Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 10 ஜூன், 2013

அர்ச். மார்கரெட் கோர்டன (St. Margaret of Cortona)





       இவர் ஒரு விவசாயின் மகள். இவருக்கு ஏழு வயது நடக்கும் பொது இவர் தனது அன்னையை இழந்தார். அவருடைய தந்தை இரண்டாவது திருமணம் முடித்தார். அவரது சித்தி அவரை ஒரு தொந்தரவு என்று நினைத்தார்.  மார்கரெட்  ஒரு பணக்கார வாலிபனை திருமணம் செய்து கொண்டார். 1274 அவரது கணவர் கொலை செய்ய பட்டு அவரது உடலை ஒரு கல்லறையில் போட்டனர்.

      இந்த சம்பவதிருக்கு பிறகு அவர் தன் தந்தை வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அனால் அவர் தந்தை அவரை வீட்டில் சேர்த்து கொள்ள வில்லை.அவரும் அவரது மகனும் Cortona என்ற இடத்தில இருந்த துறவிகள் மடத்தில் தங்க அனுமதி அளித்தனர்.அவருக்கு பல வேளைகளில் கெட்ட சிந்தனைகளால் அவதிப்பட்டார். ஒரு சமயம் அவர் அந்த பாவத்தை செய்வதற்கு முடிவு செய்து ஒரு வாலிபனை அணுக சென்றார், ஆனால் அவரை ஒரு துறவி அவரை தடுத்து நிறுத்தினார்.



         1286 மார்கரெட் தன்னை போல் உதவி செய்பவர்களை சேர்த்து ஒரு சபையை உருவாக்கினார். பின்னர் அந்த சபையை ஒரு தனி சபையாக அங்கிகரித்து  அதனை Poverelle (Poor Ones ) என்று அழைக்க பட்டனர். அவர்களுடைய உதவியால் ஒரு மருத்துவனையை கோர்டன  என்ற இடத்தில கட்டினார். அவர் திவ்விய நற்கருணை பேரில் மிகுந்த நம்பிக்கை பக்தி வைத்து இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக