Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

தேவமாதா வணக்க மாதத்திற்கான தியானம்

தேவமாதாவின் மகிமைகள் - அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்

ஞானஉபதேசம் கற்பிக்கப்பட்டகிறீஸ்துவன் என்ற தமது நூலில், பின் வரும் உண் மை நிகழ்வை , சங்.பால் செக்னரி என்ற குருவானவர், எழுதினார்: அநேக பாவகரமான தீயபழக்கவழக்கங்களுடைய ஒரு இளைஞன், உரோமாபுரியில் வாழ்ந்த சங்.நிக்கோலாஸ் சூச்சி என்ற குருவானவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்வதற்கு வந்தான். அவனை, குருவானவர், அன்புடன் வரவேற்றார்;அவனுடைய நிர்ப்பாக்கிய அந்தஸ்தைக் குறித்து, வாலிபன் மீது இரங்கி, அவனிடம், நண்பனே! தேவமாதாவின் மீது, நீ பக்தி கொள்ள வேண்டும். தேவமாதா பக்தியின் வழியாக மட்டுமே,அருவருப்புக்குரிய அத்தீயப் பாவப் பழக்கத்திற்கு அடிமையாயிருக்கும் நீ, உன்னையே, அத்தீமையினின்று, விடுவித் துக் கொள்ள முடியும். ஆதலால், உன் பாவங்களுக்குப் பரிகாரமாக, நீ ஒவ்வொருநாளும் படுக்கையிலிருந்து எழும்போதும், இரவில் படுக்கப்போவதற்குமுன்பும்,தேவ மாதாவிற்குத் தோத்திரமாக, ஒரு அருள் நிறை மந்திரத்தை பக்தியுடன் ஜெபிக்கவேண்டும். இதை, நீ அடுத்த பாவசங்கீர்த்தனம் வரை கட்டாயமாகக்கடைப்பிடிக்க வேண்டும்; அதே சமயம்,நீ உன் கண்களையும்,கைகளையும், உன்சரீரம் முழுவதையும், தேவமாதாவிற்குச் சொந்த உடை மையாகக் கையளித்து, அவற்றை ஏற்றுக் கொண்டு, பரிசுத்தமாகப் பாதுகாக்க வேண்டு மென்று, தேவமாதாவிடம், நீ கெஞ்சி மன்றாட வேண்டும். அதன் அடையாளமாக, நீ சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து, மூன்று முறை தரையை முத்தமிட வேண்டும், என்று,

லிபன் கட்டிக் கொண்ட பாவங்களுக்கான அபராதத்தை, நிறைவேற்றுவதற்கான விவ ரத்தை, குருவானவர், அவனுக்கு அறிவித்தார்.

வாலிபனும், குருவானவர் விதித்த அபராதத்தை, தினந்தோறும் தவறாமல், நிறை வேற்றி அனுசரித்து வந்தான். துவக்கத்தில், அவனுடைய நடத்தையில் சிறிதளவான மாற்ற மே காணப்பட்டது. ஆனால், குருவானவர், வாலிபன் அடுத்தடுத்து செய்த பாவசங்கீர்த்தனங் களுக்கும் அதே அபராதத்தையே,அனுசரிக்கும்படி அறிவுறுத்தினார்;அந்த நல்ல பழக்கத்தை, அவன் தன் ஜீவிய காலத்தில் ஒரு போதும், கைவிடக்கூடாது, என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவன்,எப்போதும்,தேவமாதாவின் அடைக்கலப்பாதுகாவலில்,முழு நம்பிக்கையு டன் தன்னை ஒப்படைத்து, ஜீவிக்க வேண்டும்; அதை ஒரு போதும் மறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். சில மாதங்களுக்குப் பிறகு, அந்த வாலிபன், சக நண்பர்கள் சி உரோமாபுரியை விட்டு வெளியேறி, உலகத்தின் பல நாடுகளுக்குப் பிரயாணம் சென்றான்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, அவன் உரோமாபுரிக்குத் திரும்பி வந்தான். மறுபடியும், சங்.நிக்கோலாஸ் சுவாமியாரைச் சந்தித்தான். அவன் முற்றிலும், நல்லவனாக மாறியிருப்ப தைக் கண்ட குருவானவர், மிகுந்த சந்தோஷமடைந்தார். அவன் முந்தைய சகல பாவப் பழக்கங்களிலிருந்தும் முழுவதுமாக விடுவிக்கப்பட்டிருப்பதைக் குறித்து, குருவானவர் அகமகிழ்ந்தார். அவர், அவனிடம், மகனே! நீ,சர்வேசுரனிடமிருந்து, எவ்வாறு, ஆச்சரியத்திற் குரிய, இந்த முழுமையான மனந்திரும்புதலை, அடைந்து கொண்டாய்? என்று கேட்டார். அதற்கு, அவன், சுவாமி! தேவமாதாவிற்குத் தோத்திரமாக அனுசரிக்க வேண்டும் என்று, நீங்கள், எனக்குக் கற்பித்த அந்த சிறிய பக்தி முயற்சியை நான் தொடர்ந்து அனுசரித்து வந்தேன். அந்த பக்தி முயற்சிக்குக் கைம்மாறாக, திவ்ய இராக்கினி,எனக்கு, இந்த தேவவரப் பிரசாதத்தைப்பெற்றுத் தந்தார்கள், என்று பதில் கூறினான். இச்சம்பவத்தில் நிகழ்ந்த அதிச யம் இத்துடன் முடியவில்லை.

குருவானவர், இந்நிகழ்வைப் பற்றி ஒரு நாள் தமது பிரசங்கத்தில் அறிவித்தார். அதைக் கேட்ட ஒரு இராணுவத் தளபதி, தானும் அந்த வழி முறையைப் பின் பற்ற ஆசித் தான். ஏனெனில், அவனும் ஒரு பாவப் பழக்கத்திற்கு அடிமைப் பட்டிருந்தான்: அநேக வருடங்களாக, ஒரு பெண்ணிடம், அவன், தகாத உறவு வைத்திருந்தான். பசாசிற்கு அடி மையாக, கட்டப்பட்டிருக்கும் அந்த கொடூரமான சங்கிலிகளான பாவப்பழக்கத்திலிருந்து, தானும் விடுவிக்கப்படும்படியாக, தேவமாதா பக்தியை அனுசரிக்கத்தீர்மானித்தான்.பாவப்

பழக்கத்திற்கு அடிமைகளான நிர்ப்பாக்கிய பாவிகள் எல்லோரும், பசாசின் அடிமைத்தனத் திலிருந்து விடுதலையடைய வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அந்த நோக்கத்துடன், தேவமாதாவின் அடைக்கலப் பாதுகாப்பிற்குள் தங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது, தேவமாதா அவர்களை, பசாசின் அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார்கள்; அப்போது, அவர்கள் புண்ணிய நெறியில் ஜீவிப்பதற்கு ஏற்ற வகையில், தேவமாதா, அவர்களுக்கு உதவ முடியும். அதேபோல், அந்த இராணுவத்தளபதி, தேவமாதா பக்தியை அனுசரிக்கத் துவக்கியதும், அந்த தீயப் பாவப்பழக்கத்தை முற்றிலுமாக, கைவிட் டான்; அவனுடைய வாழ்க்கையும், தீய வழியிலிருந்து மாறி,புண்ணிய பாதையை வந்த டைந்தது.

ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவன் தன் பலத்தையே நம்பியவனாக, முட் டாள் தனமாக, அந்த கெட்டப் பெண்ணைக் காண்பதற்காக, அவளுடைய வீட்டிற்குச் சென்றான்; பாசவிகாரத்தினால், தன்னை, அந்நாள் வரைத் தீயபழக்கத்திற்கு, அடிமைப் படுத் தியிருந்த அவளும் மனந்திரும்பியிருப்பாளோ, என்பதை அறிவதற்காக, அவன், அவள் வீட்டிற்குச் சென்றான். ஆனால், அவன், மறுபடியும் அதே பாவப் பழக்கத்திற்கு அடிமையாக விழுந்து விடும் ஆபத்து வெளிப்படையாகவேக் காணப்பட, அவளுடைய வீட்டின் கதவி னருகில் வந்ததும், மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஓர் வல்லமை மிக்க கரத்தினால் உந்தி வெளியேத் தள்ளப்பட்டான்; அவன் எவ்வளவு தூரத்திற்குத் தள்ளப்பட்டானென்றால், அவன் அந்த பெண்ணின் வீட்டிலிருந்து, அந்த தெருவைத் தாண்டி,தன்னுடைய வீட்டின் கதவினருகே வருமளவிற்கு உந்தித் தள்ளப்பட்டான். இப்போது, அவன் தன் வீட்டின் கத வினருகே நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். உடனே, தேவமாதாவின் கிருபையால், தான், இவ்வாறு, நித்திய நரகக் கேட்டிலிருந்து, தான் காப்பாற்றப்பட்டிருப்பதைப் பற்றி, அறிந்துகொண்டான். இந்நிகழ்விலிருந்து, பரலோக இராக்கினி, எவ்வாறு நமக்கும் தயை நிறைந்த தாயாராக திகழ்கின்றார்கள் என்பதை அறியலாம்; பசாசின் அடிமைத்தனத்திலி ருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நம்மை, திவ்ய இராக்கினியி டம் ஒப்புக்கொடுப்போமேயாகில், நம்மேல் கருணையும், அக்கறையுமுள்ள அந்த திவ்ய தாயார், நம்மைப் பாவ அந்தஸ்திலிருந்து மீட்பது மட்டுமல்லாமல், மறுபடியும், அதேப் பாவப் பழக்கத்தில் விழக்கூடிய ஆபத்திலிருந்தும் நம்மை விடுவித்துப் பாதுகாப்பார்கள் என்பதை நாம் கண்டுணரலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக