Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

திவ்ய சேசுநாதர் சுவாமியின் திரு இருதய வணக்க மாதம் 1

  திவ்ய சேசுநாதரின் திரு இருதயத்தினுடைய நன்கொடை தியானப் பிரசங்கம் - அர்ச்.பீட்டர் ஜூலியன் எய்மார்ட்

நீ சர்வேசுரனுடைய வரத்தை .. அறிந்திருந்தால்.. (அரு.4:10)


திவ்ய சேசுநாதர், உலக ஜீவியத்தின் இறுதி முடிவை அடைந்திருந்தார்; பரலோகம், தனது அரசரை, மறுபடியும் தன்னிடத்தில் அழைத்துக்கொண்டது; ஆண்டவர், போதுமான அளவிற்குப் போராடியிருந்தார்;அது, அவர் வெற்றியடைவதற்கான நேரமாயிருந்தது;இருப்

பினும், ஆண்டவர், பசாசின் அடிமைத்தனத்திலிருந்து அப்போது தான் மீட்டு இரட்சித்த ருளிய மனுக்குலத்தை, அவரின் புதிய குடும்பத்தின் பிள்ளைகளை, அப்படியே நிராதரவாக விட்டுச் செல்ல விரும்பவில்லை. நான் உங்களை விட்டுச் செல்கிறேன். மேலும், நான் உங்களி டம் வருவேன், என்று ஆண்டவர், அப்போஸ்தலர்களிடம் கூறினார். ஓ ஆண்டவரே! தேவ ரீர் எங்களிடம் மறுபடியும் வருகிறீர்; தேவரீர், எங்களிடம் தங்கியுமிருக்கின்றீர்; அதே சம யம், எங்களை விட்டும் செல்கின்றீர்; இவ்விரண்டு காரியங்களையும், ஒரே சமயத்தில்,ஆண் டவரே, தேவரீரின் எந்த வல்லமையினுடைய புதுமையினால், செய்கின்றீர்? இது தான், ஆண்டவருடைய திவ்ய திரு இருதயத்தின் பரம இரகசியமும் உன்னத மான அலுவலுமாகும்.திவ்ய சேசுநாதர், இரண்டு மாட்சிமிக்க பத்திராசனங்களைக்கொண்டு திகழ்கின்றார். மோட்சத்தில் மகிமையுள்ள ஒரு பத்திராசனத்தைக் கொண்டிருக்கின்றார்; தாழ்ச்சியும் சாந்தமும் நன்மைத்தனமுமான மற்றொரு பத்திராசனத்தை, நமதாண்டவர், இப்பூமியில் கொண்டிருக்கின்றார்: இரு விதமான இராஜரீகமான அரசவைகளைக் கொண் டிருக்கின்றார். வெற்றியடைந்த மகிமையினுடைய திருச்சபையினரும் சகல மோட்சவாசி களுமடங்கிய பரலோக அரசவையையும், இங்கே, கீழேயுள்ள பூமியில் இரட்சணியமடைந்த சகல புண்ணியவாளர்களுடைய அரசவையையும் கொண்டிருக்கின்றார். திவ்ய இரட்சகர், ஒருவேளை,இவ்விரண்டு இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்ற ஒரு நிலை நிச்சயமாக ஏற்படுவதாக இருந்தால், நம்மை விட்டு விட்டுப் பரலோகத்திற்குத் திரும்பிச் செல்வதை விட, நம்முடன் கூட இங்கேயே, பூமியில் தங்கியிருப்பதற்கே, ஆசிப்பார். பர லோக மகிமையை அடைவதற்காக, மோட்சத்திற்குச் செல்வதை விட, தமது விலைமதியாத திரு இரத்தத்தையே கிரயமாகக் கொடுத்து மீட்டு இரட்சித்தருளிய எளிய சிருஷ்டிகளான மனிதர்களில் சின்னஞ்சிறியவர்களுடன் கூட தங்கியிருப்பதையேத் தேர்ந்தெடுப்பார் என்பதை, நேச ஆண்டவர், அநேக அத்தாட்சிகளால், நிச்சயித்திருக்கின்றார்: மனிதர்களின் குமாரர்களுடன் இருப்பதிலேயே, ஆண்டவர் அகமகிழ்கின்றார். திவ்ய சேசுநாதர், எந்த நிலைமையில் நம்முடன் தங்கியிருக்க நேரிட்டது? க்ஷண நேரத்தில் தோன்றி மறைகிற மிகக் குறுகிய காலநேரத்தில், நிலையுறுதியற்ற விதத்தில் தங்கியிருக்க நேரிட்டதா? இல்லை .ஆண்ட வர், நிலைமையாக எப்போதும், நம்முடன், இடைவிடாமல், தொடர்ந்து தங்கியிருப்பார். ஆனால், இந்த நேரத்தில், நமதாண்டவரின் திரு ஆத்துமத்திற்குள் ஓர் ஆச்சரியமானப் போ ராட்டம் நிகழ்ந்தது: தேவ நீதி எதிர்த்தது; மனுக்குல இரட்சணிய அலுவல் நிறைவேறிவிட்டதல்லவா? திருச்சபையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டதே! தன் சொந்த உடைமையாக்கிக் கொள்ளும் படியாக, மனிதனுக்கு, தேவ வரப்பிரசாதமும், சுவிசேஷமும்,தேவ கற்பனைகளும் சட்டங்க ளும், அளிக்கப்பட்டு, அவற்றை அவன் எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்பதையும் கற்பிக் கப்பட்டுவிட்டதல்லவா? திவ்ய சேசுநாதரின் திருஇருதயம், தேவ நீதியின் எதிர்ப்பிற்குப் பின்வருமாறு பதில் கூறியது: மனுக்குலத்தின் இரட்சணியத்தை நிறைவேற்றுவதற்குப்போதுமாயிருந்த காரியங் கள் எல்லாம், மனுக்குலத்தின் பேரில் கொண்டிருந்த தமது அளவில்லாத சிநேகத்தைத் திருப்திப் படுத்துவதற்குப் போதுமானதாக இல்லாமல்போனது: குழந்தையைப் பெற்றெடுப் டன் திருப்தியடையாமல், ஒரு தாயானவள், அதற்கு உணவளித்துப் போஷித்து வளர்ப் பதிலும், அது செல்லுமிடங்களிலெல்லாம், அதனுடன் கூடவே இருந்து,அதைத் தொடர்ந்து கண்காணித்து வருவாள்."உலகத் தாய்மார்களிலேயே மிகச் சிறந்த தாய், தன் பிள்ளையை, நேசிப்பதைவிட மேலாக, நான் மனிதரை சிநேகிக்கிறேன். நான் அவர்களுடன் கூட தங்கி யிருப்பேன்” என்று, திவ்ய சேசுநாதரின் திரு இருதயம், நம்மைப்பார்த்துக் கூறுகின்றது. எந்த காண்டவர் நம்முடன் கூட தங்கியிருப்பார்? மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானம் என்கிற திவ்ய அப்பஉருவத்தில், திரைச்சீலைக்குள் மறைந்திருப்பார். தேவ மகத்துவம் இதை எதிர்த்தது; தேவ இரட்சகர், தமது மனிதவதாரத்தின்போது, தம்மை உட்படுத்திக்கொண்ட தாழ்மை சிறுமையை விட, இம்மகாபரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், அவருக்கு, மாபெரும் விதம் கூடுதலாக ஏற்படக்கூடிய தாழ்மை, சிறுமைக்கு, தேவ மகத்துவம்,மறுப்பைத் தெரிவித்தது. பாடுகளின்போது அனுபவித்த சிறுமை, தாழ்மை
யான நிந்தனைகளை விட, இப்போது, அதிக சுய இழிவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய சுய இழிவை, மனுக்குலத்தின் இரட்சணிய அலுவல் கேட்கவில்லை, என கூறி,தேவமகத்துவம், அதை எதிர்த்தது. அதற்கு உடனே, திவ்ய சேசுநாதரின் திரு இருதயம்,பின் வருமாறு பதிலளித்தது: பழைய ஏற்பாட்டின் காலத்தில், மோயீசனுடைய மகிமை, யூதர்கள் அவரருகில் செல்லாத படிக்குத் தடுத்ததுபோல், என் தேவசுபாவ மகிமையின் மாட்சிமை,என்னிடம், அணுகி வரும்,என் எளிய சகோதரர்களான மனிதரை,தடுத்துவிடாமலிருப்பதற்காக, நான் என்னை யும் என்மகிமையையும் திரையிட்டு மறைத்துக்கொள்ளவே ஆசிக்கிறேன்.என்உன்னதமான புண்ணியங்கள், மனிதனைத் தாழ்மைப் படுத்தாமலிருப்பதற்காகவும், அத்தகைய உத்தம மேரையான எனது நன்மாதிரிகையின் முழுமையான உத்தமதனத்தை அடைவதைக் குறித்து, அவன் ஒரு போதும், அதைரியப்படாமலிருப்பதற்காகவும், நான் என் புண்ணி யங்களின் மேல் ஒரு திரையைப் போட்டு மறைத்துக் கொள்ள ஆசிக்கிறேன். அப்போது, மிக எளிதாக, என் அருகில், மனிதன் வருவான். மேலும், ஒன்றுமில்லாமையாகிய இச்சிறுப் பேழையினுள், அடைபட்டிருக்கும்படி, கீழே குனிந்து இறங்கி, என்னையே தாழ்த்தியிருப் பதைக் கண்டு, அவனும், என்னுடன் கீழே இறங்கி வருவான். அப்போது, அவனிடம், நான் இருதயத் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ளவர் என்பதை என்னிடத்திலிருந்து கற்றுக் கொள், என்று இன்னும் கூடுதல் அதிகாரத்துடன் கூறுவதற்கான உரிமையை, நான் கொண்டிருப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக