Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *எட்டாம் நாள்*



அர்ச். அந்தோனியாருடைய சிநேகிதர்

        அர்ச். அந்தோனியார் வெர்சேயில் பட்டணத்தில் தபசு காலத்தின்போது பிரசங்கம் செய்து வருகையில் அவ்விடம் வேத சாஸ்திரத்தில் தேர்ந்தவரும் புண்ணியத்தில் சிறந்தவருமான மடாதிபதி ஒருவர் இருந்தார். அவர் சாஸ்திரியான தோமாஸ் கால்லோ என்று அனேகர் என்னுகிறார்கள். அர்ச். அந்தோனியார் வேத காரியங்களையும் தேவ சிநேகத்தையும் பற்றி அந்த மடாதிபதியுடன் வெகுநேரம் சம்பாவித்து வருவார். இருவரும் சுவாமியைப் பற்றி ஒருவரொருவரை நேசித்து வந்தார்கள், அந்த மடாதிபதி அர்ச். அந்தோனியாருடைய கல்வித் திறமையையும், அவருடைய புண்ணியங்களையும் மெத்தவும் புகழ்ந்து பேசி அவர் உள்ளத்தில் தேவ சிநேகாக்கினியினால் பற்றி எரிந்து வெளியில் அந்தத் தேவ சிநேகாக்கிளனியின் கதிர்களை வீசினாரென்று எழுதி வைத்திருக்கிறார்.
இருவரும் பரலோகத்திலிருக்கும் ஒன்பது விலாச சபை சம்மனசு களைக் குறித்துப் பேசுவதில் பிரியங்கொள்ளுவார்கள், அந்தோனியார் அச்சமயத்தில் அவர்களைத் தம்முடைய கண்களால் பார்ப்பதுபோல ஒவ்வொரு சபை சம்மனசுகளுடைய அழகையும், திறமையையும், மற்றக் குணங்களையும் குறித்துப் பேசினதாக மடாதிபதி சொல்லியிருக்கிறார்.
அர்ச். அந்தோனியார் பலவிடங்கள் சென்று வேதத்தைப் பிரசங்கித்த பிறகு மரிக்கிறதுக்குக் கொஞ்ச காலத்துக்கு முந்தி திரும்பவும் வெர்சேயில் பட்டணம் வந்து தம்முடைய சிநேகிதரான மடாதிபதியைச் சந்தித்து அவரிடம் ' மறுவுலகத்தில் இருவரும் சந்திப்பதாகச் சொல்லி விடை பெற்றுப்போனார். ஆனால் அர்ச். அந்தோனியார் மரித்த சமயத்தில், தொண்டை நோயால் மிகவும் உபாதைப்பட்டுக் கொண்டிருந்த வெர்சேயில் மடத்து மடாதிபதி அர்ச். அந்தோனியார் மலர்ந்த முகத்தோடு தம்முடைய அறைக்குள்எாக வந்ததைக் கண்டார். மேலும் அந்தோனியார் அவரை நோக்கி: என்னுடைய கழுதையைப் பதுவா பட்டணத்தில் விட்டு விட்டேன். இப்போது என்னுடைய சொந்தத் தேசம் போகிறேன்' என்று சொல்லி, பிறகு நுனிவிரலால் மடாதிபதியினுடைய தொண்டையைத் தொட்டு அவரைச் செளக்கியப்படுத்தி மறைந்து போனார். மடாதிபதி அந்தோனியாரை மற்றவர்கள் யாராவது பார்த்தார்களோவென்று விசாரிக்க, இல்லையென்றறிந்து, அவர் தமக்குக் காட்சிதந்த தேதியும், நேரமுங் குறித்து வைத்து, கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதே தேதியிலும் நேரத்திலும் அந்தோனியார் பதுவா பட்டணத்தில் மரித்ததாகச் கேள்விப்பட்டார்,
நமது திவ்விய இரட்சகரான சேசுநாதசுவாமிக்குப் பிரிய சீடர் ஒருவர் இருந்தது போல், அர்ச். அந்தோனியாருக்கும் சந்நியாசிகளில் பிரிய சீடர் ஒருவர் இருந்தார், அவர், வேதம் போதிக்க எங்கும் போனபோது அவரோடு எப்போதும் சென்ற லுக் பெல்லூதி (Luc Beliudi) என்னும் சகோதரர்தான், இந்தச் சகோதரர் கடைசி காலம் வரைக்கும் அர்ச். அந்தோனியாரோடு இருந்து அவர் செய்து வந்த தபசு, புண்ணியங்கள், புதுமைகள் இவைகளுக்கெல்லாம் சாட்சி யாயிருந்ததுமல்லாமல் அர்ச். அந்தோனியார் சாகுந் தருவாயிலும் அவருடன் இருந்து அவர் அடக்கம் பண்ணப் பட்ட கல்லறையைக் காத்து வந்தார். அவ்விடத்தில் நடந்த ஆச்சரியமான புதுமைகளைக் கண்டு மகிழ்ந்தார். பதுவா பட்டணம் நிஷ்டூரனான எஸ்லினோ (Ezzelino) துரையினுடைய கையிலகப்பட்டு அக்கொடியன் அந்தப் பட்டணவாசிகளைப் பிடித்து அநேக உபாதைகள் படுத்திக் கொலை செய்து வந்ததைக் கண்ட சகோதரர் 1256-ம் வருஷம் ஒரு நாள் இராத்திரி பதுவா பட்டணத்தின் மட்டில் இரக்கம் வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்று அர்ச், அந்தோனியாரை மன்றாடினபோது, அவருடன் மடத்துச் சிரேஷ்டரான பார்த்தேலேமி கார்ராதினோ (Barthelemy carradino) என்பவரும் இருக்க, அவர்களிருவருக்கும் தெளிவாய்க் கேட்கப்பட்டதென்னவெனில் "சகோதரனே, துன்பத்துக்கு உன்னைத்தானே கையளிக்காதே, ஏனெனில் என்னுடைய திருநாளின்போது பதுவா பட்டணம் சத்துராதிகளின் கொடுமையினின்று மீட்கப்பட்டு, செழிப்பும் கீர்த்தியும் மகிமையும் அடையும்' என்று கேட்கப்பட்டது. லுக் பெவ்லூதி சகோதரர் மரித்து தனது உத்தம் சிநேகிதருடைய பக்கத்தில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறார். சர்வேசுரனைப்பற்றி அவரிடமாய், நாம் புறத்தியாரை நேசிக்கும் போது சர்வேசுரன் நம்முடைய நேசத்தை ஆசீர்வதித்து நமக்கும் நம்மால் நேசிக்கப்பட்டவர் களுக்கும் அநேகவித ஒத்தாசை செய்தருளுகிறார்.

செபம்
மகா நேசத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, சர்வேசுரனைப்பற்றிப் புறத்தியாரை நேசித்து அவர்களிருதயத் திலும் உமதிருதயத்தில் பற்றி எரிந்த தேவ. சிநேகம் விளங்கும்படி செய்தருளினீரே, நாங்களும் சர்வேசுரனைப் பற்றி மாத்திரம் எங்கள் புறத்தியாரையும் நேசிக்கும்படி கிருபை செய்தருளும். -ஆமென்.

நற்கிரியை - சர்வேசுரனைப் பற்றிப் பிறரை நேசிக்கிறது.

மளவல்லயச் செபம் - பிறர் சிநேகம் நிறைந்த அர்ச், அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.




திங்கள், 1 ஏப்ரல், 2019

அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *ஏழாம் நாள்*


ஏழாம் நாள்
அர்ச். அந்தோனியாருடைய பிரசங்கம்

        1222-ம் வருஷம் மார்ச்சு மாதத்தில் மோந்த்தே பாவோலோ மடத்துச் சந்நியாசிகளும் அந்தோனியாரும் வேறு சில பிரசங்கி சகோதரர் (Frores Pruheur} எனப்பட்டவர்களோடு போர்லி {Fort) பட்டணம் போக நேரிட்டது. அவ்விடத்து மேற்றிராணியாரால் சிலர் பட்டம் தரிக்கப்பட வேண்டியிருந்தது. பட்டம் கொடுக்கும் தினத்தில் மோந்த்தே பாவோலோ மடத்துச் சிரேஷ்டர் பிரசங்கம் செய்வதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த போதிலும் ஏதோ ஓர் காரணத்தை முன்னிட்டு தனக்குப் பதிலாய்ப் பிரசங்கம் செய்யும்படி பிரசங்கி சகோதரரைக் கேட்டுக் கொண்டார். என்ன காரணத்தாலோ அவர்களும் சம்மதிக்காதபோது சிரேஷ்டர் இஸ்பிரீத்து சாந்துவினால் ஏவப்பட்டு அர்ச், அந்தோனியார் அந்தப் பிரசங்கத்தை செய்யும்படிக்குக் கீழ்ப்படிதலின் பேரில் கட்டளையிட்டார்.  முதலில் அர்ச்சியசிஷ்டவர் அதிசயப்பட்டுக் கலக்கங் கொண்டாலும், கீழ்ப்படிய வேண்டி மேற்றிராணியாரின்  ஆசிர்வாதம் பெற்று பிரசங்க மேடை ஏறி "கிறிஸ்துவானவர் நமக்காக மரணமட்டும் கீழ்ப்படிந்தார்" என்னும் அப்போஸ் தலருடைய வாக்கியங்களைச் சொல்லிப் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தாழ்ச்சி நிறைந்த அந்தோனியார் துவக்கத்தில் அஞ்சினாற் போல சாதாரணமாய்ப் பேசினபோதிலும், வரவர, பேசப்பேச வாய்ச்சாலக மிகுந்த, கேட்டவர்கள் அதிசயிக்க, தாம் கொண்ட கருத்தை பலவிதமாய் விளக்கி வியாக்கியானஞ் செய்ய, அங்கிருந்தவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு ஆனந்த வெள்ளத்தில் முழ்கி அது வரையிலும் அப்பேர்ப்பட்ட பிரசங்கங் (கேட்டதேயில்லை எனச் சொல்லும்படி ஆனார்கள். அன்றுமுதல் அர்ச், பிரான்சிஸ்கு சபையார் அந்தோனியாருடைய சாஸ்திரத் திறமையையும், வாய்ச்சால்கத்தையும் அறிந்ததால் அவரை மதித்து பெருமைப்படுத்தினார்கள். இது சங்கதியைச் சிரேஷ்டர் அர்ச். பிரான்சிஸ்குவுக்கு அறிவித்து, அர்ச், அந்தோனியார் பிரசங்கம் செய்வதற்கு தயாரிப்பாகும் படி அவருக்குக் கட்டளையிட்டார். சிரேஷ்டர் இட்ட கட்டளையை அர்ச், பிரான்சீஸ்கு அங்கீகரித்ததோடுகூL. அவர்தாமே' அர்ச். அந்தோனியாருக்கு எழுதினதென்னவெனில், 'என் மிகவும் பிரிய சகோதரர் அந்தோனியாருக்கு, பிரான்சிஸ்கு சகோதரன் நமதாண்டவராகிய சேசுகிறிஸ்து நாதரிடத்தில் வந்தனம்; நம் சகோதரருக்கு வேத சாஸ்திரம் நீர் கற்றுக்கொடுப்பது நலமென்று தான் காண்கிறேன், தியானத்தின்மட்டிலுள்ள பிரியம் உம்மிடத்திலும் மற்றவர் களிடத்திலும் குறையாதபடிக்கு கவனித்துப் பார்த்துக் கொள்ளும். நாம் அனுசரித்து வரும் ஒழுங்குக்குத் தகுந்தாற்போல இந்த விஷயத்தைப்பற்றி எல்லோரும் கவனிக்கும்படி நான் மிகவும் ஆசிக்கிறேன். வந்தனம்' என்று எழுதினார்

பொலோஞா பட்டணத்து மடத்தில் பிரான்சிஸ்கு சபை சந்நியாசிகளுக்கு அந்தோனியார் வேத சாஸ் திரங்களைக் கற்றுக்கொடுத்து வந்தார். கொஞ்ச காலத்துக்குள்ளாக அவருடைய கல்வித் திறமையும் வாய்ச்சாலகமும் எங்கே பார்த்தாலும் பிரபலியமாய்ப் பரவியதால் வெகு தாரத்தினின்றும் மாணாக்கர் திரளாய் வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு முறையே துலூஸ் பட்டணத்திலும், பொலோனாவிலும், பதுவா பட்டணத்திலும் வேத சாஸ்திரங் கற்பித்து வந்தார். ஆனால் அவர் இவ்வளவு திறமையோடு வேத சாஸ்திரங்களைக் கற்பித்து வந்தபோதிலும், சர்வேசுரன் அவரைக்கொண்டு, அநேகமாயிரம் பாவிகளை மனந்திருப்பச் சித்தமானதால், அவருடைய வாக்குசாதுரியத்தோடு அற்புதங்களைச் செய்யும் வரத்தையும் தந்தருளினார். ஆனதால் 'புதுமைகளை விதைக்கிறவர்' என்கிற பெயர் அவருக்கு உண்டாகிறதுக்குப் பாத்திரமானார், மேற்சேயில் (Mercal) என்னும் பட்டணத்தில் அர்ச். எவுசேபியாருடைய விஸ்தாரமான கோயிலில் 1124-ம் வருஷம் தபசு காலத்தில் அர்ச். அந்தோனியார் திரளான சனங்களுக்கு முன்பாகப் பிரசங்கித்துவந்தபோது, அழுகைக் கூச்சலும் புலம்பலுங் கேட்கப்பட்டு பிரசங்கத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. அடுத்த கோயிலில் மரித்த ஒரு வாலிபனை அடக்கம் செய்கிறதுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நாயிம் பட்டணத்து விதவையினுடைய வியாகுலத்தைக் கண்ட சேசுநாதர் மனமிரங்கி மரித்த அவள் குமாரனை உயிர்ப்பித்தது போல, அர்ச். அந்தோனியாரும் மனதிளகி பிரசங்கத்தை நிறுத்தி, சிறிதுநேரம் பக்தி உருக்கத்தோடு வேண்டிக்கொண்டு, உரத்த சத்தமாய் மரித்த வாலிபன் உயிர்த்து நடக்கும்படி கட்டளையிட்டார். பார்த்திருந்தவர்கள் அதிசயிக்க உடனே வாலிபன் எழுந்து நடந்தான். பிறகு அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கத்தைத் தொடங்கி முடித்தார். அவரிடத்தில் சர்வேசுரன்மட்டில் இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் நம்மிடத்திலுண்டாக அந்தோணியார் கிருபை செய்ய அவரை மன்றாடக்கடவோம்.

செபம்
* அர்ச். அந்தோனியாரே, உமக்குத் தாழ்ச்சியின் மட்டில் இருந்த ஆசையினாலும், உம்மைத்தானே மறைத்து ரிச வேலைகளை நீர் வெகு பிரியமாயய்ச் செய்து வந்தபோது சர்வேசுரன் உமது அர்ச்சியசிஷ்டத் தனத்தையும் கல்வித் திறமையையும் பிறருக்கு வெளிப்படுத்தி அவரால் உயர்த்தப்படப் பாத்திரமானீரே, அடியோர்களும் அந்த மேலான புண்ணியத்தை அநுசரித்து வரும்படி கிருபை செய்தருளும். ஆமென்.

நற்கிரியை - வேதத்துக்கடுத்த காரியங்களைப் படிக்கிறது.
பனவல்லயச் செபம் - மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.