Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 16 ஜூலை, 2023

ஜூலை -15 அர்ச். ஹென்றி அரசர், துதியர்

 ஜூலை -15

அர்ச். ஹென்றி

அரசர், துதியர்



பிரவேச கீதம்: சங். 36: 30-31

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும்: அவருடைய நாவு நியாத்தை பேசும். அவருடைய சர்வேசுரனின் நியாயப்பிராமாணம் அவருடைய இருதயத்திலிருக்கிறது. (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 1). பொல்லாதவர்களை குறித்து அருவருப்படையாதே. அக்கிரமம் செய்கிறவர்களின்பேரில் கொள்ளாதே. - பிதாவுக்கும் . . . 

சபைச் செபம்

சர்வேசுரா, தேவரீர் உம்முடைய துதியரான முத்திப் பேறுபெற்ற (அர்ச். ஹென்றி. ) வருஷாந்ததிர திருநாளினால் மகிழச் செய்கீறிரே. அவருடைய பரலோக பிறப்புநாளை கொண்டாடுகிற நாங்கள் அவருடைய முன்மாதிரிகளை பின்பற்றி நடக்கத் தயவாய்க் கிருபை செய்தருளும். - தேவரீரோடு ...

ஞானாகமத்திலிருந்து வாசகம்

சர்வ. 31. 8-11

 குற்றமில்லாது காணப்பட்ட ஆஸ்திக்காரன் பாக்கியவான்; பொன்னின் பின் போகாதவனும், பணத்திலுந் திரவியத்திலும் நம்பிக்கை வையாதவனும் பாக்கியவான்.  அவன் யார்? அவனைப் புகழுவோம்; ஏனெனில், தன் சீவியகாலத் தில் அதிசயங்களைச் செய்தான்.  அதில் பட்சிக்கப்பட்டு உத்தமனானவன் எவனோ அவனுக்கு நித்திய மகிமை கிடைக்கும்; மீறி நடந்திருக்கக்கூடும்; ஆனால் மீறினவனல்ல, தின்மை செய்திருக்கக் கூடும், ஆனால் செய்யவில்லை. ஆனதால் அவன் பொருட்கள் ஆண்டவரிடத்தில் நிலையாக்கப்பட்டன; பரிசுத்தருடைய சபையாவும் அவன் தர்மங்களைப் பிரசித்தப்படுத்தும்.

படிக்கீதம்: சங். 91: 13-14

நீதிமான் பனையைப்போல் வளம்பெற்று லீபானிலுள்ள சேதுரு மரத்தைப்போல் ஆண்டவருடைய ஆலயத்திலே செழித்தோங்குவான். - (சங். 3.) காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிக்கும்படியாக.

அல்லேலுய்யா, அல்லேலுய்யா. - (இயாக. 1: 12) துன்பத்தை சகிக்கிறவன் பாக்கியவான். ஏனெனில் அவன் சோதிக்கப்பட்ட பின்னர் சீவியத்தின் முடியைப் பெற்றுக் கொள்வான். அல்லேலுய்யா.

சுவிசேஷம்

அர்ச். லூக்கா எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி:

லூக். 12: 35-40

அக்காலத்தில்: சேசுநாதர் தம் முடைய சீஷர்களுக்குத் திருவுளம்பற்றின தாவது: உங்கள் இடைகள் வரிந்து கட்டப்பட்டிருக்க, எரிகிற விளக்குகள் உங்கள் கரங்களில் இருக்கக்கடவன. தங்கள் எசமான் கலியாணத்திலிருந்து எப்பொழுது திரும்புவானோ என்று காத்துக்கொண்டு, அவன் வந்து கதவைத் தட்டினவுடனே திறக்கும் ஊழியரை ஒத்தவர்களாக இருங்கள். எசமான் வரும்பொழுது விழித்திருக்கக் காணும் அவ்வூழியர்களே பாக்கியவான்கள். அவன் தன் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியில் அமர்த்தி, அருகில் வந்து அவர்களுக்குப் பரிமாறுவானென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்கிறேன். அவன் இரண்டாஞ் சாமத்தில் வந்தாலுஞ்சரி, மூன்றாஞ் சாமத்தில் வந்தாலுஞ்சரி, அவ்வண்ணமே அவர்கள் விழித்திருக்கக் காண்பானாகில், அவ்வூழியர்கள் பாக்கியவான்களாமே. மேலும், குடும்பத் தலைவன் திருடன் வரும்மணிநேரத்தை அறிந்திருப்பானாகில், சந்தேகமில்லாமல் விழித்திருந்து தன் வீட்டைக் கன்னமிட விடமாட்டான் என்பதை அறியக்கடவீர்கள். அப்படியே நீங்களும் ஆயத்தமாயிருங்கள்; ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார், என்றார்.

ஒப்புக்கொடுத்தல்: சங்.88:25

நமது உண்மையும், நமது இரக்கமும் அவரோடிருக்கும்; நமது நாமத்தால் அவருடைய வல்லமை உயரும். [பா.கா.: அல்லேலுய்யா.)

காணிக்கைச் செபங்கள் 

எல்லாம்வல்ல சர்வேசுரா, உமது அர்ச்சிஷ்டவருடைய மகிமைக்காக நாங்கள் தாழ்மையுடன் அளிக்கும் இக்காணிக்கை உமக்கு உகந்ததாகி. எங்கள் உள்ளத்தையும் உடலையும் தூய்மைப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு ...

அமைதி மன்றட்டு 

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்களின் ஞாபகமாகத் தோத் திரப் பலிகளைத் தேவரீருக்குப் பலியிடுகிறோம்: இவைகளினால் இப்பொழுதும் எப்பொழுதும் நேரக் கூடிய தீமைகளினின்று விடுதலையாவோம் என நம்பியிருக் கிறோம்.- தேவரீரோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்

உட்கொள்ளுதல்: மத் 24: 46-47

எசமான் வரும்போது விழித்திருக்கிறவனாய்க் காணப்படும் ஊழியன் பாக்கியவான்; தன் செல்வம் அனைத் துக்கும் அவனை அதிகாரியாக ஏற்படுத்துவான், என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். [பா.கா.: அல்லேலுய்யா.)

உட்கொண்டபின்

செபிப்போமாக: எங்கள் சர்வேசுரா, பரலோக போசனத்தினாலும்  பானத்தினாலும் உண்பிக்கப்பட்ட நாங்கள் யாருடைய ஞாபகமாக அவற்றைப் பெற்றுக் கொண்டோமோ, அவருடைய செபங்களினால் பாதுகாக்கப்படத் தேவரீரை இரந்து மன்றாடுகிறோம்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக