Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 16 பிப்ரவரி, 2015

Comedy of Protestants.... Don't believe them.....



கள்ள போதகர்கள்  குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.  அவர்கள் தங்களுடன் சேர்த்து பிறரையும் நரகத்துக்கு கூட்டி செல்கிறார்கள்.  ஆண்டவரே ஆண்டவரே என்று கூப்பிடுகிறவர்கள் எல்லாம் இரட்சிக்கப் படபோவதில்லை...
அவர்கள் பல விதங்களில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.  ஜெபக்கூட்டம் என்றும்,  ஊழியம் என்றும், நற்செய்தி பெருவிழா  என்றும்,  குணமளிக்கும் விழா என்று பல்வேறு விதங்களில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
 அவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளை டிவி போன்றவற்றில் பார்த்து தாங்கள் அங்கு சென்றால் இரட்சிக்க படுவோம்  என்று எண்ணி அங்கும் இங்கும் செல்கின்றனர்.
தங்கள் வீட்டின் அருகிலே ஆலயம் இருக்க அவர்கள்  அங்கு ஒருநாள் கூட செல்லாமல் எங்கோ நடக்கிற கூட்டங்களுக்கு செல்கின்றனர்.

ஆலயங்களில் நடக்கிற பணிகளுக்கு பொருள் உதவியோ அல்லது பண உதவியோ செய்ய முன் வராதவர்கள்,  ஊழியம் என்று  பணம் கேட்பவர்களுக்கு வாரி இறைக்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன்பு இவர்கள் எல்லாம் எங்கு இருந்தார்கள்.  CSI Pentocost போன்ற சபைகள் எல்லாம் எங்கோ ஒரு சில ஊர்களில் மட்டுமே இருந்தன.  காரணம் அப்போது நம்மிடம் மரியாவின் மீது பக்தி இருந்தது.  ஜெபமாலை சொல்லும் பழக்கம் இருந்தது. நமக்கு ஒரு கஷ்டம் வரும் போது கோவில் சென்று நமது கஷ்டங்களை தாய் மரியிடம் சொல்லி அழுதோம்.
ஆனால் இன்று ஏன் மாதாவிடம் செல்ல வேண்டும்.  அவர்களை என் நாம் நினைக்க வேண்டும்.  அவள் ஒரு சாதாரண பெண் என்று ஏளனம் செய்கின்றனர்.
தேவ தாய் இந்த உலகில் செய்த புதுமைகள் எல்லாம் அறிவியல் ரீதியில் சோதனை செய்து அதன் பின் தான் அது புதுமைகள் எல்லாம் உண்மையிலே புதுமைகள் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டது.  உதரணமாக : தேவ தாய் லூர்து நகரிலே காட்சி அளித்தது...லூர்து நகர் அதிசய குளத்தில் குளித்து குனமானவர்களை பல்வேறு மருத்துவர்கள்(Christian, non- Christian, scientist) நன்கு சோதித்து பின் தான் அதை அவர்கள் புதுமை என்று அறிவித்தனர்.

அனால் இன்று டிவி யில் வரும் கள்ள போதகர்களால் செய்யப்படுகிற பித்தலாட்டங்களை நம்புகின்றனர்.




இந்த போக்கை நம் கத்தோலிக்க முறையிலும் கொண்டு வருகின்றனர்.  இது நாம் தேவ அன்னை மரியாவின் மீது பக்தி குறைவதினால் ஏற்படுகிறது....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக