Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 26 பிப்ரவரி, 2020

பெப்ருவரி மாதம் 25-ம் தேதி

**

*St. Tarasius, Pat.*
*அர்ச். தாராசியுஸ்*
*பிதா - (கி.பி. 806)*

இவர் உத்தம குடும்பத்திலிருந்து பிறந்து, அந்நகரத்து நீதிபதியான  தன் தந்தையாலும், தன் தாயாராலும் புண்ணிய நெறியில் வளர்க்கப்பட்டார்.  துஷ்டர் சகவாசத்தை விட்டுவிட்டு நன்னெறியாளர்களின் கூட்டத்தை தேடும்படி இவர் தாய் இவருக்குப் புத்தி புகட்டுவாள். இவர் கல்வி கற்றபின் இவருடைய சாமர்த்தியத்தினாலும், திறமையினாலும் இராஜ அரண்மனையில் அநேக உத்தியோகங்களைப் புரிந்துவந்தார். பின்பு அரசனுக்குப் பிரதான மந்திரியாக               நியமிக்கப்பட்டு, வெகு கவனத்துடன் அவ்வேலையைச் செய்துவந்தார்.  கொன்ஸ்தாந்தினோபிளின் பிதாப்பிதாவின் ஸ்தானம் இவருக்குக் கொடுக்கப்பட்டபோது, திருச்சுரூபம், படம் முதலியவைகளை அழிக்கும் பதிதர் அந்நகரில் ஏராளமாயிருந்தனர். ஆயர்களின் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி, மேற்கூரிய பதிதர்களின் தப்பறையை விசாரித்தாலொழிய, அந்தப் பிதாப்பிதாப் பட்டத்தை அங்கீகரிப்பதில்லையென்று சொன்னார். இவருடைய மனதின்படி சகலமும் திருப்தியாய் நிறைவேறின பின்பு, தாராசியுஸ் பிதாப்பிதாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். இவர் அநேக ஆயர்களை சங்கமாகக் கூட்டி, திருச்சுரூபங்களை வணங்கக்கூடாது என்பது பதித படிப்பினையென்று தீர்ப்பிட்டு, இந்தத் தீர்ப்பை பாப்பானவருக்கு அனுப்பியபோது, அவரும் அதை அங்கீகரித்தார். தாராசியுஸ் தமது ஞான வேலையைப் பிரமாணிக்கத்துடன் புரிந்து தமது ஜெப தபத்தாலும் புண்ணியங்களாலும் கிறீஸ்தவர்களுக்கு ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். அத்தேசத்து அரசன் தன் மனைவியை நீக்கிவிட்டு வேறொருத்தியை மணமுடித்துக்கொள்ள இருப்பதை இவர் அறிந்து, அதற்கு மறுப்பு தெரிவித்ததினால் அரசனுடைய கோபத்திற்கு உள்ளானார். இருந்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் ஆண்டவருக்கு மாத்திரம் பிரியப்பட்டு நடந்தார். பதித அரசன் மறுபடியும் சுரூபங்களைத் தகர்க்கத் தலைபட்டபோது இவர் ஒரு சம்மனசுடன் பதித அரசனுக்குக் கனவில் தோன்றி பதித மதத்தை விடும்படி பயமுறுத்தியும், அதை அவன் விடாததினால் ஆறு நாட்களுக்குப்பின் தன் தேசத்தையும் உயிரையும் இழந்தான். அர்ச். தாராசியுஸ் ஆத்தும இரட்சண்யத்திற்காக அநேக வருடங்கள் உழைத்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார். 

*யோசனை*

நாமும் துஷ்டர் சகவாசத்தை விலக்கி நேர்மையுள்ளவர்களாக வாழ்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக