Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

தேவநற்கருணை

 தேவநற்கருணையில் திவ்ய கர்த்தர் மெய்யாகவே பிரசன்னமாயிருக்கின்றார்

சர்வேசுரன் அங்கே இருக்கின்றார்! - அர்ச்.பீட்டர் ஜூலியன் எய்மார்ட் மெய்யாகவே ஆண்டவர் இவ்விடத்திலிருக்கின்றார்; நானோ, இதை அறியாமலிருந்தேன் (ஆதி.28:16).

நமதாண்டவருக்கு, ஆராதனையையும், ஸ்துதியையும் செலுத்துவதன் மூலம், நாம்

சங்கை மரியாதையைச் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். அதுவே, நமது முழு முதல் தலையாயக்கடமை.தன்னியல்பாக,க்ஷண நேரத்தில், உடனடியாக,ஒரு அனிச்சை செயல்போல் ஏற்படும், சங்கை மரியாதையை, நாம் ஆண்டவர் மட்டில் கொண்டிருக்க வேண்டும்; இல்லாவிடில்,கடமைதவறிய குற்றத்திற்கு ஆளாவோம். க்ஷண நேரத்தில், இயல் பாக, சர்வேசுரன் மட்டில் கொண்டிருக்க வேண்டிய சங்கை மரியாதை, முன் யோசனை ஏதுமில்லாமல் நம்மிடம் ஏற்பட வேண்டும். சர்வேசுரன் மட்டில் நாம் கொள்ளும் மேரை மரியாதையானது, நமக்குள் ஓர் அச்சுப் பதிவாகப் பதியப்பட்டிருக்கும் சுபாவத்தினுள் இருக்க வேண்டும். ஆண்டவர் எங்கிருந்தாலும், நாம் அவரைக் கட்டாயமாக ஸ்துதித்து, ஆராதிக்க வேண்டும். கடவுள் மனிதன் என்ற அவருடைய மாட்சிமிக்க தேவ மகத்துவத் திற்கு, சிருஷ்டிகளாகிய நமது ஸ்துதியும்,ஆராதனையும், தேவைப்படுகின்றது; அவருடைய பரிசுத்த திருநாமத்திற்கு, பரலோகத்தினரும், பூலோகத்தினரும், பாதாளத்தினரும் முழங் காலிலிருந்து, பணிந்து தென்டனிட்டு வணங்குகின்றனர்.

மோட்சத்தில், சம்மனசுகள், தேவ மகத்துவத்திற்கு முன்பாக, நடுநடுங்கியபடி, சாஷ் டாங்கமாக விழுந்து, தெண்டனிட்டு, ஆராதிக்கின்றனர். நமது ஆண்டவரின் மகிமையின் ஸ்தலமான மோட்சமானது, உன்னதமான மேரை மரியாதையை, சர்வேசுரன் பெற்றுக்

கொள்ளும் ஸ்தலமாக, விளங்குகின்றது. பூமியிலுள்ள ஒவ்வொரு சிருஷ்டியும்,நமதாண்ட வருக்குக் கீழ்ப்படிந்திருந்தன: ஆழ்கடல் சமுத்திரமானது, ஆண்டவருடைய பாதத்தில், நில மாக மாறி, அவரை ஆராதித்தது; திவ்ய கர்த்தர், சிலுவையில் மரித்த போது, சூரியனும், வானமண்டலத்தின் சந்திரனும், நட்சத்திரங்களும், ஆண்டவருடைய மரணத்தைக் காண சகிக்காமல், தங்களையே மறைத்துக் கொண்டு, வருந்தின.மனிதரெல்லாரும், ஆண்டவரை தூஷித்து சபித்துக் கொண்டிருந்த போது, வானமும் பூமியும் ஆண்டவரை, ஸ்துதித்துப் போற்றின! நரகத்தில், சபிக்கப்பட்ட பாவிகள், ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்கிற வராகிய தேவ நீதிபதியின் கண்டிப்பான நீதித் தீர்ப்பினடியில், அஞ்சி நடுநடுங்கிக் கொண் டிருக்கின்றனர்!

நமதாண்டவரின் தெய்வீகப் பிரசன்னத்திற்கு, நாம் காண்பிக்க வேண்டிய மேரை மரியாதையான ஆராதனைக்கு, எந்த ஒரு காரணத்தையும் கண்டுபிடிக்கத் தேவையில்லை! அரசர் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டதும், எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்; அது ஒரு அனிச்சை செயலாக இருக்கிறது. அரசரோ உயர் அதிகாரியோ கடந்து செல்லும்போது, ஒவ் வொருவரும் அவருக்கு, சங்கைமரியாதை செலுத்துகின்றனர். அரசர் செல்லுமிடமெல்லாம், மரியாதையும் புகழும் செலுத்தும் மக்கள் கூட்டம், உடனுக்குடன் அவரை வாழ்த்துவ தைக் காணலாம். சர்வேசுரனுக்கு ஆராதனை செலுத்தும் உணர்வு இல்லாதவனும், அல்லது, பிறரிடத்தில், சர்வேசுரனுக்கு ஆராதனை செலுத்தும் உணர்வை அழிக்கஆசிப்பவனும், மனித னே இல்லை!

நமதாண்டவரின் பிரசன்னத்தில் அனுசரிக்க வேண்டிய சங்கை மரியாதை இல்லாத கத்தோலிக்கர்கள், வெட்கப்படுவதற்கான காரணங்கள் பல உள்ளன. தேவ சந்நிதானத்தில் இருக்கும்போது, அந்த க்ஷண நேரத்தில் உடனுக்குடன் அனுசரிக்கப்பட வேண்டிய மரியா தையைப் பற்றி தான், கூறுகிறேன். யூதரின் ஜெபக்கூடத்திற்குள் நுழைந்து பார்! அங்கு நீ பேசினாலோ, உன் நடத்தை ஒழுங்கில்லாமல் போனாலோ,நீ வெளியேற்றப்படுவாய்! ஒரு மசூதிக்குள் நுழைவதற்கு முன், உன் பாதணியைக் கழற்ற வேண்டும். தப்பறையான இம் மதத்தினர் எல்லோரும், அவர்களுடைய கோவில்களில் உண்மையான ஒன்றையும் கொண் டிருக்கவில்லை! ஆனால், நம்மிடம் எல்லாம் இருக்கின்றது! இருப்பினும், அவர்கள் தெய்வத்

மட்டில், கொண்டிருக்கும் மரியாதை, சர்வேசுரனிடம் நாம் கொண்டிருக்கும் மரியா தையை, வெகுவாகக் கடந்து, உயர்ந்து இருக்கின்றதே! தம்மைக் காட்டிலும், பசாசுக்கே, மனிதர்கள், அதிகமாக மரியாதை செலுத்துகின்றனர், என்று கூறி, நமதாண்டவர், நம்மீது குற்றம் சுமத்தக்கூடும்!

தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளால், பகிரங்கமாக உதாசீனப்படுத்தப்படுவதற்கு சம் மதிப்பார்களா? நமக்கு மற்றவர் செய்யும் சங்கயீனத்தை மிகப் பெரிதாகக் கருதுகிறோம்; ஆனால், நாம் அதே அவசங்கைகளை,நமதாண்டவருக்கு ஏன்செய்கிறோம்? நமது அற்பமான கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்பட்டால், அது பற்றி அதிகம் வருந்துகிறோம்.ஆனால், ஆண்ட வருக்குரிய சங்கை மேரை, அலட்சியம் செய்யப்படும்போது, அதைப் பற்றி, சற்றும் வருந் தாமல் இருக்கிறோம். நமது கண்ணியம், சர்வேசுரனிடமிருந்து, அவரது பிரதிபலிப்பாக,நம்மி டம் வருகின்றது.ஆகையால், நமதாண்டவர் மட்டில் நாம் கொள்ள வேண்டிய மரியான யை, இழப்பதற்கு அனுமதிப்போமேயாகில், நம் மட்டில், நமக்குரிய மரியாதையையும் அழித்துவிடுவோம்.ஆ! தேவசந்நிதானத்தில் அனுசரிக்க வேண்டிய சங்கை மரியாதையில்லா மலிருந்த பாவத்திற்குத் தகுந்த தண்டனையை,சர்வேசுரன் நமக்கு அளிப்பாரானால், ஐயோ! அது எவ்வளவு பயங்கரமாக இருக்கும்!

எனவே, நமதாண்டவருடைய தேவ பிரசன்னத்திற்குள், நாம் வந்தவுடன், அவரை ஸ்துதித்து ஆராதித்து, ஆண்டவருக்குரிய முதல் வணக்கத்தை அளிப்போமாக! திவ்ய கர்த் தருக்குரிய சங்கை மரியாதையை செலுத்துவதற்கு முன்பாக, நாம் அலட்சியப்போக்கையும், பராக்கையும் நம்மிடம் அனுமதிப்போமேயாகில், நாம் நீசப்பாவிகளாக இருப்போம். ஆம்! தேவநற்கருணைப்பேழையிலிருக்கும் ஆண்டவர் மட்டில் நாம் கொண்டிருக்கும் மரியாதைக் குறைவிலிருந்தே, விசுவாசத்திற்கு எதிரான மாபெரும் பாவங்கள் தோன்றுகின்றன

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

! +


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக