Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

அர்ச். பிலோமினா நவநாள் ஜெபம்

 அர்ச். பிலோமினா நவநாள் ஜெபம்

பிதா, சுதன்  மற்றும் இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே. ஆமென்.


மிகவும் பிரியமுள்ள அர்ச். பிலோமினாம்மாளே, நீங்கள் சர்வேசுரனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் உங்கள் ஜெபங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இங்குள்ள விசுவாசிகள் அனைவருக்கும் உங்களது குழந்தைக்கு உள்ள விசுவாசம் மற்றும் பக்தி முயற்சிகள் அனைத்தும் எங்களுக்கு ஒரு தூண்டுதல். உங்கள் பரிந்துபேசலின் விளைவாக பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. நீங்கள் சர்வேசுரனுக்கு அருகாமையில் இருப்பதால், எங்களுக்காக நாங்கள் கேட்கும் மன்றாட்டுகளை அவரிடத்தில் பெற்று தாரும்....

(உங்கள் மன்றாட்டு)

அர்ச். பிலோமினாம்மாளே, இவ்வளவு இளம் வயதில், நீங்கள் சர்வேசுரனுடைய ராஜ்யத்திற்காக  எல்லாவற்றையும் கொடுத்தீர்கள். இன்னும் அதிகமாகக் நீர் சேசுநாதருக்கு ஒப்புக்கொடுத்த கன்னிமையை காப்பதற்க்காக உமது உயிரையும் விட துணிந்து, வேதசாட்சி மரணம் அடைந்தீர்.  அதே நம்பிக்கையும், கடவுளுடைய சித்தத்தை ஏற்றுக் கொள்ளும் விருப்பமும் எங்களுக்கு இருக்க வேண்டும் என்று எங்களுக்காக மன்றாடும்.


பிதா, சுதன்  மற்றும் இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே. ஆமென்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக