Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 4 மே, 2019

OUr Lady Quotes 3


சகல மோட்சவாசிகளுக்கு முன் உம்மை என் அன்னையாகவும், ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன்.  உமது அடிமையாக, என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் என் உள்ளத்தையும் ஐம்புலன்களையும் என் ஜீவிய காலம் முழுவதும் நான் செய்யும் நற்செயல்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  என்னையும் எனக்கு சொந்தமான யாவற்றையும், இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்திற்காக, உமது பிரியப்படி, நீரே முழு உரிமையுடன் ஆண்டு நடத்த கையளிக்கிறேன்.
‡ ஆமென்.

மரியாயின் மாசற்ற இருதயமே எங்கள் இரட்சண்யமாயிரும்.

மரியாயின் மதுரமான இருதயமே
எங்கள் இரட்சண்யமாயிரும்

சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே
எங்கள் பேரில் இரக்கமாயிரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக