Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 1 டிசம்பர், 2017

St.Bibiana, V.M December 2


2-ம் தேதி

      

அர்ச்.பிபியானம்மாள்> கன்னிகை> வேதசாட்சி

                             (கி.பி.363)

       பிபியானம்மாளின் தேவ பக்தரான தாய் தந்தையர் சத்திய வேதத்திற்காக வேத துரோகியான ஜுலியான் இராயனுடைய கட்டளைப்படி பிடிபட்டு> தங்கள் இரத்தத்தை சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.  இவர்களுடைய சொத்துக்களையெல்லாம் அதிபதி பறிமுதல் செய்து> அவர்களுடைய குமாரத்திகளான பிபியானம்மாளையும்  தெமேத்திரியம்மாளையும் சிறைப்படுத்தி> அவர்களை சத்திய வேதத்தை மறுதலிக்கச் செய்யும்படி தன்னால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்தான்.  ஆனால் இவ்;விரு புண்ணியவதிகளும் அவன் கருத்;திற்கு இணங்காதிருந்தார்கள்.  நடுவன் அவ்விருவரையும் தன் முன்பாக வரவழைத்து> அவர்களை விசாரணை செய்கையில் தெமேத்திரியம்மாள் சத்திய வேதத்தை விடுவதில்லையென்று தைரியமாகக் கூறி அங்கேயே விழுந்து இறந்தாள்.  பிபியானாளும் அதே கருத்தாயிருந்ததை அதிபதி கண்டு> ஒரு துஷ்ட ஸ்திரீயின் கையில் அவளை ஒப்படைத்து> பலவாறாய் சோதித்துப் பார்த்தும் அவள் வேதத்தில் தைரியமாயிருந்ததை அறிந்து> அவளை நிஷ்டூரமாய் அடிக்கக் கட்டளையிட்டான்.  சேவகர் கொடுங்கோலனுடைய கட்டளைப்படி> இளம் பெண்ணான பிபியானம்மாளை ஒரு தூணில் கட்டி நிஷ்டூரமாய் அடித்தபோது> அவள் உடலிலிருந்து இரத்தம் ஏராளமாய்ப் புறப்பட்டு தரை மேல் ஓடியது.   சதையும் பிய்ந்து தரையில் விழுந்தது.  வேதசாட்சியோவெனில் சற்றேனும் விசுவாசத்தில் தளராமல்> சர்வ வேதனையையும் பொறுமையுடன் அனுபவித்து சர்வேசுவரனை நோக்கிக் பிரார்த்தித்து> அங்கேயே உயிர் துறந்து மோட்சானந்த முடியைப் பெற பாக்கியம் பெற்றாள்.  அவளுடைய சரீரம் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடப்பட்டபோதிலும் அது அதிசயமாகக் காப்பாற்றப்பட கிறீஸ்துவர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.



யோசனை

       நமது துன்பதுரிதங்களிலும் இப் புண்ணியவதியைப் போல பொறுமையை அனுசரிப்போமாகில் புண்ணியத்தில் நிலைக்கொள்வோம் என்பது உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக