Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

ஆகமன காலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான ஞானப் பிரசங்கம் அர்ச். பதுவை அந்தோணியார்

 


ஆகமன காலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான ஞானப் பிரசங்கம்
அர்ச். பதுவை அந்தோணியார் 

ஆண்டவரிடத்தில் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்! (பிலி 4:4).



அந்த நாளில், யூதா நாட்டில் இச்சங்கீதம் பாடப்படும்; எங்கள் வலுமையின் பட்ட ணமாகிய சீயோனின் பாதுகாவலர் ஆண்டவரே; அவரே அதின் சுவராகவும் கொத்தளமா கவும் இருப்பார். கதவைத்திறந்து விடுங்கள்; உண்மையைக்கடைபிடித்த நீதியுள்ள ஜனமா னது உட்பிரவேசிக்கட்டும் (இசை 26:1, 2) என்று இசையாஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார்.

அந்த நல்ல நாள், தேவ வரப்பிரசாதத்தினுடைய ஒளிரும் பிரகாசமாக இருக்கிறது. ஏனெனில், அந்த தேவ வரப்பிரசாதத்தினால், நாம் ஞானவிதமாக ஒளியூட்டப்படுகிறோம். அவ்விதமாக ஒளியூட்டப்படும் போது, நாம், இசையாஸ் தீர்க்கதரிசி கூறுகின்ற அந்த சங்கீதத்தை பாடுவோம். அப்போது, ஆரவார உற்சவ இரவு காலத்திய பாடற்போல சங்கீதம் பாடுவீர்கள்; உங்கள் இருதய மகிழ்ச்சியானது இஸ்ராயேலின் வல்லபரான கடவுளுடைய பர்வத ஆலயத்துக்கு, தொழுகைக்குப் போக இசைக்குழல் கோஷணையோடு , செல்பவனின் சந்தோஷத்தைப் போலிருக்கும் (இசை. 30:29).

பாவப்பொறுத்தல் கேட்டு மன்றாடும் ஒரு பாவியின் தவச்சங்கீதமானது, அந்த ஆரவார உற்சவ இரவு காலத்திய பாடற்சங்கீதத்தின் குரலொலியாகத் திகழ்கிறது. ஏனெனில், அந்த தவச் சங்கீதம், பாவியை அர்ச்சிக்கும் ஞான வழியை நோக்கி இட்டுச் செல்கிறது; பாவியின் மனந்திரும்புதல் குறித்து, மோட்சத்தில் சம்மனசுகளிடையே மாபெரும் மகிழ்வுகளும் கொண்டாட்டங்களும் நடைபெறும்; அவ்விதமே, தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம், தேவதூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷம் உண்டாயிருக்கும் (லூக் 15:10).

இந்த ஆரவார உற்சவத்தினின்று, பாவியின் இருதயத்தில் சந்தோஷம் உதயமாகிறது. இதைக் குறித்து, இசையாஸ் தீர்க்கதரிசி , சந்தோஷத்திலுள்ளவனையும், நீதியில் வாழ்பவனையும், நீர் நேருக்கு நேராக சந்தித்தருளினீர், என கூறுகின்றார் (இசை 64:5). இசைக் குழல் என்பது, ஒருவன் தனது பாவங்களுக்காகத் தன்னையே நிந்தித்துப் பாவப்பரிகாரம் செய்வதற்காகப் பாடும் தவச்சங்கீதத்தினுடைய இசையாகத் திகழ்கின்றது; ஒருவன், தவச்சங்கீதத் தினுடைய இசைக்கருவியாகிய இந்த இசைக்குழலை, நன்கு பயன்படுத்தி, ஏற்புடைய விதமாக, இசையை எழுப்புவானேயாகில், இஸ்ராயேலின் வல்லபரான சர்வேசுரனும் நம் தாண்டவருமான சேசுகிறீஸ்துநாதரைக் காண்பதற்காக, நமதாண்டவரின் பர்வதமாகிய பரலோக ஜெருசலேமிற்குள், சந்தோஷத்துடன் உட்பிரவேசிப்பான். அப்படியெனில், இந்தப் பாடல் எங்கே பாடப்படுகிறது? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? இசையாஸ் தீர்க்கதரிசி கூறுவதுபோல், இந்தப் பாடல், மனந்திரும்பும் பாவிகளின் நாடாகிய யூதேயா நாட்டில் இப்பாடல் பாடப்படும். அக்காலையில் யூதா நாட்டின் அழிவானது, எகிப்திற்குத் திகில் கொடுக்கும் (இசை. 19:17). அதாவது, உலகத்திற்கு, அது திகில் கொடுக்கும். உலகத்தின் மக்கள், நீதிமான்கள், பரிகாரம் என்ற சிலுவையில் அறையப்படுவதைக் காணும்

கப் போது, திகிலடைவார்கள். நமதாண்டவர் அனுவித்த கொடூரமான சிலுவைப் பாடுகளையும், மரணத்தையும் கண்ட மக்களைப் பற்றி, சுவிசேஷகரான அர்ச்.லூக்காஸ், இந்தக் கண் ணராவியைப் பார்க்கும்படி வந்திருந்த ஜனங்களெல்லோரும், நடந்தவைகளைக் கண்டு, தங்கள் மார்பில் அறைந்து கொண்டு திரும்பிப்போனார்கள் (லூக் 23:48) என்று கூறுகின்றார்.

இசையாஸ் ஆகமத்தில், மனந்திரும்பிய பாவி, நாள் முழுவதும் சதா நின்று கொண்டு : ஆண்டவருடைய வேவுகார வேலையின் மேல் யான் இருக்கிறேன்; இரவு முழுவதும் நின்று காவல் காக்கும் வேலையில் நான் இருக்கிறேன் (இசை 21:8) என்பான். செல்வம் மனிதனை உயர்த்துகிறது; துன்பமோ, அவனை வீழ்த்துகிறது; ஆகையால், பாவியானவன், நான் ஆண்டவருடைய தேவ வரப்பிரசாதத்தினால் ஒளியூட்டப்பட்ட தபசு என்கிற வேவுக் கார கோபுரத்தின் மீது நின்று கொண்டிருக்கிறேன் என்பான். அவன் நின்று கொண்டிருந் தான் என்பது, வளமிக்க நாள் முழுவதும், தனது நோக்கத்திலிருந்து விலகாமல், அதில் உறுதியாக நிலைத்திருப்பதையே அது குறிக்கிறது; மேலும், துன்பதுயரமாகிய இரவு நேரம் முழு வதும், கண்காணிப்பாளனாக, வேவுக்கார வேலையில் அவன் ஈடுபடுவது என்பது, அவன் சகல பாவங்களிலிருந்தும், தன் மட்டில் விழிப்பாயிருந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்வான் என்பதைக் குறிக்கிறது. மனஸ்தாபப்படும் பாவிகள், சீயோன் நகரத்தைத் தங்களு டைய வலிமையின் பட்டணமென்று அழைப்பார்கள். ஏனெனில், சீயோன் என்பது தபசைக் குறிக்கிறது; தபசு, நம்மை பகல் பொழுது என்கிற வளமையின் போது, பாவத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் காப்பாற்றுகின்றது. அதே தபசு, துன்பம் என்னும் இருளடர்ந்த இரவுப்பொழுதிலும், அத்துன்ப துரிதங்கள் நம்மை மேற்கொள்ளாதபடி, நம்மைப் பாதுகாத்துக் காப்பாற்றுகின்றது.

சம்மனசுகள் சேனையின் ஆண்டவராகிய சேசுநாதர், மனஸ்தாபப்படும் பாவிகளுடைய கூட்டமாகிய ஜெருசலேம் நகரத்தை, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளுக்குள் வைத்துப் பேணிக் காப்பது போல், பாதுகாக்கின்றார். தமது மனிதத்துவத்தின் நிழலினால், நம் தாண்டவர், பாவிகளின் கூட்டத்தைக் காப்பாற்றுகின்றார் என்று கூறுகிறேன். அந்த பாவிகளின் ஜனக்கூட்டத்தை, நமதாண்டவர், தமது தேவத்துவத்தின் வல்லமையினால், பாவத் தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறார். அவர்களைத் தமது கொடியசிலுவைப் பாடுகளின் போது, சிந்தியதிரு இரத்தத்தினுடைய கசப்பு நிறைந்த தபசு என்கிற செங்கடல் வழியாகக் கடந்து போகும்படிச் செய்கிறார். தேனும் பாலும் ஓடும் வாக்குதத்தத்தின் பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்து அவர்களை, முழுவதுமாக மீட்டு இரட்சிக்கின்றார். அதன்பின், ஆண் டவர், சம்மனசுகளிடம், மோட்சத்தின் கதவைத் திறந்து விடுங்கள்; சுவிசேஷத்தின் உண்மையைக் கடைபிடித்த நீதியுள்ள ஜனமாகிய மனந்திரும்பிய பாவிகள் உட்பிரவேசிக்கட் டும், என்று கூறுவார். சுவிசேஷ உண்மையின் படி, தங்களுடைய பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பிய இத்தகைய மனிதர்களிடமே, இன்றைய நிரூபத்தில், ஆண்டவரி டத்தில் எப்போதும் சந்தோஷமாயிருங்கள், என்று அப்போஸ்தலர் கூறுகின்றார். ஆரவார உற்சவ இரவு காலத்திய பாடற்போல சங்கீதம் பாடுவீர்கள்; உங்கள் இருதய மகிழ்ச்சியா னது இஸ்ராயேலின் வல்லபரான கடவுளுடைய பர்வத ஆலயத்துக்கு, தொழுகைக்குப் போக இசைக்குழல் கோஷணையோடு, செல்பவனின் சந்தோஷத்தைப் போலிருக்கும் என்று இசையாஸ் ஆகமமும், இந்த நீதியின் ஜனமாகிய மனந்திரும்பிய பாவிகளின் சந்தோஷத்தைப் பற்றியே விவரிக்கின்றது. -

அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக