Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 17 செப்டம்பர், 2018

முதல் சங்கீதம்

முதற் சங்கீதம்

1. துர்மார்க்கரின் ஆலோசனையின்படி நடவாமலும் பாவிகளுடைய வழியில் நில்லாமலும் துர்(ப்போதனையின்) பிரசங்காசனத்தில் உட்காராமலும்,
2. ஆண்டவருடைய பிரமாணத்தில் மனதை இருத்தி இரவும் பகலும் அவர் கற்பனையைத் தியானிக்கிறவனே பாக்கியவான்.
3. அவன் நீர் வாய்க்கால் ஓரத்தில் நாட்டப்பட்டுத் தன் காலத்தில் கனி கொடுத்து இலை உதிராமலிருக்கும் மரத்துக்கொப்பாயிருப்பான். அது தக்க காலத்தில் கனி கொடுத்தது போலவும், தன் இலை உதிராமலிருக்கிறது போலவும் அவன் செய்த தெல்லாம் அநுகூலமாம்.
4. ஆனால் துர்மார்க்கர்களோ! அப்படியல்லவே! புசலால் அடிக்கப்பட்ட தூசி போல இவ்வுலகில் சிதறடிக்கப்படுவார்கள் 5. * ஆதலால் துர்மார்க்கர் ஞாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் கூட்டத்திலும் எழுந்து நிற்பதில்லை. 6. ஏனெனில் ஆண்டவர் நீதிமான்களுடைய வழியை அறிந்திருக்கிறார். துர்மார்க்கருடைய வழி அழிந்துபோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக