவரை, மறுபடியும் முழுவதுமாக அடைபட்டிருக்கும் படி, தேவநற்கருணைப் பேழையிலேயே வைத்து விடுவார்கள்; திவ்ய சேசுநாதரும், இரவு பகலாக அந்தப்பேழையில், அடைபட்டபடி, தங்கியிருப்பதையே ஆசிக்கின்றார்; அதிலே யே திருப்தியுடன் வசிக்கின்றார்; ஆனால், என் நேச இரட்சகரே! விசுவாசிகள் எல்லோரும், தேவாலயக்கதவுகளை பூட்டிவிட்டு, உம்மைத்தனியாக விட்டுச் சென்றபோதிலும், தேவரீர் , ஏன் இரவு நேரங்களிலும், இவ்வளவு அநேகதேவாலயங்களில், தங்கியிருக்கின்றீர்? பகலில் மட்டும், தேவரீர் தேவாலயங்களில் தங்கியிருந்தால் போதுமாயிருக்குமல்லவா? இல்லை. ஆனால், திவ்ய இரட்சகர், இரவு நேரங்களிலும், அங்கு தங்கியிருப்பதையே ஆசிக்கின்றார்: காலையில் தம்மை ஆவலுடன் சந்திக்க வரும் சகலமனிதரும்,உடனடியாகத்தம்மைக் கண்ட டைந்து கொள்ளும்படியாக, தனியாக விடப்பட்டிருந்தாலும், இரவு நேரங்களிலும், தேவ நற்கருணைப் பேழைகளில், தங்கியிருப்பதற்குத் திருவுளம் கொண்டிருக்கின்றார்.

பரிசுத்த பத்தினி தன் நேச பத்தாவைத் தேடிச் செல்வதை, உன்னத சங்கீதத்தில் வாசிக்கின்றோம்; அதில், அவள், எதிரில் வருபவரிடம், என் ஆத்துமநேசரை நீங்கள் கண் டீர்களோ? (உன்.சங்.3:3) என்று கேட்கின்றாள். அவரைக் காண முடியாமல் போனதால், அவள் தன் குரல் சத்தத்தை உயர்த்தி, என் பத்தாவே! நீர் எங்கே இருக்கிறீர் என்று என்னி டம் கூறும் .. ஆ! என் ஆத்தும நேசமே! நீர் உமது மந்தையை மேய விடுகிறது எவ்விடத்

திலே? மத்தியான வேளையில், நீர் எங்கே படுத்து இளைப்பாறுகிறீர்? (உன்.சங்.1:6). பத்தினி, தன் நேச பத்தாவைக் கண்டடையக் கூடவில்லை. ஏனெனில், அப்போது,மகா பரிசுத்த தேவ நற்கருணையை,நமதாண்டவர் ஏற்படுத்த வில்லை.ஆனால், இப்போது, ஒரு ஆத்துமம், தன் நேச பத்தாவான திவ்ய சேசுநாதரைக் கண்டடைவதற்கு ஆசித்தால், தேவநற்கருணை ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் தேவாலயத்திற்குச்சென்றாலே போதும்! அங்கே, அது, தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தன் தேவ நேசரைக் கண்டடைந்து கொள்ளும்! இந்நாட்டில், தேவ நற் கருணைப் பேழை ஸ்தாபிக்கப்பட்ட தேவாலயங்கள், எல்லா நகரங்களிலும், கன்னியர்,துற வியர் மடங்களிலும் இருக்கின்றனவே! இவ்வெல்லா இடங்களிலும், பரலோக அரசர், மரத்தினால் அல்லது ஒரு கல்லினால் செய்யப்பட்ட ஒரு பெட்டிக்குள்,அடைபட்டபடி தங் கியிருப்பதற்கு, தமது முழு மனஆவலுடனும், திருப்தியுடனும் திருவுளமானார்! அநேக இடங்களில், தமது பிரசன்னத்தை விசுவாசிகளுக்கு அறிவிக்கும்படியாக, எரிந்து கொண் டிருக்கும் அணையா விளக்குகள் இல்லாமலும், தம்மைச் சந்திப்பதற்கும், தம்முடன் கூட தங்கியிருப்பதற்கும் விசுவாசிகள் ஒருவரும் இல்லாமலிருந்தாலும் கூட, அங்கேயும், திவ்ய இரட்சகர், எழுந்தருளவும், தங்கியிருப்பதற்கும் சித்தமானார்.

இதைக் குறித்து, அர்ச்.பெர்னார்டு, ஓ! ஆண்டவரே! இவ்வாறு, உம்மையே, பீடங்க ளின் மீது யாவராலும் கைவிடப்பட்டவர்போல், தங்கியிருப்பது, தேவரீருடைய மாட்சி மிக்க தேவ மகத்துவத்திற்கு ஏற்புடையதல்லவே! என்று புலம்பினார். அதற்கு, ஆண்டவர், அவரிடம், அது பரவாயில்லை! அது, எனது தேவமகத்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லாவிடி னும்,அது, என் சிநேகத்திற்கு மிகநன்றாகப் பொருத்தமுடையதாக இருக்கிறது! என்று பதில ளித்தார்.

ஓ! திவ்ய சேசுவே! நேச இரட்சகரே! ஓ! என் ஆத்துமத்தின் சிநேகமே! எங்களுடன் இந்த தேவ திரவிய அனுமானத்தில், தங்கியருப்பதற்காக, தேவரீர் எவ்வளவு அதிக விலை கொடுக்க நேர்ந்தது? எங்கள் பீடங்கள் மீது,தங்கியிருப்பதற்காக, தேவரீர், முதலில் கொடிய துன்பம் நிறைந்த சிலுவை மரணத்தை அனுபவிக்கவேண்டியிருந்தது; அதன் பிறகு, உமது தெய்வீகப் பிரசன்னத்தினால், உதவும்படியாக, பீடங்களில் எழுந்தருளியிருக்கும் போது, அநேக மனிதரால் இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்திற்கு ஏற்படும், கொடூரமான நிந்தை, அவசங்கைகளுக்கு, தேவரீர், உம்மையேக் கையளிக்க நேர்ந்தது!

மேலும், இவை எல்லாவற்றிற்குப் பிறகு, உமது தெய்வீகப் பிரசன்னத்தில், உம்மைச் சந்திக்க வந்திருக்கும் எங்களைக் காணும்போது, அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களை எங்கள் மீது பொழிந்து, ஞான செல்வந்தர்களாக எங்களை உயர்த்தும் நோக்கத்திற்காகவே, தேவரீர்,தேவநற்கருணைப் பேழைகளில் மாபெரும் ஆவலுடன், எங்களைச் சந்திப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர் என்பதை அறிந்திருக்கின்றோம்.தேவரீர் எங்கள் மட்டில் கொண் டிருக்கும் அதிசயமானதும், அதி உன்னதமானதுமான சிநேகத்துடன், இம்மகா பரிசுத்த தேவ திரவிய அனுமானத்தில் எழுந்தருளி, எங்களுக்காகக் காத்திருக்கின்றீர் என்பதைப் பற்றி, இவ்வளவு அறிந்தபோதிலும், தேவரீரை சந்திக்கும்படியாக நாங்கள் பக்தி பற்றுதலு டன், அடிக்கடி அனுசரிக்க வேண்டிய தேவநற்கருணை சந்திப்பின் மட்டில், எவ்வளவோ சோம்பலுடனும், அலட்சியத்துடனும் இருக்கிறோமே!

ஓ! நேச ஆண்டவரே! என்னை மன்னித்தருளும்! ஏனெனில், நானும் உமது அதிமிக உன்னத சிநேகத்தை மறந்த நிர்ப்பாக்கிய பாவிகளில் ஒருவனாயிருந்தேன். இன்றிலிருந்து, ஓ! என் திவ்ய சேசுவே! உம்மை அடிக்கடி, தேவ நற்கருணை சந்திப்பின் மூலம் சந்திக்கவும், தேவரீருக்கு நன்றி செலுத்துவதற்கும், உம்மை நேசிப்பதற்கும், உம்மிடம் தேவ வரப்பிரசா தங்களுக்காக மன்றாடிக்கேட்பதற்கும், உமது திருச் சமூகத்தில் எவ்வளவு அதிக நேரம் தங் கியிருக்கமுடியுமோ, அவ்வளவு நேரம் தங்கியிருக்கவும், நான் ஆசிக்கிறேன். ஏனெனில், இந்த நோக்கத்திற்காகவே, தேவரீர், எங்கள் சிநேகத்தின் கைதியாக, இப்பூமியிலுள்ள எல் லா பீடங்களின் தேவ நற்கருணைப் பேழைகளிலும் அடைபட்டபடி, தங்கியிருக்கின்றீர்! ஓ! தேவமாதாவே! இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தின் மீது கொள்ளவேண்டிய மாபெரும் சிநேகத்தை எனக்குப்பெற்றுத் தாரும்! +


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக