Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 6 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 3-ம் தேதி*



*St. Blaise, B.M.*
*அர்ச். பிளேய்ஸியார்*
*ஆயர், வேதசாட்சி -  (கி.பி. 316)* 
இவருடைய அரிதான புண்ணியங்களினிமித்தம் செபாஸ்த் என்னும் நகருக்கு ஆயரானார். அக்காலத்தில் உண்டான பயங்கரமான வேத கலாபனையின் காரணமாக, இவர் ஒரு மலைக்குகைக்குச் சென்று அவ்விடத்தில் ஜெபதபம் புரிந்துவந்தார். பல பிணிகளால் வருந்திய சிங்கம், புலி முதலிய காட்டு மிருகங்கள் அக்குகைக்குள் சென்று, இவரால் குணமடைந்து வந்தன. ஒரு நாள் அந்நாட்டு அதிபதியின் ஊழியர் அந்தக் காட்டில் வேட்டையாடுகையில், காட்டு மிருகங்கள் மேற்கூறிய குகையில் ஜெபம் செய்யும் பிளேய்ஸியாருக்காகக் காத்திருப்பதைக் கண்டு, அதைத் தங்கள் எஜமானுக்கு அறிவித்தார்கள். அதிகாரியின் உத்தரவுப்படி சேவகர் பிளேய்ஸியாரைப் பிடித்துக்கொண்டு வருகையில், இறந்துபோன ஒரு குழந்தையை உயிர்ப்பித்ததைக் கண்ட சேவகரில் சிலர் கிறீஸ்தவர்களானார்கள். வேதத்தை மறுதலித்துப் பொய் தேவர்களை வணங்கும்படி பிளேய்ஸியாருக்கு அதிகாரி கட்டளையிட்டான். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பிளேய்ஸியாரை அதிகாரி கொடூரமாய் அடித்து, சிறையிலடைத்தான்.  சிறையிலும் அநேக நோயாளிகள் அவரால் குணப்படுத்தப்பட்டார்கள். இவரது காயங்களிலிருந்து வடியும் இரத்தத்தை சில ஸ்திரீகள் பக்தியோடு தொட்டு தங்கள்மேல் பூசிக்கொண்டதினால், அதிபதி அவர்களை நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் நெருப்பு அவர்களைச் சுடாததினால் சிரச்சேதம் செய்வித்தான். பிளேய்ஸியாரை அதிபதியின் கட்டளைப்படி ஆழமான நீரில் அமிழ்த்தியும், இவர் இறக்காமல் இருந்ததினால், இவர் தலை வெட்டப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

*யோசனை*

நாம் பக்தியோடு ஜெபிப்பதுடன், பக்திமான்களைப் பழித்துப் பரிகாசம் செய்யாமலும் இருப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக