Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

தேவமாதாவின் வணக்க மாதம்:

சகோதரர்கள் சமாதானமடைந்த புதுமை

பல வருடங்களுக்கு முன், ஒரு மேற்கத்திய நாட்டில், ஜோசப், அந்தோனி என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள்; சிறுவயதிலேயே, அவர்கள், பெற்றோரை இழந்த னர். இருவரும், ஒன்றாக உழைத்தார்கள்; ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். ஒன்றாக ஜெபித் தார்கள்; வெகு சிரமத்துடன் கல்வி கற்று, முன்னேறுவதற்கான சகல முயற்சிகளும் எடுத்த னர். இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. நாளடைவில், ஜோசப், அந்த ஊரிலேயே, பெரிய பணக்காரன் ஆனான். அந்தோனியின் குடும்பம், ஏழ்மையில் வாடியது. எளிய உடை களை, உடுத்தியிருப்பான். ஜோசப், தன் தம்பியோடு உறவாடாமல், அவனிடமிருந்து விலகி வாழத் துவக்கினான். அந்தோனியும், அண்ணனிடமிருந்து, எந்த பொருளாதார உதவியை யும் எதிர்பார்க்காமல், சொந்த உழைப்பையே நம்பினான்.

ஒரு சமயம், அந்தோனி மீது,அநியாயமாக பழிசுமத்தப்பட்டது; ஆயுள் தண்டனை பெற்று, சிறைக்குச் சென்றான். சர்வேசுரனுக்கு உண்மை தெரியும்; அவரே, என்னை விடு விப்பார், என்று கூறினான். சிறை வாழ்வு மிகக் கடுமையாக இருந்தது; யாரும், அவன் மீது அனுதாபப்படவில்லை; அந்தோனியின் மனைவி,தேவமாதாவை நோக்கி, இடைவிடாமல், உருக்கமாக கணவனின் விடுதலைக்காகத் தொடர்ந்து ஜெபித்து வந்தாள். தேவமாதா, அவ ளின் மன்றாட்டிற்குச் செவி சாய்த்தார்கள்; சர்வேசுரனுடைய இரக்கத்தினால், உண்மையான குற்றவாளி, கண்டு பிடிக்கப்பட்டான்; அந்தோனிக்கு விடுதலை கிடைத்தது. ஐந்து ஆண்டு கள், சிறையில் மிகவும் துன்பங்களுக்கு ஆளாயிருந்தான்.

செல்வந்தனான ஜோசப், தன் தம்பியை, முழு மூச்சோடு வெறுத்துப் பகைத்து வந் தான். அவன் மகன் தாமஸ், தன் சித்தப்பா வீட்டிற்குச் சென்று, சித்தப்பா மகன் விக்டரு டன் தினமும், ஒன்றிரண்டு மணி நேரம் விளையாடிவிட்டு வருவான். அன்று, டிசம்பர் 31ம் தேதி. ஜோசப் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்; அப்போது, தன் தம்பியின் மகன் விக்டர், ஒரு அழகியப்பட்டுச் சட்டை அணிந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.தன் மகன் தாமசுக்கென்று தைத்துக் கொடுத்திருந்த சட்டை அது.அதைக் கண்டதும் சினத்து டன் வீட்டிற்குள் சென்று, தாயுடன் அமர்ந்து, தேநீர் அருந்திக் கொண்டிருந்த தாமசை, முரட்டுத்தனமாக இழுத்து, அடிக்கத் துவக்கினான்.மகனை அடிக்க வேண்டாம் என்று,மனைவி கெஞ்சினாள்; அடிப்பதை நிறுத்தாமலிருந்த தந்தையின் பிடியிலிருந்து, மகனைப் பிடுங்கிக் கொண்டு சென்று, அரவணைத்துக் கொண்டாள். உடனே, ஜோசப், மனைவியைப் பார்த்து, இவனைக் கெடுத்தவள் நீதான். அந்த போக்கிரி, அந்தோனியின் மகன் விக்டருடன் இவன் அலைந்து திரிகிறான். நான் கொடுத்த பட்டுச் சட்டையை அந்த அசுத்தப் பையனுக்குக் கொடுத்திருக்கிறான், என்று கர்ஜித்தான். இதற்குத் தானா, நீங்கள் இவ்வளவு கோபப் படுகி றீர்கள்? தன் தம்பியுடன் விளையாடுவதில் என்ன குற்றம் உள்ளது? அந்தோனி, உங்கள் தம்பி தானே? நாம் மாளிகையில் வாழ்கிறோம். அவரோ, தரித்திரத்தில், ஒரு குடிசையில் இருக்கிறார். ஓ! ஆண்டவரே! அண்ணன் தம்பி இவர்கள் இருவருக்கிடையே இருக்கும்

பகை எப்போது தான் முடியுமோ? என்று புலம்பியபடி, அவன் மனைவி, அங்கிருந்து உணவு தயாரிக்கச் சென்றாள். ஜோசப்பின் மனைவி, அந்தோனியையும், அவன்குடும்பத்தையும் நேசித்தாள்; இரக சியமாக, அவன் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தாள். மேலும், தேவமாதாவிடம், அண் ணன், தம்பி இருவரிடையே சமாதானம் ஏற்படும்படி தினமும், பக்தியுடன் ஜெபித்து வந் தாள்; குடும்ப ஜெபமாலையை,ஜெபிக்கும் போதெல்லாம், இக்கருத்திற்காக அவள் மோட்ச இராக்கினியிடம் மன்றாடிவந்தாள்.தாமசிடமும், சித்தப்பா குடும்பத்துடன் சமாதானம் ஏற் படுவதற்காக, தேவமாதாவிடம் தினமும் மறக்காமல் ஜெபித்து வேண்டிக்கொள்ள வேண்டு மென்று கூறுவாள்; தம்பி விக்டருடன் விளையாடியதை, பெரிய குற்றமாகக்கருதிய தந்தை, தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதை எண்ணி வருந்திய தாமஸ், உடனே, தேவ மாதா சுரூபத்தின் முன்பாக முழங்காலிலிருந்து சித்தப்பா குடும்பத்துடன் சமாதானம் ஏற் படுவதற்காக பக்தியுடன் ஜெபித்தான். தேவமாதா சுரூபத்தின் முன்பாக, மகன் தாமஸ் ஜெபிப்பதைக் கண்ட ஜோசப், தனிமையில் சிந்திக்கத் துவக்கினான். அப்போது, அவனுக்கு,பழைய கால நினைவுகள் ஒவ் வொன்றாக வரத்துவக்கின. அண்ணன் தம்பி,இருவரும், ஒற்றுமையுடன், தேவமாதா சுரூ பத்திற்கு முன்பாக, பக்தியுடன் ஜெபமாலை ஜெபித்த அந்த இனிய நாட்கள் அவன் கண் முன்பாக, பசுமையாகத் தோன்றின. தாமசிடம், தேவமாதாவிடம் நீ என்ன வேண்டிக் கொண்டாய்? என்று கேட்டான். அதற்கு,அவன், பயந்துகொண்டே, அப்பா! நீங்கள், சித் தப்பாவுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். அதற்காக தேவமாதாவிடம்வேண்டி னேன், என்று பதிலளித்தான்.அதைக் கேட்டதும், கல்நெஞ்சனும், ஆங்காரியுமான ஜோசப் பின் இருதயத்தில் நடந்த சகோதர பாசத்திற்கு எதிரான போராட்டத்தில், சகோதர பாச மே வென்றது.பயந்தபடி நின்றிருந்த தாமசை, அரவணைத்தபடி, என் கண்மணியே!விக்டர், உன் தம்பியே! நீ இனி அவனுடன் விளையாடலாம். வா, நாம் அவனைப் பார்க்கச் செல் வோம், என்று கூறிய படி,ஜோசப், மகனுடன், தம்பி அந்தோனியின் வீட்டிற்குச் சென்றான். 6 வருடங்களுக்குப்பிறகு, தன் தம்பியைச் சந்தித்த ஜோசப், அவனை, அரவணைத்தான்; அவனிடம் மன்னிப்பு கேட்டான். அன்று மாலை, தேவமாதாவிற்கு நன்றியறிந்த தோத்திர தம்பி இருவரும், குடும்பத்தினருடன் சேர்ந்து, பக்தியுடன் ஜெபமாலை ஜெபித்தனர். ஜோசப், மனைவியிடம், எஸ்தர்! ஜெபமாலை, ஜெபிக்கும் போது, நானும் தம்பியும் சேர்ந்து ஜெபமாலை ஜெபித்த அந்த பாக்கியமான நாட்களை நினைத்துக் கண்ணீர் விட்டேன். அந்த இனிமையான காலம் இனி திரும்பி வராது, என்றான். அதற்கு, எஸ்தர், தேவமாதாவின் சுரூபத்தை பக்தி மேரையுடன் முத்தி செய்தபடி, நம் இரு குடும்பங்களி மாதானம் ஏற்படுவதற்காக, தேவதாயாரிடம், 2 வருடகாலமாக ஜெபித்து வந்திருக்கி றேன். தேவமாதா, உண்மையிலேயே சமாதானத்தின் இராக்கினியாக இருக்கிறார்கள்.நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும், என்று கூறினாள். அடுத்த நாள், ஜனவரி 1ம் தேதி, ஜோசப் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தான். அண் ணனும் தம்பியும் குடும்பத்தினருடன், பக்தியுடன் திவ்வியபலி பூசை கண்டனர். 1 Deo Gratias !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக