Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

உத்தம மக்களை உருவாக்க:

  நல்ல ஆலோசனை மாதாவின் பிள்ளை

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில், ஈடித் என்னும் சிறுமி வசித்து வந்தாள். அவள் தாய் கத்தோலிக்க மதத்தினள்; தந்தை, புராட்ஸ்ட ன்டு பதிதமதத்தைச் சேர்ந்தவர். அவள் சிறுமியாயிருக்கும்போதே, பெற்றோர் இருவரும், இறந்தனர்.புராட்டஸ்டன்டு உறவி னரே, ஈடித்தை வளர்த்து வந்தனர். அவள் தாய் வளர்த்து வந்த பிரகாரமே, கத்தோலிக்க

வேத கடமைகளை அனுசரித்து வந்தாள்.ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல், திவ்விய பலி பூசை காண்பாள்; உறவினர், அதற்குதடையில்லாமல், அனுமதித்திருந்தனர். எனினும், அவர் களது மிதமிஞ்சிய உலகரீதியான வாழ்வு, சிறுமி, ஈடித்தையும் பாதித்தது. அவள்,தன் வேதக் கடமைகளைத் தொடர்ந்து அனுசரித்தபோதிலும், அவள் இருதயத்தில் உத்தமமான தேவ சிநேகம் வளராமல் போனது.

செல்வந்தர்கள் பயிலும் பள்ளிக்கூடத்திற்கு, ஈடித், கல்வி கற்பதற்காக அனுப்பப்பட் டாள்.நண்பர்கள் அதிகம் பேர் கிடைத்தனர். எல்லாம் இன்பமாகத் தோன்றியது. பள்ளிக் கூடம் முடிந்தது; கல்வி கற்கும் வயது கடந்தது; திருமண வயதை அடைந்தாள்; ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த வாலிபன் ஈடித்தைச் சந்தித்தான்.அவன் ஒருபணக்காரன். அவளிடம், திருமணம் செய்ய, தான் விரும்புவதாகக் கூறினான். அதற்கு, அவள் பதில் ஒன்றும் கூற வில்லை. அவளுடன் வசித்து வந்த அவளின் அத்தை, அந்த வாலிபனை மணந்து கொள்ளும் படி, ஈடித்துக்கு அடிக்கடி புத்திமதி கூறிவந்தாள். ஆனால், அதற்காக யாரும், ஈடித்தை வற்புறுத்தவில்லை.

இந்த நாட்களில், ஈடித் அபூர்வமாகவே திவ்ய பலிபூசை காண்பதற்காக தேவாலயத் திற்குச் செல்வாள். பல வருடங்களாக, அவள் பாவசங்கீர்த்தனம் செய்யாமலிருந்தாள். இவ் வளவாக, அவளின் ஞானஜீவியம், மிகவும் பலவீனமடைந்தபோதிலும், ஒருபோதும், அவள், புராட்டஸ்டன்டு பதிதர்களின் தப்பறையான வழிபாடுகளுக்குச் செல்லாமலிருந்தாள்; அதில், அவள் எப்போதும் கவனமாக இருந்தாள்.வெள்ளிக்கிழமைகளில், மாமிச உணவை, உட்கொள்ள மாட்டாள்.இரவில் எவ்வளவு களைத்திருந்தாலும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவ தியுறும் ஆத்துமங்களுக்காக, குறிப்பாக, தன் நேச தாயாருக்காகவும், தந்தைக்காகவும் ஜெபிக்காமல், உறங்கமாட்டாள். இவ்வாறு ஜெபிக்கும் நல்ல பழக்கத்தை,ஈடித்,தன் தாயின் மடியிலேயே கற்றிருந்தாள்.உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக, சுவாமி! பாதாளங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.. என்கிற சங்கீதத்துடன், அருள் நிறை மந்திரத்தை ஒரு முறை ஜெபிப்பாள். இதைத் தவிர, வேறு எந்த ஜெபத்தையும், அவள் ஜெபித்ததில்லை.

அன்று ஏப்ரல் 26ம்தேதி.ஈடித் பிறந்த நாள்.அவளை விரும்பிய வாலிபன், அவளுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு வைரமோதிரத்தை அவள் விரலில் அணிய ஆசித்தான். அதனிமித் தம், அவளை, பூங்காவிற்கு வரும்படி அழைத்தான்.அவளும் சம்மதித்தாள். பூங்காவிற்குச் செல்லும் வழியில், தேவாலயத்தைக் கடக்க நேரிட்டது; இறந்தவர்களுக்கான மணி அடித் துக்கொண்டிருந்ததைக் கண்டதும், ஈடித், யாரோ இறந்து போயிருக்கிறார், அவருடைய ஆத்தும இளைப்பாற்றிக்காக வேண்டிக்கொள்வோம், என்று கூறி, அந்த வாலிபனையும், கூட் டிக்கொண்டு, தேவாலயத்திற்குள் சென்றாள்.இந்த நல்ல பழக்கத்தையும், ஈடித்,தன் நல்ல தாயாரிடமிருந்து கற்றிருந்தாள்; திவ்ய பலிபூசை முடிந்தது; பிரேதத்தை, குருவானவர் மந் திரித்தார்;அப்போது, குரு, தன்னை உற்று நோக்கியது போல், அவள் உணர்ந்தாள்; பிறகு, ஜெபம் எல்லாம் முடிந்தபிறகு, அவளும் அவளுடைய நண்பனும், வெளியே சென்றனர்; தீர்த்தத் தொட்டியின் மேல், நல்ல ஆலோசனை மாதாவின் படம் இருந்தது;அதனடியில் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்த படம் மிக அழகாக, இருந்தது; ஈடித், அந்த அழகியப் படத்தையே உற்றுநோக்கியபடி,அதைவிட்டுப்பிரிவதற்கு மனதில்லாதவளாக, அங்கேயே நின்றிருந்தாள்; பரலோக புன்முறுவலுடன்,அந்த படத்தில்காட்சியளித்த தேவமாதாவைக் கண்ட ஈடித், பரவசமாகி, அழுதுகொண்டிருந்தாள்.

இறந்தவருடைய உறவினர் அங்கு வரத் துவக்கியதும், வாலிபன், ஈடித்தைத் தொட் டான்; உடனே, சுயநினைவைப் பெற்றவளாக, ஈடித், அங்கிருந்து,வாலிபனுடன்,வெளியே வந்து, அந்த தேவமாதாவின் படம், என்னை முழுவதுமாக வசீகரித்து விட்டது; தாயாரை ஞாபகப்படுத்தியது, என்று கூறினாள். அவன், அது, உன் முகம் போலவுமிருக் கிறது, என்றான். அவன், நீ கத்தோலிக்க மதத்தினளா? நீயும் என்னைப்போல் எந்த மதத்தை யும் அனுசரிக்காதவள் என்று நினைத்தேன், என்று கூறினான். அதற்கு,அவள்,நான் கத்தோலிக்க

மதத்தினள் தான்.இனி, என் வேத விசுவாசத்தை வெளிப்படையாக அனுசரிப்பேன். இன்று ஒரு குரல் என் இருதயத்தில் பேசியது.தேவாலயத்தைக் கடந்து செல்கையில், அக் குரலைக் கேட்டேன். உங்களுக்கு, எந்த வேதத்திலும் பற்று கிடையாதா? என்று அவனிடம் கேட்டாள்;அதற்கு அவன்,கடவுள் இருப்பதை ஏற்கிறேன். ஆனால், நான் எந்த மதத்தையும்

வன், என்றான். இதைக் கேட்ட ஈடித், அவனிடம், நான் ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. பூங்காவிற்கு நான் வரவில்லை, என்று கூறிவிட்டு, தேவாலயத்திற்கு மீண்டும் திரும்பிச் சென்றாள். அவனும், அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

தேவாலயத்திற்குள் சென்று, பீடத்தினடியில் முழங்காலிலிருந்து, வெகு நேரம் ஜெபித்தாள். உள்ளே, குருவானவரும் ஜெபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு,வெளியே வந்து, நல்ல ஆலோசனை மாதாவின் படத்திற்கு முன், பக்திபற்றுதலுடன் நின்றுகொண்டிருந்த ஈடித்திடம்,குரு, மகளே! 20 வருடங்களுக்கு முன், எனக்கு அறிமுக மான ஒரு பெண்ணை , நீ நினைவூட்டுகிறாய். அவள் பெயர், பட்டர் பீல்ட். இராணுவத்தின் உத்தியோகதஸ்தர் ஒருவரை திருமணம் செய்தாள்; ஷீலோ போரில் அவர் இறந்தார், என் றார். சுவாமி! அது என் தாய். கத்தோலிக்கரான என் தாயாரை அறிந்த குருவானவரை, சந் திப்பது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு காலம் நீங்கள் எங்கிருந்தீர் கள்? என்று ஈடித், அவரிடம் கேட்டாள். அவர்,சீனாவிலிருந்தேன், என்றார். அவள், குருவி டம், சுவாமி! இந்தப் படத்தின் பெயர் என்ன? என்று கேட்டாள். அவர், இது, நல்ல ஆலோ சனை மாதாவின் படம். இன்று ஏப்ரல், 26ம் தேதி. நல்ல ஆலோசனைமாதாவின் திருநாளும் இன்று தான், என்று கூறி விட்டு, நல்ல ஆலோசனை படத்தின் வரலாற்றையும் விவரித்தார்.

ஈடித், குருவிடம், சுவாமி! இன்று நான் பிறந்த நாள்.எல்லாவற்றையும், ஆண்டவரே ஒழுங்குபடுத்தி வருகிறார். மோட்சத்தில் இருக்கும் என் அம்மா, எனக்காக வேண்டிக் கொண்டு, இந்த பாக்கியமான நாளில் நான் மனந்திரும்பும்படிச் செய்திருக்கிறார்கள்.நீங்கள் நிறைவேற்றிய திவ்விய பூசையின் போது, இறந்தவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக, பூசை கண்டேன். அவரும் எனக்காக வேண்டியிருக்கிறார். இவ்வற்புதமான நல்லஆலோசனை மாதா வின் படத்தைப்பார்த்தேன்.உடனே,தேவமாதா, நான், என் பழைய பாவ வாழ்விற்காக மனஸ்தாபப்படுவதற்கான வரத்தை எனக்களித்தார்கள், என்று கூறினாள். நல்ல பாவ சங் கீர்த்தனம் செய்தாள்; ஈடித், கத்தோலிக்கர் ஒருவரை திருமணம் செய்தாள்;பல குழந்தைக ளின் தாயாக, உத்தம கத்தோலிக்கக் குடும்பத்தை,நடத்தினாள்.வீட்டின் முக்கிய அறையின் சுவரின் மையப் பகுதியில் சேசுவின் திருஇருதயப்படமும், நல்ல ஆலோசனை மாதாப் பட மும் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன; தினமும் பக்தியுடன் குடும்ப ஜெபமாலை ஜெபிக்கின்றனர். ஏற்கனவே தன் சம்பாவனையைப் பெறும்படியாக மோட்சம் சென்றுவிட்ட,குருவானவரின் படமும் வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்தது. தன் புராட்டஸ்டன்டு உறவினர்கள் மன ந்திரும்பி, கத்தோலிக்கராகும்படி, ஈடித், ஜெபித்து வருகிறாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக