Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

செப்டம்பர் மாதம் 4-ம் தேதி : St. Rosa of Viterbo, V


       St. Rosa of Viterbo, V.   
அர்ச்.விற்றர்போரோசம்மாள் - கன்னிகை (கி.பி.1258)  

           ரோசம்மாள் இத்தாலியா தேசத்திலுள்ள விற்றர்போ நகரில் பிறந்து, குழந்தையாய் இருக்கும்போதே தேவ கிருபையால் அநேக புதுமைகளைச் செய்துவந்தாள்.  அக்காலத்தில் பிரேடெரி என்னும் இராயன் கர்வங்கொண்டு, திருச்சபைக்குப் பல துன்பங்களைச் செய்து மேற்றிராணிமாரை அவசங்கைப் படுத்தி, பாப்பாண்டவரையும் பலவாறாய் நிர்பந்தப்படுத்தினான்.  மூன்று வயது குழந்தையான ரோசம்மாள் மௌள மௌள நகர்ந்து கோவிலுக்குப் போய், தேவநற்கருணை பெட்டிக்கு முன் வெகு நேரம் என்னமோ கேட்பது போல கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள்.

            10-ம் வயதில் விற்றர்போ நகரிலுள்ள பெரிய மைதானத்தில் அவ்வூர் ஜனங்களுக்குமுன் ஒரு பிரமாண்டமான பாறையின்மேல் ஏறி, சகல கிறீஸ்தவர்களும் சத்திய திருச்சபையில் ஒற்றுமை யாயிருந்து சேசுநாதருடைய பதிலாளியான அர்ச்.பாப்பாண்டவர் சொற்படி  கேட்டு நடக்க வேண்டுமென்று பிரசங்கிக்கும்போது, அவள் நின்ற பாறை மேலே உயர்ந்து, அவள் பேசி முடித்தபின் அது முன்போல தாழ இறங்கினது. இவ்வாச்சரியத்தைக் கண்ட ஜனங்கள் அதிசயித்து திருச்சபைக்குப் பிரமாணிக் கமான பிள்ளைகளானார்கள். இராயன் இதைப்பற்றி கேள்விப்பட்டு, ரோசம்மா ளைப் பரதேசத்திற்கு அனுப்பி விட்டான்.  அவ்விடத்தில் அவள் திருச்சபைக் காகப் பிரயாசைப்பட்டதினால், சீக்கிரத்தில் திருச்சபைக்கு சமாதானமுண்டாகி, கொடுங்கோலன் இராச்சியபாரத்தை இழந்தான்.  ரோசம்மாள் ஒரு குகையில் வசித்து, ஜெப தபத்தில் ஈடுபட்டு 18-ம் வயதில் மரித்துப் பரகதி சேர்ந்தாள்.  

யோசனை
திருச்சபையை அல்லது அதன் போதகர்களை விரோதிக்கும் மனிதருடன் நட்பு வைக்கலாகாது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக