Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 31 ஜூலை, 2020

#மரியாயின்_மீது_உண்மைப்_பக்தி



---உத்தம விதமாய் நம்மை முழுவதும் மாதாவுக்கு அர்ப்பணம் செய்தல்--



122. நம்முடைய நற்செயல்கள் என்னும்போது இரண்டு காரியங்களை நாம் அதில் கவனிக்கவேண்டும்.
ஒன்று பரிகரிப்பு, இன்னொன்று பேறுபலன்.
அதாவது, நற்செயல்களின் பரிகரிப்புத் தன்மை அல்லது மன்றாட்டுத் தன்மைகளை நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு நற்செயலின் பரிகரிப்புத் தன்மை அல்லது மன்றாட்டுத்தன்மை என்பது பாவத்துக்குரிய தண்டனைக்குப் பரிகரிப்பாக அல்லது ஒரு புதிய வரப்பிரசாதத்தைப் பெற்றுத்தர அந்நற்செயல் பயன்படுவதாகும்.
ஒரு நற்செயலால் பேறுபலன் விளைதல் அல்லது அதன் பேறுபலன் என்று கூறப்படுவது என்னவென்றால் அச்செயல் நமக்கு வரப்பிரசாதத்தையும் நித்திய மகிமையையும் அடைந்து தருவதாகும்.
இது இங்ஙனமிருக்க கன்னிமாதாவுக்கு நம்மை அர்ப்பணம் செய்வதால், நம்முடைய எல்லா நற்செயல்களின் மன்றாட்டு பேறுபலன் ஆகியவற்றை , அதாவது, நற்செயல்களால் விளையக்கூடிய எல்லா பலன்களையும் வரப் பிரசாதங்களையும் மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவதற்காக நாம் அவற்றை மாதாவிடம் ஒப்படைப்பதில்லை (ஏனென்றால் சட்டப்படி பார்த்தால் நம் பேறுபலன்களும் வரப்பிரசாதங்களும் புண்ணியங்களும் பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாதவை. பிதாவுடன் நமக்குப் பிணையாக வந்த சேசு கிறீஸ்து மட்டுமே தம் பேறு பலன்களை நமக்குக் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார்.)
ஆகவே நாம் இனிமேல் விளக்கிக்கூற இருப்பதுபோல், மாதா நமக்காக அவற்றைக் காப்பாற்றி, அதிகரிக்கச் செய்து, அழகு படுத்தும்படியாகவே அவர்களிடம் அவற்றை நாம் ஒப்படைக்கிறோம். (எண் 146, 147 காண்க)
ஆயினும் நம் நற்செயல்களின் பரிகரிப்புப் பலன்களை, மாதா தான் விரும்பியவர்களுக்கு கொடுக்கும் படியாகவும் இறைவனின் அகிமிக தோத்திரத் திற்காகவும் அவர்களிடம் ஒப்படைக்கிறோம்.
123. இதன் பயன் யாதெனில் இப்பக்தி முயற்சியினால், நாம் சேசு கிறீஸ்துவுக்குக் கொடுக்கக்கூடிய அனைத்தையும் மரியாயின் கரங்கள் வழியாகக் கொடுப்பதால், மிக உத்தமமான முறையில் கொடுக்கிறோம்.
நம்முடைய மற்றெல்லாப் பக்தி முயற்சிகளால் கொடுப்பதைவிட அதிகமாகக் கொடுக்கிறோம்.
மற்றப் பக்தி முயற்சிகளில், நம் நேரத்தில் ஒரு பகுதியையும் நம் நற்செயல்களில் ஒரு பாகத்தையும், நாம் செய்யும் பரிகாரங்களில் ஒரு பங்கையும் நம் பரித்தியாகங்களில் சிலவற்றையும்தான் நாம் அவருக்கு அளிக்கிறோம்.
ஆனால் இந்தப் பக்தி முயற்சியால், யாவும் கொடுக்கப்பட்டு விடுகின்றன, யாவும் வசீகரிக்கப்பட்டு விடுகின்றன.
நம் உள்ளரங்க நற்கனிகளையும் நம் அன்றாட நற்செயல்களால் சம்பாதிக்கப்பட்ட பரிகரிப்புப் பலன்களையும் நம் விருப்பப்படி உபயோகிக்கும் உரிமை கூட விட்டுக் கொடுக்கப்படுகிறது.
இது எந்த ஒரு துறவற சபையிலும் கூட செய்யப்படாத ஒன்றாகும். துறவற சபைகளில் தரித்திர வார்த்தைப் பாட்டினால் நம் உலகப் பொருட்களை இறைவனுக்கு அளிக்கிறோம்.
கற்பென்னும் வார்த்தைப் பாட்டினால் நம் சரீர நலன்களைக் கொடுக்கிறோம் .
கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப் பாட்டினால் நம் சித்தத்தையும், சில சந்தர்ப்பங்களில் அடைபட்ட வாழ்வு என்னும் வாக்குறுதியால் நம் விருப்பப்படி எங்கும் செல்லும் உரிமையையும் கொடுத்து விடுகிறோம்.
ஆயினும் இந்த வார்த்தைப் பாடுகளால் நம்முடைய நற்செயல்களின் பலன்களை விரும்பியபடி உபயோகிக்கும் உரிமையை அல்லது சுதந்திரத்தை இறைவனுக்கு நாம் கொடுப்பதில்லை.
ஒரு கிறீஸ்தவனுக்கு மிகவும் விலைமதிப்புள்ளதும் மிகப் பிரியமுள்ள சொத்து எனக் கருதப்படுவதுமான நம் பரிகார முயற்சிகளையும் பலன்களையும் நம்மால் முடிந்த மட்டும் - இத்துறவற வார்த்தைப் பாடுகளால்- நாம் துறப்பதுமில்லை.
அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக