Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 8-ம் தேதி*


*St. John of Matha, C.*
*அர்ச். மாத்தா அருளப்பர்*
*துதியர் - (கி.பி. 1213)*


ஒரு பிரபுவின் மகனான இவர், சிறு வயதில் அன்னிய தேசங்களில் படிக்கும்போதும்கூட ஏழைகள் மீது எவ்வளவு அன்பு செலுத்தினாரெனில், தமக்கு அனுப்பப்பட்ட பணத்தை எளியவர்களுக்கு பகிர்ந்துக் கொடுத்தார்.  பிறருக்கு நன்மை செய்யும் பொருட்டு அருளப்பர் தமது மகிமையையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு குருப்பட்டம் பெற்றார். இவர் முதல் பலிபூசை நிறைவேற்றும்போது, வெள்ளை உடை அணிந்து, சிகப்பும், நீல வர்ணத்திலுமான சிலுவையை மார்பில் தரித்த வண்ணமாக ஒரு சம்மனசு கிறீஸ்தவனான ஒரு அடிமையின் தலைமேல் தமது கையை வைத்த பிரகாரம் அருளப்பருக்குத் தோன்றினார். இதன் அர்த்தத்தை அறிந்துகொள்ள அருகாமையிலிருந்த பெலிக்ஸ் என்னும் வனவாசியிடம் சென்று, தாம் கண்ட தரிசனத்தை அவருக்கு அறிவித்தார். இதைக் கேட்ட வனவாசி, இது அடிமைகளை மீட்பதைப்பற்றிய காட்சியென்று அவருக்கு அறிவித்தார். பின்பு இருவரும் உரோமைக்குப் போய், அடிமைகளை மீட்பதற்கான சபையை ஸ்தாபிக்க பரிசுத்த பாப்பரசரிடம் உத்தரவு கேட்டார்கள். அவருடைய அனுமதியுடன், தமதிரித்துவத்தின் சபையை ஸ்தாபித்து, அருளப்பர் அதற்கு முதல் அதிசிரேஷ்டரானார். இந்த சபையில் சேர்ந்தவர்கள் அரிதான புண்ணியங்களையும் தவங்களையும் புரிந்து, தர்மம் எடுத்து அடிமைகளை மீட்டார்கள். அருளப்பர் ஒரு நாள் 120 அடிமைகளை மீட்டு, கப்பலில் பயணம் செய்கையில், முகமதியர் அந்த கப்பலின் சுக்கானையும் பாயையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள். அருளப்பர் தமது மேல்போர்வையைக் கப்பலுக்குப் பாயாக விரித்து, தமது பாடுபட்ட சுரூபத்தைக் கையில் பிடித்து விசுவாசத்துடன், வேண்டிக்கொண்டார். கப்பல் ஆபத்தின்றி துறைமுகம் போய் சேரவே, சகலரும் காப்பாற்றப்பட்டார்கள். இந்தச் சபை சீக்கிரத்தில் சகல தேசங்களிலும் பரவியது. அருளப்பர் பல இடையூறுகளால் துன்பப்பட்டு, தமது சபைக்காக உழைத்தபின் பாக்கியமான மரணமடைந்தார்.


*யோசனை*


அவசர நேரத்தில் நாமும் நமது அயலாருக்கு உதவி செய்வோமாக.

Download Tamil Catholic Songs



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக