தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்
பயத்தின் தோற்றம்:
சாராவின் நம்பிக்கைக்குறைவு:
எனவே நமது பாவங்கள்தான் நமது பாவஉணர்வுக்கு காரணமாக உள்ளது. சாராவுக்கு சர்வேசுரன் ஒரு மகனைத் தருவேன் என்று வாக்களித்த போது அவரது நம்பிக்கைக் குறைவு அவரை நகைக்க வைத்து அதன்பின் அச்சம் அவரை ஆட்கொள்கிறது. (தொ.நூ 18:15)
சினத்தைத் தூண்டும் பயம்:
காயின் செய்த பாவம், ஆண்டவர் அவனிடம் பேசிய போது சினத்துடன் பதில் பேசத் தூண்டியது. அதற்குக் காரணம் அவனது பயம். ஆபேலைக் கொலை செய்ததை ஆண்டவர் அறிந்துக் கொண்டார் என்று அறிந்து பயந்து, தனது பயத்தை மறைக்க சினத்தை வெளிப்படுத்தினான். சினம் பயத்தின் வெளிப்பாடுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல் நிறைவேறத் தடையாயுள்ளது. (யாக் 1:20)ஆண்டவர் மீது அச்சமின்மை :
ஆண்டவரைப் பற்றிய அச்சமின்மை தீயோராயிருந்தும் தம்மைத் தேடி அழைத்த அரசரை, திருமண உடையணியாமல் அவமதிக்கக் காரணமாய் இருக்கிறது என்பதை திருமண விருந்து உவமையில் பார்க்கிறோம். (மத் 22:10)குற்ற உணர்வு:
உலக நாட்டமுடையோருக்கு ஏற்படும் பய உணர்வு ஞானத்தை தராது. ஏனென்றால் அந்த பயஉணர்வு குற்றஉணர்வையே தூண்டும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவைத் துண்டித்து விடும். இதுதான் ஆசிப்பெற்றோர் வாழ்வில் பாவம் நுழைந்தபோது நிகழ்ந்தது. செய்தபாவம் குற்ற உணர்வைத் தூண்டியது. ஆண்டவரை நேருக்கு நேர் சந்திக்கும் நிலையைத் தடுத்தது.தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்:
அன்னை மரியாவின் தெய்வபயம் கன்னிமரியாவை உலகத்தினர் அனைவரின் தாயாக உயர்த்தியது.Download Latin songs- Click here
Download Tamil Catholic Songs - Click here