Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 25 மார்ச், 2019

அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *நான்காம் நாள்*


நான்காம் நாள்

அர்ச். அந்தோனியாருடைய அழைப்பு 

1210-ம் வருஷம் நமது அர்ச்சியசிஷ்டவருக்குப் பதினைந்து பிராயமானபோது வெகு அழகு செளந்தரிய முள்ளவராயிருந்தார். உலகத்தில் மற்றவர்களால் மதிக்கப் படுவதற்கும், உத்தியோகப் பெருமைகளை அடைவதற்கும் வேண்டிய ஆஸ்தியோ, நற்குணங்களோ, சாஸ்திரமேr இவையெல்லாம் அவரிடத்தில் குறைவில்லாதிருந்தபோதிலும், நாளுக்குநாள் உலகத்தின் மட்டில் வெறுப்புண்டாகி, சிறு பிராயத்தில் உலக மாயைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு ஆசைப்பட்டு, தம்மைப் பெற்றோருடைய அனுமதி பெற்று அர்ச், அகுஸ்தீன் சபைச் சந்நியாசிகளுடைய மடத்திற் சேர்ந்தார். ஆனால் அம்மடம் தாம் பிறந்த பட்டணத்துக்கு வெகு அருகாமையிலிருந்ததாலும், ஏற்கனவே வெகு கட்டாயத்தின்பேரில் தமக்கு உத்தரவு தந்த தாய் தந்தையும் உறவின்முறையார் சிநேகிதர்களும் அருகாமையிலிருந்ததாலும் தன் துறவுகோலத்துக்கு இடையூறு நடக்கக் கூடுமென்று அர்ச்சியசிஷ்டவர் அஞ்சி தூரத்திலுள்ள கோயிம்பிரா பட்டணத்திலிருக்கும் சந்நியாசிகள் மடத்துக்குத் தன்னை அனுப்பிவிடும்படி பெரியவர்களைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறு அம்மடம் சேர்ந்து செபத்திலும், படிப்பிலும், கைவேலையிலும், தியானத்திலும் மற்றச் சந்நியாசிகளைப்போலக் காலம் செலவழித்து வந்தார். தனக்கிடப்பட்ட வேலைகளை வெகு கீழ்ப்படிதலோடும், சுறுசுறுப்போடும் செய்து வந்தார். ஒருநாள் தமக்கிடப்பட்ட வேலையை அவர் செய்து கொண்டிருந்தபோது, கோயிலில் தேவநற்கருணை எழுந்தேற்ற மணியடிக்கக் கேட்டு தானிருந்த இடத்திலேயே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து தன் இரக்ஷகரை ஆராதித்தார், ! புதுமை! திடீரென கோயிற் சுவர் விரிந்து
மடத்துக் கோயில் பீடத்துக்கு முன்பாக முழங்காற்படி பிட்டது. அதனால் அது சர்வேசுரனுடைய சித்தமென்ரறிந்து அர்ச். பண்டங்கள் அடங்கியிருந்த பெட்டியைப் மடத்தின்மேல் ஸ்தாபித்து வைத்தார்கள். இதைக் கண்ட அர்ச். அந்தோனியாருடைய மனதில் அப்போதே பிரதேசங்கள் போய் வேதத்தைப் போதிக்கவும், வேதசாக்ஷ முடி பெறவும் அளவற்ற ஆசை பிறந்தது.
ஆனதால் தாமிருந்த மடத்தை விட்டு அர்ச். பிரான்சீஸ்கு சபையிற் சேரவேண்டுமென்கிற எண்ணம் அவருக்கு உண்டான போதிலும் சர்வேசுரனுடைய சித்தமென்னவோவென்று தன் மனதில் தத்தளித்து, அர்ச். பண்டங்களுக்கு முன்பாக வேண்டிக்கொண்டு வந்தபோது, ஓர் இரவு அர்ச். பிரான்சிஸ்கு அவருக்குத் தரிசனை காண்பித்து அவர் தம்முடைய சபையிற் சேர சர்வேசுரன் பேரால் அவருக்குக் கட்டளையிட்டார்."
அப்போது அவரிருந்த மடத்துச் சிரேஷ்டரும் மற்றச் சகோதரர்களும் அதிக விசனமடைந்தாலும், பிரான்சிஸ்கு சபைச் சந்நியாசிகள் கொண்டுவந்த கனமான அங்கியைத் தரித்து மாரோக் தேசம் அனுப்பப்படுகிற வார்த்தைப் பாட்டின்மேல், வேதிசாகூ முடி, பெறலாமென்கிற ஆசையோடு அந்தோனியாரென்னும் பெயர் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.
`      நம்முடைய அழைப்புக்குத் தகுந்த பிரகாரம் நமது அந்தஸ்தில் நாம் செய்யவேண்டிய காரியங்கனோ, படவேண்டிய பாடுகளோ, சர்வேசுரன் அநேகங் கட்டளையிட்டிருந்தபோதிலும் அவைகளையெல்லாம் நாம் நிறைவேற்றவோ, சகிக்கவோ, வரும் தந்திரங்களைச் செயிக்கவோ வேண்டிய ஒத்தாசை, தைரியம், வரப்பிரசாதம் நமக்குக் கொடுக்கிறார். அர்ச், அந்தோனியாருடைய தாய் தகப்பன் தாங்கள் அருமையாய் வளர்த்த பிள்ளையைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தது போல், பிள்ளைகளைப் பெற்ற தாய் தகப்பன்மாரே, நாம் எல்லோருமே சர்வேசுரனுக்குச் சொந்தமாயிருக்கிறபடியினாலே, உங்கள் பிள்ளைகளைச் சர்வேசுரன் அமைக்கத் திருவுளமானால் அவர்களைச் சந்தோஷமாய் அவருக்கு ஒப்புக்கொடுங்கள். இப்படிச் செய்வதால் உங்கள் மட்டிலும் உங்கள் பிள்ளைகளின் மட்டிலும் தேவாசீர்வாதமும் அர்ச். அந்தோனியாருடைய அனுக்கிரகமும் உண்டாகும்.

செபம் '
மகா மகிமை பொருந்திய அர்ச். அந்தோனியாரே, உலக ஆபத்துகளையும், தந்திரச் சோதனைகளையும் நீக்கி விலகுகிறதற்கு உலகப் பெருமை, ஆஸ்தி, சுகம் இவை யாவையும் புறக்கணித்துச் சந்நியாசிகள் சபையில் உட்பட்டீரே, அடியோர்களுக்கும் உலக வீண் பெருமை, சிலாக்கியம், சுகம் இவைகள் மட்டில் மெய்யான வெறுப்பை அடைந்தருளக் கிருபை புரியும். - ஆமென்.
நற்கிரியை - யாதாமொரு ஒறுத்தல் முயற்சி செய்கிறது.
மனவல்லயச் செபம் - உலகத்தை வெறுத்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - மூன்றாம் நாள்*

அர்ச்அந்தோனியாருடைய கல்வித் தேர்ச்சி
St. Antony of Padua, Pray for Us
பெர்நாந்தோ என்பருடைய தந்தை தாய் தங்கள் குமாரன் இலெளகீக சாஸ்திரங்களைக் கற்றறிந்து தேறுவதை மாத்திரத் தேடாமல் அவர் ஞான சாஸ்திரத்தில் வர்த்திக்கவும், புண்ணிய வழியில் சிறுபிராயத்தின் பொழுதே நடக்கக் கற்றுக் கொள்ளவும் வேண்டியதற்காகத் தகுந்த வழிப்பாடுகளெல்லாந் தேடினார்கள். ஆனதுபற்றி அவருக்குப் புத்தி விவரம் வந்தபோது சந்நியாசிகள் நடத்திவந்த ஒரு பாடசாலையில் அவரை சேர்த்தார்கள். அங்கே அவர் சந்தடியான விளையாட்டுகளை நேசித்தவரல்ல, பிரயோசனமற்ற வார்த்தைகளைச் சொன்னவரல்ல. இலெளகீகக் காரியங்களைச் சட்டைப் பண்ணாது சர்வேசுரனோடு ஒன்றித்திருக்கும் ஆத்துமத்தின் அடையாளமான மெளனத்தை வெகு பிரியமாய் நேசித்தார். பிறர் விஷயத்தில் அன்பாய் நடந்துவந்தாரே தவிர பிறசிநேகத்துக்கு விரோதமான யாதொன்றுஞ் செய்தவரல்ல. தமது உபாத்தியாயர்மட்டில் வெகு வணக்க மரியாதையோடு நடந்து வந்தார்.
அந்தப் பிராயத்திலேயே அவருடைய இருதயம் தேவ சிநேகத்தினால் பற்றி எரிந்துகொண்டிருந்தது. தமது  கோயில்களில் நடக்கும் சடங்குகளைப் பார்த்து ஆனந்தங் கொள்வார், சிலுவையில் அறையுண்ட சேசுநாதர் அவராத்துமத்தை முழுவதும் தமது கைவசப்படுத்தியதால் பெர்நாந்தோ என்பவர் ஒருசந்தி உபவாசத்தினாலும், இரகசியமாய் ஒறுத்தல் முயற்சிகளைச் செய்வதாலும் தாம் பிறகுதெரிந்துகொள்ளப்போகும் சந்நியாச அந்தஸ்தை அப்போதே ஆரம்பித்தார்.
அவருடைய சிறு பிராயத்தில் சன்ம சத்துராதியான சாத்தாள் அவரைத் தந்திரஞ்செய்யத் தொடங்கிற்று. ஆனதால் தமக்கிருந்த ஒய்வு நேரத்தைச் செபத்திலும் தியானத்திலும் மற்ற ஞான ‘ முயற்சிகளிலும் அர்ச்சியசிஷ்டவர் செலவழித்தார். விசேஷமாய்ப் பூசைக்கு உதவி செய்வதில் வெகு பிரியங்கொள்ளுவார். அவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதென்னவெனில், ஒரு நாள் அவர் பீடத்தின் படிகள் ஓரமாய் முழங்கால்மேனின்று பக்தியோடு செபம் செய்துகொண்டிருந்தபோது, பசாசு மனித ரூபமாய்த் தோன்றி அவரைத் தந்திரஞ்செய்தது. தந்திரங்களைச் செயிக்கிறதுக்குப் பழகியிருந்த அவர் உடனே படிக் கல்லின்மேல் தமது விரலால் சிலுவை அடையாளம் வரையவே பசாசு ஓட்டம் பிடித்தது. அவர் கல்லின்மேல் தமது விரலால் வரைந்த சிலுவை அடையாளம் கல்லில் பதிந்த பிரகாரம் இந்நாள்வரைக்கும் அதை அந்தக் கோயிலிற் காணலாம். (1)
சே பட்டணத்தில் அர்ச். தேவமாதாவினுடைய ஒரு சுரூபத்தின் பாதத்தில் பூசைக்கு உதவி செய்கிற பிள்ளைகள் தரிக்கும் உடுப்புகள் தரித்த பிரகாரம் அர்ச், அந்தோனி யாருடைய சுரூபம் ஒன்றிருக்கின்றது.(2)
இப்போது சொல்லப்பட்டவைகளைக்கொண்டு நாம் அறிய வேண்டிய தென்னவெனில் உலக கல்வி சாஸ்திரங் களையெல்லாங் கற்றறிந்து பேர்போன சாஸ்திரி என்று பேரெடுப்பதைவிட புண்ணிய மார்க்கத்தைக் கற்றறிந்து. அதன் பிரகாரம் நடப்பது மிகவும் அவசரமான காரியமல்லவோ? தம்மை அறிந்து சிநேகித்துச் சேவிக்கிறதுக்கும் அதனால் மோக்ஷத்தை அடைகிறதுக்குமல்லவோ சுவாமி நம்மெல்லாரையும் சிருஷ்டித்து இவ்வுலகத்தில் வைத்திருக்கிறார். சிறுவர்கள் இருதயத்தில் சர்வேசுரன் உண்டென்கிற விசுவாசத்தைப் பதியவைத்து, சுவிசேஷக பரிசுத்த போதனைகளைக் கற்பித்து, நீர்க் குமிழிபோலக் கடந்தொழிந்துபோகும் இச்சிவியத்தில் உலகம் பசாசு சரீரமென்னுஞ் சத்துருக்களால் உண்டாகும் தந்திரங்களை வெல்ல விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்னும் புண்ணியங்களை ஸ்திரப்படுத்துவதில் தான் சீவியம் அடங்கியிருக்கின்றது. சாஸ்திரங்களைக் கற்றறியாமல் போனாலென்ன? இலெளகீக காரியங்களை அறியாமல் போனால்தானென்ன? அவைகளையெல்லாம் அறிந்திருப்பது நலமாயினும், பரலோக சாஸ்திரமாகிற ஆத்துமா இரக்ஷணியமடையும் வகையை அறிந்திருப்பதே அதிலும் மேன்மையும் அதியவசியமுமாயிருக்கிறதென்பதற்குச் சந்தேகமில்லை .
இது விஷயத்தில் சிறு குழந்தையாள அர்ச். அந்தோனியார் எவ்வளவோ அதிசயிக்கத்தக்க விதமாய் நடந்துகொண்டார். அவரிடத்தில் விளங்கின பரிசுத்தத் தனமும், கீழ்ப்படிதலும், தன் கடமைகளை நிறைவேற்றுகிறதில் சுறுசுறுப்பும் மற்றுமுண்டான நற்குணங்களும் எப்பேர்ப்பட்டவைகளென்று கண்டுகொள்ளக்கடவோம். சேசு நாதரைப்பற்றி, தேவ இஷ்டப்பிரசாதத்திலும் ஞானத்திலுஞ் சர்வேசுரனுக்கு முன்பாகவும், மனிதருக்கு முன்பாகவும் அதிகரித்து வந்தாரென்று சொல்லப்பட்டது போலவே அந்தோனியாரும் தேவ இஷ்டப்பிரசாதத்திலும் ஞானத்திலும் சர்வேசுரனுக்கு முன்பாகவும் மனிதருக்கு முன்பாகவும் வளர்ந்து வந்தாரென்று சொல்வதுமல்லாமல், தன் தந்தை தாய்க்கும் உபாத்தியாயருக்கும் கீழ்ப்படிந்து வந்தாரென்றும் சொல்லலாம். அவர் செய்து வந்த வண்ணமே, நீங்களும் சிறுபிராயமுள்ளவர்களே, சகல காரியங்களிலும் செய்து வருவீர்களேயாகில், அர்ச். அந்தோனியாருடைய அனுக்கிரகத்தைத் தப்பாமல் அடைவீர்கள்.
பிள்ளைகளுக்காகப் பெற்றவர்கள் சொல்லத்தகுஞ் செபம் :
 மகா நேசம் பொருந்திய அர்ச். அந்தோனியாரே, சிறுவர்களின் பரிபாகலரே, என் பிள்ளைகளை உமது அடைக்கலத்தில் ஒப்புக் கொடுத்து அவர்களை உமது திரு ஆதரவில் வைக்கிறேன். அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற பாக்கியமான நாளில் அவர்கள் அடைந்த தேவ இஷ்டப் பிரசாதத்தை அவர்கள் இருதயங்களில் காப்பாற்றியருளும். நாளுக்கு நாள் அவர்கள் விசுவாசத்திலும் தேவ பயத்திலும் அதிகரித்து, சேசுநாதர் பார்வையிலும் தேவமாதாவினுடையவும் உம்முடையவும் அடைக்கலத்திலும் மெய்யான கிறிஸ்துவர்களாய்ச் சீவித்து, பரலோக இரச்சியத்தில் சம்மனசுகளோடு என்றென்றைக்கும் நித்திய ஆனந்த மகிமை அடையப் பாத்திரவான்களாகும்படி கிருபை செய்தருள் உம்மை மன்றாடுகிறேன். – ஆமென்.
நற்கிரியை – சிறுவர்களுக்குப் புத்திமதி சொல்லுகிறது.
மனவல்ல்ய ச் செபம் – சிறுவர்களின் பரிபாலகரான அர்ச், அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திங்கள், 18 மார்ச், 2019

அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *இரண்டாம் நாள்*

அர்ச். அந்தோனியார் வாழ்க்கை வரலாறு

*இரண்டாம் நாள்*
*அர்ச். அந்தோனியாருடைய பிறப்பு*

தவத்தினுடையவும் தாழ்ச்சி யினுடையவும் உத்தம மாதிரியாயிருந்துவந்த இந்த மகா பெரிய அர்ச்சியசிஷ்டவர் லிஸ்போன் (Lisbonne)' நகரத்தில் கோத்புரு தெ புய்யோன் (Godefroy a Bouillon) சந்ததியாருடைய அரண்மனையில் 1195-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி பிறந்தார். அவருடைய தாயாரான தெரேஸ் (Dota Theresa) துரைசாளி அஸ்தூரியா (Asturies} தேசத்து இராச குலத்திற் பிறந்தவள். அர்ச். தேவ மாதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட லா சே (La $6) பட்டணத்து தேவாலயத்துக்கு மேற்புறத்தில் அவர் பிறந்த அரண்மனை கட்டப்பட்டிருந்தது.
ஞான மாடப்புறாவைப் போலக் கற்சந்துகளில் இல்லிடந் தேடி, அக்காலத்தில் காடாகவும் தனித்துமிருந்த பிரிவ் (Brive) பட்டணத்தையடுத்த கெபிகளில் (Grosses) வசிக்கப் பிரியங்கொண்டு, பாறையின் ஓரங்களினின்று துளித்துளியாய்க் கசிந்த நீரைச் செட்டா யுதவிக்கொள்ளத் தமது மிருதுவான கரங்களால் . பள்ளந் தோண்டினவர் ராஜ ஐசுவரியத்தினுடையவும் ஆடம்பரத்தினுடையவும் மத்தியில் பிறந்தார்,
பிறந்தவுடனே ஞானஸ்நானத்துக்குக் கொண்டு போகப்பட்டு அச்சமயத்தில் பெர்நாந்தோ {Frenano) என்னும் பெயர் சூட்டப்பட்டார், சிறு பிராயத்தின் பொழுதே உலக ஆஸ்திபாஸ்திகளையும் பெருமை சிலாக்கியங்களையும் காலில் மிதித்து பரலோகத்தையும் நித்தியத்தையும் நாடிச் சேர்ந்த பிறகு அவர் தண்ணீரைக்கொண்டு செய்தருளிய அற்புதங்களில் பிராதனமானவைகளின் குறிப்புகளைக் கல்விழைத்த தகடுகளிலெழுதி அத்தகடுகளால் அவர்  நானஸ்நானம் பெற்றவிடத்திலிருந்த தொட்டியை மூடினார்கள், அவருடைய தாயார் தெரேசாள் தன் கோத்திர மேன்மையினாலும், அழகினாலும் சிறந்திருந்தது போலவே புண்ணியத்தினாலும் சிறந்திருந்தாள். புண்ணியவதியான தாயுடைய பாலுடனும் கொஞ்சுதலுடனும் குழந்தைக்குப் புண்ணிய நடத்தை ஊட்டப்படுகிறதென்கிறார் சாஸ்திரியொருவர், தாயின் மடியிலேயே சேசு மரியெனவும், பிரிய தத்த மந்திரஞ் சொல்லவும் பெர்னாந்தோ கற்றுக்கொண்டார். ' மகிமை பொருந்திய ஆண்டவளே" (Hymne 0 Gloriosa Domina.) என்னும் பாடலைக்கொண்டு அவருடைய தாயார் அவரைத் தாலாட்டினாள். சிறு பிள்ளைகள் அழுவதிலும் ஆடுவதிலும் ஓடுவதிலும் காலத்தைக் கடப்பது வழக்கமாயிருக்க, பெர்னாந்தோ என்பவர் செபம் செய்வதிலும், கோயில்களைச் சந்திப்பதிலும், தரித்திரருக்குத் தாராளமான பிச்சை கொடுப்பதிலும் பிரியங் கொண்டார். அர்ச். அந்தோனியாருக்குத் தோத்திரமான பாடலில் சொல்லப்பட்டிருப்பதாவது: "கிறிஸ்துவின் ஊழியரான அந்தோனியாரே, மனங் களிகூரும், உமது சிறு பிராயமுதலே உம்மை நிரப்பின ஆண்டவருடைய கருணையானது மோக்ஷ பாதையை நீர் நாடும்படி செய்தது' என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ,
வாலிப ஸ்திரிகளே, வாலிபத் தாய்மாரே, சிறு பாலகர் உங்கள் கரங்களிலிருக்கையில் எவ்வளவோ ஆனந்த சந்தோஷமடைகிறீர்கள். உங்கள் பிள்ளைகள் மட்டில் உங்களுக்குண்டான ' கடமைகளை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் வேதத்தைப் படிப்பித்து மோக்ஷ வழி காட்ட வேண்டியவர்கள் நீங்களே, அந்த இளகலான மெழுகை உருவாக்குவதும், சேசுமரியென்னுந் திரு நாமங்களை அதில் பதியவைப்பதும் உங்களுடைய கடமையல்லவோ! உங்களிடத்தினின்றல்லவோ, உங்களுடைய மாதிரியைக் கண்டல்லவோ, குழந்தைகள் தங்கள் கரங்களைக் குவித்து செபிக்கவும், சிலுவையடையாளம் வரையவுங் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தைகளைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுத்து அவளுடைய ஆதரவில் வையுங்கள். ஞானஸ்நானம் பெற்ற முதலே அவர்களை அர்ச். அந்தோனியாருடைய அடைக்கலத்தில் ஒப்புவித்து விடுங்கள். சிறு குழந்தையான அந்தோனியாரைப்போல உங்கள் குழந்தைகளும் பிச்சைகொடுக்கும்படி பழக்குங்கள், பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் அவிசுவாசிகள் ஆகக் கூடும். நன்னெறியை விட்டுவிடக்கூடும். ஆனால் அரிசி, அந்தோனியாருடைய ஒத்தாசையால் தங்களுடைய சிறு பிராயத்தில் உங்கள் மடி மேல் வளர்ந்த காலத்தில் தாங்கள் கற்றுக்கொண்ட செபங்களை, கேட்ட புத்திமதிகளை, பார்த்த நன்மாதிரிகளை, தாங்களே செய்துவந்த தர்மங்களை நினைப்பார்கள், நல் வழி திரும்புவார்கள். நீங்கள் இவ்வுலகத்தில் அருமையாய் நேசித்த பிள்ளைகள் மறுவுலகத்திலும் உங்களோடு நித்தியத்துக்கும் வாழும் பாக்கியத்திற் சேர்வார்கள்.

*செபம்*
மகா மகிமை பொருந்திய அர்ச். அந்தோனியாரே, நீர் தேவமாதாவினுடைய ஆதரவிற் பிறந்து, உமக்கு ஐந்து பிராயமாகும் போதே உமது கற்பென்னும் ஒலிப் புஷ்பத்தை அத்திரு மாதாவுக்கு ஒப்புக்கொடுத்தவரே, கல்லிலே உமது விரலாற் பதிக்கப்பட்ட சிலுவையடையாளத்தைக் கொண்டு பசாசை துரத்தினீரே, அத்திரு மாதாவின் மட்டில் உருக்க மான பக்தியையும், நரக சத்துராதிகளின் தந்திரங்களை வெல்ல பலத்தையும் எங்களுக்கு அடைந்தருளும். ஆமென்.


Download Tamil CAtholic Songs for free.

Download Tamil Christian Songs