Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 1 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 1-ம் தேதி*



*St. Ignatius, M.*
*அர்ச். இஞ்ஞாசியார்* 
*வேதசாட்சி - (கி.பி. 107)*

இவர் அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று, அவருக்கு சீஷனாகி, அந்தியோக்கியா நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். சக்கரவர்த்தியான தொமீஷியன் காலத்தில் நடந்த பயங்கரமான வேத கலாபனையில், இவருடைய மறைமாவட்டக் கிறீஸ்தவர்கள், இவர் செய்த ஜெபதபத்தால் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் திராஜான் என்பவன் சக்கரவர்த்தியானபின், அந்தியோக்கியாவுக்குச் சென்று, கிறீஸ்தவர்களை வேதத்தின் நிமித்தம் உபாதிக்கையில், அவன் அர்ச். இஞ்ஞாசியாரைப் பார்த்து “நீ யார்? பேயனே” என்றதற்கு, “ஆண்டவரை என்னில் கொண்டிருக்கும் என்னைப் பேயன் என்று அழைக்க வேண்டாம்” என்றார். கிறீஸ்தவ வேதத்தை மறுதலித்து, பொய்த் தேவர்களை ஆராதியாததைக் கண்ட இவரை, இராயன் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடும்படி தீர்ப்பு கூறினான். அவ்வாறே, இவர் காவல் சேவகருடன் உரோமைக்குக் கொண்டுபோகும் வழியில் ஆங்காங்கு சிதறிப்போயிருந்த கிறீஸ்தவர்கள் இவருடைய புத்திமதிகளைக் கேட்கவும், இவருடைய ஆசீரைப் பெறவும் கூட்டங்கூட்டமாய் இவரிடம் வந்தார்கள். இவர் உரோமையை அடைந்து அரங்கத்தில் நிறுத்தப்படவே, “ஆண்டவருடைய கோதுமையாகிய நான், அவருக்கு உகந்த அப்பமாகச் சமர்ப்பிக்கப்பட சிங்கங்களின் பற்களால் அரைக்கப்படப் போகிறேன்” என்றார்.  உடனே அவர்மேல் விடப்பட்ட சிங்கங்கள், அவரைக் கடித்துக் குதறி விழுங்கின. அங்கு மீதமிருந்த அவருடைய சில எலும்புகளை விசுவாசிகள் பக்தியோடு எடுத்துச் சென்றனர்.

*யோசனை*

இவர் எழுதிய நிருபங்களில் திருச்சபைக்கும், கிறீஸ்தவர்களுக்கும் ஐக்கியம் இருக்க வேண்டுமென்று உணர்த்தியதுபோல், நாம் திருச்சபைக்கு உகந்த பிள்ளைகளாய் நடப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக