Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

September 28 - St. Wenceslaus - அர்ச். வென்செஸ்லாவுஸ்

 செப்டம்பர் 28

அர்ச். வென்செஸ்லாவுஸ்

வேதசாட்சி



பிரவேசம்: சங். 44: 15,14

ஆண்டவரே, உமது வல்லபத்தில் நீதிமான் மகிழ்வார். உமது இரட்சிப்பின் பேரில் அவர் வெகுவாய்க் களிகூருவார். தேவரீர் அவர் மன விருப்பத்தை நிறைவேற்றினீர். (சங். 4) ஏனெனில், பேரினிமையின் ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டு வந்து, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சியான அர்ச். வென்செஸ்லாவுஸ் பரலோக பிறப்புநாளை கொண்டாடுகிற  நாங்கள் அவருடைய வேண்டுதலினால், தேவரீருடைய திருநாமத்தின் நேசத்தில் உறுதிபட திருவருள்புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (ஞானா. 10. 10-14)

ஞானமானது நீதிமானை நேர்வழியாய் கூட்டிப்போய், அவனுக்குச் சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காண்பித்து அவனுக்குப் பரிசுத்தருடைய அறிவைத் தந்து, அவன் தன் வேலைகளால் வெகு இலாபமும் சம்பாவனையும் அடையும்படி செய்ததுமின்றி அவனை மோசஞ் செய்யத் தேடினவர் களிடத்தினின்று அவனை மீட்டு அவனை ஆஸ்திவந்தனாக்கினது. அது சத்துராதிகளினின்று அவனைக் காப்பாற்றித் துன்மார்க்கரினின்று அவனைப் பாதுகாத்துப் பலமான யுத்தத்தில் அவன் ஜெயங்கொள்ளவும், சகலத்தையும் விட ஞானமே வலுமையுள்ளதென்றறிந்து கொள்ளவுஞ் செய்தது. அது விற்கப்பட்ட நீதிமானை விட்டுவிட்டதில்லை; பாவிகளிடத்தினின்று அவனை மீட்டது; அவனுடன் பாழுங்கிணற்றில் இறங்கினது. அது சிறையிலிருந்து அவனுக்கு இராச செங்கோலைக் கையில் வைத்து அவனை உபாதித்த வர்களை அவன் வசமாக்கினதுமன்றி அவனைக் குற்றஞ் சாட்டினவர்களைப் பொய்யர் என்று காண்பித்து அவனுக்கு நித்திய மகிமையைத் தந்தது.

படிக்கீதம்: (சங். 111. 1-2)

ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். அவனுடைய சந்ததி  பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மை யானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 20. 4) ஆண்டவரே, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 10. 34-42)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீஷர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: நான் பூலோகத்தில் சமாதானத்தை அனுப்ப வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். சமாதானத்தையல்ல, வாளையே அனுப்ப வந்தேன்.  எவ்வா றெனில் தன் தகப்பனுக்கு விரோதமாய் மகனையும், தன் தாய்க்கு விரோதமாய் மகளையும், தன் மாமிக்கு விரோதமாய் மருமகளையும் பிரிக்க வந்தேன். ஏனெனில் மனிதனுடைய சத்துருக்கள் அவனுடைய வீட்டாராமே. என்னிலும் தன் தகப்பனையாவது தாயையாவது அதிகமாய்ச் சிநேகிக்கிறவன் எனக்குப் பாத்திரவானல்ல் எனக்குமேலாய்த் தன் மகனையாவது மகளை யாவது சிநேகிக்கிறவனும் எனக்குப் பாத்திரவானல்ல. தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லாதவனும் எனக்குப் பாத்திரவானல்ல. தன் ஜீவனைக் கண்டடைகிறவன் எவனும் அதை இழப்பான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்தவனோ வென்றால் அதைக் கண்டடைவான். உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளு கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் ஒரு தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்ளுகிறவன் தீர்க்க தரிசிக்குரிய சம்பாவனையை அடைவான். நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் ஒரு நீதிமானை ஏற்றுக் கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய சம்பாவனையை அடைவான். அவ்வண்ணமே சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் மிகவும் அற்பரான இவர்களில் ஒருவனுக்கு எவனாகிலும் ஒரு பாத்திரம் தண்ணீர் மாத்திரங் குடிக்கக் கொடுத்தாலும், தனது சம்பாவனையை இழந்து போகானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்றார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 8. 6-7)

மகிமையினாலும் கனத்தினாலும் அவருக்கு முடி சூட்டினீர். ஆண்டவரே, உம்முடைய கரங்களின் செய்கைகளின் மேல் அவருக்கு அதிகாரம் கொடுத்தருளினீர்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய கொடைகளையும் செபங்களையும் தேவரீர் கையேற்றுக் கொள்ளும். பரலோக பரம இரகசியங்களால் எங்களைப் பரிசுத்தப்படுத்தி, எங்களுக்கு தயவாய் செவி சாய்த்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (16. 24)

யாதொருவன் என் பின் வர மனதாயிருந்தால், அவன் தன்னைத் தானே பரித்தி யாகஞ் செய்து, தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லக் கடவான்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எங்கள் தேவனாகிய ஆண்டவரே, உம்முடைய பரிசுத்தவான் களின் ஞாபகத்தை நாங்கள் இவ்வுலக சேவையினால் கொண்டாடி மகிழ்வது போல், அவர்களுடைய தரிசனையைக் கண்டு நித்தியமாய்க் களிகூரவும் எங்களுக்கு திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக