Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 7 செப்டம்பர், 2016

செப்டம்பர் மாதம் 7-ம் தேதி

செப்டம்பர் மாதம் 7-ம் தேதி
 St. Regina, V.M.
அர்ச்.ரெஜினாஅம்மாள் - கன்னிகை, வேதசாட்சி (கி.பி.256) 


         ரெஜினா அம்மாள் பிரான்ஸ் தேசத்தில் அஞ்ஞானிகளான பெற்றோரிட மிருந்து பிறந்தாள். அவள் பிறந்த சில நாட்களுக்குள் அவளுடைய தாய் இறந்தபடியால், அவளுக்கு பாலூட்டி வளர்க்கும்படி அக்குழந்தையை நற்குணசீலியான ஒரு கிறீஸ்தவளிடம் அவள் தகப்பன் கொடுத்தான். அந்த ஸ்திரீ குழந்தையை கவனத்துடன் வளர்த்து, அவளுக்கு வயது வந்தபோது, சத்திய வேதத்தை அவளுக்கு உணர்த்தினதினால், ரெஜினா அம்மாள் ஞானஸ்நானம் பெற்று, சத்திய வேதக் கடமைகளை சரிவர அனுசரித்து, தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். இந்த செய்தியை அறியாத அவள் தகப்பன் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டான். 

    கபடற்ற ரெஜினா அடிக்கடி தனியாக வெளியே போய் உலாவி வரும்போது அவளுடைய அழகைக் கண்ட அநேக வாலிபர் அவளை மணமுடித்துக்கொள்ள ஆசித்து, அவளுடைய தகப்பனுக்குக் தங்கள் கருத்தை வெளியிட்டார்கள். தகப்பன் திருமணத்தைப்பற்றி மகளோடு பேசியபோது, அவள் அதற்குச் சம்மதியாத தையும் அவள் கிறீஸ்தவளாயிருப்பதையும் அவனறிந்து அவளைத் தன் வீட்டினின்று துரத்தி விட்டான்.  ரெஜினா தன்னை வளர்த்த தாயினிடம் போய்ச் சேர்ந்தாள். இதையறிந்த அதிகாரி அவளை வரவழைத்து கிறிஸ்தவ வேதத்தை விட்டுவிட்டு தன்னைக் திருமணம் செய்துகொள்ளும்படியாக பயமுறுத்தினான்.  அதற்கு அவள் சம்மதியாததை அவன் கண்டு இவளை கொடூரமாய் அடித்து உபாதித்தபோது, அங்கு கூடியிருந்த திரளான அஞ்ஞானிகளுக்கு சத்திய வேதத்தின் மகிமையைப்பற்றி பேசினாள். அப்போது ஒரு மாடப்புறா ஒரு முடியை மூக்கால் கவ்விக்கொண்டு வந்து அவள் தலைமேல் வைத்தது.  இதைக் கண்ட அஞ்ஞானிகளில் 751 பேர் கிறீஸ்தவர்களானார்கள். இதனால் அதிகாரி சினங் கொண்டு வேதசாட்சியின் தலையை வெட்டுவித்தான்.

யோசனை
வாலிபப் பெண்கள் தக்க துணையின்றி வெளியிடங்களுக்குச் செல்வது ஒழுங்கல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக