Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 20 செப்டம்பர், 2023

Salve Sancte Parens - பரிசுத்த தேவதாயின் பேரால் - பொது

 பரிசுத்த தேவதாயின் பேரால் - பொது 
Salve Sancte Parens

பிரவேசம்

வாழ்க! பரிசுத்த தாயே, பரலோகத்தையும் பூலோகத்தையும் என்றென்றைக்கும் ஆள்கின்ற அரசனையீன்ற தாயே, வாழ்க! (பா. கா. அல்லேலுய்யா அல்லேலுய்யா) (சங். 44. 2) என் இருதயம் ஓர் நல்ல வார்த்தையை வெளியிட்டது. என்னுடைய செய்கைகளை இராசாவுக்குச் சொல்லுகிறேன்.  – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: தேவனாகிய ஆண்டவரே, உம்முடைய அடியார்களாகிய நாங்கள் ஆத்தும சரீர சுகத்தால் இடைவிடாது மகிழவும், எப்பொழுதும் கன்னி கையான மரியாயினுடைய மகிமையுள்ள வேண்டுதலினால் இவ்வுலகத் துயரத் தினின்று விடுதலை பெறவும், நித்திய பேரின்ப பாக்கியத்தை சுகிக்கவும் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (சர். 24. 14-16)

ஆதியிலும், யுகங்களுக்கு முந்தியுஞ் சிருஷ்டிக்கப்பட்டேன்; எக்காலத்துக்கும் இராமலுமிரேன்; பரிசுத்த வாசஸ்தலத்தில் அவருடைய சமுகத்தில் என் தொழிலைச் செய்தேன். ஆனதால் சியோனில் உறுதிப்படுத்தப்பட்டேன்; பரிசுத்த பட்டணத்திலும் இளைப்பாற்றினேன்; எருசலேமில் என் அதிகாரஞ் சென்றது. மகிமைப்படுத்தப்பட்ட பிரசைகளிடத்தில் வேரூன்றினேன்; அவர்கள் சுதந்தரம் என் ஆண்டவருடைய பாகம், பரிசுத்தருடைய கூட்டத்தில் என் வாசஸ்தலம்.

படிக்கீதம்: (சர். 44: 16)

கன்னிமரியாயே, கன்னிமைக்குப் பழுதின்றி இரட்சகரின் தாயாக ஏற்பட்டீரே! நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள். வணக்கத்துக்குரியவள். – தேவதாயான கன்னிகையே, உலகம் அனைத்துமே கொள்ள முடியாதவர் உமது திருவுதரத்தில் மனிதராய் அடங்கலானாரே. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஈன்ற பின்னும் பழுதற்ற கன்னிகையாய் நிலை கொண்டீர். தேவதாயே எங்களுக்காக மன்றாடும். அல்லேலுய்யா

ஆகமன காலத்தில் படிக்கீதத்தை சொன்னபின், மேலே உள்ள அல்லேலுய்யா கீதத்திற்கு பதிலாக:

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா – (லூக். 1: 28) மரியாயே, வரப்பிரசாதத் தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள்ளே ஆசீர் வதிக்கப்பட்டவள் நீரே! அல்லேலுய்யா.

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 111. 1-3)

கன்னி மரியாயே அகமகிழும். பதிதங்கள் அனைத்தையம் தனியாக நீர் ஒருவரே அழித்துவிட்டீர். – நீர் அதிதூதரான கபிரியேலின் வார்த்தையை விசுவசித்தீர். – கன்னிகையாயிருந்து, தேவனும் மனதனுமானவரைப் பெற்றெடுத்தீர். ஈன்றபின்னும் பழுதற்ற கன்னிகையாய் நிலைகொண்டீர்!. தேவதாயே எங்களுக்காக மன்றாடும்.

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (எண். 17: 8) யெஸ்சேயின் கோல் மலர்ந்தது. கன்னிகையானவள் கடவுளும் மனிதனுமானவரைப் பெற்றெடுத்தாள். சர்வேசுரன் தாழ்மையானதைக் தம்மில் மேலானதோடு இணைத்துக்கொண்டு சமாதானத்தை மறுபடியும் அளித்தார்.  அல்லேலுய்யா. – (லூக். 1: 28) மரியாயே வரப்பிரசா தத்தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, அல்லேலுய்யா.

சுவிஷேசம் (லூக். 11. 27-28)

அக்காலத்தில் சேசுநாதர் ஜனக் கூட்டத்துடன் பேசி கொண்டிருந்த போது சம்பவித்ததேதெனில், ஜனக்கூட்டத்தில் நின்று ஓர் ஸ்திரீயானவள் தன் சத்தத்தை உயர்த்தி, அவரை நோக்கி:  உம்மைச் சுமந்த உதரமும் நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே என்றார். அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக்கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

மரியாயே வரப்பிரசாதத்தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய இரக்கத்தாலும், எப்பொழுதும் கன்னிகையான முத்திபேறுபெற்ற மரியாயின் மன்றாட்டினாலும் இக்காணிக்கை எங்களுடைய பாக்கியத்திற்கும், சமாதானத்திற்கும் உதவக்கடவது. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

நித்திய பிதாவின் திருக்குமாரனைச் சுமந்த கன்னிமரியாயின் உதரம் பாக்கியம் பெற்றது!  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, எங்கள் இரட்சணியத்துக்குரிய உதவிகளைப் பெற்றுக் கொண்ட நாங்கள் எப்பொழுதும் கன்னிகையான முத்திபேறு பெற்ற மரியாயின் வணக்கத்துக்காக தேவரீருடைய உன்னத மகத்துவத்திற்கு இப்பலியை ஒப்புக்கொடுப்பது போல, அவளுடைய சலுகையினால் நாங்கள் என்றும் காப்பாற்றப்படத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக