Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 21 பிப்ரவரி, 2019

St. Therese Quotes (Tamil) 1

ஆன்மாக்களுக்குப் போதிக்க இயேசுவுக்கு நூல்களோ, அல்லது கற்றறிந்த ஞானிகளோ தேவையில்லை. மறை வல்லுனர்களுக்கெல்லாம் மறை வல்லுனராகிய அவர் வார்த்தைகளின் ஒலி இன்றியே கற்பிக்கிறார் (கிறீஸ்துநாதர் அநுச்சாரம், மூன்றாம் பிரிவு, அத். 43:3). அவர் பேசியதை நான் ஒருபோதும் கேட்டதேயில்லை. ஆனாலும் அவர் எனக்குள் இருக்கிறார் என்பதை நான் அறிவேன்.

                                                         அர்ச். குழந்தை தெரசம்மாள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக