Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

*St. Peter, M.* *அர்ச். இராயப்பர்* *வேதசாட்சி - (கி.பி. 1252).

*ஏப்ரல் மாதம் 29-ம் தேதி*

*St. Peter, M.*              
*அர்ச். இராயப்பர்*
*வேதசாட்சி - (கி.பி. 1252).*   

இராயப்பர், இத்தாலி தேசத்தில் கத்தாரியென்னும் பதித மதத்தைத் தழுவிய பெற்றோரிடமிருந்து பிறந்தார். இவரை இவர் தந்தை கல்வி கற்கும்படி ஒரு கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைத்தார். ஒரு நாள் இராயப்பருடைய உறவினர்களில் ஒருவன், நீ பள்ளியில் படித்ததை சொல்லென்ற போது, இராயப்பர் விசுவாச மந்திரத்தைச் சொன்னார். அந்த மந்திரத்தை படிக்காதபடி அவரை அவரது வீட்டார் தடுத்தார்கள். இராயப்பர் பெரியதோர் நகருக்குச் சென்று கல்வி கற்று ஞானஸ்நானம் பெற்று, அர்ச். தோமினிக் சபையில் சேர்ந்து உத்தம துறவியாய் விளங்கினார். இவர்  அடிக்கடி பக்தியுடன் ஜெபித்தார். கடின தவமுயற்சிகளைச் செய்தார்.  மடத்திலுள்ள தாழ்ந்த வேலைகளைச் செய்தார். இவர் அநியாயமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டு சிரேஷ்டரால் தண்டிக்கப்பட்டபோது, அதை மகா பொறுமையுடன் சகித்துக்கொண்டார். இராயப்பர் குருப்பட்டம் பெற்று பதிதர் மனந்திரும்பும்படி இடைவிடாமல் பிரயாசைப்பட்டு வந்ததினால், கணக்கில்லாத பதிதர் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள். இவர் வீதியில் பிரசங்கிக்கும்போது, எவ்வளவு திரளான ஜனங்கள் இவர் பிரசங்கத்தைக் கேட்க வருவார்களென்றால், இவர் ஜனநெரிசலில் அகப்பட்டு துன்புறாதபடிக்கு இவர் அவ்விடத்தினின்று தூக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுவார். இவர் ஒவ்வொரு ஊருக்கும் போகும்போதும்,  அவ்வூரார் இவரை வாத்திய இசையுடன் எதிர்கொண்டு, சுற்றுப்பிரகாரமாய் இவரை அழைத்துப்போவார்கள். பதிதரோ இவர் மட்டில் பகைமை கொண்டு, ஒருநாள் இவர் தனியாகப் போகும்போது இவரைத் தாக்கிக் கொலை செய்தார்கள். இராயப்பர் வேதசாட்சி முடி பெற்றபின் இவரால் நடந்த அற்புதங்களைக் கண்ட பதிதர் கூட்டங் கூட்டமாய்ச் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள்.         

*யோசனை*

பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திற்கு  அனுப்பி அவர்கள் ஞானோபதேசம் கற்க முயற்சி செய்வார்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக