Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 29 ஜூலை, 2020

மரியாயின்_மீது_உண்மைப்_பக்தி (True Devotion to Mary in Tamil)



----மாதா மீது உத்தமமான பக்தியின் தன்மை அல்லது சேசு கிறீஸ்துவுக்கு உத்தமமான அர்ப்பணம்----



120. நம் எல்லா உத்தமதனமும், சேசுகிறீஸ்துவைப் போல் நாம் ஆகி அவருடன் ஒன்றுபட்டு அவருக்கு அர்ப்பணிக்கப்படுவதில் தான் அடங்கியுள்ளது.
எனவே பக்திகளிலெல்லாம் மிகச் சிறந்தது எதுவாயிருக்குமென்றால், நம்மை சேசுகிறீஸ்துவைப் போல் ஆக்கி அவருடன் நம்மை ஒன்றாக்கி அவருக்கு நம்மை அர்ப்பணம் செய்யும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது தெளிவு.
இனி, சிருஷ்டிகளிலெல்லாம் மிகச்சிறந்த முறையில் சேசு கிறீஸ்துவைப் போல் இருப்பது பரி.கன்னிமரியாயே.
இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், கிறீஸ்துவின் அன்னையான மரியாயின் மீது உள்ள பக்தியே மற்றப் பக்திகளையெல்லாம் விட ஒரு ஆன்மாவை அவரைப் போல் ஆக்கி அவருக்கு அதனை அர்ப்பணம் செய்கின்றது.
ஒரு ஆன்மா எவ்வளவுக் கதிகமாய் மாதாவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறதோ அவ்வளவுக்கதிகமாய் சேசு கிறீஸ்துவுக்கு அர்ப்பபணமாக்கப்படுகிறது.
ஆகவே சேசு கிறீஸ்துவுக்கு உத்தமவிதமாய் அர்ப்பணமாகும் சிறந்த வழி, தன்னை முழுவதும் மாதாவுக்கு அர்ப்பணிப்பதே ஆகும்.
அர்ப்பணிக்கப்படுதல் என்றால் உத்தமவிதமாய் நான் கற்றுத் தரும் பக்தி இதுவே.
வேறு வார்த்தைகளில் கூறினால் அது நம் ஞானஸ்நான வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதேயாகும்.
அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக