Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

Sacerdotes Dei - மேற்றிராணியரான வேதசாட்சி ஒருவர் பெயரால் - பொது 2

 மேற்றிராணியரான வேதசாட்சி ஒருவர் பெயரால் - பொது 2
Sacerdotes Dei

பிரவேசம்: தானி. 3. 84,87

சர்வேசுரனுடைய குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பரிசுத்தர்களே, இருதய தாழ்ச்சியுள்ளவர்களே சர்வேசுரனைத் துதியுங்கள். (தானி. 3. 57)  ஆண்டவருடைய சகல கிரியைகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். அவரை என்றென்றைக்கும் துதித்து, எல்லாருக்கும் மேலாக உயர்த்துங்கள். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் உம்முடைய வேதசாட்சியும் மேற்றிராணியாருமான முத்திப்பேறுபெற்ற (இன்னாருடைய) வருடாந்திரத் திருநாளில் மகிழச் செய்கிறீரே. அவருடைய பரலோகப் பிறப்பு நாளை கொண்டாகிற நாங்கள் அவருடைய பாதுகாவலையும் பெற்றுக் களிகூரத் தயவாய்க் கிருபை செய்தருளும். தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (2. கொரி. 1: 3-7)

சகோதரரே, சர்வேசுரனும் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பிதாவும், இரக்கங்களின் தகப்பனும், சர்வ ஆறுதலின் தெய்வமுமாயிருக்கிறவர் ஸ்துதிக்கப்படுவாராக. நாங்களே சர்வேசுரனிடத்தில் பெற்றுக்கொள்ளுகிற ஆறுதலைக் கொண்டு எவ்வித இடையூறுகளிலும் அகப்பட்டிருக்கிறவர்களுக்கு நாங்களும் ஆறுதல் வருவிக்கத் திராணியுள்ளவர்களாயிருக்கும்படிக்கு எங்க ளுக்கு நேரிடும் எல்லாத் துன்பங்களிலும் அவரே எங்களைத் தேற்றிவருகிறார். அதெப்படியென்றால், கிறீஸ்துநாதருடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறது போல், கிறீஸ்துநாதர் வழியாக எங்களுக்கு ஆறுதலும் பெருகிவருகிறது. நாங்கள் துன்பப்பட்டால் அது உங்களுடைய ஆறுதலுக்காகவும், இரட்சண யத்துக்காகவுந்தான். நாங்கள் ஆறுதலடைந்தால், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்காகத்தான். நாங்கள் தெம்படைந்தால், அது உங்களுடைய தெம்புக் காகவும் இரட்சணியத்துக்காகவுந்தான். அந்த இரட்சணியமானது நாங்கள் எவ்வித பாடுகளைப்படுகிறோமோ, அவைகளை நீங்களும் பட்டனுபவிக்கும்படி செய்கிறது. பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளாயிருக்கிறதுபோல, ஆறுதலுக்கும் பங்காளிகளாயிருப்பீர்களென்று நாங்கள் அறிந்திருக்கிறதினாலே, உங்கள் மேல் எங்களுக்கு உறுதியான நம்பிக்கையுண்டாயிருக்கிறது.

படிக்கீதம்: (சங். 8. 6-7)

மகிமையினாலும் கனத்தினாலும் அவருக்கு முடி சூட்டினார். – ஆண்டவரே உம்முடைய கரங்களின் செய்கைகளின்மேல் அவருக்கு அதிகாரம் கொடுத் தருளினீர்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவர் முடி சூட்டிய குரு இவர்தான். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 113. 1-3)

ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய உற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மை யானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும். மகிமையும் செல்வமும் அவன் வீட்டிலிருக்கும். அவடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

சுவிஷேசம் (மத். 16. 24-27)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீடர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லக் கடவான். ஏனெனில் தன் பிராணனைக் காப்பாற்ற மனதாயிருக்கிறவன் அதை இழப்பான். என்னைப்பற்றித் தன் பிராணனை இழப்பவனோவென்றால் அதைக் கண்டடை வான். மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தன் ஆத்துமம் சேதப்பட்டால் அவனுக்குப் பிரயோசனமென்ன? அல்லது தன் ஆத்துமத்துக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மனுமகன் தம்முடைய பிதாவின் மகிமையிலே தன் தூதர்களோடு கூடவருவார். அப்பொழுது ஒவ்வொ ருவனுக்கும் அவனவன் கிரியைகளுக்குத் தக்கதாகப் பலன் அளிப்பார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீரைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகம் செய்தோம். ஏனெனில், நமது கரம் அவனுக்கு உதவி புரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு சமர்பிக்கப்பட்ட கொடைகளை தேவரீர் பரிசுத்த மாக்கியருளும். உம்முடைய வேதசாட்சியும் மேற்றிராணியாருமான முத்திப பேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலால் அவைகளின் நிமித்தம் எங்கள் பேரில் சாந்தியாகிக் கண்ணோக்கியருளும். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (சங். 20. 4)

ஆண்டவரே, அவர் சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, இச்சற்பிரசாத உட்கொள்ளுதல் எங்களைப் பாவத்தினின்று பரிசுத்தமாக்கித் தேவரீருடைய வேதசாட்சியும் மேற்றிராணியாருமான முத்திப் பேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால் எங்களை பரலோக மருந்தில் பங்குபற்றுவோராகவும் செய்யக்கடவது – தேவரீரோடு …


Previous                                               Download                                                           Next


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக