Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

கத்தோலிக்க கிறிஸ்துவக் குடும்பங்களின் மேன்மை


தாய்மார்கள் குழந்தை வளர்ப்பதற்கான கல்வியை நன்கு பெறவேண்டுமானால், அதன்  ஒருபகுதியாக, அவர்கள் இராணுவ மருத்துவமனையின் மனநல மருத்துவப்பிரிவை  சந்திக்க வேண்டும் என்று ஒருவர் வேடிக்கையாகக் கூறினார். அங்கே தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை எப்பொழுதும் தங்களுடைய பிடியிலேயே வைத்ததன் விளைவாக உருவான அநேக மனநோயாளிகளைக் காணலாம். அப்பொழுது, உங்களுடைய குழந்தைகள் சுயாதீனமாக வாழக்கூடிய பிள்ளைகளாக வளர்வதற்கு உதவுவதையே, முதன்மையான நோக்கமாக நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை அங்கு நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள்.
குருவானவரும், மனநல மருத்துவரும் பிரச்னைகளை வௌ;வேறு விதங்களில், வித்தியாசமான கோணங்களில் காண்பர். ஆனால், குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தாய்மார்களின் நடத்தையைப் பற்றிச் சுட்டிக்காட்டும்போது, இருவரும் ஸ்திரமாக ஏகோபித்த கருத்தை வெளிப்படுத்துவர். குழந்தைகளை வளர்ப்பதில் தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளைப்பற்றிய அவ்விருவருடைய அறிவுரையின் சாராம்சம் பின்வருமாறு:
உங்களுடைய பிள்ளைகளிடம், நீங்கள், எப்பொழுதும் எல்லாவற்றையும் மிக நன்றாக அறிந்திருக்கும் சர்வாதிகாரிகளைப் போல் செயல்படாதீர்கள். உங்களுடைய குழந்தை தனக்கேற்புடைய வழியிலேயே காரியங்களை செயல்படுத்தலாம். அது திறமையற்றவிதமாகவும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் இருக்கலாம். அப்பொழுது உங்களுடைய குழந்தையிடம் பொறுமையாக இருங்கள். அவன் தன் வழியிலேயே அவற்றை செய்யும்படி விடுங்கள். அப்பொழுது, தான் செய்வதில், எது சரி, எது தவறு என்பதை நடைமுறையில் கண்டறிவதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் அவனுக்கு அளிக்க ஏதுவாக இருக்கும்.
உங்களுடைய பிள்ளைகளுக்காக நீங்கள் உயிரையே விட வேண்டாம். ஆனால், உங்களுடைய பிள்ளைகளின் நலன்களுக்காக நீங்கள் பரித்தியாகங்கள் செய்ய தான் வேண்டும். உங்களுக்கு மட்டுமே சொந்தமான சில பொருளை, உங்களுடைய மகன் கேட்கும்போது, அவன் குற்றஉணர்வு கொள்ளும்படியாக அவனுக்கு அதை மறுக்காதீர்கள். தன் பிள்ளைக்காக உயிரைப் பரித்தியாகம் செய்த தாய், தன் மகனுடைய கல்லூரி படிப்பின் கட்டணத்தைக் கட்டுவதற்காக இரவு நேரங்களில் துணிசலவை நிலையத்தில் இரவில் பணிபுரிந்துவந்தாள். அவன் கல்லூரியில் படிப்பை முடித்து பட்டமளிக்கும் விழாவிற்கு தன் தாயை வரவேண்டாம் என்றான். அவளுடைய எளிய உடை தான் அதற்கு காரணமாம். அதாவது எளிய தோற்றத்துடன் அங்கு வந்தால், அவனுக்கு அவமானமாக இருக்குமாம்.
உங்களுடைய பிள்ளை எல்லாவற்றிலும் உத்தமமான பிள்ளை என்று கருதாதீர்கள். சில தாய்மார்கள், தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், தங்களுடைய பிள்ளையினிடத்தில் என்ன குறை உள்ளது என்று அறிந்துகொள்ளாமல், ஆசிரியர்களிடம் என்ன குறை உள்ளது என்று கண்டறிவதற்காக பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள். கீழ்ப்படியாமைக்காக தன் பிள்ளை தண்டிக்கப்பட்டான் என்று அறியநேரிட்டபோது, அத்தகைய தாய்மார்கள், பள்ளிக்கூட அதிகாரிகளிடம், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்களை நிர்பந்திப்பார்கள். தாய்மார்களின் இத்தகைய செயல்பாடுகளினால், உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களிடம் காட்ட வேண்டிய மரியாதையை, அவர்களுடைய பிள்ளைகளிடம் குறைத்துவிடுவார்கள். இதன் மோசமான பின்விளைவு என்னவென்றால், அவர்களிடமும் அப்பிள்ளைகள் மரியாதையின்றி நடந்துகொள்வர்.
உங்களுடைய பிள்ளைகள் அண்டைவீட்டுப்பிள்ளைகளைப் போல மனித பலவீனங்களுடனும் குறைகளுடனும் இருக்கிறார்கள் என்று நீங்கள் தீர்மானிக்கும்போது, நீங்கள் பாதுகாப்பான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று உணர்ந்துகொள்ளுங்கள். வியாதியஸ்தரின் படுக்கையை நீங்கள் உங்களுடைய அரியணையாகக் கொள்ளாதீர்கள். சோம்பலில் மந்தமாக இருக்கும் தாய் தன் மேல் தன் பிள்ளைகள் இரக்கப்படுவதற்காகவும், தான் விரும்பும் காரியங்களை, தன்பிள்ளைகளைக்கொண்டு நிறைவேற்றுவதற்காகவும், நோயில் இருப்பதாக நடிப்பாள். இறக்கும் தருவாயில் இருக்கும்   தன் தாயின் விருப்பத்தை யார் தான் நிறைவேற்றாமல் இருப்பார்கள்? இவ்வேடத்திலேயே அவள், தான் விரும்புவதை அடிக்கடி அவள் பெற்றுக்கொள்வாள். ஆனால் இந்நிலைமை அவளுக்கு மிகக் குறைந்த காலம் வரை நீடிக்கும். இந்நிலையிலேயே அவள் தன் பிள்ளைகளிடத்தில் அவள் நடந்துகொள்வாளேயானால், நாளடைவில், அவளுடைய பிள்ளைகளுக்கு, அவள் மேல் இரக்கமும், மரியாதையும் இல்லாமல் போய்விடும்.
எப்பொழுதும் தன்னையே பிறரை கவரும் வகையில் அலங்கரித்துக்  கொண்டிருக்கும் பெண்மணியாக இருக்காதீர்கள். குடும்பத்தின் சாப்பாட்டிற்கு தேவையான சமையலை செய்வது, படுக்கையை சரிப்படுத்துவது, துணிகளை துவைப்பது போன்ற வீட்டுவேலைகளை தன் மதிப்பிற்கு கீழானவை என்று எண்ணும் ஒரு பெண் தாய்மை என்ற அலுவலுக்கு ஏற்புடையவள் அல்ல. அதே சமயம் அனைவரையும் மகிழவைக்கும் தோற்றத்தை, தாய்மார்கள் கொண்டிருக்க முயல வேண்டும். ஆனால், அதே நேரத்தில், தாய்மார்கள் தங்களுடைய உன்னத அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்றும்போது, அனைவருடைய கவனத்தையும் அதிகமாக தம் பக்கம் கவர்ந்திழுக்கும் வசீகரத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். பருவ மங்கையருக்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளவும் அவர்களைப்போல் நடந்துகொள்ளவும் நீங்கள் துணிந்தாலோ, மற்றும் வீட்டு அலுவல்களை மிக இழிவாகக் கருதுவதுபோல உங்களுடைய மனப்பான்மை இருந்தாலோ, அதுவே, உங்களுடைய குழந்தைகளுக்கு தாய்மையும் அதன் பொறுப்புகளும் மதிப்பிற்குரியவை அல்ல என்று நீங்களே கற்பிப்பதுபோலாகிவிடும்.


உங்களுடைய குழந்தைக்கு நீங்கள் தான் மிக முக்கியமான ஆசிரியர் என்பதை அடிக்கடி சொல்லத் தேவையில்லை. வாலிப வயதை அடைந்த உங்களுடைய மகன், நீங்கள் அவனிடம் ஏற்படுத்திய பாதிப்பை, நீங்கள் கற்பனை செய்துபார்க்கக் கூடிய அளவை விட மிக அதிகமாக, அவனுடைய நடத்தையில் பிரதிபலிப்பதைக் காண்பீர்கள். அதாவது, நீங்கள் உங்களுடைய தாய் தந்தையருடைய குணாதிசயத்தைப் பிரதிபலிப்பதைப் போல, உங்களுடைய மகனும் உங்களுடைய குணநலன்களைப் பிரதிபலிப்பான். சர்வேசுரன் உங்களுக்குக் கொடுத்த கடமையின் பிரகாரம் அவனுக்கு வேண்டிய ஞானபயிற்சியை அளிக்க நீங்கள் தவறினாலும், அவனுடைய குணநலன்களில் உங்களுடைய குணநலன்களின் முத்திரையை பதித்துவிடுவீர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக