Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 7 செப்டம்பர், 2013

கார்மேல் - உத்தரியமாதா

பரிசுத்த பூமியாம் பாலஸ்தீன நாட்டின் மேற்கு திசையில் மத்தியதரைக்கடலுக்கு அருகாமையில் ஒரு உயர்ந்த மலை இருக்கிறது. இதற்கு கார்மேல் மலை என்றுப் பெயர். கடற்கரையோரத்தில் இருக்கும் இம்மலையைப் பற்றி விவிலியத்தில் அருமையான வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

அதன் அழகிய சிகரம் எபிரேய மொழியில் " தோட்டம் " அல்லது " நடப்பட்ட திராட்சை தோட்டம் " உள்ற சிறப்பு பெயர் பெற்றிருக்கின்றது.இந்த மலையில் எலியாஸ் இறைவாக்கினரும் அவருக்குபின் எலிசேயுஸ் என்பவரும் தங்கி செப,தபங்களால் பல அரிய வல்ல செயல்கள் செய்து வந்தனர். இவர்கள் கார்மேல் மலை சன்னியாசி என்ற அழைக்கப்பட்டனர்.
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் என்னும் கார்மேல் மாதா சபையைச் சார்ந்த ஒரு மடம் இருந்தது. இச்சபையின் தலைவர் அர்ச்  சைமன்ஸ்டாக் என்பவர் 1251ஆம் ஆண்டு ஜீலை மாதம் 16 ஆம் நாள் தேவஅன்னையின் அடைக்கலத்தை நாடி பக்தியாக செபித்துக் கொணடிருந்தார். அச்சமயத்தில் அன்னை மரியா தமது கரத்தில் ஒரு உத்தரியத்தை ஏந்திவளாய் அவர்க்கு காட்சி தந்தார்.

அவரைப் பார்த்து 'என் பிரிய மகனே, இதோ இந்த உத்தரியத்தை என் விருதாக (வெற்றிச்சின்னமாக) ஏற்றுக் கொள். இதை அணிந்துக் கொண்டு மரிக்கின்றவன் நித்திய நரக ஆக்கினையின்று தப்பித்துக் கொள்வான். இது காக்கிறவரின் அட்டையாளமாகவும், ஆபத்த சமயத்தில் கேடயமாகவும், என்னுடைய உதவியின் ஆரம்பமாகவும் இருக்கிறது. " என்று சொன்னார்கள்.

1301 ஆண்டு உத்தரியமாதா 22ஆம் அருளப்பர் என்ற திருதந்தைக்கு தரிசனமாகி உத்தரியசபைமார் மரித்து உத்தரிக்கிறஸ்தலத்திற்குப் போயிருந்தால் கூடிய விரைவில் நான் அவர்களை மீட்டுக் கொள்வோன். என்றார். மேலும் மரணத்திற்கு பிறகு வரும் முதல் சனிக்கிழமைகளில் அவர்கள் அவ்விடத்திலிருந்து விடுதலை ஆவார்கள்என மொழிந்தர்ர்கள்.

கார்மேல் மாதாவுடைய பேருதவியை கார்மேல் சபையினர்க்கு மட்டுமல்ல, அவரது உத்தரியத்தை அணியும் அனைவரும் பலன் அடைவார்கள். உத்தரியத்திற்கு பதிலாக உத்தரிய சுருபத்தை அணியலாம். இந்த பக்தியானது மோட்ச இராக்கினியின் ஞானபிள்ளைகளாக வாழ்வதற்கு உதவிபுரியும்.

அர்ச்  கன்னிமரியாளைப் பின்பற்றி அவரைப் போல் பரிசுத்தமாய் வாழ்ந்து அவர்களுக்கு சொந்தமானவர் என்று வெளிப்படையாக வாழ்ந்து காட்டுவது பெரும் பாக்கியமாகும்.

பரிசுத்த உத்தரியத்தை நாமும் அணிந்து தீயோனிடமிருந்து நம்மை காப்போம். எல்லா நேரங்களிலும் உத்தரியமாதா நம்மை காத்திடுவாள் என்பது திண்ணம்.

உத்தரியமாதாவே! எங்களுக்காக உமது திருகுமாரனிடம்  பரிந்து பேசுவீராக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக