Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 27 ஏப்ரல், 2013

அழியா சரிரம் கொண்ட புனிதர்கள்- THE INCORRUPTIBILITY OF SAINTS II(தொடர்ச்சி )

அர்ச். ஆஞ்சலா மெர்சி 




அர்ச். ஆஞ்சலா மெர்சி  மார்ச் மாதம் 21ம் தேதி 1474ல் இத்தாலி நாட்டிலே பிறந்தார். அவளுடைய 10 வது வயதிலே தனது பெற்றோரை இழந்தார். தனது மூத்த சகோதரியுடன் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்தனர். அவளுடைய சகோதரியும் திடிரென நோயுற்று கடைசி தேவ திரவிய அனுமானங்களை பெறாமல் இறந்து போனது அவரை மிகவும் கவலை அடைய செய்தது.
பின் அவர் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையிலே சேர்ந்தார்.அவர் தன்னுடைய சகோதரிக்காக தினமும் செபம் செய்து வந்தார். அவர் சர்வேசுரனிடம் தன்னுடைய சகோதரியுடைய நிலைமை பற்றி தனக் காண்பிக்குமாறு ஆண்டவரிடம் வேண்டினாள் . அவருக்கு அவளுடைய சகோதரி மோட்சத்தில் இருப்பது போன்ற காட்சி அருளப்பட்டது. அவருடைய இருபது வயதில் அவரது மாமாவும் இறந்து போனார். பின்னர் தன்னுடைய வீடு வந்து அதனை ஒரு ஞான உபதேசம் கற்பிக்கும் பள்ளியாக அதை மாற்றினார்.
1535 ஆம்  ஆண்டு அவர் Order of Ursulines என்ற சபையை தொடங்கினார்.  அவர் ஜனவரி மாதம் 27 ஆம் நாள் 1540 ஆம் ஆண்டு இறந்தார்.

இறந்த  அர்ச். ஆஞ்சலா மெர்சி உடலை அடக்கம் செய்ய 30 நாட்களகியது. இருப்பினும் சரீரத்தில் எந்த விதமான துர்வாடையோ அழிவோ ஏற்படவில்லை. புனிதையின் கல்லறை பிற்காலத்தில் பற்பல சமயத்தில் திறக்கப்பட்டது. சரீரத்தில் எந்தவிதமான அழிவும் ஏற்படவில்லை. 1907 ஆம் ஆண்டு திருச்சபை அதிகாரிகள் முன் கல்லறை திறக்கப்பட்டு சான்று எழுதப்பட்டது. மீண்டும் 1939 கல்லறை திறக்கப்பட்டு புனிதையின் அழியா சரீரம் அழகிய கண்ணாடி பேழையில் Presciya நகரில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.



அர்ச். தெரேசே  மார்கரெட் (St. Teresa Margaret)



இவர் Arezzo நாட்டில் 1747 ஆம்  ஆண்டு ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர்  Anna Maria Redi என்பது ஆகும்  தனது பள்ளி பருவம் முடிந்த பிறகு அவர் கார்மலேட் சபையில் சேர்ந்தார். அங்கு தான் அவரது பெயரை அர்ச். தெரேசே  மார்கரெட் என மாற்றி கொண்டார். 

தெரசா மார்கரெட் ஒரு தனியார் மற்றும் ஆன்மீக நபர். அவர் வார்த்தைகள் பற்றிய ஒரு சிறப்பு தியான அனுபவம் வழங்கப்பட்டது அந்த வார்த்தை John 4:8, "God is love."  

அவர் தனது 23ஆம் வயதில் 1770 ல் இறந்தார். அவர் இறந்த பிறகு அவரது உடல் விரைவாக கெட ஆரம்பித்ததை பார்த்த கன்னியர்கள் முறைப்படி அடக்கம்  செய்யும்முன் உடல் கெட்டுவிடுமோ என்று அஞ்சினர். அனால் அவரது உடல் அதிசயமாக பாதுக்கப்பட்டது. மறுநாள் அவருடைய உடல் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. மூன்று நாட்கள் கழித்து  பார்த்தார்கள் அவரது உடல் அவர் துங்கும் போது  எப்பிடி இருப்பரோ அப்படியே இருந்தது.
அவரது உடல் Florence மடத்திலே இன்னும் உள்ளது.


அர்ச். பத்தாம் பத்தி நாதர். (St. Pius X)



இவர் தான் திருச்சபையின் 257 வது பாப்பாண்டவர். 1903 முதல் 1914 வரை பாப்பரசராக இருந்தார். இவர் ஆகஸ்ட் 20,1914 ல் இறந்தார். மே மாதம் 30ம் நாள் அவருடைய கல்லறை திறக்கப்பட்டு அர்ச். இராயப்பர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 
                    30 வருடத்திருக்கு பிறகு அவரது பெட்டி திறக்கப்பட்டது. அவருடைய உடல் அழியாமல் அப்படியே இருந்தது. அவருக்கு முத்தி பேருப்பட்டம்  குடுத்த பிறகு அவரது உடல் வாடிகன் தேவாலயத்திற்கு மற்ற பட்டது.மே 29 ஆம் நாள், 1954 ஆம் ஆண்டு அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. அவரது உடலை பொது மக்கள் பார்வைக்காக வாடிகனில் வைக்கப்பட்டு உள்ளது.
இவர் நற்கருனையின் பாப்பரசர் எனவும் அழைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக