Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

Catholic Quotes of the Day - St. Alphonsus Liguori

 கனியை விரும்புகிற எவனும்‌ கட்டாயமாக அதனுடைய மரத்தினிடம்‌ செல்ல வேண்டும்‌;   நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து  நாதரை ஆசிக்கிற எவனும்‌ கட்டாயமாக 
அவருடைய மகா பரிசுத்த  மாதாவிடம்‌ செல்ல வேண்டும்‌! மகா பரிசுத்த தேவமாதாவை யாரெல்லாம்‌  கண்டடைகின்றனரோஅவர்களெல்லாம்‌, மிகவும்‌ நிச்சயமாக
நமதாண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமியைக்‌ கண்டடைந்து கொள்வார்கள்!”  

அர்ச்‌.அல்ஃபோன்ஸ்‌ மரிய லிகோரியார்‌. 


Books by St. ALphonsus 

Visits to Jesus and Mary : excerpted from visits to - Link the most blessed Sacrament and the Blessed Virgin Mary  


The Glorious of Mary - Link


The practice of the love of Jesus Christ - Link




If you want any book from Archeive.org about St. Alphonsus Liguori 
I can download it for you. 
Contact me on Email (lourdhurobin@gmail.com) or Telegram or https://t.me/Lourdhurobin



August 2 - St. Alphonsu Ligouri

 

ஆகஸ்டு 2ம்தேதி

திவ்ய இரட்சகர்சபையின்ஸ்தாபகரும்‌,ஸ்துதியரும்‌, மேற்றிராணியாரும்‌, வேதபாரகருமான அர்ச்‌. மரிய அல்ஃபோன்ஸ்லிகோரியார்திருநாள்

 

 அர்ச்‌. அல்ஃபோன்ஸ்‌, இத்தாலியிலுள்ள நேப்பிள்ஸில்பிறந்தார்‌. நேப்பிள்ஸ்நாட்டின்கப்பற்படையின்தலைவருடைய எட்டுப்பிள்ளைகளில்மூத்த மகனாக, 1696ம்வருடம், இவர்பிறந்தார்‌. இவர்குழந்தையாக இருந்தபோது, சேசுசபையைச் சேர்ந்த அர்ச்‌. பிரான்சிஸ்ஜிரோலாமா, இவரை ஆசிர்வதித்தார்‌; இவர்‌ 90 வயது வரை உயிர்வாழ்ந்து, ஒரு மேற்றிராணியார்ஆவார்என்றும்‌, திருச்சபைக்கு அதிக நன்மை செய்வார்என்றும்தீர்க்கதரிசனமாகக்கூறினார்‌. இவர்மிகவும்பலவீனராயிருந்ததால்‌, இராணுவத்தில்இவரால்சேரக்கூடாமல்போனது. ஆகவே, இவரை ஒரு சட்டவல்லுனராக்க வேண்டும்என்று, இவருடைய தந்தை, இவரை சட்டக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்‌. இவர்தனது அபூர்வமான அறிவுத்திறனால்‌, நேப்பிள்ஸ்பல்கலைக் கழகத்தில்‌, 16 வயதிலேயே சமூக  சட்டக்கல்வியிலும்‌, வேதஇயல்கல்வியிலும்நிபுணத்துவம்பெற்று (டாக்டா்‌ ) முனைவர்பட்டம்பெற்றார்‌. 27வது வயதில்‌, நேப்பிள்ஸ்நாட்டிலேயே, இவர்மிகச்சிறந்த வழக்கறிஞரானார்‌. தினமும்‌, தவறாமல்திவ்ய பலிபூசை கண்ட பிறகே, இவர்தனது அன்றாட அலுவலை துவக்குவார்‌; ஒவ்வொரு முறை, இவர்நீதிமன்றத்திற்குச்செல்வதற்கு முன்பாக, தவறாமல்‌, முதலில்‌, திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன்காண்பார்‌; அதன்பிறகே நீதிமன்றத்திற்குச்செல்வார்‌. ஒருநாள்‌, இவர்‌, தன்நண்பருக்கு பின்வருமாறு ஒரு கடிதம்எழுதினார்‌:  என்நண்பரே! நம்முடைய வக்கீல்தொழில்‌, அதிக கஷ்டங்களாலும்‌, ஆபத்துக்களாலும்நிறைந்தி ருக்கிறது; நாம்நிர்ப்பாக்கியமான ஜீவியம்‌, ஜீவிக்கிறோம்‌; நித்தியத்திற்குமாக நிர்ப்பாக்கியமாக இறந்துபோகக்கூடிய ஆபத்தும்நமக்கு இருக்கிறது!”  ஒருசமயம்‌, இவர்வெற்றியடைந்த ஒரு நீதிமன்ற வழக்கில்‌ , இவருக்குத்தெரியாமல்‌, இவர்ஒரு பொய்சொல்ல நேர்ந்ததைக்குறித்து,  பெரிதும்வருந்தினார்‌; இதன்பின்‌, நேப்பிள்ஸில்மிகப்பெரிய சட்ட வல்லுனராக இருந்த அர்ச்‌. அல்ஃபோன்ஸ்‌ , தன்‌ 27வது வயதில்‌, தன்னை வஞ்சித்த இந்த வக்கீல்தொழிலையும்‌, உலகத்தையும்துறந்து விட்டார்‌; 1723ம்வருடம்‌, இவர்அர்ச்‌. பிலிப்நேரியாரின்ஜெபக்கூட துறவற சபையில்சேர்ந்தார்‌; 1726ம்வருடம்‌, டிசம்பர்‌ 21ம்தேதியன்று தனது 30வது வயதில்‌, குருப்பட்டம்பெற்றார்‌. வீடு இல்லாத ஏழைகளிடையே, இளைஞர்களிடையே, வியாதியஸ்தர்களிடையே, அவர்களுடைய ஆத்தும சரீர நன்மைகளுக்காக, உழைத்தார்‌; இவர்‌, நிகழ்த்திய எளிய தெளிவான பிரசங்கங்கள் மூலமாகவும்‌,  கனிவுமிக்க இரக்கத்துடனும்‌, ஞானத்துடனும்பாவசங்கீர்த்தனம்கேட்பதன்மூலமாகவும்‌, நேப்பிள்ஸ்நாட்டின்மக்களிடையே மிகவும்பிரபலமடைந்தார்‌. பாவத்தின்மட்டிலான மிக அற்பக்காரியங்கள்பேரிலும்‌, இவர்குற்ற உணர்வுடன்வருத்தமுற்றிருந்தார்‌; அர்ச். அல்ஃபோன்ஸ்‌, மன உறுத்தல்களால்அவதியுற்றார்‌. ஆனால்‌, இவர்எழுதிய நூல்களில்‌, “மன உறுத்தல்கள், மனந்திரும்புகிறவர்களின்துவக்க காலத்தில்மிக பயனுள்ளவையாக இருக்கின்றன! என்றும், அவை ஆத்துமத்தைத்தூய்மைப்படுத்துகின்றன! என்றும்‌, அதே சமயம்‌, அவை, ஆத்துமத்தை மிகவும்கவனமுள்ளதாகவும்‌, விழிப்புள்ளகாகவும்‌, மாற்றிவிடுகின்றன! என்றும்எழுதியுள்ளார்‌. 1732ம்வருடம்‌, மகா பரிசுத்த திவ்ய இரட்சகர்சபை என்கிற ஒரு துறவற சபையை, அர்ச்‌.அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியார்ஸ்தாபித்தார்‌. அட்ட தரித்திரத்திலும்‌, கடின தபசிலும்இத்துறவியர்ஜீவிக்கலாயினர்‌; 1752ம்வருடம்முதல்‌, ஞான நூல்களை எழுதுவதில்தன்னையே அர்ப்பணித்தார்‌; எவ்வளவுக்கு அதிக தேவசிநேகத்துடனும்‌, ஜெப தப ஒறுத்தல்களுடனும்‌, இந்த உன்னதமான ஞான நூல்களை எழுதினார்என்றால்‌, அதை வாசிக்கிறவர்களின்இருதயத்தில்புதுமையாக தேவசிநேக அக்கினி தூண்டப்படுவதை, எல்லா காலங்களிலும்விசுவாசிகள்கண்டுணர்கின்றனர்‌! அதனால்ஏராளமான ஞான நன்மைகளை அடைகின்றனர்‌! மேற்கூரை இல்லாத மடங்களில்அர்ச்‌. அல்ஃபோன்ஸ்இப்புத்தகங்களை எழுதும்போது, பனிப்பொழிவு, இவர்மேல்நேரடியாக விழுந்ததால்‌, தாங்கமுடியாக குளிரினால்‌, இவருடைய விரல்கள்மரத்துப்போகும்‌! அச்சமயத்தில்‌, உஷ்ணப்படுத்து வதற்காக அறையில்வைத்திருந்த அடுப்பில்கையை அடிக்கடி வைத்தபடி, எழுதுவதில்தொடர்ந்து ஈடுபட்டார்‌; அதனாலேயே தான்‌, இவருடைய எல்லா புத்தகங்களும்‌, இக்காலத்தில் நாம்வாசிக்கும்போதுகூட, நம்இருதயத்தில்தேவசிநேக நெருப்பு மூட்டப்படுகிறதை, உணர்கிறோம்‌!

அர்ச்‌. அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியார்‌, தன்ஜீவிய காலத்தில்‌ 111 புத்தகங்களும், பலபிரபந்த நூல்களும்எழுதியுள்ளார்‌; இவை 60 மொழிகளில்‌, 4000 பதிப்புகளாக பிரசுரமாயிருக்கின்றன, என்பது, குறிப்பிடத்தக்கது! மகா பரிசுத்த தேவநற்கருணையைப்பற்றியும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைகள்பற்றியும்‌, ஆண்டவரின்பரிசுத்தப்பாடுகள்பற்றியும்‌, ஆண்டவருடைய ஜீவிய சரித்திரத்தைப்பற்றியும்‌, நன்மரண ஆயத்தம்பற்றியும்‌, இன்னும்அதிக புத்தகங்களை எழுதியுள்ளார்‌; இக்காலத்தில்இணையதளத்தில்‌, இலவசமாகக்கிடைக்கிற பாரம்பரிய கத்தோலிக்க புத்தகங்களில்‌, இவரின்எல்லா புத்தகங்களும்ஏறக்குறைய நமக்குக் கிடைக்கும்படியாக இருப்பதே, இக்காலத்திலும்எக்காலத்திலும்நமக்கு அருளப்படுகிற தேவபரா மரிப்பின்அரிய அடையாளமாக இருக்கிறது! இவர்‌ 1762ம் வருடம்‌, அர்ச்‌.  ஆகத்தா மேற்றிராசனத்தின் மேற்றிராணியாராக அபிஷேகம்செய்யப்பட்டார்‌. இம்மேற்றிராசனத்தில்‌ 13 வருட காலம்‌, ஆன்ம ஈடேற்ற அலுவலில்‌, அயராமல்உழைத்தார்‌; குருமடங்களையும்‌, துறவற மடங்களையும்சீரமைத்தார்‌; கேட்பவர்இருதயங்களில்தேவ சிநேகத்தை மூட்டிய இவரின்ஞானதியானப்பிரசங்கங்களால்‌, அநேக வெதுவெதுப்பு கிறீஸ்துவர்கள்‌, உத்தம கிறீஸ்துவர்களாக மாறினர்‌; விசுவாசத்தை மறுதலித்திருந்தவர்கள்‌, மனந்திரும்பி, மறுபடியும்சத்திய திருச்சபையில்சேர்ந்தனர்‌; அர்ச்‌.அல்ஃபோன்ஸ்‌, தனது 91வது வயதில்‌, 1787ம்வருடம்‌, ஆகஸ்டு 1ம்தேதியன்று, மத்தியானம்‌ 12 மணிக்கு திரிகால ஜெபத்திற்காக தேவாலய மணி அடிக்கத்துவக்கிய போது, பாக்கியமாய்மரித்தார்‌. 1839ம்வருடம்‌, இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது; 1871ம்வருடம்இவருக்கு வேதபாரகர்பட்டம்அளிக்கப்பட்டது. 1950ம்வருடம்‌, பாவசங்கீர்த்தனம்கேட்கிற ஆன்ம குருக்களுக்கும்‌, நல்லொழுக்க வேத இயல்அறிஞர்களுக்கும்‌ , பாதுகாவலர்என்று அறிவிக்கப்பட்டார்‌.

 கனியை விரும்புகிற எவனும்கட்டாயமாக அதனுடைய மரத்தினிடம்செல்ல வேண்டும்‌; நமதாண்டவரான திவ்ய சேசு கிறீஸ்து  நாதரை ஆசிக்கிற எவனும்கட்டாயமாக அவருடைய மகா பரிசுத்த  மாதாவிடம்செல்ல வேண்டும்‌! மகா பரிசுத்த தேவ மாதாவை யாரெல்லாம்கண்டடைகின்றனரோ, அவர்களெல்லாம்‌, மிகவும்நிச்சயமாக, நமதாண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமியைக்கண்டடைந்து கொள்வார்கள்!”  

அர்ச்‌.அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியார்‌. 

அர்ச்‌.அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!




Books by St. ALphonsus 

Visits to Jesus and Mary : excerpted from visits to - Link the most blessed Sacrament and the Blessed Virgin Mary  


The Glorious of Mary - Link


The practice of the love of Jesus Christ - Link




If you want any book from Archeive.org about St. Alphonsus Liguori 
I can download it for you. 
Contact me on Email (lourdhurobin@gmail.com) or Telegram or https://t.me/Lourdhurobin

August is the Month of Immaculate Heart of Mary - Aug. 2

 

ஆகஸ்டு 02ம் நாள்

அப்போஸ்தலரான அர்ச்.சின்னப்பர் கூறுவதற்கேற்ப  நமதாண்டவர், தமது ஞான சரீரமாகிய திருச்சபைக்கு தலையாகவும், நாம் அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம். அப்படியென்றால், நாம் கட்டாயமாக, ஆண்டவருடைய இஸ்பிரீத்துவினால், உயிரூட்டப்பட வேண்டும்; அவருடைய ஏவுதல்களை நாம் நிச்சயமாகப் பின்பற்றி ஜீவிக்க வேண்டும்; ஆண்டவர் நடந்து சென்ற பாதையைப் பின்பற்றி நடக்க வேண்டும்! ஆண்டவர் இப்பூமியில் ஜீவித்தபோது அனுசரித்த சகல புண்ணியங்களையும், நாமும் அனுசரிக்க வேண்டும்! மகா பரிசுத்த தேவமாதாவின் மீது நாம் கொண்டிருக்கிற பக்தி, நமதாண்டவர் தாமே, தமது மகா பரிசுத்த மாதாவின் மீது கொண்டிருந்த பக்தியின் தொடர்ச்சியாகக் கட்டாயமாக  இருக்க வேண்டும், என்பதை இதிலிருந்து, நாம் கண்டுணரவேண்டும். பூமியிலிருந்த போது, ஆண்டவர் தமது மகா பரிசுத்த மாதாவின் பேரில் கொண்டிருந்ததும், இன்னும் கொண்டிருக்கிறதுமான மேரை மரியாதை யினுடையவும், கையளித்தலினுடை யவும், பற்றுதலினுடையவும் உணர்வுகளால் நாமும் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும் 

மகா பரிசுத்த மரியாயின் மதுரமான இருதயமே! என் இரட்சணியமாயிரும்!

மகா பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயமே! வாழ்க! 



August is the Month of Immaculate Heart of Mary - August 1

 


ஆகஸ்டு 1ம் நாள்


 

போற்றுதற்குரிய மகா பரிசுத்த தேவமாதாவின் மாசற்ற திரு இருதயத்தின் மீதான பக்தியினுடைய மையப்பொருள்

 

மகா பரிசுத்த தேவமாதாவின் போற்றுதற்குரிய மாசற்ற திரு இருதயம்அர்ச்.யூட்ஸ் அருளப்பர்

மகா பரிசுத்த தேவமாதாவின் மாசற்ற திரு இருதயம், போற்றுதற்குரிய மாசற்ற திரு இருதயம் என்று அழைக்கப் படுவதற்கான காரணங்கள்: சர்வேசுரனுடைய ஏகக் குமாரனும், நமதாண்டவருமான திவ்ய சேசுகிறீஸ்து நாதருமானவர் தாமே, சகல சிருஷ்டிகளிலிருந்து, தன்னிகரற்றவர்களும், ஒப்பிடப்படமுடியாதவர்களுமான மகா பரிசுத்த திவ்ய கன்னிமாமரியைத் தம்முடைய பரிசுத்தத் தாயாராகத் தேர்ந்தெடுத்து, அவர்களாலேயே, தாம் போஷிக்கப்படவும், ஆண்டு நடத்தப்படவும், வேண்டுமென்று, தயவுடன் திருவுளம் கொண்டார்! மேலும், ஆண்டவர் தமது மகா பரிசுத்த மாதாவை, நம்முடைய  திவ்ய இராக்கினியாகவும், நமது தாயாராகவும், நம் எல்லா தேவைகளிலும், நம் நிச்சயமான அடைக்கல தஞ்ச ஸ்தல மாகவும் இருக்கும்படியாகவும், நமக்கு அளித்திருக்கிறார்! ஆகவே தான், நமதாண்டவர். தாம் தமது மகா பரிசுத்த மாதாவை மகிமைப்படுத்துவதைப் போலவும், சிநேகிப்ப தைப் போலவும், நாமும், நம் மகா பரிசுத்த தேவமாதாவை மகிமைப் படுத்தவும், சிநேகிக்கவும் வேண்டுமென்று ஆசிக்கின்றார்!

மகா பரிசுத்த மரியாயின் மதுரமான இருதயமே! என் இரட்சணியமாயிரும்!

மகா பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயமே! வாழ்க!  


August the Month of Immaculate Heart of Mary - August 1



Download - Catholic Books