Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

செபமலை முக்கியத்துவம்

செபமலை முக்கியத்துவம் 


     செபமாலை ஒரு பெரிய இரகசியமாய் இருக்கிறது. அதை தினமும் சொல்லுகிற அநேகர் கூட அந்த இரகசியத்தை அறியாதிருகிறார்கள்.  அர்ச் லூயிஸ் மரிய மோன்போர்ட்  "செபமாலையின் இரகசியம்" என்ற ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார். அர்ச். சாமி நாதர் காலம் தொட்டே மாதா, ஜெபமலையின் அறிய தன்மையை எடுத்து கூறிவந்திருக்கிறார்.
பாத்திமா மத, லூர்து மாதா, பொம்பெய்  மாதா ஆகிய காட்சிகளில் எல்லாம் மாதா ஜெபமலையுடன் காணப்படுகிறார். தன் பெயரையே ஜெபமாலை மாதா என்று அறிவித்து இருக்கிறார். முன்பு இல்லாத வலிமையை இப்போது ஜெபமாலைக்கு அளிப்பதாக லூசியா வழியாக கூறியிருக்கிறார். 
"ஜெபமாலையால் தீர்க்கப்படாத உலக பிரச்சனைகள் எதுவும் இல்லை.  என்று சகோதரி லூசியா கூறுகிறாள். நமக்கு மோட்சத்தை வாக்களிக்கிற முதல் சனி பரிகார பக்தி ஒரு முக்கிய அம்சமாக மாதா ஜெபமாலையை வைத்து இருக்கிறர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக