Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 7 செப்டம்பர், 2016

செப்டம்பர் மாதம் 9-ம் தேதி


 St. Omer, Bishop        
அர்ச்.ஓமெர் - மேற்றிராணியார் (கி.பி.670)  

               இவர் உத்தம கோத்திரத்தாரும் தனவந்தருமான தாய் தந்தையிட மிருந்து பிறந்து, உலக சாஸ்திரங்களையும் வேதசாஸ்திரங்களையும் கற்று, தர்ம வழியில் நடந்து வந்தார். சிறு வயதிலேயே இவர் தெய்வ பக்தியுள்ளவராய் நடந்து, தேவ பணிவிடையில் பிரவேசிக்க ஆசையாயிருப்பதைக் கண்ட அவருடைய தந்தை சந்தோஷப்பட்டு அதற்கான நல்ல ஆலோசனையும் அவருக்குச் சொல்லி வந்தார்.  தன் தாய் இறந்தபின் ஓமெர் துறவியாகப் போக இருப்பதையறிந்த அவர் தகப்பனும் தமது சொத்துக்களையெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு தன் குமாரனுடன் ஒரு சன்னியாச மடத்தில் சேர்ந்தார். ஓமெர் துறவற மடத்தைப் பூலோக மோட்சமாகப் பாவித்து சகல புண்ணியங்களிலும் மேற்கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்தார்.  வாரத்தில் மூன்று நாள் ஒருசந்தி பிடித்து இரத்தம் வரத் தமது சரீரத்தைத் தண்டித்து, வெகு நேரம் ஜெபத்தியானஞ் செய்து தரையில் படுத்து, அரிதான தவம் புரிந்து வந்தார். இவருடைய மேலான ஞானத்தையும் கல்வியையும் குறித்து மேற்றிராணியாராகக் கட்டாயப்படுத்தப்பட்டார். 
                    இந்த மேலான  அந்தஸ்திற்கு ஓமெர் உயர்த்தப்பட்டபின் முன்னிலும் அதிக புண்ணியங்களைச் செய்து, தம்மை நீசனாகக் தாழ்த்தி, தமது கிறீஸ்தவர்களுக்காக ஜெபித்து ஒருசந்தி பிடித்து, தவம் புரிந்து இடைவிடா பிரசங்கத்தால் அஞ்ஞானிகளை சத்திய வேதத்தில் திருப்பி, சிலைகளையும் பள்ளிவாசல்களையும் தகர்த்து, அசமந்தரை விசுவாசத்தில் திடப்படுத்தி, தமது மேற்றிராசன கிறீஸ்தவர்         களை உத்தம விசுவாசிகளாக்கினார். தமது உழைப்புக்குச் சம்பாவனையான மோட்சத்தைப்பற்றி நினைத்துப் பாக்கியமான மரணமடைந்து அதில் மகிமை யுடன் பிரவேசித்தார்.    

யோசனை
பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் தேவ ஊழியத்தில் சேர மனதாயிருப்பதாக நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு தடங்கல் செய்யாதேயுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக