Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 17 ஜூன், 2013

திருச்சபை

சேசு நாதர் இராயப்பரை நோக்கி," நீ இராய் இருக்கிறாய், இந்த கல்லின் மேல் என் திருச்சபையை கட்டுவேன். அதை நரகத்தின் வாசல்கள் அண்டாது." (மத்.16 அதி.18ம் வசனம்.)

சேசுநாதர் தாம் பரலோகத்திற்கு ஆரோகணம் ஆகும் முன்பு ஒரு சபையை உண்டாகி அதற்கு தலைவராக இராயப்பரை வைத்தார். மேலும் அவர்களுக்கான பணியையும் அவர்களுக்கு அறிவித்தார்.
நீங்கள் உலகம் எங்கும் பொய் "சர்வ சிருஷ்டிப்புக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவசித்து  நனஸ்தானம் பெறுகிறவன் இரட்சண்யம் அடைவான்.விசுவசியதவனோ குற்றவாளியாக தீர்வை இட படுவான்.(மார்க்.16ம் அதிகாரம்)

"அன்றியும் இராயப்பரை நோக்கி எதை நீ பூலோகத்தில் கட்டுவாயொ அது பரலோகத்திலும் கட்டப்பட்டு இருக்கும். நீ பூலோகத்தில் எதை கட்டு அவிழ்பாயோ அது பரலோகத்திலும் கட்டு அவிழ்க்கப்பட்டு இருக்கும்."(மத்.16 அதி)
இதன் மூலம் சேசுநாதர் அப்போஸ்தலர்களை தமது சபையின் போதகர்களாகவும் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினார். அவர்களுக்கு மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும்  கொடுத்தார்.
நமது திருச்சபையானது பூக்களால் உருவானது அல்ல, மாறாக வேதசாட்சிகளின் இரத்தத்தால் ஆனது. ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் பல உபத்திரவாதனைகளை அனுபவித்தனர். அவர்களுடைய இரத்ததால் கத்தோலிக்க திருச்சபை வளர்ச்சி அடைந்தது. பல தப்பறைகளும் அவ்வபோது வந்து திருச்சபையை தாக்கின. இருப்பினும் ஆண்டவருடைய உதவியால் அவை அனைத்தையும் கிறிஸ்தவர்கள் முறியடித்தனர்

பக்தி முயற்சிகள் 
திருச்சபை பல்வேறு பக்தி முயற்சிகளை கிறிஸ்தவர்களுக்காக கொண்டு வந்தது. நிறைய பக்தி முயற்சிகள் ஆண்டவர் நேரடியாகவும், தேவ மாதா வெளிப்படையாகவும் கேட்டுகொள்ளப்பட்டது.
சேசுவின் திரு இருதய பக்தி 
திவ்விய நற்கருணை பக்தி 
செபமாலை பக்தி 
உத்தரிய பக்தி
முதல் வெள்ளி பக்தி 
முதல் சனி பக்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக