Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 2 மார்ச், 2024

அர்ச். அந்தோணியார் புதுமை!


 வெட்டி வீழ்த்திய கால் ஒட்டுதல்! 

அர்ச். அந்தோணியார் புதுமை!




பதுவை நகரில் லியொனார்டு என்ற ஒரு வாலிபன் வாழ்ந்து வந்தான். மனம் போன போக்கெல்லாம் சென்றான். பெற்ற தாயை மிதிக்கும் அளவிற்கு அவன் பணிவற்றவனாக வாழ்ந்தான். ஒரு நாள் தன் தாயை எட்டி உதைத்தான். அவள் வலி தாங்காமல் தரையில் வீழ்ந்தாள்.

அந்தோனியாரின் மறை உரையைக் கேட்டு குற்றம் புரிந்த வாலிபனின் நெஞ்சம் வருந்தியது, திருந்தியது. அந்தோனியாரிடம் பாவசங்கீர்த்தனம் செய்யச் சென்றான்.

அவர் “உன் கால்கள் இடறலாயிருந்தால் அதனை வெட்டி எறி ஏனெனில் நீ மோட்சம் சென்றிட அது தடையாயிருக்கும்" என்ற வேத வசனத்தை நினைவூட்டினார்.

அவரது அறிவுரையை வேதவாக்காக எடுத்துக் கொண்ட அவன் உடனே வீடுசென்று தன் தாயை உதைத்த காலை வெட்டிவிட்டான்.

இச்சம்பவம் காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. இளைஞனின் தாய் அர்ச்.அந்தோனியாரிடம் வந்து நடந்ததைக் கூறினாள். அவளை அமைதிப் படுத்தி புனிதர் அவளுடன் சென்று, அவ்விளைஞனின் காலை எடுத்து இணைத்து 'சிலுவை அடையாளமிட்டு செபித்தார். கால் முன்பு போல் ஒட்டிக் கொண்டது. புதுமையின் செய்தி எத்திக்கும் பரவியது.


இன்று பல பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிவது இல்லை. தெய்வ பக்தியும் அவர்களிடம் இல்லை. ஆடை அணிவதில் அடக்கமில்லை . நாவடக்கமோ ஒரு சிறிதும் கிடையாது. அறநெறிகள் அவர்களுக்கு எட்டிக்காய், மரம் சாயும் பக்கம்தானே விழும். அர்ச்.அந்தோனியார் இவர்களுக்கு நல்லாசிரியராக அமைகின்றார். " பின் தரப்பட்ட வேத வசனங்களை இவர்கள் சிந்தித்து திருந்திட பரிசுத்த ஆவியானவர்  அருள் புரிவாராக:


1. தன் தந்தையையும் இகழ்ந்து, தன் தாயின் பிரசவ வேதனைகளையும் புறக்கணிக்கிறவனது கண்ணை நீரோட்டத்திலுள்ள காக்கைகள் பிடுங்கவும், கழுகின் குஞ்சுகள் அவனைத் தின்னவுங் கடவன்” (பழமொழி 30/17)

2. "தன் தாயை மதிக்கிறவன் - செல்வங்களைச் சேர்த்தவன்; தன் தந்தையை மதிக்கிறவன் - பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான்; அவன் வேண்டுதலும் கேட்கப்படும், தன் தந்தையை மதிக்கிறவன் நெடுங்காலம் வாழ்வான்” (சீராக் 3:5-7) -

3. தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும். தாயின் சாபமோ பிள்ளைகளுடைய குடும்பங்களின் அடித்தளத்தைப் பிடுங்கி விடும். (சீராக்: 3/i1) |

4. மகனே, உன் தந்தையின் முதுமையில் அவரை ஆதரி, அவர் வாழ்நாளில் அவரை மனம் நோகச் செய்யாதே, அவர் அறிவு குறைந்ததாயின் மன்னித்துக்கொள். உன் விவேகத்தை முன்னிட்டு அவரை நிந்தியாதே, ஏனென்றால் தந்தைக்கு காண்பிக்கப்படும் இரக்கம் ஒரு போதும் மறக்கப்படமாட்டாது. உன் தாயின் குற்றத்தை சகிப்பதனால் உனக்கு நன்மை ஏற்படும். ஏனென்றால் நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய். உன் துன்ப நாட்களில் ஆதரிக்கப்படுவாய். (சீராக் 3:14-17)


Miracle of St. Anthony
Source: Catholictamil.com

பாவத்தால் வரும் கேடுகள்!

 பாவத்தால் வரும் கேடுகள்!

அர்ச்.வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் அருட்தந்தை ஜோசப் பெஸ்கி எழுதியது.

கெட்டுப் போகிற எவனும் தன்னாலேயே கெட்டுப் போகிறானேயல்லாமல் வேறே ஒரு காரியத்தாலேயும் அல்லவென்று அர்ச். கிறீசோஸ்தோம் அருளப்பர் வசனித்தார். மனுஷனுக்குத் தன் மனதில்லாமல் வருகிற சேதம் ஏதென்றால் சாவு , நோவு, துயர் துன்பம், நிர்ப்பந்தம் முதலானவை. இவை வந்தாலும் ஆத்துமத்துக்கு நன்மை அல்லாமல் கேடல்ல. தான் தன் இஷ்டப்படி செய்கிற பாவம் மாத்திரமே ஆத்துமத்தைக் கெடுக்கிறது. அதினால் வருகிற கேடுகளே மெய்யான கேடுகள் என்று சொல்லப்படும். இப்படிப்பட்ட கேடுகளை மனிதன் யோசிக்காததால் பாவம் செய்து கெட்டுப் போகிறான். யோசித்துப் பார்த்தால் அப்படி வர மாட்டாது. ஆகையால் ஒவ்வொரு பாவத்தால் வருகிற கேடுகள் எத்தனை என்று நினைத்துப் பார்.


முதலாவது,

தேவ வரப்பிரசாதங்களை இழந்து போகிற கேடு. அதேதென்றால், நீ ஞானஸ்நானம் பெற்ற அன்றே தேவ விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்கிற வரப்பிரசாதங்கள் விலை மதியாத ஆபரணங்களாய் உன் ஆத்துமத்திலே தரிக்கப்பட்டுச் சகல சிறப்பும், அலங்காரமும் கொண்டு சர்வேசுரனுக்கும், அவர் தூதர்களுக்கும் உன்னை வெகு பிரியமாயிருக்கச் செய்தது. நீ பாவம் செய்து சர்வேசுரன் பேரில் உண்டான பக்தியைப் போக்கடித்ததினாலே, அந்த வரப்பிரசாதத்தினுடைய அலங்காரமெல்லாம் இழந்து, அவலட்சண அருவருப்பான பாவத் தோலாலே மூடப்பட்டாய். இதனாலே வந்த சேதம் எத்தனை என்று பார்.

ஆடை ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டுக் கலியாணம் செய்யப் போகிற பெண், வழியிலே கொள்ளைக்காரர் கையிலே அகப்பட்டு, துணி மணிகளெல்லாம் உரியக் கொடுத்து, நிருவாணத்தோடே இருந்தால், எத்தனை வெட்கமும் சலிப்பும் அவளுக்கு உண்டாயிருக்கும்! வெகு பரலோக மகிமைப் பிரதாபத்தோடு சிங்காசனத்திலிருந்து ஆட்சி செய்கிற அரசனை எதிரி வந்து பிடித்து, அவனுடைய முடி, செங்கோல், ஆடை, ஆபரணங்கள் எல்லாம் பறித்துக் கொண்டு கீழே விழத்தாட்டி விட்டுப் போனால், அந்த இராஜா நாலு பேர் முன்னே கூச்சம் இல்லாமல் வந்து நிற்பானோ?

இதைவிட உன் ஆத்துமம் தரித்திருந்த தேவ ஆடை, ஆபரணமெல்லாம் பாவம் என்கிற எதிரி கையிலே பறிகொடுத்து நிர்ப்பாக்கியன் ஆனாயே. இப்படிப்பட்ட நிர்வாணமும், அவலட்சணமும் உள்ள வேஷத்தோடு தேவ சமூகத்திலே எப்படிப் போய் நிற்பாய்? ஐயையோ பாவீ , இந்தக் கேடுகளை எல்லாம் ஏன் நினையாமலிருக்கிறாய்?


இரண்டாம் கேடு , 

நீ பல நாளும் பிரயாசைப்பட்டு தேடின புண்ணியங்கள் எல்லாம் பாவம் செய்த உடனே கெட்டுப் போகும். அதேதென்றால்: சிறு வயது முதல் அரசனைச் சேவித்து வெகு திரவிய செல்வ வெகுமானங்களைப் பெற்ற ஒருவன், அரசனுக்கு சதி மோசத் துரோகம் செய்து, சகல பாக்கியத்தையும், உயிரையும் இழந்து போகிறது போல, நீ செய்த செபம், தவம், பிடித்த ஒரு சந்தி உபவாசம், செய்த தானதர்மம், பங்கு பெற்ற பூசைகள், இது முதலான புண்ணிய பலன்களை எல்லாம் ஒரு பாவத்தினாலே இழந்து ஒன்றும் இல்லாதவனாய்ப் போய்விடுகிறாய்.

ஒருவன் தன் வீடு நிறையத் தேடி வைத்திருந்த திரவியங்களை எல்லாம், ஒரு இராத்திரியிலே கள்ளர் வந்து களவாடிப் போனது போலவும், வெகு பிரயாசைப்பட்டு உண்டாக்கின தோட்டத்திலே பலன் காலம் வந்தபோது, பெரும் புயல் அடித்துக் காய்கனிகள் எல்லாம் உதிர்ந்து போனது போலவும், ஒரு பாவத்தினாலே புண்ணிய பலன்கள் எல்லாம் சேதமாய்ப் போகும். அப்படிப்பட்ட கேடுகளையும் மோசங்களையும் ஏன் சிந்திக்காமலிருக்கிறாய்?


மூன்றாவது, 

மோட்ச உரிமையை இழந்து போகிற கேடு. அது ஏதென்றால் : ஞானஸ்நான வரப்பிரசாதம் அடைந்த வன் சர்வேசுரனுக்குப் பிள்ளையாய், மோட்சத்துக்கு உரியவனாகி, பசாசு கையிலே நின்று மீட்கப் பட்டவனாய், ஞான அட்சரம் தன் ஆத்துமத்திலே பதிக்கப்பட்டவனாயிருப்பான். தகப்பனைப் புறக்கணித்த பிள்ளை அவனுக்கு உரியவனாய் இருக்க மாட்டாதது போல, சர்வேசுரனுக்கு விரோதமான பாவம் செய்தவன் அவருடைய பிள்ளை என்கிற பேரும் மோட்சப் பெருமையையும், அவராலே மீண்ட நன்மையும் இழந்து போவான் என்கிறதற்குச் சந்தேகமில்லை.

புத்தி இல்லாதவனே, தாய் தகப்பனுடைய காணி பூமியை விட்டுவிடுவாயோ? அரசர்களால் கொடுக்கப்பட்ட வரிசை வெகு மானங்களை வேண்டாமென்று எறிந்து போடுவாயோ? நீ இவ்வுலக காரியம், அவ்வுலக காரியம் இரண்டும் அறியாதவனாய், இரண்டுங் கெட்ட பாவியாய், சர்வேசுரன் கொடுத்த மோட்ச இராச்சியத்தின் சுதந்தரமும், அவருடைய பிள்ளை என்கிற பேர் மகிமையும், பசாசு கையிலே நின்று மீண்ட நன்மையும் ஒன்றுமே வேண்டாமென்று எறிந்து போட்டு, மறுபடி பசாசுக்கு அடிமையாய் நரகத்துக்கு ஆளாய்ப் போகிறாய். இப்படிப்பட்ட நன்றி கெட்டதனமும், புத்தி கெட்ட தனமும் பெரிய கேடென்று மனதில் நினையாமலிருக்கிறது என்ன?


நான்காம் கேடு

தேவமாதா முதலிய மோட்சவாசிகளுடைய உதவி சகாயங்களை இழந்து போகிறாய். அதேதென்றால், அரசனுக்கு ஏற்காதவன் மந்திரி, பிரதானிகளுக்கும் ஏற்காமல் போவான். குடியானவர்கள் ஒருவரும் மதியாமல் கண்ட கண்ட இடத்திலே இராஜ துரோகி என்று நிந்தித்து அடித்துப் போடுவார்கள் அப்படியே பாவத்தினாலே சர்வேசுரனுடைய கோபம் அடைந்தவனுக்குச் சகல மோட்சவாசிகளுடைய விசேஷ உதவி அற்றுப் போவது மட்டுமின்றி பூலோகத்திலே சகல படைப்புகளும் அவன் ஆண்டவருக்குச் செய்த துரோகத்துக்காக அவனைப் பகைத்துக் கொடிய பகைவர்கள் போலிருந்து விரோதித்து வாதிக்கும். ஐயையோ! பாவீ , பரலோகத்தையும், பூலோகத்தையும் விரோதித்து எப்படிப் பிழைக்கப் போகிறாய்? ஏன் இந்தப் பெரிய மோசத்தைக் கவனியாமலிருக்கிறாய்?


கடைசியாய் வருகிற கேடாவது:

 ஆத்துமத்துக்குச் உயிராயிருக்கிற தேவ இஷ்டப்பிரசாதத்தை இழந்து போகிறது. சரீரத்துக்கு ஆத்துமம் உயிராயிருப்பது போல, ஆத்துமத்துக்கும் தேவ இஷ்டப்பிரசாதம் உயிராயிருக்கும். இந்த இஷ்டப்பிரசாதத்தை இழந்து போன ஆத்துமம், உயிரில்லாத பிணத்துக்குச் சமமாயிருக்கும். பிணத்துக்கு நல்ல ஆடை ஆபரணங்களைப் பூட்டி மினுக்கி, தலையிலே பொன் முடி, கழுத்திலே பூமாலை, காதிலே கடுக்கன், கையிலே மோதிரம் இப்படியே கல்லறை போய்ச் சேருமட்டும் தலை முதல் பாதம் வரைக்கும் அலங்கரித்து வைத்திருந்தாலும், கை கால் அசையவும், கண் திறந்து பார்க்கவும், காது கேட்கவும், வாய் பேசவும், ஒரு செயலாவது செய்யவும் கூடுமோ?

அப்படியே பாவத்தால் உன் ஆத்துமத்திற்கு ஞான உயிரில்லாதிருக்க, நீ எத்தனை நல்ல நினைவு நினைத்தாலும், தான தர்மம், பிறருக்கு உதவி, செபதப தியானம் என்கிற புண்ணியங்களைக் கொண்டு எத்தனை அலங்கரித்தாலும், உன் பாவங்களைப் போக்க வேண்டிய தேவ உதவியை அடைவதற்கு உதவலாமே தவிர, வேறொரு பயனும் ஆக மாட்டாது. பிணம் நேரம் போகப் போகத் துர்நாற்றமாய் நாறிப் புழுவாய்ப் புழுத்து ஒருவரும் கிட்ட வராதபடி அருவருப்பு உண்டாக்கும். அப்படியே பாவ ஆத்துமமானது பிணமாய்ப் போய் நாளுக்கு நாள் துர்ச்செயல்கள் மிகுந்து, தலையான பாவங்களும் சூழ்ந்து, துர்நாற்றம் வீசி சர்வேசுரனுக்கும், மோட்சவாசிகளுக்கும் அருவருக்கப்பட்டதாயிருக்கும்.

ஐயையோ பாவீ! இவையெல்லாம் நினையாமலிருக்கிறாய். அழுகின பிணம் போல், ஆத்துமமும் துர்நாற்றம் வீசியிருக்க எத்தனை ஆடை ஆபரணங்களைக் கொண்டு அலங்கரித்தாலும் எத்தனை சீரும் சிறப்புமிட்டுக் கொண்டாடினாலும் என்ன? ஒரு பிரயோஜனமுமில்லை. இத்தனை கேடெல்லாம் ஒரு பாவத்தினாலே வருகிறதெனில் அநேக பாவங்களைச் செய்கிற உனக்கு எத்தனை கேடு மோசம் வருமென்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்.

ஒரு வர்த்தகனுடைய மகன் சூது விளையாட்டிலே பழகிப் போய், தான் தோற்றுப் போகிற போதெல்லாம் தன் தகப்பனுக்குச் சீட்டெழுதி அனுப்ப, அதெல்லாம் தகப்பன் திருப்பிச் செலுத்தி வருவான். ஒருநாள் நாற்பதினாயிரம் வராகன் பணம் தோற்றுப் போய், அதற்குச் சீட்டுக் கொடுத்த இடத்திலே, தகப்பன் அதைப் பார்த்து, இப்படியே தன் மகன் கெட்டுப் போகிறான் என்று அறிந்து, அவனுக்கு நல்ல புத்தி வருவிக்க வேண்டுமென்று வீட்டுக்கு அழைப்பித்து, அவன் சூதாடின நாள் முதற்கொண்டு தோற்றுப் போன பணங்களெல்லாம் கணக்குப் பார்த்துப் பை பையாய்க் கட்டி அவன் முன்பாகக் கொண்டுவரச் சொல்லி, அதை எல்லாம் அவிழ்த்துக் கொட்டி, இத்தனை பணங்களை எல்லாம் நீ தோற்றுப் போட்டாய்,

இதெல்லாம் எண்ணிப் பார் என்று சொல்ல, மகன் அதிசயப்பட்டு இவ்வளவு பணம் நான் தோற்றேனா? இம்மாத்திரம் பணத்தை நான் அழித்துப் போட்டேனா என்றும் நான் செய்தது கெட்ட காரியம்தான் என்றும் வெகுவாய் மனஸ்தாபப்பட்டு, இனிமேல் ஒருக்காலும் இந்த விளையாட்டு விளையாடுகிறதில்லை என்றும் சொல்லி, சகல விளையாட்டையும் வெறுத்து விட்டுவிட்டான். அவன் பணச் சேதத்தைக் கண்டு ஏங்கிப் போய்ச் சகல விளையாட்டுகளையும் வெறுத்தானென்றால், நீ அழியாத திரவியமாகிய ஞான செல்வங்களையும், தேவ வரப்பிரசாதங்களையும் விரும்பி, பாவத்தை வெறுத்துத் தள்ளி விடாதது ஏன்?

நீ அழித்துப் போட்ட சகல புண்ணிய பலன்களையும் புத்திக் கண்ணால் அளவிட்டுப் பார்த்தால் அந்தத் துக்கத்தினால் உன் உயிர் உடலிலே தரிக்குமோ? உன் இருதயம் பொடிப்பொடியாய்ப் பிளந்து போகாமல் இருக்குமோ? இன்னும் பாவங்களைச் செய்வோம் என்கிற துணிவுதான் வருமோ?

ஐயையோ பாவீ, ஏன் இதை நினையாமலிருக்கிறாய்? சூரியன் போலத் தெளிவுள்ள கண்களை மேகம் என்ற பாவங்களினாலே மறைத்துக் கொண்டு திரிகிறாய். சகல பாவத்தையும் விட்டு, செய்த பாவங்களுக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.


Joseph Beschi (Veeramamunivar) about Sin.


Source: CatholicTamil.com- Whatsapp Channel

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

Digital Dangers - New Series

 Welcome back to the SSPX Podcast, where we're diving into our new series, Digital Dangers! In this ten-part series, we’ll answer questions about modern technology's complicated nature and its lurking hazards. In a world where technology reigns supreme, we'll explore its effects on us, our children, and our eternal destiny. How do we shield ourselves and our loved ones from the perils of the online, artificial world? Are smartphones a blessing or a curse? How can we safely navigate the digital landscape without damaging the sanctuary of our family homes? Join us as we tackle these questions and more throughout the series.

Subscribe to the SSPX YouTube channel here: https://www.youtube.com/c/SSPXNewsEng... Stay Connected on Social Media: Twitter:   / sspxen   Facebook:   / sspxen   Instagram:   / sspx_en   SSPX News Website:https://fsspx.news/en Visit website: https://sspx.org/en


1.  Introduction

சனி, 17 பிப்ரவரி, 2024

சரீர ஒறுத்தல்

சரீர ஒறுத்தல்.

1. உணவின் காரியத்தில், முடிந்த வரை, எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் உண்ணும்படி உங்களைக் கட்டுப்படுத்துங்கள். அர்ச் அகுஸ்தீனார் கடவுளிடம் பேசிய இந்த வார்த்தைகளைச் சிந்தியுங்கள்: 'ஓ என் சர்வேசுரா, ஒரு தீர்வாக மட்டுமே உணவு உட்கொள்ளும்படி நீர் எனக்குக் கற்பித்திருக்கிறீர். ஆ! ஆண்டவரே, இங்கே சில சமயங்களில் அளவைத் தாண்டி உணவு உட்கொள்ளாதவர்கள் எங்களில் யாருண்டு? அப்படிப்பட்ட ஒருவன் இருந்தால், அந்த மனிதன் மேலானவன், அவன் உம் திருநாமத்திற்கு மாபெரும் மகிமை செலுத்துபவனாக இருக்கிறான் என்று நான் சொல்வேன்"

2. நீங்கள் தேவையின் வரம்பைத் தாண்டாதபடியும், இன்பத்திற்கு உடந்தர உங்களையே நீங்கள் அனுமதியாதபடியும், கடவுளிடம் அடிக்கடி ஜெபியுங்கள், அவர் தம் வரப்பிரசாதத்தைக் கொண்டு உங்களுக்கு உதவும்படி ஒவ்வொரு நாளும் ஜெபியுங்கள்.

3. தேவைக்காகவோ, அல்லது வசதியின் நிமித்தமாகவோ அன்றி, உணவுகளுக்கு இடையில் எதையும் உட்கொள்ளாதீர்கள்.

4. ஒருசந்தி, சுத்தப்போசனத்தை அனுசரியுங்கள். ஆனாலும் அவற்றை கீழப்படிதலின் கீழும், இரகசியமாகவும் மட்டுமே அனுசரியுங்கள்.

5. சரீர ரீதியான ஏதாவது ஒரு திருப்தியை அனுபவிப்பது உங்களுக்குத் தடை செய்யப்படவில்லை , ஆனாலும் கடவுளுக்கு நன்றி கூறி, ஒரு பரிசுத்தமான, சுத்தக் கருத்தோடு அப்படிச் செய்யுங்கள்.

6. உங்கள் தூக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள். இதில் எல்லா மந்த உணர்வையும், விடிந்த பிறகும் சுகமாக படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதையும் தவிருங்கள். உங்களால் முடியுமானால் படுக்கைக்குச் செல்லவும், விழித்தெழவும் ஒரு நேரத்தைக் குறித்துவிட்டு, அதைக் கண்டிப்பான முறையில் கடைபிடியுங்கள்.

7. பொதுவாக, தேவையான அளவுக்கு மட்டும் ஓய்வெடுங்கள்; உங்கள் உழைப்பை அலட்சியம் செய்யாமல், வேலை செய்ய தாராளமாக உங்களை ஒப்புக்கொடுங்கள். உங்கள் உடல் அளவுக்கு அதிகமாக சோர்ந்துபோகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஆனாலும் உடலுக்கு அதிக சௌகரியமும், சொகுசும் தந்துவிடாதபடி கவனமாயிருங்கள். அதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஒரு சிறிதளவு மட்டுமே நீங்கள் உணர்ந்தாலும் கூட, அந்த நிமிடமே அதை ஓர் அடிமையைப் போல நடத்துங்கள்.

8.நீங்கள் சற்று சுகவீனமாக உணர்ந்தால், உங்கள் மோசமான மனநிலையின் காரணமாக மற்றவர்களுக்கு ஒரு தொந்தரவாக இருப்பதைத் தவிருங்கள்; உங்களுக்காக முறையிடும் வேலையை உங்கள் தோழர்களிடம் விட்டுவிடுங்கள்; உங்களைப் பொறுத்தவரை, நம் எல்லாப் பலவீனங்களையும் மெய்யாகவே சுமந்து கொண்ட தேவ செம்மறிப்புருவையானவரைப் போல பொறுமையாகவும், மௌனமாகவும் இருங்கள்.

9. மிக அற்பமான ஒரு வியாதியை, உங்கள் அன்றாட வேலைகளைப் பிறரிடம் ஒப்படைக்க அல்லது அவற்றைச் செய்யாமல் விலக்க, ஒரு காரணமாக்கி விடாதபடி விழிப்பாயிருங்கள். 'விதிகளாக மாறுகிற ஒவ்வொரு விதிவிலக்கையும் கொள்கை நோயைப் போல ஒருவன் அருவருத்து ஒதுக்க வேண்டும்" என்று அர்ச் பெர்க்மான்ஸ் அருளப்பர் எழுதியுள்ளார்.

10. நோய் என்னும் சோர்வூட்டுகிற ஒறுத்தலை அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; தாழ்ச்சியோடும், பொறுமையோடும், நிலைமையோடும் அதை அனுசரியுங்கள்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

Tamil Christian Quotes - 11 St. Therese of Avila

 "தனது அன்பனுக்குத் திருப்தி வருத்தமாத்திரம் தேடுகிறவன் அவனுக்குப் பிரியமுள்ள தெல்லாம் செய்ய விரும்புவான்" அர்ச். தெரேசம்மாள் 


for more Tamil Quotes

Tamil Christian Quotes - 10 - St. Augustine

 "சர்வேஸ்வரனை நேசி, பின்பு உனக்கு மனதானதெல்லாம் செய்."  

அர்ச். அகுஸ்தீனார்


https://www.tamilcatholicblog.co.in/amil-catholic-songs-lyrics


வேதசாட்சியான அர்ச்‌.ஒனேசிமுஸ்‌ - ST. ONESIMUS


வேதசாட்சியான அர்ச்‌.ஒனேசிமுஸ்‌ 




இவர்‌ பிறப்பினால்‌ ஃபிர்ஜியனாகவும்‌, பிலமோன்‌ என்பவரின்‌ அடிமையாகவும்‌ இருந்தார்‌. அர்ச்‌.பிலமோன்‌, என்பவர்‌ ஏற்கனவே அப்‌போஸ்தலரான அர்ச்‌. சின்னப்பரால்‌ கிறீஸ்துவராக மனந்திருப்பப்பட்‌டிருந்தார்‌. 

இவர்‌, தன்‌ எஜமானாகிய பிலோமனிடமிருந்து திருடிவிட்டு, ஓடிப்போனார்‌; பின்‌ எதிர்பாராதவிதமாக, உரோமையில்‌, சிறைபட்‌டிருந்த அர்ச்‌. சின்னப்பரை இவர்‌ சந்திக்க நேர்ந்தது. அர்ச்‌. சின்னப்பர்‌ இவரை மனந்திருப்பி, ஞானஸ்நானம்‌ கொடுத்தார்‌. பின்‌, இவரை,  இவருடைய எஜமானரான அர்ச்‌. பிலமோனிடம்‌ அனுப்பி வைத்தார்‌. அச்சமயம்‌, அர்ச்‌. சின்னப்பர்‌, ஒரு அழகிய கடிதத்தை பிலமோனுக்கு, எழுதி இவரிடம்‌ கொடுத்து அனுப்பினார்‌. அது, சுவிசேஷத்தில், நமக்கு பிலமோனுக்கு எழுதிய நிரூபமாகக்‌ கிடைத்தி ருக்கிறது! அந்த கடிதத்தில்‌, பிலமோனிடம்‌, அவருடைய அடிமையான ஒனேசிமுஸை மன்னிக்கும்படியும்‌ மன்னித்து, அவருடைய உதவியாளராக சேர்த்துக்கொள்ளும்படியும்‌, அர்ச்‌. சின்னப்பர்‌ கேட்டுக்‌ கொள்வதை வாசிக்கிறோம்‌. 

அர்ச்‌. சின்னப்பரின்‌ அறிவுரையின்பேரில்‌, பிலமோன்‌, ஒனேசிமுஸை மன்னித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து முழு சுதந்திரத்‌தை அளித்தார்‌; அதன்‌ பின்,‌ தன்‌ ஞான தந்தையான அர்ச்‌.சின்னப்பர்‌ ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில்‌, ஒனேசிமுஸ்‌, திரும்பி அப்போஸ்தலரான அர்ச்‌. சின்னப்பரிடமே வந்து சேர்ந்தார்‌.அவருக்கு பிரமாணிக்கத்துடன்‌ ஊழியம்‌ செய்து வந்தார்‌. 

 அர்ச்‌. சின்னப்பர்‌, கொலோசியருக்கு எழுதிய நிரூபத்தை, தீகிக்கு என்பவரிடம்‌ கொடுத்தனுப்பியபோது, அவருடன்‌ ஒனேசிமுஸையும்‌  சேர்த்து அனுப்பி வைக்தார்‌.(கொலொ 4:7-9).  பின்னர்‌, ஒனேசிமுஸ்‌, உரோமாபுரி ஆளுநனால்‌, மிகக்‌ கொடிய உபத்திரவங்களால்‌ சித்ரவதை செய்யப்பட்டார்‌; திருமணம்‌ செய்யாமல்‌ பரிசுத்த ஜீவியம்‌ ஜீவிக்கும்‌ கத்தோலிக்கக்‌ குருத்துவத்தைப்‌ பற்றி இவர்‌ பிரசங்கித்தபோது, அதைக்‌ கேட்டுக்‌ கோபமடைந்த உரோமை ஆளுநன்‌, இவரை சிறையிலடைத்து, 18 நாட்கள்‌ தொடர்ந்து உபாதித்தான்‌: இவருடைய கால்களையும்‌, கைகளையும்‌ குண்டாந்தடியால்‌ அடித்து, முறித்தனர்‌; பின்‌ கல்லால்‌ எறியப்பட்டு கி.பி.95ம்‌ வருடம்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டார்‌. சர்வேசுரனை சிநேகிக்கிறவர் களுக்குச்‌ சகலமும்‌ நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று, அறிந்திருக்கிறோம்‌; அவர்கள்‌, தேவ தீர்மானத்தின்படி, அர்ச்சிஷ்டவர்களாக அழைக்கப்பட்டிருக் கிறார்களாமே! (அர்ச்‌.சின்னப்பர்‌ உரோமையருக்கு எழுதிய நிரூபம்‌ 8:28).

அர்ச்‌.ஒனேசிமுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


Tamil Catholic Quotes

Tamil Catholic Songs Lyrics


Tamil Christian Quotes 9 - St. Teresa of Avila

 அர்ச். தெரேசம்மாள் "பத்துப்பிரசங்கங் கேட்பதைவிட அது சிலவிசை சாங்கோபாங்கத்தில் அதிக விருத்தியடைய உதவியாகும். ஏனெனில் ஞாயம்பேசாமல் மவுனமாயிருக்கையில் இருதயத்தின் சுதந்தரத்தை யுடையவர்களாய், தங்கள் பேரில் உலகம் நன்மையோ, தின்மையோ எது சொன்னாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதிருக்கவும் ஆரம்பிக்கின்றார்கள்"

Tamil Christian Quotes 8 - St. Philip Neri

 "அர்ச்சியசிஷ்டவனாவதற்கு மெய்யாகவே மனதுள்ளவன் அபத்தமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டாலும் பரிச்சேதம் அதை மறுத்துப்பேச ஞாயஞ்சொல்ல முயலவொண்ணாது" என்று அர்ச். பிலிப்புநேரி 

Tamil Christian Quotes 7 - St. Chrysostom

 அர்ச். கிறிசொஸ்தோம் "அர்ச்சியசிஷ்டவனாகவும், தாழ்ச்சியுள்ளவனா கவும் இருக்க மனமுள்ளவன் மற்றவர்கள் தன்னைத் திருத்தும்போது கீழ்ப்படிந்து, தன்பேரிலுள்ள தப்பிதத்தை யுணர்ந்து பிரலாபிப்பான். ஆனால் ஆங்காரியானவனோ பிரலாபித்தாலும் மற்றவர்கள் தன் குற்றத்தைக் கண்டு கொண்டதினாலே பிரலாபித்து அதினால் கலங்கி மறுத்து உத்தாரஞ்சொல்லித் தனக்கறிவிப்பவன் பேரில் கோபங் கொள்வான்"

Tamil Christian Quotes -6 St. Jane Frances de Chantal

"மெய்யாகவே, தாழ்ச்சியுள்ளவனாயிருப்பவன், எவ்வளவுக்கு நிந்திக்கப்படுவானோ அவ்வளவுக்கும் அவன் தன்னைத் தாழ்த்திக்கொள்வான்"  அர்ச். ஷாந்தால் அருளம்மாள்  (Jane Frances de Chantal )

Tamil Christian Quotes 5 - St. Francis De Sales

 "அவமானங்களைப் பொறுமையுடனே சகிப்பது; தாழ்ச்சிக்கும் மெய்யான புண்ணியத்துக்கும் உரைகல்

 அர்ச். பிராஞ்சிஸ்கு சலேசியார்

Tamil Christian Quotes 4 - St. John of the Cross

 சிலுவை அருளப்பர் "ஆ என்னாண்டவரே! நீர் என்பேரிலுள்ள பகூத்தைப் பற்றி இவ்வளவாக நிந்தைப்பட்டிருக் கையிலே உமது பேரிலுள்ள நேசத்தைப்பற்றி நானும் துன்பப்படவும், நிந்திக்கப்படவும் கேட்டுக்கொள்வதைவிட வேறொன்றுங் கேளேன்"

Tamil Christian Quotes 3

 "நிந்தையின் மட்டிலே சகிப்பில்லாதவன் புதுமைகளைச் செய்து வந்த போதிலும் மெய்யாகவே அவன் சாங்கோபாங்கத்துக்கு மிகவும் அகன்றவனாயிருக்கிறான்'' என்று அர்ச். தோமாஸென் பவர் (St. Thomas Aquinas) வசனிக்கின்றார்

Tamil Christian Quotes 2

. அர்ச்.  தோமாஸ் ஆகெம்பீஸென்பவர் "மெய்யாகவே தாழ்ச்சி யுள்ளவனா யிருப்பவன் தன்னைத் தானே நிந்திப்பது மன்றி தான் பிறரால் நிந்திக்கப்படவும் ஆசிப்பான்"